Monday, July 31, 2023

Chola Mandalam Sea


 

திருவள்ளுவரின் தாள்- அடி சேர்தலும் ஆன்மிகமும்

திருக்குறளில் வள்ளுவர் ஒரு முழுமையான ஆஸ்தீகராய், மெய்ப்பொருளை ஏற்றவராய் விளங்குகிறார்.


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
(குறள்- 2 கடவுள் வாழ்த்து)
ஒருவன் கல்வி கற்றலின் பயன் என்னவென்றால், முழுமையான அறிவன்  - ஆகிய இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழுது பற்றிக் கொள்ளுதல் ஆகும். 
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்  (குறள்- 10 கடவுள் வாழ்த்து)
திருவள்ளுவர் இறைவன் திருவடியை சேராதார்- பிறந்த், இறந்து மீண்டும் பிறந்து எனத் தொடரும் பிறவிப் பெருங்க்டலை நீந்திக் கடக்க முடியாது என்பது அப்படியே சங்க இலக்கியத்தின் பரிபாடலில் மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி என்ற அதே மெய்யியல் நெறியே ஆகும்.

திருவள்ளுவர் அடி அளந்தான் என - திருமால் எனும் விஷ்ணு தன் மூன்று  கால் அடிகளால் மூன்று உலகம் அளந்ததை குறல் 610ல் கூறி உள்ளார்      
இறைவன் திருமேனி- உருவ வணக்கம்     
ஒரு நிலைப் படுத்த இறைவன் திருமேனி- உருவ வணக்கம் மெய்யியல் மரபில் எளிமையான வழியாக ஏற்கப் பட்டு உள்ளதை, சங்க இலக்கியம் முழுவதும் உள்ள கோவில் இறை பற்றிய பாடல் குறிப்புகள் உறுதி செய்கின்றன.
இறைவன் வெளிப்பாடாக இயறகையையும் பஞ்ச பூதங்களையும் போற்றி வணங்கும் முறையில் வான் சிறப்பு என அதிகாரம் வைத்துள்ளார்.  பஞ்ச பூதங்கள் நம் உள்ளேயும் உள்ளது என்கிறார். 
மழையைப் போற்றுகையில் திருவள்ளுவர் நீர் இன்று அமையாது உலகு என நீரின் முக்கியத்துவத்தைக் கூறும் முன்பாக தமிழர் மெய்யியல் வாழ்வின் முக்கிய அம்சங்களைச் சுட்டி உள்ளார்.
மழை இல்லாது போனால் தமிழர் இறைவன் திருக்கோவிலில் அன்றாட நடத்தும் பூஜை வழிபாடும் (பூசனை என வடசொல் தமிழில் முதல் முறை வந்து உள்ளது; பரிபாடலில் பூசை என பூனைச் சுட்டும் சொல் உள்ளது),  பண்டிகை என விழாக்களும் நடவாது போகும் என்கிறார்
மழை இல்லை என்றால் -மனித வாழ்வில் திருமணம் செய்து பொருள் இட்டும் 'மனைவி, பிள்ளை, பெற்றோர் உடன் இல் வாழ்வான்'; மற்றும் துறவு வாழ்க்கை. இல்வாழ்வான் தானங்களும், துறவி தவமும்  இல்லாது போகும் என தமிழர் வாழ்நிலையைக் காட்டி உள்ளார்.
சங்க இலக்கியத்தில் இறைவன் திருவடி 
அலங்கல் செல்வன் சேவடி பரவி - பதிற்றிப்பத்து 31/9
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி -பரிபாடல்  3:2
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள் - பரிபாடல் 3:19
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு - திருமுருகாற்றுப்படை 62     
எட்டுத் தொகை கடவுள் வாழ்த்து பாடல்கள் திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியவை
மா நிலம் சேவடி ஆக தூ நீர் - நற்றிணை கடவுள் வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடி - குறுந்தொகை கடவுள் வாழ்த்து
குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென 5
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர 10
உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,
வண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும், கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி, நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;
earth, and bright, tall, loud bells are rung.  Those who have
made fasting vows, go to the cool water shores and bathe before praying.  
They pray to Thirumāl carrying a bright, shining discus that
awes eyes and donning large, fragrant garlands made with
clusters of basil swarmed by bees.  They bow down worshipping
his perfect feet and return to their towns with joy in their hearts.
 
மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி,
O Thirumāl!  O Thirumāl!  O Lord
with faultless, fine feet that rids future births of your devotees!  
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;    20
Is there anybody who does not adore your divine feet,
one of which measured the seven worlds with a single  stride?
எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு  62  திருமுருகாற்றுப்படை
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் - திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு,
நற்றிணை கடவுள் வாழ்த்து
மா நிலம் சேவடி ஆக தூ நீர்
மா நிலம் சேவடி ஆக தூ நீர்பெரிய நிலமே தன் செம்மையான அடியாகவும்,
குறுந்தொகை கடவுள் வாழ்த்து
தெளிந்த நீர் நிறைந்ததாமரை புரையும் காமர் சேவடி  
தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்,

நாம் ஆங்கில மொழிபெயர்ப்பை பேராசிரியர் வைதேகி லேம்பர்ட் இணையத்திலும், எளிய தமிழ் மாற்றம்  பேராசிரியர் பாண்டியராஜன் இணையத்தில் இருந்து தந்து உள்ளேன் 

இறைவனை வணங்க நம் மனம், மெய், மொழி என மூன்றாலும் ஒருநிலைப் படுத்தி முழுமையாகப் பணிய வேண்டும். மனிதன் அலைப்பாயும் மனதை 
 
 தாள் அடி வணங்குதல் & நாத்திக- உலகாயுதத்தை நிராகரிக்கும் வள்ளுவம் 
வள்ளுவர் உலகைப் படைத்த பரம்பொருள் என்பதை ஆதி பகவன் முதற்றே உலகு என்றவர் அந்த கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்
1. 'நல் தாள் தொழாஅர் எனின்’ கல்வியினால் பயன் இல்லை 
2. ‘மாண்அடி சேர்ந்தார்’ பூமியில் புகழோடு வாழ்வர்
3.  ‘வேண்டாமை இலான்அடி’  துன்பங்கள் நீங்கும்
4. ‘உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்'-’ மனக்கவலகைகள் நீங்கும். 
5. ‘அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்’ - பிற பொருள் இன்பக் கடல் கடக்க இயலும்
6.  ‘ எண்_குணத்தான் தாளை வணங்கா தலை’- வணங்காதவனிடம் உள்ள ஐம்பொறிகளால் பயன் இல்லை.
7.  ‘நீந்தார் இறைவன் அடி சேராதார்’ - பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க  முடியாது
என ஏழு குறள்களில் இறிவன் திருவடிகளை அடிபணிய வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறார்.  அடிபணிதல் என்றால் அது தன்னை முழுமையாக ஒப்புவித்தலாகும்.
நான்கு குறட்பாக்களில் இறைவன் திருவடியைப் பணியாதவர்களால் முடியாது என்கையில் -நாத்திகம் பேசுவாரோ; உலகாயுதம் எனும் சமண, பௌத்த, ஆஜிவிக மதங்களிற்கும் தொடர்பே இல்லை, அவை உலகைப் படைத்த கடவுளை ஏற்பதில்லை. இன்று மதமாற்ற  அன்னிய காலனி ஆதிக்க நச்சுக் கருத்து  அடிமைப் புலவர்கள் ஆத்தீக- நாத்தீகர் இடையே என்ற மோசடி வேடம் - வள்ளுவத்தை தமிழர் மெய்யியல் வழியினை மடை மாற்றவே
திருவள்ளுவர் போற்றும் மெய்யியல் நெறி
திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் உரை கடவுள் வாழ்த்து மற்றும் மேலும் பல குறட்பாக்களில்  தமிழ் மரபு படி வள்ளுவர் கூறி உள்ளது உலகைப் படைத்த பரம்பொருளை என உரை செய்து உள்ளார்.

5.இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
6.பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (குறள் 356: மெய்யுணர்தல்)
நல்ல நூல்களையும் படித்து, பெரியோர்களிடமும் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் இந்த பூவுலகில் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர். 

பரிமேலழகர் உரை: ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள் 36: அறன்வலியுறுத்தல்)
அறம் செய்ய-பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறம் செய்ய வேண்டும் அது ஒருவர் இறந்தபின்னும் அதன் புண்ணியங்கள் பின் எழும் பிறவிகளில் துணையாய் நிற்கும் (தமிழர் மெய் மரபுரை)

பரிமேலழகர் உரை: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

திருவள்ளுவர் இறைவனை அடைய என்ன வழி என்கிறார்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள் 5: கடவுள் வாழ்த்து)
இறைவனுடைய மெய்யான புகழைப் புரிந்து அதன்படி போற்றுவாருக்கு அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும் சேர்வதில்லை (தமிழர் மெய் மரபுரை)