Sunday, September 16, 2018

பைபிள் கட்டுக் கதை என வரலாற்று ஆசிரியர் சொல்வது- 3 ஜெருசலேம்

பைபிள் கதைகளின் முக்கிய ஆணிவேர், எபிரேயர்கள் இஸ்ரேல் எனும் கானான் பிரதேசத்திற்கு வந்தேறி அன்னியர், ஆனால்  தொன்மக் கதைப்படி, இஸ்ரேலின் உள்ளூர் தேவன் யாவே அழைத்தார் என கதை. பிறகு பஞ்சம் வர ஆபிரகாமின் பேரன் யாக்கோபு காலத்தில் எகிப்து சென்றிட, 2 தலைமுறை பின்னர் 400 வருடம் பின்பு கானானில் 10 நாட்டு இன மக்கள் செழிப்பாய் வாழ்ந்தவர்களை இனஅழிப்பு -படுகொலை செய்து ஆக்கிரமித்தனர் எனக் கதை

சிலகாலம் பின்பு அரசாட்சி வர சவுல், தாவீது, சாலமோன் என 3 அரசர் கதைகள் பைபிளில் உள்ளன.

 1 நாளாகமம் 21:தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். 6. யோவாப்- லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை.

தாவீது ஒரு பெரும் நாட்டு அரசர் என்பதாய் புனையும் கதைகள்
நாளாகமம் 22:14 தாவீது“சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்ட திட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 

பைபிள் தொன்மக் கதையில் ஜெருசலேம் மிகவும் முக்கியம் வாய்ந்தது, பொமு 10ம் நூற்றாண்டில் சாலமோன் எனும் கதை அரசன் யூத இஸ்ரேல் தேவனுக்கும் மற்ற தேவன்களுக்கும் ஆலயங்கள் கட்டியதாய் கதை.
2 நாளாகமம்1:14சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400 இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான்.15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். அரசனின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர்.17 சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் அரசர்களுக்கும் ஆராம் அரசர்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.


 





ஜெருசலேம் என்பது கிராமமா? சிறு ஊரா?

No comments:

Post a Comment