Sunday, May 13, 2018

கிறித்துவர்களின் திருக்குறள் பித்தலாட்டம்

G.U.போப் மதமாற்றும் தொழிலில் வந்த பாதிரி  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது கிறித்துவ வெறியோடும் மேனாட்டு பொய்யான அறிவுச் செருக்கால் உளறித் தள்ளினார்.
ஜி.யு.போப் திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்கமுடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் ஆர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி  ஓலைச்சுவடி செப்பு தகடு   தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார்.