Sunday, October 14, 2018

கிறிஸ்துவ சீமான் கட்சி - கிறிஸ்துவ மருமகன் கொலைவெறி தாக்குதல்

மகளை காதல் திருமணம் செய்தவரையும், அவரது உறவினர்களையும் அரிவாளால் வெட்டி, மகளை கடத்திச் சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 7 பேரை கன்னியாகுமரி போலீஸார்  தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரியை அடுத்துள்ள மயிலாடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். பெயின்டிங் கான்ட்ராக்டரான இவர், நாம் தமிழர் கட்சியின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். ஜெயபாலிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டார்லின் (24) என்பவர் வேலைபார்த்து வந்தார். ஸ்டார்லினுக்கும், ஜெயபாலின் மகள் டிக்சோனாவுக்கும் (22) இடையே காதல் ஏற்பட்டது. இதையறிந்த ஜெயபால் இருவரையும் கண்டித்துள்ளார். மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய  ஏற்பாடு செய்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு ஜெயபால் சென்றுள்ளார்.  அப்போது, டிக்சோனா திடீரெனமாயமானார்.  பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி போலீஸில் ஜெயபால் புகார் செய்தார்.
டிக்சோனா, தனது காதலன் ஸ்டார்லினுடன் குலசேகரம் பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் அங்கு திருமணம் செய்துள்ளனர். மணக்கோலத்தில் தாங்கள் இருக்கும் படத்தை வாட்ஸ்அப் மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர்.
காரில் கடத்தல்

திருமணத்துக்குப் பிறகு, குளச்சலில் உள்ள ஸ்டார்லினின் உறவினர் வீட்டில் தங்கியிருந்த  காதல் தம்பதி, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்க முடிவு செய்து, நேற்று முன்தினம் மாலை காரில் தங்களது உறவினர்களுடன் புறப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயபால், தனது ஆதரவாளர்களுடன் 3 கார்களில் அவர்களை தேடிச் சென்றார்.
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் டிக்சோனாவும், ஸ்டார்லினும் வந்த காரை அவர்கள் விரட்டிச் சென்று வழிமறித்தனர். பின்னர், டிக்சோனாவை மட்டும் வலுக்கட்டாயமாக மற்றொரு காரில் ஏற்றிச் சென்றனர். இதைத் தடுக்க முயன்ற ஸ்டார்லின், அவரது உறவினர்கள் சுரேஷ், அருள் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். படுகாயமடைந்த மூவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜெயபால் உட்பட 8 பேர் மீது கன்னியாகுமரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment