Thursday, August 23, 2018

சுவிசேஷக் கதைகளை வரலாற்றாசிரியர்கள் நிராகரிப்பது ஏன்-2

 ஏசு சீடரோடு இயக்கம் - எங்கே? எத்தனை நாட்கள்


சுவிசேஷக் கதைகளை ஆராய்ந்த வரலாற்றாசிரியர்கள் அவை சற்றும் நம்பக்த் தன்மை கொண்டவை இல்லை, வெற்று புனைக் கதைகள் என நிராகரிப்பது ஏன் எனப் பார்ப்போம். சுவிசேஷத்தின் நம்பகமான மூல ஏடுகள் என்பது 400 ஆண்டுக்கு பிற்பட்டது தான்.


சுவிசேஷக் கதைகளில் முதலில் வரையப்பட்டது மாற்கு, இது பொ.ஆ.70- 75 வாக்கில் முதல் வடிவம் பெற்றது. இதனை அடிப்படையாய் வைத்து பெருமளவில் அதே கதையை மத்தேயூவும் - லூக்காவும் சொல்லியுள்ளதால் இவை மூன்றும் ஒத்த கதை சுவிகள் எனப்படும். நான்காவது சுவி யோவான் கதாசிரியர் மாற்கின் கதையை அறிந்தும் தன்னிச்சையாய் கதையை மாற்றி உள்ளதால் அது தனி நடை.


மத்தேயுவின் கதை ஏசு பெத்லஹேமைச் சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் ஏசு பிறந்தார்.

லூக்காவின் கதை ஏசு நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் ஜோசப் வாரிசாய் மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார்.

சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு ஏசுவின் குடும்பத்தினர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அறியாமல் தன்னிச்சையாய் கதை புனைந்துள்ளனர் என பைபிளியல் ஆய்வறிஞர்கள் ஏற்கின்றனர்.

சுவிசேஷக் கதைகள் ஏசுவின் சீடர்கள் மூலமாய் வந்த செவி வழி கதைகள் என்றாலும், ஏசு சீடர்களை சேர்த்த போது அவருக்கு 30வயது சமீபம் என்கிறது, எனவே பெற்றோர் - பிறப்பு கதைகளை நேரடியாய் அறிய வாய்ப்பில்லை.  சீடர்களை சேர்த்தல் முதல் இயங்கிய காலம் ரோமன் தண்டனையில் இறந்தவை வரை உள்ள கதைகள் நேரடி அனுபவம், அவைகள் கதையாய் சொல்லப்பட, அடுத்த தலைமுறை கேட்டு ஞாபகம் உள்ளபடி வரைதிருக்க வேண்டும்.

ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலும் சீடர் சேர்த்தலும்  

மாற்கு சுவிசேஷக் கதையில் யூதேயா தேடி சென்று ஞானஸ்நான யோவானிடம் ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுகிறார், 40 நாள் உணவின்றி விரத எனக் கதை, ஆனால் ஸ்நானக யோவான் கைதாக கலிலேயா வருகிறார், ஏசு தன் சீடர் அனைவரையும் முக்கிய சீடர் பேதுரு உட்பட அனைவரையும் கலிலேயாவில் தான் சேர்த்துக் கொண்டார்.

ஏசு சீடரோடு இயக்கம்

மாற்கு கதைப்படி ஏசு முக்கிய சீடர் பேதுரு உட்பட அனைவரோடும் இயங்கியது முழுக்கவும் கலிலேயாவில் மட்டுமே. அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்காக ரோம் ஆட்சியின் கீழான யூதேயாவின் ஜெருசலேம் செல்ல  ஆயிரம் போர்வீரர் கீழான ரோமன் படை வீரர்குழு கைது செய்ய, ரோமன் தண்டனை முறையான தூக்குமரத்தில் அம்மணமாய் தொங்கி இறந்தார் எனக் கதை.

 நான்காவது சுவி யோவான் கதாசிரியர் - ஏசு  கலிலேயா வந்து ஸ்நானக யோவானிடம் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே பேதுருவை யூதேயாவில் சேர்ப்பதாய் கதை. பிறகு அவர் கலிலேய எல்லையில் இயங்கிய போது ஸ்நானக யோவான் வந்தார் எனவும் கதை. அதாவது ஸ்நானக யோவான் கைதாகுமுன்பே ஏசு தனி இயக்கம் நடத்த துவங்கிவிட்டார் என மற்றி மூன்று சுவிகளுடன் முரண்படுகிறது.

 ஏசு சீடரோடு இயங்கியது எங்கே - எத்தனை மாதங்கள்? 
முதலில் இயற்றிய மாற்கு கதையை ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கியபின் ஞானஸ்நான யோவான் கைதாகிட ஏசு கலிலேயா வந்து அங்கே சீடர்களை சேர்த்து இயங்கியவர் அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு,  யூதத் தொன்ம கதை சட்டங்கள்படி இஸ்ரேலிற்கான கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலய்த்தில் ஆடு கொலை பலி தர சென்றபோது கைதாகி மரண தண்டனையில் இறந்தார்.
ஏசு சீடரோடு இயங்கியது முழுமையும் கலிலேயாவில் தான், அது ஒரு வருடத்திற்கும் குறைவு என ஏசு இறப்பிற்கு 40 ௪5 வருடம் பின்பு செவிவழி கதைகளைக் கேட்டு மாற்கு கதாசிரியர் தெளிவாக சொல்கிறார். மீதி மூன்று சுவிகளும் மாற்கு சுவியை வைத்து மேலும் பல சேர்த்தவை. இதில் மத்தேயு - லூக்கா மாற்கு கதையின் நடையை அப்படியே பின்பற்றினார்கள் என்றதால் ஒத்தை கதையமைப்பு சுவிகள் எனப் பெயர்.
நான்காவது சுவி: சர்ச் பாரம்பரியப்படி ரோமன் மன்னர் ட்ராஜன் ஆட்சியின் (98-117) போது இயற்றப்பட்டது நான்காவது சுவி என்னும் யோவான் சுவிசேஷம். நான்காவது சுவி முழுமையும் ஏசு- சீடர் இடையான உரையாடல் தொடங்கி ஏசுவின் பேச்சு எல்லாமே மற்றவற்றில் மாறுபடுவதாலும் அதன் கிரேக்க நடை, பிற்காலத்தது என்பதால் யோவான் சுவியின் வரலாற்றுத் தன்மையை பைபிள் அறிஞர்கள் ஏற்பதில்லை.
நான்காவது சுவி கதையில் ஏசு சிடர்களில் சிலரை யூதேயாவிலேயே சேர்த்து ஆரம்பித்து, கலிலேயாவிற்கும் - யூதேயாவிற்கும் இடையே பயணித்து இயங்கியதாய் கதை. முன்ன்று பஸ்கா பண்டிகை கூறப்படுகிறது. ஏசுவின் கடைசி 8 மாதங்கள் அதாவது கூடாரப் பண்டிகை(செப்டம்பர்) தொடங்கி - மறு அர்ப்பணிப்பு பண்டிகை(டிசம்பர்) எனச் செல்ல் பஸ்கா ஏப்ரல் வரை முழுமையாய் யூதேயாவில் தான்.
3 பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் சென்றது உள்ளது எனில், முதலாம் பண்டிகைக்குமுன் ஏசு கலிலேயாவில் இருந்து யூதேயா வந்தபோது பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஏசுவின் பொது இயக்கம் 2 வருடம் மற்றும் சில நாட்கள், அதில் கடைசி 8 மாதம் முழுமையும் யூதேயாவில்.

பைபிளியல் அறிஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் கேடவுக்ஸ் கூறுவது, நான்காம் சுவியில் ஏசு பேசியதாய் உள்ளவையில் அத்தனை மாறுபாடுகள்;  பின்னாள் சர்ச் சார்பான கதாசிரியர் தங்கள் நம்பிக்கையை ஏசு பேசியதாய் ஏற்றி சுவி இயற்றினார். ஒத்த கதை சுவிகளின் ஏசு பேச்சும் நான்காம் சுவி ஏசு பேச்சும் ஒரே நேரத்தில் உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை.

மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவாரம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா – யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர்[ii] உறிதியாய் சொல்கிறார்.
  
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் \பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-F.F.புரூஸ்[iii] தன்  “The Real Jesus”  என்ற  நூலில்.  சொல்வது மாற்கு சுவியில் ஏசுவின் இயக்கம் கலிலேயாவில் எனக் காட்ட, நான்காம் யோவான் சுவியோ பெரும்பாலும் ஜெருசலேமிலோ அதன் சுற்றுப்புறத்திலோ என்கிறது என தெளிவாய் உரைக்கிறார்.
“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

ஏசு யோவான் ஸ்நானகன் கைதிற்குபின் தான் இயக்கம் தொடங்குவதாகவும், அடுத்து வந்த பஸ்காவில் மரணம் எனவும் மாற்கு சொல்ல, ஏசு இயக்கம் தொடங்கியபின் ஸ்நானகன் வருவதாகவும் 4ம் சுவியில் உள்ளது. ஏசு 3 பஸ்கா பண்டிகைகளுக்கு யூதேயா வருவதாகவும் கதை தருகிறார்.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்–

நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடுஇயங்கிய துகலிலேயாவி ல்என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாகமரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் –ஞானஸ்நானர்யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில்யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்–பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
லூக்கா 16:10  மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
சுவிசேஷங்களுக்கு முன்பே புனையப் பட்ட பவுல் கடிதத்தில் ஏசுவின் பிறப்பின் சிறப்போ, அதிசயமோ; அல்லது ஏசு அதிசயம் ஏதும் செய்தார் என்பதும் இல்லை என பவுல் கூறி உள்ளார்.

1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 

ஏசு யார் - பெற்றோர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் பெற்றோர் - சுவிசேஷக் கதாசிரியர் அறியவில்லை.

ஏசு எங்கே இயங்கினார் - எத்தனை காலம் இயங்கினார் - இது கூட நேர்மையாய் பதிக்கவில்லை

சுவிசேஷக் கதாசிரியர் அறியவில்லை - அல்லது மறைக்க மாற்றி உள்ளனர். நம்பிக்கை அற்றவை.

 இப்படிப்பட்ட கதைகளை வரலாற்று ஆசிரியர் நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை. 

No comments:

Post a Comment