Monday, August 29, 2022

தமிழக பாடநூல்களில் ஈ.வெ.ராமசாமியார் பற்றிய பொய் & நச்சுக் கதைகள்

மாநில பாடத்திட்டத்தில் முழுவதும் கட்டுக் கதைகள்

தமிழ்நாடு 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஈ.வெ.ராமசாமியார் பற்றிய குறிப்பு.  

வைக்கம் போராட்டம் 

சமூக ஏணிப்படிகளில் உள்ள கீழ்நிலைச் ஜாதிகளில் உள்ள “ புலையர்கள் “ அன்றைய உயர் ஜாதி “ நம்பூதிரிகளிடமிருந்து “ 90 அடிகள் தள்ளி நின்றும் , நம்பூதிரிகளின் ஜாதியை விட கீழே உள்ள “ நாயர் ‘’ ஜாதி மக்களிடம் இருந்து 64 அடிகள் இருந்தும் தள்ளி நிற்க வேண்டும் என்ற சட்டங்கள் இருந்தன . இத்தகைய சட்டங்களை மீறுபவர்கள் மீது தண்டிக்கப்படும் சூழலும் இருந்தது. இந்த சமூகச் சூழலின் பின்னணியிலிருந்து , ‘ வைக்கம் ஆலயத் தெரு விலக்கம் ‘ பற்றிய விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் .

இந்த நிலையை மாற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியான ஈழவ சமூகத்தின் தலைவரான திருவிதாங்கூரைச் சார்ந்த T K மாதவன் அவர்கள் உறுதி பூண்டார் . 1923 ஆம் ஆண்டு காக்கிநாடாவில் நடைபெற்ற “ இந்திய தேசிய காங்கிரஸ் “ இன் மகாசபை கூட்டத்தில் வைக்கம் ஆலய தெருப் பிரச்சனையை எடுத்துக்கூறி, ஒரு சத்தியாக்கிரக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்துப் பேசிட; “ மஹாத்மா ” காந்தி போராட்டத்துக்கு தன் ஆசி சொல்லி அனுமதி அளித்தார் .
இந்தப் போராட்டம் , பின்னர் வந்த ‘ ஆலய நுழைவுப் போராட்டம்’ அல்ல , மாறாகத் தாழ்த்தபட்ட மக்கள் உட்பட ஆலய மதில் சுவரை ஒட்டிய தெருக்களை , அனைத்துப் பிரிவு மக்களும் பயன்படுத்திக் கொள்ள நடக்க இருக்கும் போராட்டம் ஆகும் . '1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் போராட்டம் ஆரம்பம் ஆனது . இந்தப் போராட்ட வடிவம் பின் வருமாறு இருந்தது :
மூன்று சத்தியாகிரகிகள் - ஒரு புலையர் , ஒரு ஈழவர் மற்றும் ஒரு நாயர் ஆகிய மூவரும் அமைதியாகத் தெருவைக் அடைத்துள்ள அடைப்பை மீறி செல்வர் . இதில் நாயரை மட்டும் அனுமதித்த காவல்துறை , மற்ற இரு ஜாதியைச் சேர்ந்தவர்களை மேலே செல்ல அனுமதிக்கவில்லை . மீறிச்செல்ல முயற்சி செய்த போது , மூவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் தள்ளியது . இது முடிந்தவுடன் , அடுத்த அணி . அந்த அணி , கைது செய்யபட்டப் பிறகு அடுத்த அணி . .இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து வந்த தொண்டர்கள் கலந்து கொண்டு கைதானார்கள் .
இந்த தொண்டர் அணியில் ஒருவராகத்தான் , அன்றைய காங்கிரஸ் கட்சியில் இருந்த ஈ.வே. ரா வும் கலந்து கொண்டு சிறை சென்றார் .

ஈவெராவை கேரளா வைக்கம் போராட்டத்தில் ஒவ்வொரு நாள் ஒரு தலைவர் என ஒருநாள் மட்டுமே அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவு கீழ்ப்படிய கலந்து கொண்டார். வைக்கம் போராட்ட முயூசியத்தில் ஈ.வெ.ரா பெயரோ, படமோ கூட வைக்கும் அளவிற்கு பங்கு இல்லை. 

ஈரோட்ட்டில்  ஈவெரா- குடும்பம் கீழான பல கோவிலில் ஒன்றில் கூட பட்டியல் சமூகம் அனுமதிக்கவே இல்லை. தமிழகத்தில் பட்டியல் சமூகத்தை கோவில் நுழைவு மதுரை வைத்தியநாத ஐயர் நடத்தியபோது அதை ஜாதிவெறி பிடித்து எதிர்த்தவர் ஈவெரா.  

ஈ.வெ.ராமசாமியார் வாழ்நாளில் ஒரு ஆதிக்க ஜாதி வெறியராக பட்டியல் சமூக மக்களை இழிவு படுத்தியும், தமிழின் மூத்த தொல்குடி அந்தணர்கள் மீது நாசிய கொலை வெறிப் பேச்சுகள் பேசியதற்காக ஜெயிலும் சென்றவர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஈ.வெ.ரா பேச்சு &  அறிவற்ற செயல் மூடத்தனமானது  

ஈ.வெ.ராமசாமியார் திருச்சியில் இறைவன் பிள்ளையார் சிலை உடைத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது சந்திக்க தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. //ஈ.வெ.ராமசாமியார் பேச்சு  மென்மையாக கூறுவதனால் மூடத்தனமானது செயல் அறிவற்றது தொடர்ந்தால் கைது எனத் தீர்ப்பு 

எந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றார் ? வைக்கம் சத்யாக்கிரத்திற்கா ? எந்த மக்கள் தமிழில் பாராட்டி பெயர் வைத்தனர் ?

Saturday, August 27, 2022

The Jaina Appropriation and Adaptation of Śaiva Ritual, SOAS University of Lond


 


 

பண்டைய கல்வெட்டுகளின் காலக் குறிப்பும் எல்.டி.சாமிகண்ணுப்பிள்ளை பஞ்சாங்க கணிப்பும் -திருக்குறளின் காலமும்

இந்தியா முழுவதும் உள்ள கல்வெட்டுகளில் உள்ள காலக் குறிப்புகள் துல்லியமான‌ பஞ்சாங்க அடிப்படை கொண்டது. ராஜராஜ சோழர் பிறந்த நாள் சதய நக்ஷத்திரம்; எனில் திருவள்ளுவர் எனில் வைகாசி அனுஷம் என எல்லாமே பஞ்சாங்க அடிப்படை தான்.சமீபத்தில் கேரளத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது, அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சேர அரசரே, சைவ  மூவர் முதலிகளில் சசுந்தரமூர்த்தி நாயனாரின் தோழர் எனவும், அந்தக் கல்வெட்டில் உள்ள ஆண்டு பொஆ.871 என்றும் நாங்கள் பேரறிஞர். எல்.டி.சாமிகண்ணுப்பிள்ளை அவர்களின் பஞ்சாங்க கணிப்பு நூல் மூலம் உறுதி செய்தோம் என தொல்லியல்/கல்வெட்டு அறிஞர் கூறும் பத்திரிக்கை செய்தி

சாமிக்கண்ணு பிள்ளை தன் Panchang And Horoscope நூலில் பரிபாடல் -11ம் பாடலில் உள்ள வானியல் தோற்றக் குறிப்புகள் பொஆ.634ம் ஆண்டு ஜுன்-17 நாளினைக் குறிக்கிறது என விளக்கம் கீழே.

சங்க லக்கியங்கள் என்பவை எட்டுத்தொகை, பத்துப் பாட்டு;  இவற்றில்  முழுவதும் ஆசிரியப்பா என்ற நிலை மாறி வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா என தமிழ் யாப்பு வளர்ச்சிக்கு பின்பு தோன்றியவை   கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அவை காலத்தால் பிந்தியவை என்பது அறிஞர்கள் கருத்து.  

நவீன விஞ்ஞான அல்மனாக் கூறுவதும் பஞ்சாங்கக் கணக்கோடு பொருந்துகிறது

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ.  வாராந்தர நிகழ்சில்;  இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO)விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார். இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.

பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். .

தொல்காப்பியம் கலிப்பா, பரிபாடல் இலக்கணம் மற்றும் 30 எழுத்துக்களும் வடிவு பெற்ற பின்னர் 8ம் நூற்றாண்டு இறுதியில் இயற்றப்பட்டு இருக்க வேண்டும்.
திருக்குறள் 9ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இயற்றப்பட்ட நூலாகும்.
பாரதப் பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழகம் என்பதை நிறுவும் பல சங்க இலக்கியப் பாடல்களுள் இதுவும் ஒன்று என்பதால்  கொஞ்சம் விரிவாகவே அதைப் பார்க்கலாம்.


முதலில் இந்தப் பாடல். பரிபாடல்(கள்) வரிசையில் பதினொன்றாவது. பரிபாடலில் பாட்டுடைப் பொருளாக முருகன், திருமால், வைகை ஆகியவற்றை வைத்துப் பல புலவர்கள் பாடியது நமக்குத் தெரியும். அந்த வகையில் இது வையையைப் போற்றும் பாடல். பாடியவர் நல்லந்துவனார்.

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப, 
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் 
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன் 
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை 
மதியம் மறைய, வரு நாளில்  வாய்ந்த 
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி 
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் 
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால் 
புரை கெழு சையம் பொழி மழை தாழ, 
நெரிதரூஉம் வையைப் புனல். 
இந்தப் பாடலில் இந்திய வானியல், வானிலை இயல், சோதிடத்தின் சில கூறுகள் என அனைத்தும் கலந்துவருவதைக் காணலாம். 
விரிகதிர் மதியம், அதாவது நிலவு ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கிற நாளில் - பௌர்ணமியில்
எரி - கார்த்திகை நட்சத்திரம், அந்த நட்சத்திரத்தை தன்னுள்ளே கொண்ட இடபவீதி, சடை - சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட நட்சத்திரமான திருவாதிரையை தன்னுள்ளே கொண்ட மிதுன வீதி, வேழம் - யானைக்கு உரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேடவீதி  ஆகிய மூன்று வீதிகளைக் கொண்டு
அந்த மூன்று வீதிகளில் தலா ஒன்பது நட்சத்திரங்கள் வீதம்  இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் பன்னிரண்டு ராசி மண்டலங்களையும் கொண்ட வானில் 
வெள்ளி ஏற்றியல் - தனக்குரிய இடப ராசியை அடைய, வருடை - மேடம், மேஷ ராசியை படிமகனான செவ்வாய் அடைய, புந்தி - புதன் மிதுன ராசியில் நிற்க, புலர் விடியல் - சூரியன் தன்னுடைய ராசியான சிம்மத்தின் மேலுள்ள கடகத்தில் இருக்க, அந்தணன் - வியாழன் பங்கு - சனியின் துணை இல்லங்களான மகர, கும்பத்தின் அப்பால் உள்ள மீனத்தை அடைய, யமனைப் போன்ற சனி மகரத்தில் இருக்க பாம்புக்கிரகங்களில் ஒன்றான ராகு நிலைவை மறைக்க - அதாவது அன்று சந்திரக் கிரகணம் 
அப்படிப்பட்ட ஒரு நாளில், பொதியில் முனிவன் - அகத்தியனுக்கு உரிய நட்சத்திரமான அகத்திய நட்சத்திரம் (Canopus) மிதுன ராசியை அடைந்தது. அன்று வேனில் காலம் தந்த வெம்மை அகல சைய மலையில் பருவ மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையின் காரணமாக வையையில் புதுப்புனல் வந்தது. 
ஒரே பாடலில் எவ்வளவு செய்திகளைத் தந்திருக்கிறார் பாருங்கள். முதலில் பால்வீதி என்று இன்று அழைக்கப்படும் நமது வான்வெளியை மூன்று தெருக்களாகச் சமைத்து அதில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்டு பன்னிரண்டு ராசி மண்டலங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து கோள்களின் நிலையை விளக்குகிறார் நல்லந்துவனார். 
கோள்களின் தலைவனான சூரியன் கடக ராசியில் இருக்கிறான். இதைக்கொண்டு அது ஆடி மாதம் என்று தெரிந்து கொள்ளலாம். அதுனுடனே பயணிக்கும் புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும் இருக்கிறார்கள். ஆக, சூரியனைத் தவிர மற்ற எல்லாக் கிரகங்களும் அதன் சொந்த வீடுகளிலேயே இருக்கின்றன (அதனால்தானோ என்னவோ புலவர் ராசிகளுக்கு இருக்கை என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்). சந்திரன் கடகத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில் இருக்கிறார். அதனால் தான் அன்று பௌர்ணமி. போதாக்குறைக்கு ராகு அதனை மறைப்பதால் அன்று சந்திரக் கிரகணம். தோராயமாக அன்று உத்திராட நட்சத்திரமாக இருக்கக்கூடும். 
தவிர அகத்திய நட்சத்திரம் மிதுனத்தில், அதாவது சூரிய உதயத்திற்குச் சற்று முன்னால் தென் திசையில் உதிக்கிறது. இன்றும் ஆடி மாதத்தன்று அகத்திய நட்சத்திரத்தைத் தென் திசையில் காணலாம். அப்படிப்பட்ட நாளில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியிருக்கிறது. அதனால் வையையிலும் புனல் வந்திருக்கிறது.  ஒரு சிலர் இந்தக் கிரக நிலைகளை ஆராய்ந்து, இந்த நாள் பொயுமு 161ம் ஆண்டு வந்திருக்கக் கூடுமென்று  கணித்திருக்கின்றனர். தொல் வானியலில் அதி நவீன மென்பொருட்கள் வந்திருக்கிற இந்தக் கால கட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கணக்கீடு  சரியா என்று தெரிவிக்கலாம். அது பரிபாடலின் காலத்தை அறியவும் உதவும். 
மேற்குறிப்பிட்ட கூறுகள் எல்லாமே நமது பாரதத்தின் வானியலிலும், சோதிட சாஸ்திரத்திலும் காணப்படும் கூறுகளாகும். எனவே தமிழர் மற்ற பகுதிகளைப் போன்றே ஒரு பொதுவான வானியலைப் பின்பற்றியே வந்துள்ளனர் என்பதற்கு வேறு சாட்சிகள் வேண்டுமா என்ன? 

திருவள்ளுவ மாலை



 

திருக்குறள் ஆன்மிக நூலா