Thursday, February 14, 2019

தமிழர் வேர்களை இழிவு படுத்தும் கிறிஸ்துவ மதவெறி அராஜகம்

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி 












கருத்தரங்கத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாறுக்கும் ஆபத்து
திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி பாதிரியார்களால் நடத்தப்படுகிறது.
இக்கல்லூரி அரசு சலுகை பெற்று நடக்கக்கூடிய ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.
வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் “பன்னாட்டு கருத்தரங்கம் ”
“தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் ” என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
1. தொல்காப்பியம் வரையறுக்கும் பெண் மீதான கட்டுப்பாடுகள்
2. சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்
3. சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்
4. சங்ககாலச் சமூகத்தில் கொண்டி மகளிர்
5. புறத்திணைகள் காட்டும் பெண் வன்கொடுமைகள்
6. சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி – மறுவாசிப்பு
7. மணிமேகலை காட்டும் கணிகையர் சமூகம்
8. சீவக சிந்தாமணி எடுத்துரைக்கும் பலதார மணமுறை
9. கம்பராமாயணத்தில்
வெளிப்படும் ஆணாதிக்க சிந்தனைகள்
10 கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை சந்தித்த வன்கொடுமைகள்
11. வில்லிபாரதத்தில் பாஞ்சாலி சந்தித்த ஆணாதிக்க ஒடுக்குமுறைகள்.
12. தனிப்பாடல்களில் வேசியர் ஏசல்
13. நீதி நூல்கள் திணிக்கும் பெண்ணடிமை சிந்தனைகள்.
14 பெண் கதை மாந்தர்கள் வழி பழங்கதைகள் கட்டமைக்கும் பெண்ணடிமைத்தனம்.
15. சமயங்கள் மறுக்கும் பெண்ணின் அடையாளங்கள் பெண்ணின்.
16 உலா இலக்கியங்கள் கட்டமைக்கும் காமம்.
17. நாட்டுப்புறப் பாடல்களில் காணலாகும் பெண்ணடிமை சிந்தனைகள்.
18 குறவஞ்சி இலக்கியங்கள் வெளிப்படுத்தும்.
19 பெண்களை பழித்துரைக்கும் பட்டினத்தார் பாடல்கள்.
20 மாதவையாவின் முத்து மீனாட்சி புதினம் சித்தரிக்கும் பெண் வன்கொடுமைகள்.
21. புதுமைப்பித்தனின் “பொன்னகரம்” கேள்விக்குள்ளாகும் கற்புக் கோட்பாடு
22. தி.ஜானகிராமனின்
“மரப் பசு” புதினத்தில் பெண் சுதந்திரம்
23 . ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் கண்டிக்கும் பாலியல் வன்முறை
24. வைரமுத்துவின் கவிதைகளில் முதிர்கன்னிகள் குறித்த பதிவுகள்.
25 சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் சித்திரிக்கும் பெண் தொழிலாளிகள் மீதான வர்க்க ஒடுக்குதல்கள்
இப்படி 25 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மேற்படி கல்லூரி நிர்வாகம் இந்து சமய இலக்கியங்களை கம்பராமாயணத்தை வாழ்வியல் தத்துவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தவறான வரலாறுகளை ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க செய்து அதை ஆவணப்படுத்த முயற்சிக்கிறார்கள்,
இது இலக்கியத்தில் எழுத்து பயங்கரவாதத்தை உண்மை வரலாறுகளை அழிக்கக்கூடிய வேலையை இந்த கல்லூரி நிர்வாகம் செய்து வருவது என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இது மத மோதலை உருவாக்கும் .
ஒரு இந்து தன்னாட்சி பெற்ற கல்லூரி நிர்வாகம் உதாரணத்திற்கு
மறுவாசிப்பு பைபிளில் பெண்ணடிமைத்தனம்,
இயேசு இறப்பில் சந்தேகம்.
கன்னிமரியாள் எப்படி கருத்தரித்தாள் ?
பாதிரியார்களின் லீலைகள்
திருச்சபைகளில் வரக்கூடிய பெண்களுக்கு ஆபத்து ,
பாவமன்னிப்பு என்கின்ற பெயரில் கற்பழிப்பு
இப்படி பல்வேறு தலைப்புகளில் விவாத பொருளாக மாற்றி ஆய்வு கட்டுரை