Wednesday, February 21, 2018

தொல்காப்பியத்தின் காலம்

தமிழ்மொழியின்  இலக்கண நூல் தொல்காப்பியம்  ஒரு முக்கியமான நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்றிற்கும் தமிழின் எழுத்துக்கள், சொல், பொருள் என மூணிறிற்கும் இலக்கணம் கூறுகிறது. இதன் காலம் என்ன?





உணர்வு ரீதியில் அதை காலத்தால் மிகவும் பின் தள்ளி கொள்வது பலர் வழக்கமாய் உள்ளது.  அதாவது பொமு 700 (பொதுக் காலத்திற்கு முன்) என சொல்லுவாரும், அல்ல பொமு 300 எனச் சொல்லுவார் மிக அதிகம்.
                                                
தரவுகள் இதை சற்றும் நிருபிக்காதமையால் தமிழ் மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை ஏற்பதில்லை. 
                                           
இலக்கியங்கள் எழுந்த பின் தான் உலகில் உள்ள அத்தனை மொழிகளிற்கும் இலக்கணம் செய்யப் பட்டுள்ளது.  உதாரணமாக ஆங்கில மொழி இந்தியா வந்து ஒரு சில நுற்றாண்டு பின் 18ம் நூற்றாண்டு இறுதியில் தான் ஆங்கிலத்திற்கான தனிவித இலக்கண நூல்களும், அகராதிகளும் உண்டாயின.
                                   

சங்க இலக்கிய வழக்கில் இல்லாதவற்றையும் பிற்கால தொல்காப்பியம் கூறுகிறது. 

பேராசிரியர் லண்டன் சுவாமிநாதன் மொழியியல்ரீதியாக தொல்காப்பியம் பொகா 5 அல்லது அதற்கு பின்பு தான் எனும் கட்டுரை இங்கே .  

தொல்காப்பியர் காலம் தவறு--

5 கட்டுரைகளாய் உள்ளதை அப்படியே சேர்த்து இங்கே
தமிழில் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து  18 என மொத்தம் 30 எழுத்துக்கள், இவை இரண்டும் கலக்க உயிர்மெய், கல்வெட்டுகளில் 30 எழுத்திற்கும் தனி உருக்கள் அமைய வேண்டும், மேலும் மெய் எழுத்து என்பது புள்ளி வைத்தல் என்பதையும் கூறுவதால் நம்மிடம் உள்ள கல்வேடுகளோடு பொறுத்த வேண்டும். 

மதுரைக் காமராஜர் கல்லூரி மொழியியல் பேராசிரியர் காமாட்சி கட்டுரை, பொ.கா. 4ம் நூற்றாண்டிற்கு முன் செல்ல முடியாது என்கிறது. 

தமிழ் கல்வெட்டுகளை படித்து மிகவும் போற்றப்படும் அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், கே.வி.இராமன், நாகசாமி, நடன காசிநாதன் எனப் பலரும் பிராமி வரிவடிவம் வடமொழியான பிராகிருத மொழி உருக்களை தான் தமிழ் பெற்று, தமிழிற்கு தனி எழுத்தான "ற" "ழ" போன்ற எழுத்து உரு  சேத்து வளர்ச்சியுற்றது. தொல்காப்பியம் வட்டெழுத்து தாண்டு 7ம் நூற்றாண்டினை ஒட்டியது என இன்று கருத்து ஒற்றுமை வந்து கொண்டு உள்ளது. 


தமிழ் வளர்த்த பெரியார்கள் அந்தண பெருமக்கள்.

நம்மிடம் இன்று சங்க இலக்கியம் எனும் பொக்கிஷம் உள்ளது எனில் அதை நம்க்கு மீட்டு கொடுத்த தமிழ் பேரறிஞர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐய்யரைப் பணிந்து இங்கு நாம் விபரம் தருவோம்.

தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  
                                             சிலம்பு 7. வரந்தரு காதை

#சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

#இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

#பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்
மேலும்
ஊத்துக்காடு கவி,
பாபநாசம் சிவன்,
வை.மு.கோ,
கல்கி,
சாண்டில்யன்,
சாவி,
சுஜாதா,
வாலி,
சோ ..............
இது தொடர்கிறது.

Tuesday, February 20, 2018

திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்

தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.

                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை
தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  சிலம்பு 7. வரந்தரு காதை

திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார்.
                                              

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29

ஆரிய-திராவிட பொய் கதை

ஆரிய-திராவிட பொய் கதை - அறிவோமா?

https://tamilandsanskritworks.blogspot.in/2016/08/blog-post_31.html
வெள்ளையர்கள் செய்த சதி

வெள்ளையர்கள் பஞ்சு வியாபாரம் செய்ய வந்து, "ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின மாதுரி" , நம்முடைய உள்நாட்டவர்களை ஆதிக்கம்   செய்யத் துவங்கினர். மன்னர் ஆட்சியில் இருந்து அவர்களுடைய அரசாங்கம் ஆகி விட்டது.சமய நூல்களையும் வரலாற்றையும் ஆராய்ச்சி செய்கின்றோம் என்று பிதற்றிக் கொண்டு, வேதங்களையும், ஆகமங்களையும்  மொழி பெயர்ந்தது மட்டும் அல்லாது,  அவர்களுடைய சொந்தக் கதையை உள்ளே நுழைத்து விட்டார்கள். சருமத்தின் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வுகளை உண்டு பண்ணி, கறுப்புத் தோல் கொண்டவர்கள் எல்லாம் வெள்ளை தோல் உள்ளவர்களுக்கு அடிமைகள், என்னும் கருத்தைத் பின்பற்றி வந்த , அந்த  முட்டாள்களுக்கு  அதனைத் தவிர வேறு  ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை போலும். சமுதாயத்தில் உள்ள மக்கள் தத்தம் தொழில்களுக்கு  ஏற்ப 4 வர்ணங்களாகப் பிரித்து, அவரவர் தொழில்களை அவரவர்  செவ்வனே  செய்து வந்த திறனைக் கண்டு பொறுக்க முடியாமல் போனார்கள் அவர்கள் - வேதத்திலும் இந்த வெள்ளையர் ஆதிக்கமே பேசப் படுகின்றது என்று கட்டுக் கதை கட்டினார்கள்.

வேதங்களின் சிறப்பு 

இதில், ஒன்றாக இருந்த வேதங்களை, வேத வியாசர் கலியுகம் துவங்கும் முன்னே  (3-4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்)  நான்காகப் பிரித்தார்.  அப்படி இருக்க, ரிக் வேதத்தில் உள்ள இந்திரனுக்கும் அரக்கனுக்கும்  நடந்த யுத்தம், வெள்ளை கறுப்பர்களுக்கு இடையே நடந்த யுத்தம் என்றும்,  பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றும் எல்லாம் அவர்களுடைய கட்டுக் கதைகளை கட்டி விட்டான் மாக்ஸ் முல்லர் என்ற அந்த வஞ்சகன். எழுதா மறை - என்று குரு சிஷ்ய பரமபரையாக, ஓதப் பெற்ற   நம் வேதங்களை குறை கூறி, கதை கட்டினான் அவன்.

ஆரிய - திராவிட கட்டுக் கதை 

ஐயா என்ற சொல்லே ஆர்யா என்று வடமொழியில் வழங்கப் படுகின்றது. அதே போல் வடமொழியிலே நம் தமிழகத்துக்கு பெயர் தான் - திராவிட தேசம் - அதையே நம் தமிழ் தாய் வாழ்த்தில் "திராவிட நல் திருநாடும்" என்று பாடுகின்றோம். சேர, சோழ, பாண்டிய - தேசங்களே நம்முடைய தமிழகத்தில் இருந்தன. நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை,மருதம் என்ற பிரிவுகளே இங்கு ருந்தன. திராவிட  நாடு என்ற பெயர் எந்த இலக்கியங்களிலும் பெரிதாக பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் , நம்மை எல்லோரையும் முட்டாள் ஆக்கும் வகையிலே இந்தக் கதை அமைந்து உள்ளது.ஆங்கிலத்திலே சார் என்பதை போல், தமிழிலே ஐயா என்பதை போல், வட மொழியிலே மரியாதையைக் குறிக்கும் சொல்லே இந்த ஆர்யா என்பது. மற்றபடி எந்த விதமான பொருளும் அதற்கு இல்ல.

தமிழர்கள் / இந்தியர்கள் ஆகிய நாம் எல்லோரும் ஒன்றே

நம் தமிழகத்தில் உள்ள எல்லோரும் ஒன்றே - அவர்களுடைய மரபணுக்கள் எல்லாம் ஒரே மாதரித்  தான் இருக்கும். அதனை நாம் அந்த வெள்ளைக்காரன் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை. எல்லாக் குலத்திலும் எல்லா விதமான மக்கள் உள்ளனர் இன்று - கருத்தவர்கள், வெளுத்தவர்கள் எல்லாம் எல்லாக் குலத்திலும் உள்ளனர். இதுவே இந்த  ஆரிய திராவிட  கதை பொய் தான் என்பதற்கு ஒரு பெரிய ஆதாரம்.சைவம் தழைத்து ஓங்கி இருந்த காலத்தில், ஜாதி பேதம் இன்றி(வேளாளர்கள், வணிகர்கள், அரசர்கள், பார்ப்பனர்கள்) எல்லோரும் சேர்ந்து சிவத்  தொண்டு செய்தனர்.  சைவத்துக்கு மிகவும் நெருங்கிய மொழியாகிய நம் தமிழ் மொழி, அகத்திய முனிவரால் வளர்க்கப் பெற்றது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை.  தொல்காப்பியம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் இலக்கணத்திற்கு வித்து இட்டவர்கள் அவர்கள் தான். ஜாதி மத பேதம் இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழ் வளர்த்தனர் ஒரு காலத்தில்..

சங்க இலக்கியங்கள் 

சங்க காலப் புலவர்கள், திருவள்ளுவர்,இளங்கோ அடிகள் - இவர்களுக்கு எல்லாம் தெரியாத விஷயம் இந்த மாக்ஸ்  முல்லர் என்ற வஞ்சனுக்குத் தெரிந்து விட்டது போலும். தமிழ் வளர்த்த கபிலர், பரணர் - அவர்களை எல்லம் விட்டு விட்டு, சங்க  புலவர்களுக்கு எல்லாம் தெரியாத உண்மை அந்த வெள்ளையனுக்குத்  தெரிந்து விட்டது போலும்.நம்முடைய சாஸ்திரங்களும், புராணங்களும், தமிழ் இலக்கியங்களும்  -  இந்த வெள்ளைத்தோலும் கருப்பு மனமும் கொண்ட வஞ்சகர்களுக்கு அப்பாற்பட்டது.
இனி   நம் வேதங்களின் சிறப்பை வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறர் என்று பார்ப்போம்:

மறப்பினும், ஒத்துக் கொளல் ஆகும்; பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

அதாவது, தான் குருகுலத்தில் கற்ற வேதத்தை மறந்தாலும் கூட மீண்டும் படித்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு பிராம்மணன், தன்னுடைய பிறப்பொழுக்கம்   (சமஸ்கரம்) - அதனை மறந்தால் எப்பொழுதும் மீண்டும் பெற முடியாது என்கிறார் வள்ளுவர். இதனை ஒரு சாதி அல்லது குலத்தைப் பற்றிச் சொல்லும் குறளாக   எடுத்துக் கொள்ளாமல், சங்க காலத்திலே நம் தமிழகத்தில் வேதங்கள் தழைத்து ஓங்கி இருந்தன என்றும், அதனை செவி வழியாகப் படித்தார் என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. அப்படி என்றால், வள்ளுவருக்குத் தெரியாத விஷயம், இந்த வெள்ளையனுக்குத் தெரிந்து விட்டதா? இல்லவே இல்ல.

ஐம்பெரும் காப்பியங்களுள் முதலாவதான சிலப்பதிகாரத்தில் வேதங்களின் சிறப்பைக் காணலாம் இங்கே:

சிலப்பதிகாரத்தில் வஞ்சினமாலை  என்ற சாபம் கொடுக்கும் படலம் 




யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து 45

மகா பதிவ்ருதை ஆகிய நம் கண்ணகித் தெய்வம், தன்னுடைய கணவனைத் தவறாக கொலை புரிந்த பாண்டிய மன்னன் மீதும் அவன் நகரத்தின் மீதும் தீராக்  கோபம் கொண்டாள்.கண்ணகி பாண்டியன் மீது தீராத கோபம்  கொண்டு, தன்னுடைய இடப்பாகத்து  முலையை, தானே தான் கையால் கிழித்து எடுத்து, மதுரை நகரத்தை மும்முறை வலம் வந்து பிறகு  மதுரை மீது தன்னுடைய  தனத்தை எரிந்து சாபம் கொடுக்கின்றாள்.

விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் 
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் 50

சினம் கொண்ட கற்புக்கரசி கண்ணகியின் முன்னர், அக்னி பகவான் ஒரு ப்ராஹ்மண வேஷம் கொண்டு தோன்றினான். அந்த   கற்புத் தெய்வத்தின் ஆக்கினையைப் பெற்று அவன் மதுரையை அழிக்கலுற்றான். இங்கு எரியும் மேலாடை அணிந்த வானவன் என்றால் - சிவ பெருமானையும் பொருள் கொள்ளலாம் - நாயன்மார்கள் சிவனை பொன் கழல்  வண்ணன் என்று போற்றுகின்றனர். ஆனால் தர்மஸ்வரூபி ஆக இருக்கும் அக்னியையும் பொருள் கொள்ளலாம் - பஞ்ச  பூதங்களும் இறைவனின் படைப்பே என்பதால், அவர்கட்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமேஸ்வரனையே குறிக்கும் என்று பொருள் கொள்ளலாம்.

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55

கண்ணகி  தீக்கடவுளுக்கு  ஆணை இட்டாள்.
  1. பார்ப்பனர் (ப்ராஹ்மணர்)
  2. தருமம் தவறாமல் இருக்கும் சான்றோர்கள்
  3. பசு மாடுகள்
  4. பத்தினிப் பெண்கள்
  5. வயது முதிர்ந்த மக்கள்
  6. சின்னக் குழந்தைகள் 
ஆகிய இவர்களை விட்டு மற்றவர்களை எரித்து விடுமாறு அக்னிக்கு ஆணை இட்டாள்   நம் கற்புக்கரசி கண்ணகி. சங்ககாலம் தொட்டதே இந்த மரபு இருந்து வந்தது நமக்குத் தெரிகின்றது. பத்தினிப் பெண்கள் தங்கள் கோபத்திலும் கூட, தர்மத்திற்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.அதாவது நாடு செழிக்க, அக்னி காரியம் செய்து, நட்டு நலனுக்காக வேள்விகள் நடத்தும் பொருட்டு பிராம்மணரும், தத்தம் வர்ணாஸ்ரம தர்மங்களை எல்லாம் தவறாமல் காப்பாற்றும் தர்மசீலர்களும், தம்முடைய பாலைப் பொழிவதால் பசுக்களையும், தம்மைத் தாமே கத்துக் கொள்ள முடியாத முதியவர் மற்றும் சிறு குழந்தைகள் ஒழிய எல்லோரயும் எரித்து விடுமாறு ஆணை இட்டாள் நம் பத்தினித்தெய்வம் கண்ணகி. தர்மம் சாஸ்திரங்கள் கூறும் விஷயத்தை அப்படியே சொல்லி இருக்கின்றாள் பாருங்கள்.

சிலப்பதிகாரத்தில் கட்டுரைக்கு காதையில்:

வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 

மதுரை எரித்த கண்ணகிக்கு,  மதுரைத் தெய்வம் மீனாட்சி வரம் கொடுக்க, சேர நாடு நோக்கிச் செல்கின்றாள் - அப்பொழுது பராசரன் என்ற பிராம்மணன் , அவளுக்கு சேர நாட்டின் பெருமைகளை சொல்வது போன்று அமைந்த பாடல் இது.

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க 70

சாஸ்திரங்களில் சொல்லப் பெற்ற விஷயங்களை எல்லாம் இளங்கோ அடிகள் மிகவும் துல்லியமாகக் கூறுகின்றார் - இரு பிறப்பாளர்(துவிஜா), 5  வேள்விகள் (ரிஷி,தேவ,பித்ரு,புத்த,அதிதி), 3 தீ  மற்றும் ஆறு தொழில் (வேதம் கற்றல் மற்றும்  கற்றுவித்தல், வேள்விகள் செய்தல்செ மற்றும் செய்வித்தல் , தானம் கொடுத்தால் மற்றும் வாங்கி கொள்ளுதல்) ஆகிய அந்தணர்களை பேணிய மன்னன் - என்று தர்மம் சாஸ்திரங்கள் கூறும் பெருமைகளை எல்லாம் இங்கு சொல்கின்றார் நம் இளங்கோ அடிகள்.

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்

இப்படி எல்லாம் உள்ள அந்த பராசரன் என்ற பிராம்மணன் - சேர நட்டு அரசனின் பெருமைகளைப் படும் பொருட்டு சொல்லும் வசனம் இது. என்ன அருமை பாருங்கள்.

வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காண

அதாவது வட தேசத்தில் இருந்த மன்னர்களை வென்று, இமயம் முதல் குமாரி வர ஒரே அரசாக ஆண்ட பெருமை கொண்ட பாண்டிய மன்னன் என்று கூறுகின்றார் நம் இளங்கோ அடிகள். இங்கு அவர் ஆரியர்   - என்பது ஒரு இனம் என்றெல்லாம் குறிப்பிடவே இல்லை(வட தேசத்து மக்களைக் குறிக்கும் சொல் தான் அது).

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் 
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி 
விண்ணக மாதர்க்கு விருந்து. 

கண்ணகி என்ற பத்தினியின் பெருமை எப்படிப்பட்டது என்று பாருங்கள். புராணத்தில் சொல்லப் பெற்ற சாவித்ரி, நளாயினி போன்று- அதையும் தண்டி தான் கணவனைக் கொன்ற மன்னனையும், அவன் தேசத்தையும்  எரித்து, முன்வினைப் பயனே என்று மதுரைத்தெய்வம்   மீனாட்சி இடத்தில,  சொல்லப்ற்று, தான் கணவனோடு ஒன்றாக ரத்தத்தில் சுவர்க்கம் சென்ற பெருமை கொண்டவள் நம் கண்ணகி. நம் இந்தியர்களுக்கும்  தமிழர்களுக்கும் கற்பு  என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.
தமிழகம் மற்றும் நம் தேசத்தின் பெருமை 

யாராலும் அசைக்க முடியாத நம் கலாச்சாரத்தைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளை வஞ்சகர்கள் இந்த மாதிரியான போலிக்  கதைகளை எல்லாம் கட்டினர். இனிமேலேனும் நாம் அனைவரும் முழித்துக் கொள்ள வேண்டும்.இனிமேல் ஆவது நாம் எல்லோரும் ஒன்று என்ற மனோபாவத்துடன் நம் நட்டு முன்னேற்றத்திற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாடு பட வேண்டும்.வெள்ளைக் கலாச்சாரத்திற்கு   கீழானது தான் நம்முடைய நாகரீகம்  என்று வெள்ளைக்காரர்கள் கட்டிய கதை  தான் இது எல்லாம்.

சங்க காலத்து பிள்ளையார் - தொல்லியல் ஆதாரம்

'வீரபுரமா? அது எங்கிருக்கிறது? அந்த ஊர் விநாயகருக்கு என்ன சிறப்பு?' என்று 'விஷயம் தெரிந்த' வரலாற்று ஆய்வாளரும் தொல்லியல் அறிஞர்களும்கூட என்னைக் கேட்கிறார்கள். என்ன காரணத்தாலோ வீரபுரத்து விநாயகரே இந்தியாவின் மூத்த பிள்ளையார் என்ற முக்கியமான செய்தி இன்றும் பரவலாக அறியப்படவில்லை.

சிவபெருமானின் மூத்த மகனாகிய விநாயகரை மூத்த பிள்லையார் என்று குறிப்பிடும் மரபு வழக்கத்தில் சுருக்கமாகப் பிள்ளையார் என்றாகிவிட்டது. ஆனால், 'மூத்த பிள்ளையார்' என்று இங்கு நான் குறிப்பிடுவது, நம் நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விநாயகச் சிற்பங்களில் காலத்தால் முற்பட்ட ஏழே செ.மீ உயரமுள்ள ஒரு சிறிய சுடுமண் படிமம் ஆகும். ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் வீரபுரம் என்ற ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட அகழாய்வில் இந்த விநாயகப் பெருமான் தோன்றினார். இவர் சாதவாகன மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சார்ந்தவர் (கி.மு 50 - கி.பி 300). இதுவரை வடநாட்டில் குப்தர் காலத்திலிருந்தும் (கி.பி 4ம் நூற்றாண்டு முதல்), தென்னாட்டில் பல்லவ - பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தும் (கி.பி 6ம் நூற்றாண்டு முதல்) கிடைத்துள்ள விநாயகரின் கற்சிலைகளே மிகப் பழமை வாய்ந்தன என்று கருதப்பட்டது. இப்பொழுது தென்னாட்டைச் சேர்ந்த வீரபுரத்து விநாயகரே இந்தியாவின் மூத்த பிள்ளையார் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிவிட்டார்.

விநாயகப் பெருமானைப் பற்றி பல அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று அமெரிக்காவில் 1992ல் வெளியானது. அதில் எம்.கே.தவலீகர் என்ற இந்தியத் தொல்லியல் அறிஞர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்துதான் எனக்கு வீரபுரத்து விநாயகரைப் பற்றிய செய்தியும் படமும் கிடைத்தன. வீரபுரத்து விநாயகரைப் பற்றி அக்கட்டுரையில் அவர் கொடுத்துள்ள செய்திகளைக் கீழே காணலாம். (தமிழாக்கம் : இரா.கலைக்கோவன்).

'காலத்தால் முற்பட்ட கணேசரின் சிறிய சுடுமண் உருவச்சிலை ஒன்று ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் வீரபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் மூன்றாம் பருவ அடுக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடுக்கியல் படிவாய்வு, அகழ்வில் கிடைத்திருக்கும் பிற பொருட்கள் கொண்டு இச்சிலையின் காலம் கி.மு 50 - கி.பி 300க்குள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில சாதவாகனர் நாணயங்கள் வழங்கியுள்ள சான்றுகளின் அடிப்படையில் இவ்வடுக்கினைப் பாதுகாப்புடன் காலக்கணக்கீடு செய்யலாம். அதனால் இந்த கணேசர் உருவச்சிலையை கி.பி 300க்கு முற்பட்டதென்று உறுதிபடக் கூறலாம்.

சிதைந்த நிலையில் கிடைத்துள்ள இச்சுடுமண் படிமத்தின் கால்கள் உடைந்திருந்தபோதும், இது நிற்கும் நிலையில் அமைந்த படிமம் என்பதும் யானைத்தலை கொண்டுள்ளது என்பதும் அறியுமாறு உள்ளன. இதன் இருகைகளும் உடைந்திருப்பதுடன் தலையலங்காரமும் சிதைந்துள்ளது. இடக்கைக் கிண்ணத்திருந்த மோதகம் சுவைக்கும் நோக்குடன் இதன் துளைக்கை இடம்புரியாத மேல்நோக்கி வளைந்துள்ளதாகக் கொள்ளலாம். பாம்பை முப்புரி நூலாக அணிந்திருக்கும் இதன் இடுப்பாடை, முழங்கால்கள் வரை நீளும் சிற்றாடையாக இருந்திருக்கலாம். பிதுக்கமான விழிகளும் பருத்த உடலும் இப்படிமத்திற்குச் சற்று அருவருப்பான தோற்றம் தருகின்றன. பானை வயிற்றுடன் இயக்கனைப் போல் காட்சி தரும் இச்சுடுமண் உருவச்சிலை ஐயம் திரிபற கணேசருடையதே.'

("Ganesa : Myth and reality by M.K.Dhavalikar in Ganesh : Studies of an Asian God. (Ed.) Robert L. Brown. State University of Newyork Press, 1992, pp. 51-52, Fig. 5).
this is txt file

திருமுருகாற்றுப் படை வெண்பாக்கள்

http://lakshanasangeetham.blogspot.in/2015/04/raaga-malika.html

குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும் 
அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் 
கைவிடா நின்றதுவும் கல் பொதும்பில் காத்ததுவும் 
மெய் விடா வீரன் கை வேல் 


வீர வேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட 
தீர வேல் செவ்வேள் திருக் கைவேல் - வாரி 
குளித்த வேல் கொற்ற வேல் சூர் மார்பும் குன்றும் 
துளைத்த வேல் உண்டே துணை 


உன்னை ஒழிய ஒருவரையும்  நம்புகிலேன் 
பின்னை ஒருவரை யான் பின் செல்லேன் - பன்னிருகைக் 
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் 
வேலப்பா செந்தி வாழ்வே 


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன் 


முருகனே செந்தி முதல்வனே மாயோன் 
மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன் 
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் 
நம்பியே கைத் தொழுவேன் நான் 


பரங்குன்றின் பன்னிரு கைக் கோமான் தன பாதம் 
கரம் கூப்பிக் கண் குளிரக் கண்டு - சுருங்காமல் 
ஆசையாய் நெஞ்சே அணி முருகாற்றுப் படையைப் 
பூசையாக் கொண்டே புகல் 


நக்கீரர் தாம் உரைத்த நன் முருகாற்றுப் படையைத் 
தற்கோல நாள் தோறும் சாற்றினால் - முற்கோல 
மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளித் 
தான் நினைத்த தெல்லாம் தரும் 

Tuesday, February 13, 2018

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ ஐயங்கார் – 1.

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
1.

முகப்புரை

பூவெலாம் புகழும் நாவலம்பொழிற்கண் அமிழ்தினு மினிய தமிழ்பயில் தென்னாட்டின் பண்டை அறிவுவளர்ச்சி, அரசியன்மேம்பாடு, இல்லற வாழ்க்கை கலம், கொடைவீரம், படைவீரம், கடவுள்வழிபாடு இவற்றைச் செவியும் உள்ளமும்களிகூரக் கவர்ந்துண்ணும்வண்ணம் இயற்றும் விழுமிய செய்யுட்டிறன் முதலிய நாகரிகப் பெருமைகள் எத்துணையோ அறிந்துகொள்ளற்கு வாயிலாக ஒப்புயர்வற்று விளங்குவன, சங்கக்காலத்து வழங்கிய இலக்கண இலக்கிய நூல்கள். அவ்வரியபெரிய நூல்களாற் றெளியக் கிடக்குந் தமிழர் சிறப்பியல்புகள் பலவற்றுள் அறிவுவளர்ச்சியில் ஆண்மக்க ளொப்பப் பெண்பா லாரும் தலைசிறந்து நிலவிய பேரியல்பு, நல்லோர் பலரானும் மிகவும் பாராட்டப்படுவது ஒன்று. இக்காலத்துப் பலபல நாடுகளிற் காணப்படும் பெண்கல்வி. முயற்சி சற்றேறக்குறைய ஈராயிரம் வருடங்கட்கு முன்னரே இத் தென்னட்டாரால் இனிதாளப்பட்டுப் பயன்பெற்றுச் சிறந்ததென்று துணியப்படுமாயின், அஃது ஒருவர்க்கு எவ்வளவோ வியப்பும் இன்பமும் விளக்குமென்பதில் ஐயமில்லை.
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.” (திருக்குறள், அறிவுடைமை. உ)
என்பதனால், குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன். போல மனத்தைப் புலமறிந்து தீயதி னீக்கி நல்லதன்கட் செலுத்துவது அறிவு என்று கண்டு, அவ்வறிவால் நிரம்பினராதல் இருபாலார்க்கும் இன்றியமையாததென்று துணிந்து அவ் விருபாலாரையும் அவ் வறிவின்கண் ஒப்ப வளர்வித்த பெருநாகரிகம், முன்னைத்தமிழர் நன்புகழ் முடியில் நடுநாயக மணிபோல் ஒளிவிட்டு விளங்குவதாகும். இவ்வருமையைப் பலருந்தெரிந்தின்புற வெண்ணியே, இன்றைக்கு 29 வருடங்கட்குமுந்தி மதுரைத்தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப்பத்திரிகைக்கண் இவ்வுரைகடை என்னால் எழுதப்பட்டது. இதனைக் கற்ற தமிழறிஞர் பலர் தமிழின்கணுள்ள ஆர்வ மிகுதியால் இதனைப் புத்தகவடிவாக்கித் தரும்வண்ணம் வேண்டுதலான், இஃது இப்போது அச்சிடலாயிற்று. என்மீதுள்ள அன்புகாரணமாகவே இதனை அச்சிடுதற்கு மனமுவந்து ஏற்றுக்கொண்டு, இதனைச் சிறிதுங் காலதாமதமின்றி வெளியிட்டுதவிய என்னருமை நண்பர் (Chairman, Tamil Board of Studies, University of Madras) சிரீமான் சி.ஆர். நமச்சிவாய(முதலியா)ரவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். அவர்கள் நெடுங்காலம் இனிதுவாழ உள்ளுவதல்லது அவர்கள் கொள்ள நல்குவதோர் கைம்மாறு காண்கிலேன்..
இங்ஙனம்
இரா. இராகவையங்கார்

முன்னுரை
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில்,
‘மாவு மாக்களு மையறி வினவே.’
‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’
என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும்.
இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வழங்கப்படுமாதலின், அவயவம்பற்றிய பகுப்பும் இரண்டே என்னலாம். இவ்வாறே, ஒவ்வொரு குறையுடைய ஊமும் செவிடும் குருடும் பிறவும் இவ் விருபாலுள்ளே அடங்குதலுங் காண்க. அவயவ வெற்றுமையான் இருதிறத்தினராய மானிடரே அறிவுவேற்றுமையான் மாக்கள், மக்கள் எனப்பட்டனராதலின், ஆண்பாலினும் மாக்களும் மக்களும் உண்டென்பதும், அவ்வாறே பெண்பாலினும் மாக்களும் மக்களும் உன்டென்பதும அவர்க்கு உடன்பாடாம். இதனால் ஆசிரியர் எத்துணை அறிவுண்மையும் அறிவின்மையும் ஆண்பாற்கு உடன்பட்டாரோ அத்துணையும் பெண்பாற்கும் உடன்பட்டாராதல் தெளியப்படும். 
களவியலுள், ‘ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப’ என வுரைத்து, அத்தலைவற்கும் தலைவிக்கும் உள்ள ஒப்புமைவகையினை விரித்தோதுவாராய், மெய்ப்பாட்டியலில்,
‘பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே’
என்றாராகலின், ஆண்பாற்கொத்த ஆண்மையும், உணர்வும் பிறவும் பெண்பாற்கும் ஒக்கும் என்பதும் உடன்பட்டனராவர். இதனால், ஆண்மையும் அறிவும் ஆண்பாலார்க்கே சிறந்தது என்பது ஆசிரியர்க்கு உடன்பாடன்மை யுணரப்படும். மற்றுக் களவியலுள், ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்றாராலெனின், அவர் பொருளியலுள்,
‘செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவு மருமையும் பெண்பா லான’
எனக் கூறினாராதலின், ஆண்பாலினை உயர்த்துரைக்கு முகத்தாற் பெண்பாலினை இழித்தாரென்றால் பொருந்தாதாகும். 
செறிவாவது அடக்கம்; நிறைவாவது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம்; செம்மையாவது மனக்கோட்ட மின்மை; செப்பாவது செய்யத் தகுவன கூறுதல்; அறிவாவது நன்மை பயப்பனவும் தீமைபயப்பனவும் அறிதல்; அருமையாவது உள்ளக்கருத்தறித லருமை என்பர். இவ்வறுபெருங் குணங்களும் ஆண்பார்க் கோதிய பெருமை உரன் என்னும் இரண்டற்குஞ் சிறிதுந் தாழ்ந்தனவாகாமை உய்த்துணர்க. மகளிர்க்கே சிறந்த சில இயற்கை வேற்றுமையினை நன்றாய்ந்து, ஆசிரியர், கிழவோள் பணிவும் கிழவோன் உயர்வும் உடன்பட்டனரல்லது வேறு எவ்வகை அறிவு வேற்றுமையும் உடன்படாமை கண்டுகொள்க. இதுவே தெய்வப்புலமை திருவள்ளுவனார்க்கும் கருத்தென்பது, அவர், ‘அறிவறிந்த மக்கட்பேறு’, ‘நன்மக்கட் பேறு’, ‘பேதையார் கேண்மை’, ‘பேதையார் சொன்னோன்றல்’, ‘மடவார்ப் பொறை’ என்னுமிடங்களில், ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுப்பட வழங்கிய பெயர்களானே ஆய்ந்தறியத் தக்கது. ‘வகைதெரிவான் கட்டே யுலகு’ என்பது முதலாக ஆண்பாலாற் கூரியனவெல்லாம் ‘நஞ்சுண்டான் சாம்’ என்புழிப்போல ஒருபாற் கிளவி எனைப்பாற்கண்ணுஞ் சேறற்குரிய என்பதுபற்றித் தலைமையாற் கூறினாராவர்.
இனி, வடநூலுள் ஒருசாராசிரியர் மதம் பற்றிப் பரிமேலழகர் பெண்பாலாரை ஆண்பாலாரோடு ஒத்த அறிவெய்தற்கு உரியரல்லராகக்கொண்டு,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்’
என்புழி, ‘பெண்ணியல்பாற் றானாக அறியாமையிற் “கேட்ட தாய்” எனக் கூறினார்’ என்றார். அவர், ஆடவருடைய அறிவொழுக்கங்களின் அருமையறிதற்கும் உரியரல்லரெனக் கருதியமை காண்க. அந்நிலைய பெண்பாலார் பலருளரால் எனின், அந்நிலைய ஆண்பாலாரும் பலருளர் என்க. தன் மகனென்னுந் தொடர்புபற்றி யுளதாகும் அன்புமேலீட்டாற் குணமும் குற்றமும் நாடுமிடத்துக் குற்றந் தோன்றாது மறையினும் மறையும்; அவற்றை யுள்ளவாறாராய்ந்து குணமிகுதிகண்டு சான்றோரெனவல்லார் பிறரே யாதலானும், தானறிந்ததனோடொப்பத் தன்னையொத்தாரும் மிக்காரும் கூறியவழியே தனக்கு மகிழ்ச்சி யுளதாதலானும், ‘கேட்டதாய்’ என்றார் எனக்கூறல் ஆண்டைக் கியைபுடைத்தாம். பிறர் கூறியவழித் தன்னறிவு மாறுபடினும், தானறிந்த வழிப் பிறர்கூற்று மாறுபடினும் தனக்கு மகிழ்ச்சியின்றாதலுங் கண்டுகொள்க. ‘சான்றோ ரென்கை யீன்றோர்க் கின்பம்’ என்பதூஉம் இக்கருத்தேபற்றி வந்தது.
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – 3
மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு பெறுதற்கண் மகளிரை விலக்காரென்பது, அவரவர் நூல்களான் நோக்கித் தெளிக. அவருள் ஆரியாங்கனைகளும், பிக்குணிகளும் எனத் துறவொழிக்கம் பூண்டு வீடுபேறு முயலும் பெண்பாலாரும் உளராதல் அறிந்துகொள்க.
இனி, ஆண்மக்கள் காமத்தாற் கண்மயங்கிப் பிறனில் விழைந்தும் பெண்வழிச்சென்றும் வரைவின்மகளிர்ச் சேர்ந்தும் கேடுறாது பாதுகாத்தற்கண், பெண்பாலைப் பழித்து ஆண்பாற்கு அறிவுறுத்துப. அங்ஙனம் வருமாறு
‘பெண்ணி னாகிய பேரஞர் பூமியு
ளெண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்.’ 
‘புரிவளை முன்கைப் புனையிழை நல்லார்
விரகில ரென்று விடுத்தனர் முன்னே.’
‘பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா
உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கை யிட்டால் இந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன் மெலிந்துபின்னிற்கு மன்றே.’
‘அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காத
லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செ லும்பிறர்க ணுள்ளம் பிணையனார்க்கடிய தன்றே.’
‘நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.’
என இவை முதலியன பலவாம். ஆண்மக்களை நோக்கி, காமமாகாதென்றற்கண் பெண்மக்கள் பழிக்கப்படுதல்போல, ஆரியாங்கனைகள், பிக்குணிகள், கைம்மை நோன்பினர் முதலாய பெண்மக்களை நோக்கி, காமமாகா தென்றற்கண் ஆண்மக்களும் இவ்வாறே பழிப்புரை பெறுதற்குரிய ரென்பது ஒருதலையாம். ஆணும் பெண்ணும் அறிவு மயங்கிக் காமவேட்கை மீதூர்ந்து, ஒருவ ரொருவரைக் காமித்து முறை தப்பித் திரிதற்கண், பெண்ணால் எத்துணைக்கேடு ஆணுக்கு எய்துமோ அத்துணையும் பெண்ணுக்கும் எய்துவதேயாகும். இங்ஙனமாகவும், ஒருவர் ஒருவரைப் பழித்து உரைப்பது எவ்வாறு? அவரவர் கேட்டிற்கு அவரவர் அறிவும் செயலும் காரணமாவனவே யன்றிப் பிறவில்லை. இக்கருத்துணர்ந்த நல்லோரெல்லாம் இருபாலார் நல்லொழுக்கமும் வேண்டுப.

ஆச லம்புரி யைம்பொறி வாளியுங்
காச லம்பு முலையவர் கண்ணெனும்
பூச லம்பு நெறியின் புறஞ்செலாக்
கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.
என்றார் கல்வியிற்பெரியாரும்.
நடுக்கடற் பிறந்த சங்கி னுள்ளி ருந்த பாலினற்
குடிப்பி றந்த மைந்தர்தங் குழைமு கம்பி றர்மனை
யிடைக்கண் வைத்த லில்லைகாத லார்கண் மேலு மார்வமூர்
கடைக்கணோக் கிலாத மாதர் கற்பை யாவர் செப்புவார்.
என்றார் வாமன முநிவரும்.
ஆண்மக்கள், கண்டபக்கமெல்லாம் பேராசை யெழுவிக்கும் தம் பேய்மனத்தைப் பழியாமற் பெண்பாலாரையே பழிப்பது, குருடன் தன்கண்ணைப் பழியாமல் தன்னை யிடறிய வழியைப் பழித்தலையே யொக்கும். கொன்றுதின்பான், தனது தின்றல் வேட்கையே கொலைக்குக் காரணமென்னாது, கொல்லுதற்றொழிற்குரிய கருவிகளும் கொல்லப்படும் யாடு முதலியனவும் உண்மையே காரணமென்னும்; இது, அதுவே போலுமென்க. அன்றியும், மண் பொன் பெண் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் முன்னை இரண்டனையும் விழைந்து இவனடையுங் கேடெல்லாம் இவன் வேட்கை முதலியன காரணமாக விளைதல்போலப் பின்னதற்கும் ஆம் என்பது எளிதினுணரப்படும்.
காமம் ஒழியத்தக்கது என்னும் பொதுமொழிக்கண்ணும் ஆண்பாலார்க்குப் பெண்பாலார்பக்கத் துளதாகும் காமவேட்கையும், பெண்பாலார்க்கு ஆண்பாலார்பக்கத் துளதாகுங் காமவேட்கையுமே ஒழியத்தக்கன என்பதே பொருளாதலுங் கண்டுகொள்க. இனி, வீடெய்தற்கட் காமமுதலியன ஒழியற்பாலவாதலால் ஆண்பாலார் பெண்பாலாரை விடுதற்கு எத்துணை அறிவொழுக்கங்களுடையராவரோ அத்துணையும் பெண்பாலார் ஆண்பாலாரைவிடுதற்கும் வேண்டுவ ரென்பது. ‘நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே’ என்பார்க்கு, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தம் உண்மையறிவே மிக்காகும். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தாமடங்காப் ‘பேதையாரும் ஆண்மக்களுள்ளும் பலருளராவராதலால் அப்பேதைமை மகளிர்க்கே சிறந்ததில்லை என்று கூறுக.இவையெல்லாம் வடித்தாராய்ந்தே வடகலை தென்கலைக் கடனிலை கண்ட ஆசிரியர் தொல்காப்பியனார் ஆண்பெண் இருபாலார்க்கும் அறிவொப்புமை கூறியமட்டி லமையாது,
கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே‘ என்பதனால், வீடுபெறுதற்கு எமஞ்சான்றவற்றை இருபாலாரும் புரிதற்கு உடன்பட்டனரென வுணர்க. சிறந்தது, சிறப்பு, சிரேயசு என்பன வீட்டின் பெயராம். இத் தொல்காப்பிய நன்னெறி கடைப்பிடித்தொழுகிய பண்டைத் தமிழ்மக்கள் அனைவரும் ஆண் பெண் இருதிறத்தாரையும் நற்றமிழ்க் கல்வியினும் அற்றமிலறிவினும் குற்றமி லொழுக்கினும் வேற்றுமை யின்றிப் பயில்வித்தனராவர். இத்தகைப் பயிற்சி ஒத்திலையாயின் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோருள்ளும், சைவ வைணவ மெய்யடியருள்ளும் உத்தமக் கல்வி வித்தகர்போற்றும் நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் பலரை நாம் பெற்றுய்யுமா றெங்ஙனம்! பெண்டிரெல்லாம் அறிவு நிரம்புதல் தண்டமிழ் வரைப்பிற் பண்டே நிகழ்ந்தது என்பதனை, கோப்பெருஞ்சோழற்கு உயிர்த்துணைவராகிய பிசிராந்தையார் என்னும் புலவர்பெருந்தகையார், யாண்டு பலவாகவும் தமக்கு நரையிலவாதற்குக் காரணமாகத் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பினரா யிருத்தலைக் கூறியதனானும் அறியலாகும். ‘இல்லதெ னில்லவண் மாண்பானால்’ என்பதனையும் நோக்கிக்கொள்க.
இனி, ஒருசாராசிரியர், பெண்பாலார்க்கு யாழ் முதலிய சில கலைகளே கூறுவர். இவ்வாறு, ‘கலைமலிகாரிகை‘ எனவருந் திருச்சிற்றம்பலக் கோவைக்கும், ‘கலைவலார்’ என்னுஞ் சிந்தாமணிக்கும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்கூறிய உரைநோக்கித் தெளிக. மகளிராற் பயிலப்படும் யாழ் முதலியன ஆண்மக்களானும் பயிலப்படுமாறுபோல, ஆண்மக்களாற் பயிலப்படுவனவும் மகளிராற் பயிலப்படுமென் றுணர்க. பெண்பாற் கோதிய மடைநூற்செய்தி ஆண்பாலாராலும் பயின்று செய்யப்படுதல்போலக் கொள்க. நளன் வீமன் என்னும் ஆண்பால் நன்மக்கள் மடைத்தொழில் வல்லுநராதலுங் காண்க. இவ்வேற்றுமை யின்மையானன்றே மகளிர்க்கோதிய யாழ் முதலியவற்றிற் றேர்ச்சிமிக்க நல்லாண்மக்களும், இயற்றமி ழறிவிற் சிறந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரும் இத்தமிழ்நாட்டுப் பலராயினரென்பது.
வீடுபயக்கும் விழுப்பேருணர்வைக் கொள்ளும் வாயெல்லாங் கொளுத்தியது இப்பழைய தமிழ்நாடே. ஆண் பெண் என்னும் வேற்றுமையின்றிப் பிறப்பினிழிபு கருதாது கடைநிலத்தோராயினுங் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைத்து மகிழ்ந்தது இத் தண்டமிழ்வரைப்பே. குலத்தினும் பாவினும் குடியினும் தொழிலினும் கொள்கையினும் பல்வேறு வகைப்பட்ட நன்மக்களும் இகலிலராய் ஒருங்கு குழீஇ அறிவான் மகிழ்ந்தது இவ்வருந்தமிழ் நிலமே. ‘நன்மக்களெங்கே பிறந்தாலுமென்’ என்று அறிவின் பெருமையும் அன்பின் அருமையுமே கருதிப் பெண்டிரும் பிறப்பினிழிந்தாரும் உரைத்தருளிய நன்மொழி யனைத்தையும் வேதமெனப் போற்றி புகழ்ந்து, அவரது அன்புருவாய இன்புறுவடிவைத் திருக்கோயிலில் வைத்து வழிபடுவதும் இத் தென்றமிழ்ப்பொழிலே. ‘எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக‘ என்றழைத்தது இவ்வண்டமிழுலகே. ஆண்மையில்லென்பார் நாண்கொள முன்னே எண்டிசை வென்று பெண்டரசாண்டதிவ் வொண்டமிழகமே. இவையெல்லாம் நன்காராயின், இத்தமிழர் ஆண் பெண் இருபாலார்க்கும் அவயவவேற்றுமையல்லது அறிவுவேற்றுமை சிறிதுங் கருதினராகார் என்பது தெளிவாம். இக்கூறியவற்றிற்கெல்லாம் சான்றெனச் சிறந்த இத்தமிழ்நாட்டு நல்லிசைப்புலமை மெல்லியலாரைப்பற்றி யானறி யளவை யீண்டெடுத்தோதலுற்றேன். அவர்,
ஆதிமந்தியார்,      குறமகள் இளவெயினி,   
வெள்ளிவீதியார்,    பேய்மகள் இளவெயினி,  
ஔவையார், காவற்பெண்டு,     
பாரிமகளிர்,  காரைக்காற்பேயம்மையார்,
பூதப்பாண்டியன்றேவியார், வில்லிபுத்தூர்க்கோதையார்,
காக்கைபாடினியார்,  நச்செள்ளையார்   
எனப் பலராவர்.

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4.

  1. ஆதிமந்தியார்
    இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும்,
‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ்
சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’
என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர்,
‘மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
ண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31)
என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த ஆதிமந்திபாட்டு’ எனவுரைத்தமையானும், இச்செய்யுள் சான்றோராற் றொகுக்கப்பட்ட குறுந்தொகையு ளொன்றாதலானும் அறியப்படும். இதனுள், ‘காதலற்கெடுத்த’ என்றது, கணவனைக் காணப்பெறாத என்றவாறு. ஈண்டு, கெடுத்த என்பதனை ‘அரசுகெடுத் தலமரு மல்லற் காலை’ (சிலப்-அந்தி) ‘எற்கெடுத்திரங்கி’ (மணி-5) ‘யானைதன் வயப்பிடி கெடுத்து மாழாந்த தொத்து’ (சிந். கன-34) ‘ஒருபொற் பூங்கொடி யென்னு நீராளை யிங்கே கெடுத்தேன்’ (சிந். கன-38) என்னுமிடங்களிற்போலக் கொள்க.
இவர் காதலனைக் காணப்பெறாதவா றென்னையெனிற் கூறுவேன்: இவர், திருமாவளவனெனச் சிறந்த கரிகாற்சோழன் அருமை மகளாவர். சேரநாட்டு மன்னனாகிய ஆட்டனத்தி என்பானை மணந்தவர். இவர், தங்காதலனுடன் கரிகாற்சோழனாற் கழாஅர் என்னும் ஊரிற் காவிரி முன்றுறையிற் சிறப்பித்துக்கொண்டாடப்பட்ட புதுப்புனல் விழவுக்குச் சென்றாராக, ஆங்குக் கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினனாய், இயற்கை வனப்பாலும் செயற்கையணியாலும் கண்டாரனைவரும் விரும்புந் தகையனாய் யாரினும் மேம்பட்டு ஆடுதற் றொழிலாற் சிறந்த தம் உயிர்க்காதலனாகிய அவ் வாட்டனத்தியை நீர்விளையாடுகையிற் காவிரி வவ்வியதனால், அவனை நாட்டிலும் ஊரிலும் சேரியிலும் வீரர்தொக்க வில்விழவுகளிலும் மகளிர் தொக்க துணங்கையா டிடங்களிலும் யாண்டுந் தேடிக் காணப்பெறாது, புனல்கொண் டொளித்ததோ கடல்கொண்டு புக்கதோ என்று கலுழ்ந்த கண்ணராய் மருண்டசிந்தையராய் அலமந்து, அக்காவிரி ஓடும் வழியெல்லாம் ஓடிக் கடல்வாய்ப் புக்கு அவனையே கூவி யரற்றினார்க்கு, அக்கடலே அவ்வாட்டனத்தியைக் கொணர்ந்துவந்து முன்னிறுத்திக் காட்டியவளவில், ஆங்கவனைத் தழுவிக்கொண்டு பொற்கொடிபோலப் போந்தார் என்ப. இதனாற் காதலற்கெடுத்தவாறு உணர்க.
இவ்வரியகதை நெடுந்தொகையினும் சிலப்பதிகாரத்தும் எடுத்தாளப்பட்டுள்ளது. இது பரணர் முதலிய நல்லிசைப்புலவரால் ஆங்காங்கெடுத்துப் பாராட்டப்படுவது. தலைவர் பிரிவுக்குத் தலைவியர் வருந்துமிடனெல்லாம் இவ்வாதிமந்தியார்க்கு நேர்ந்த பெருந்துயரே எடுத்து உவமை கூறப்படுவது. இக் கதையோ டொட்டி ஆராயுமிடத்து, மேற்குறித்த பாடல் இவரது பெருந்துயர்நிலையி லுரைத்த தென்பதும், தம்முடைய நாயகன் நாடுகெழுகுரிசி லாகிய மாண்டக்கோன் என்பதும், அவன், மைந்தர்க்கு மைந்தனாய் மகளிர்க்குச் சாயலாய் இருபாலாராலும் விரும்பப்படுபவனாதலால், மைந்தர் வில்விழவா டிடங்களிலும் மகளிர் துணங்கையாடிடங்களிலும் மற்றுமவன் இருத்தற்குத் தக்குழியெல்லாந் தேடிக் காணாதுழன்றாரென்பதும், வில்விழவாடுகளத்தும் துணங்கையாடுகளத்தும் அவனைத் தேடுதல் காரணமாகப் பல்காற் சுற்றித்திரிதலாற் றாமும் ஆடுகளமளே போறலின், ‘யானுமோ ராடுகள மகளே’ என்றாரென்பதும், தங்கணவன் ஆடுதற் றொழிலிற் சிறந்தோன் என்பதும், அவனைக் காணாமையாற் றம்மேனி பெரிதுமெலிந்தார் என்பதும் தெளியப்படுதல் காண்க. இவர் தங்கணவன் யாவரும் விரும்பும் பேரழகுடையனாதலால் காவிரி அவனது நலனயந்து வவ்விய தென்று சிறப்பித்துக் கூறுவர். இவர் பெயரும் இவரது காதலன் பெயரும் சிறுபான்மை முதற்சொல்லொழித்து மந்தி எனவும் அத்தி எனவும் வழங்கவும்படும். இவற்றை யெல்லாம்,
‘காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதிமந்தி போலப் பேதுற்
றலந்தனெ னுழல்வேன் கொல்லோ.’
      (வெள்ளி வீதியார் – அகம் – 45)
‘கச்சினன் கழலினன் றெந்தார் மார்பினன்
வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியற்
சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென
வாதி மந்தி பேதுற் றினையச்
சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகு
மந்தண் காவிரி போல.’ 
      (பரணர். அகம் – 76)
‘கழா அர்ப் பெருந்துறை விழவி னாடு
மீட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பி
னாட்ட னத்தி நலனயந் துரைஇத்
தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின்
மாதிரந் துழைஇ மதிமருண் டுழந்த
வாதி மந்தி காதலற் காட்டிப்
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்.’ 
      (பரணர். அகம் – 222) 
‘அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக்
கொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை
யறியா மையி னழிந்த நெஞ்சி
னேற்றிய லெழினடைப் பொலிந்த முன்பிற்
றோட்டிருஞ் சுரியன் மணந்த பித்தை
பாட்ட னத்தியைக் காணீ ரோவென
நாட்டி னாட்டி னூரி னூரிற்
கடல்கொண் டன்றெனப் புனல்கொண் டன்றெனக்
கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த வாதி மந்தி.’ 
      (பரணர், அகம் – 236)
* … … … உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
றன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கன்னவி றோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக்கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்.’
      (சிலப்பதிகாரம், வஞ்சினமாலை)
என்பனவற்றாற் கண்டு ஆராய்ந்து கொள்க. நெடுந்தொகை 41-ம் பாட்டில், நன்னன் ஏற்றை நறும்பூணத்தி முதலிய சிலர், சேரன் படைத்தலைவராகக் கூறப்படுதலால், அத்தியை வஞ்சிக்கோன் என்றலும் பொருந்தும். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுதல் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுங் கண்டது. ‘விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், றண்பதங் கொள்ளுந் தலைநாட் போல’ என்பதன் உரையானுணர்க. அறிவாற் கலைமகளே எனச் சிறந்த ஔவையார் பாடியருளிய, ‘நெடுமலைச் சிலம்பின்’ என்னும் நெடுந்தொகையில், ‘வெள்ளி வீதியைப் போல ‘கன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே’ என வருதலானே வெள்ளிவீதியார் ஔவையாரின் முற்பட்டவராதல் அறியப்படுவது. அவ் வெள்ளிவீதியார்,
‘ஆதி மந்தி போலப் பேதுற், றலந்தனெ னுழல்வேன் கொல்லோ‘       (அகம்- 45)
என்றமையானே, இவ்வாதிமந்தியார் அவர்க்கும் முற்பட்டவராதல் தெளியப்படும். செந்தமிழ்ச் சரிதவாராய்ச்சி செவ்விதிற்புரிந்த இக்காலத்தறிஞர் [மகா-சிரீ வி. கனகசபைப் பிள்ளையவர்களுடைய ‘Tamils Eighteen Hundred Years Ago” Madras Review, Page 433.] கரிகாற்சோழன் காலம் கி.பி.55 முதல் 95 இறுதியாமெனத் தெளிவித்தலால், இவ்வாதிமந்தியாரும் அவன்மகளெனல்பற்றி அக்காலத்தவரே யாதல் தெரிந்துகொள்க. இவரது நுண்ணிய அறிவும் திண்ணிய கற்பும் இவற்றான் ஒருவா றறியத்தக்கது. இனி, வெள்ளி வீதியாரைப்பற்றி ஓதுவேன்.