Tuesday, October 2, 2018

01 ஏசுவை அறிவோம் - முன்னுரை



கிறிஸ்து ஏசு எனபப்டும் கிறிஸ்துவ சமயத் தொன்ம நாயகர் பற்றிய கதைகள்- செய்திகள் அனைத்துமே இறந்த மனிதர் ஏசுவை தெய்வீகர் என நம்பி அவரைப் பார்க்காத பிற்கால கிரேக்க சர்ச் மதம்-பரப்ப[i] உருவாக்கிய கதைகள் சுவிசேஷங்கள் ஆகும்.  இஸ்ரேலில் வாழ்ந்து ரோமன் மரணதண்டனையில் செத்தார் எனும் ஏசுவைப் பற்றி ரோம் ஆட்சியாளரோ,  இஸ்ரேலில் ஏசுவைப் பார்த்த சமகாலத்தவர் யாருமே ஏதும் எழுதவைத்து செல்லவில்லை.

சமயங்களை பின்பற்றுவோர் தன் மதத்தின் மீது அதீதப் பற்று வைத்தல் நடைமுறையே. 100 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றும் கிறிஸ்துவ சமய சர்ச், விவிலியக் கதைகளை வரலாறு என்பதை வாடிக்கையாய் பரப்புகிறது. மேம்போக்கானஆய்வு முடிவுகளை 60கள் வரை பரப்பப் பட்ட தவறான ஆதாரங்கள் பெரும் ஆரவாரத்தோடு இன்றும் விளம்பரப் படுத்தப்படுகிறது.

உலகில் மிக அதிகமான செலவில் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்த்து ஆண்டிற்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பப்படும் இதே நேரத்தில்; பைபிளியல் ஆய்வும் - இஸ்ரேலில் கடந்த 150 ஆண்டாய் நிகழ்ந்த தொல்லியல் அகழ்வாய்வுகளும் பைபிள் கதைகளில் சிறிதும் வரலாற்று தன்மை இல்லை என்கிறது.  

கிறிஸ்துவ சமயத்தின் தொன்மக் கதைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970க்குப்[ii] பின்பாக, தொல்லியல் ஆய்வுகளில் உண்மை அடிப்படையில் என்ற நோக்கம் மேலோங்கத் தொடங்கியது. அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் எழும்பிய கருத்துச் சுதந்திரம், விஞ்ஞானப் புரட்சி, சர்ச் உண்மையினைத் தடுக்கும் சக்தி குறைந்திட பல்கலைக் கழகங்களின் ஆய்வுகளும் மேம்படத் தொடங்கின.

ஆராதனைப் பார்வை நீங்கி வரலாறு எனக் கொண்டு எழுந்த தொல்லியல் அகழ்வாய்வுகள் விவிலியத்தின் முற்பகுதியான எபிரேய பைபிளினை அனைத்தும் பொய் எனக் காட்டிட, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியதுறை இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் தன் நூலின்(The Bible Unearthed) முன்னுரையில் கூறுவது[iii]  பைபிள் கதைகளில் உள்ளவை வரலாற்று நிகழ்வுகள் அல்ல,  மனிதச்  சிந்தனையின்  புனையப் பட்ட வளமான கட்டுக் கதைகள் என்றும்;  இஸ்ரேலில்  எவ்வித இறை வெளிப்பாடோ - தூதர் மூலம் இறைவன் பேசவோ  இல்லை என்க்றார்.

அமெரிக்க தொல்லியல் பேராசிரியர் வில்லியம் டேவர்[iv] கூறுவது கடந்த 150 ஆண்டுகளில் எகிப்தில்  எபிரேயர்கள் வாழ்ந்தார்கள், பாலைவனத்தில் 40 வருடம் அலைந்து இஸ்ரேல் வந்தனர் என்பதற்கு ஒரு சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை, பைபிள் கதைகளைக் காப்பாற்ற பல அறிஞர்களும் பல்வேறு ஊகக் கோட்பாடு கிளப்பினர்.

மின்னணுப் புரட்சியும் கைப்பேசியில் வலையுலகமும் உலகை ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உலகின் பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் பல முக்கிய பதவிகளில் இந்தியர் உள்ளனர். நம்மிடையேயும் பல்வேறு சமய மக்கள் வாழ்கின்றனர். தங்கள் சமயமே உயர்ந்தது என திணிக்கபட்ட புனையலை கேட்டு அதே ஊகத்தில் பாரத இறை வரலாற்றை -வழிபாட்டையை அறியாது பேசுவோர் காண்கிறோம்.

மதம் பரப்பல் என்பது கிறிஸ்துவத்தில் ஒரு வர்த்தகத் தொழில் என்ற வழியில் பணம் புயல் மாதிரி புகுந்து விளையாடுகிறது. பல சிறிய நாடுகளின் ஒராண்டு பட்ஜெட்டை விட இம்மத நிறுவனங்களுள் புழங்கும் பணம் மிகஅதிகமாக உள்ளது.

வரலாற்று ஆய்வு என்பது தொன்மக் கதைகள் அல்ல, , புதை பொருள் தொல்லியல் ஆய்வுத் தரவுகள், கல்வெட்டு போன்றசமகால எழுத்துக்கள், ஓலைச்சுவடி, செப்புப்பட்டயம்  & நடுநிலையாளர் எழுதியவை போன்றவையே.  இவற்றின் அடிப்படையில் இன்று ஐரோப்பா -அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர்களின் பாட நூல்களின் அடிப்படையிலும், பைபிளியல் மழுப்பலாளர் நூல்கள் அடிப்படையிலும் இந்நுல் உண்மைகளைத் தருகின்றது..

சமுதாயத்தில் நல்லிணக்கம் தோன்ற அனைத்து மக்க்ளிடையே உரையாடல்கள் அவசியம், அந்நிலையில் பிற சமயங்களைப் பற்றிய வரலாற்றுப் புரிதல் அவசியம். ஹிந்துக்கள் இனி பிற சமய மக்களோடு உரையாடல் செய்யும்போது கிறிஸ்துவம் பற்றிய ஒரு கையேடாகபயன்படுத்தப்படவும் வேண்டும்.

உலகின் மூன்று பெருமதங்களில் ஒன்றான கிறிஸ்துவ துவக்கம் மிகவும் மெதுவானது. கிறிஸ்துவ மத தொடக்க வளர்ச்சியினை பற்றிய ஆய்வுகளும், அவற்றின்[v] மீதான சர்ச் வரலாற்று ஆசிரியர்கள் விமர்சனங்களும் ஏசு பொஆ 30 வாக்கில் இறந்து  300 ஆண்டு பின்பு 325 வாக்கில் 5.5 ரோமன் கோடி குடிமக்களில் 10 லட்சம் பேர் கிறிஸ்துவர், ரோமன் ஆட்சி அங்கிகாரம் பெற்றிட அடுத்த 50 ஆண்டினும் 5 கோடியைத் தாண்டியது.  கிறிஸ்துவம் பெருமதமாய் உரு பெறக் காரணம் ரோமன் ஆட்சியின் வாள் பலமே அன்றி  வரலாற்று ஏசுவோ, அதிசயங்களோ இல்லை என தெளிவாகும்.

இயேசு கதைகளை சொல்லும் பைபிள் மிகப் பழைய ஏடுகள்[vi] 2ம் நூற்றாண்டினவை  மிகச்சிறு துண்டுகள்; ஒரு சிறுபுத்தகம் முழுதும் எனில் கூட  3ம் நூற்றாண்டு இறுதி அல்லது பிற்பாடு தான், புதிய ஏற்பாடு முழுமைக்கும் எனில் 5ம் நூற்றாண்டு ஏடுகள் அதிலும் பிற்கால திருத்தங்கள் என உள்ளது- இவை நம்பிக்கைக்கு உரியது இல்லை என பைபிள் அறிஞர் தெளிவாக்கி உள்ளனர்.

எபிரேய பழைய ஏற்பாடு ஏடுகள் - மொழிக்கு உயிர் எழுத்துக்கள்  சேர்த்த  பின்னர் பொஆ 10ம் நூற்றாண்டு மெசொடரிக் ஏடு தான் நம்மிடம் உள்ள பழைய ஏடுகள். 1947ல் கிடைத்த  சாக்கடல்[vii] சுருள்கள் பொமு 200 வாக்கில் தான் பழைய ஏற்பாடு ஆரம்ப வடிவம் இயற்றலும் மாற்றலும் என பொஆ 2ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது என்பதைக் காட்டுகிறது. 

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

இந்நூலில் நாம் வரலாற்றை பன்னாட்டு பல்கலை கழகங்கள் குறிக்கும்படிக்கு பொஆ - பொமு  (பொது ஆண்டு காலம் & பொது ஆண்டுற்கு முன்), என்றே பயன்படுத்துகிறோம். நாம் தமிழ் ERV அல்லது கத்தோலிக்க இன்றைய தமிழ் மொழி பெயர்ப்பை பெரும்பாலும் உபயோகித்தாலும் தேவை எனில் மூல எபிரேய- கிரேக்க சொற்களின் சரியான பொருளை எடுத்து கொண்டு  உள்ளோம்.

ஹிந்துக்கள் இனி பிற சமய மக்களோடு உரையாடல் செய்யும்போது கிறிஸ்துவம் பற்றிய ஒரு கையேடாக பயன்படுத்தப்படவும் வேண்டும்.


[i] 1.யோவான் 20:31இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்று நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவருக்கு பணம் கொடுத்தால் இறைவனுக்கு எனவும் புனைகிறார்.
[ii] Prof.Thomas L. Thompson who submitted his first thesis he Historicity of the Patriarchal Narratives: The Quest for the Historical Abraham, was completed in June of 1971 at Abington University
[iii] The Bible Unearthed  //The world in which the Bible was created was not a mythic realm of great cities and saintly heroes,but a tiny, down-to-earth kingdom where people struggled for their future against the all-too-human fears of war, poverty, injustice, disease, famine, and drought. The historical saga contained in the Bible—from Abraham’s encounter with God and his journey to Canaan, to Moses’ deliverance of the children of Israel from bondage, to the rise and fall of the kingdoms of Israel and Judah—was not a miraculous revelation, but a brilliant product of the human imagination.//
[iv] Dever, William G. (2001), What Did the Biblical Writers Know and When Did They Know It? What Archaeology Can Tell Us about the Reality of Ancient Israel As archaeological evidence mounted, however, in the heyday of “biblical archaeology” between the 1930s and the 1950s, the question of Israelite origins grew more intractable. To everyone’sfrustration, new data brought more questions than answers. In fact, no one had ever found anyarchaeological evidence for the Exodus from Egypt. But in order to try to reconstruct the conquest andsettlement of Canaan, three competing theories or “models” eventually emerged, to which we shall turn presently.
[v] Rodney Stark, The Rise of Christianity (1996)  Bruce Malina, Book Review of Rodney Stark's The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.-220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, "scientifically" speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. 
[vi] Books off Bart Ehrman ; Helmet Koester & https://en.wikipedia.org/wiki/Biblical_manuscript
[vii] Geza Vermes -The Story of the Scrolls &  https://en.wikipedia.org/wiki/Masoretic_Text

No comments:

Post a Comment