Tuesday, August 21, 2018

சுவிசேஷக் கதைகளை வரலாற்றாசிரியர்கள் நிராகரிப்பது ஏன்-1

ஏசு பிறப்பு கதைகள்
சுவிசேஷக் கதைகளை ஆராய்ந்த வரலாற்றாசிரியர்கள் அவை சற்றும் நம்பக்த் தன்மை கொண்டவை இல்லை, வெற்று புனைக் கதைகள் என நிராகரிப்பது ஏன் எனப் பார்ப்போம். சுவிசேஷத்தின் நம்பகமான மூல ஏடுகள் என்பது 400 ஆண்டுக்கு பிற்பட்டது தான்

ஏசு யார் ?
மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பின் வாரிசு.
லூக்காவின் கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் வாரிசு.
ஏசு பிறந்த வருடம் எது? 
மத்தேயுவின் பெத்லஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பின் வாரிசான ஏசு- பெரிய ஏரோது ராஜா இறப்பதற்கு 2 வருடம் முன்பு பிறந்தார் என உணர்த்தும்படி கதை உள்ளது.
லூக்காவின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பிற்கு சிரியாவின் கவர்னராய் இருந்த கிரேனியூவின் கீழ் யூதேயா இருந்த போது, நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிறந்தார் எனக் கதை.
மத்தேயு கதை -பெரிய ஏரோது ராஜா மரணம் பொமு-4ல், அதற்கு 2 வருடம் முன் என்றால் பொமு-6 அல்லது 7 இறுதியில்
லூக்கா கதை கிரேனியூ கீழ் யூதேயாவின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பொஆ8ல், பெரிய ஏரோது மரண த்திற்குப் பின் ஏரோது ஆர்சிலேயு பதவி ஏற்க, பொஆ-6ல் பஸ்கா பண்டிகையின்போது மக்கள் ஆட்சிக்கு எதிரான கலவரத்தை அடக்கவில்லை என ரோம் தன் கவர்னர் கீழ் ஆட்சியைக் கொணர்ந்து பின் சொத்து- வருமானம் அடிப்படையில் வரிகளை ஏற்றவே குடிமதிப்பு  வந்தது


மத்தேயு
லூக்கா
தாய் 
பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
நாசரேத்தில் வாழ்ந்த மேரி
தந்தை
பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்
தந்தை முன்னோர் 
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது பரம்பரை
தாவீது உறவு முறை
 தாவீது- படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
தாவீது வேறோரு   மகன் நாத்தன் வரிசையில் ஏசு
தலைமுறை 
ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
பிறந்தது
பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
சூழ்நிலை
சோகம்
மகிழ்ச்சி
வரலாற்று சம்பவம்
 யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது பொமு-4 இல்.
ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (பொ ஆ.8)
அதிசயக் கதைகள் 
கிழக்குநாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து, யூத ராஜா பிறப்பைக் கணித்து, குழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்து, பின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.
அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் (எபிரேய மூலமே கிடையாது) பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
அதிசயக் கதைகள்
பெத்லஹேமில் வாழ்ந்த செய்த யாக்கோபு மகன் ஜோசப்  கனவில் தேவதூதன் சொன்னதாய்
நாசரேத்தில் வாழ்ந்த மேரியிடம் நேரில்  தேவதூதன் சொன்னதாய் கதை
பிறந்த பின்னர்
கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்
 ஜெருசலேம் ஆலயத்தில்  மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.

சுவிசேஷக் கதாசிரியர்கள் ஏசுவின் தந்தை நாசரேத்தில் வாழ்ந்தவரா? பெத்லஹேமில் வாழ்ந்தவரா? தெரியாமல் ஆளுக்கு ஒன்று தன்னிச்சையாய் புனைந்துள்ளனர்.
ஏசு பிறந்த வருடம் - உண்மையில் நேரடியாய் சொல்லவில்லை.
மத்தேயு கதையில் பெத்லஹேமை சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் குடும்பத்தை நாசரேத் அனுப்ப காரணம் தேவை, என குழந்தை கொலை கதை, பின்னர் ஏரோது இறந்த பின்னர் யூதேயா வராமல் கலிலேயாவின் நாசரேத் சென்றதாய் கதை, ஆனால் யுதேயா போகாமைக்கு காரணம் ஆண்டது ஏரோது ஆர்சிலேயு எனில் கலிலேயாவை ஆண்டது ஏரோது மகன் ஏரோது அந்தியப்பா தான், சொன்ன காரணமும் பொய்.
லூக்கா கதையிலோ ஏசுவை நாசரேத்தின் ஏலி மகன் ஜோசப் வாரிசு எனச் சொல்லிவிட்ட்தால் - பிறப்பை பெத்லஹேம் கொண்டுவர மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றார். கணக்கெடுப்பு நடந்ததே  சொத்து- வருமானம் அடிப்படையில் வரிகளை ஏற்றவே- பின் எதற்கு ஆயிரம் வருடம் முன்பான தொன்மக் கதை முன்னோர் ஊர் செல்வது.

சுவிசேஷங்களுக்கு முன்பே புனையப்பட்ட பவுல் கடிதத்தில் ஏசுவின் பிறப்பின் சிறப்ப்போ, அதிசயமோ; அல்லது ஏசு அதிசயம் ஏதும் செய்தார் என்பதும் இல்லை என பவுல் கூறி உள்ளார்.


1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 


 சுவிசேஷக் கதைகள் முழுவது ஏசுவை ஒரு அதிசயம் செய்தவராயும், மேலும் ஞான ரீதியில் ஏசுவின் வாழ்வு கதை சம்பவங்களை தீர்க்கர் சொன்னது நிறைவேற எனப் புனைய பிறந்த வருடம் எது - தெரியாது?
தந்தையார் யார் தெரியாது? தந்தையார் எந்த ஊரிக்காரர் தெரியாது?
 எதுவுமே அறியாமல் தாங்களாகவே சுவிசேஷக் கதாசிரியர்கள் புனைந்ததே என வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாய் நிராகரிக்கின்றனர்.

No comments:

Post a Comment