Friday, June 26, 2015

பேச்சு-கருத்துரிமையும் கிறிஸ்துவ திருட்டுத்தனங்களும்

ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் . இவர் எழுதிய “ஆழி சூழ் உலகு, கொற்கை” எனும் இருநாவல்களில் “கொற்கை” நாவலுக்குத்தான் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
 

கொற்கை நாவலுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு

புதன் 19, மார்ச் 2014 4:39:38 PM (IST)

பரதகுல சமூகத்தினரை பற்றி இழிவான கருத்துக்கள் இடம்பெற்றுள்ள கொற்கை நாவலக்கு தடை விதிக்கவே்ணடும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீனவர் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் அலங்கார பரதர். இவர், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் தாக்கல் செய்துள்ள மனுவில்: சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் ரெம்சியஸ் மகன் ஜோ டி குரூஸ் (எ) ஆனந்த் இவர் எழுதிய கொற்கை என்ற நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொற்கை நாவலிலும், இவர் எழுதிய ஆழிசூழ் உலகு என்ற நாவலிலும் பரத குல சமுதாயத்தினை பற்றியும்,  மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களையும், அச்சமூக பெண்களை பற்றியும், கிறிஸ்தவ மதத்தை பற்றியும் அவதூறாகவும், மிகவும் ஆபாசமாகவும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த இரு நாவல்களுக்கும் தடை விதிக்க வேண்டும். 

மே்லும், நாவலின் ஆசிரியர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிததுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி சங்கர், இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இவ்வழக்கில் மனுதாரரர் சார்பில் வழக்கறிஞர் அதிசயகுமார் ஆஜரானார். 

பெருமாள் முருகன் ஒரு எழுத்தாளர் ஆரம்ப சர்ச்சில் உள்ளது என பவுலடிகள் கண்டித்த ஒரு ஆண்-பெண் சேர்க்கை தமிழ்நாட்டில் ஒரு ஊர் கோயில் திருவிழாவில் உள்ளது எனக் கதையை பல சர்ச் சார்ந்த வெளிநாட்டு தொண்டு நிறுவனப் பணத்தில் எழுதினார், அதை ஊர் மக்கள் எதிர்த்தனர். எவ்வித ஆதாரமும் கொடுக்கவில்லை. ஆனால் மறுபதிப்பு, மொழி பெயர்ப்பு என வந்தபோது தமிழம் முழுதும் எதிர்ப்பு கிளம்ப, பல எழுத்தாளர்கள் பெருமாள் முருகனை பயித்தறிவு திராவிடர் கழகம் போன்றோர் ஆதரித்தனர். கிறிஸ்துவ லயோலா கல்லூரியின் இயக்கங்களும் ஆதரித்தன.தமிழ் நாட்டில் டாவின்சி கோடு திரைப்படத்தை திமுக தடை செய்தபோது யாரும் கருத்துரிமை பேசவில்லை. 
சாத்தானியக் கவிதைகள் நூல் உலகிலேயே முதலில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.யாரும் கருத்துரிமை பேசவில்லை
இப்போது   கொற்கை நாவலுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு  யாரும் கருத்துரிமை பேசவில்லை.
http://www.vinavu.com/2014/04/15/modi-suppor-costs-joedcruz/
கிறிஸ்துவ சர்ச்சில் உள்ள வெளி வந்த வழக்குகளில் சில, இவை தானே நாவலாக எழுதியுள்ளார். 
 

சர்ச் உள்ளே பாதிரி அறையில் மர்மமான முறையில் இறந்த தன் பெண் பாதிரியாரால் கொலை என நிருபிக்க தாய்க்கு உதவியதற்கு சர்ச் எதிர்த்து போராட்டமாம்

         
 

சர்ச் உள்ளே ஊழல் என வந்த வழக்கில், தீர்ப்பை மதிக்காத பிஷப்பிற்கு நீதிமன்றம் தண்டனை தர மனமின்றி சர்ச்சில் மன்னிப்பு கேள் என்றது உயர் நீதிமன்றம்.

http://siragu.com/?p=14154

கிறித்துவ மதத்தில் மதக்கொள்கைகளை மீறியவர்களாகக் கருதப்பட்டவர்களை மதவிசாரணைக்கு (இன்க்விசிஷன்) உட்படுத்தி அவர்களை கம்பத்தில் கட்டி உயிரோடு எரித்தார்கள். (Burning at stake). 

arivai 7கிறித்துவ அடிப்படைவாதத்தின் வரலாறு கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எபீசஸ் கவுன்சில் என்ற அமைப்பு, மூடநம்பிக்கைக்குரிய நூல்கள் என்று கருதியதையும், புனித பவுலின் வரலாற்றையும் (Acta Pauli) தடைசெய்தது. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் போப் ஆண்டவர், முதன்முதலாகத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலை வெளியிட்டார். கி.பி.1450இல் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு, அதிகாரபூர்வமற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளும் மதநூல்களும் பெருகிய காரணத்தால், திருச்சபையின் தடைசெய்யும் பணியும் அதிகமாகியது. கி.பி.1559இல் போப் நான்காம் பவுல், Index Liborum prohibitorum (தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல்) என்பதை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் போன்று அந்தந்த நாடுகளும் தங்கள் தடைப்பட்டியல்களை வெளியிட்டன. பதினாறாம் நூற்றாண்டு முதலாக சீர்திருத்தக் கிறித்துவம் பரவத் தொடங்கிய நிலையில், அவர்கள் கத்தோலிக்க நூல்களைத் தடைசெய்தார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டளவில், ஐரோப்பாவில் தொடர்புச் சாதனங்கள் பெருகிய நிலையில் வெளியில் புலப்படா (அண்டர்கிரவுண்ட்) நூல்களின் பதிப்புகளும் பெருகின. அவற்றில்தான் நவீனக் கருத்துகளும் வெளியிடப்பட்டன. எனவே, (அந்தக் காலத்தில்) “அண்டர்கிரவுண்ட் நூல்களை படிக்காதவர்கள்-அரசாங்கத்தின் ஒப்புதல்பெற்ற நூல்களை மட்டுமே படித்தவர்கள்-அறிவில் ஒரு நூற்றாண்டு பின்தங்கியவர்கள்” என்று நூலாசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
திருச்சபை 1559இல் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல், நான்கு நூற்றாண்டுகள் கழித்து 1966இல் நீக்கப்பட்டது. அதற்குள் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக, கத்தோலிக்கத் திருச்சபைக்கு அத்தடையை நிலைநிறுத்தும் வலிமையும் வசதியும் இல்லை, அந்த நூல்களில் பலவும் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் ஆயின. ஆனால் அப்பட்டியல் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்தது என்பதில் ஐயமில்லை. கத்தோலிக்கத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களில், கார்ல் மார்க்ஸின் நூல்கள் மட்டுமல்ல, பெந்த்தாம், பெர்க்சன், காம்டி, டீஃபோ, டே கார்ட்டே, டிடரோ, ஃப்ளாபேர், கிப்பன், ஹாப்ஸ், ஹ்யூம், காண்ட், ஜான் லாக், மொண்டேய்ன், மில், மாண்டெஸ்க்யூ, பாஸ்கல், ரூஸோ, சேண்ட், ஸ்பினோசா, ஸ்டெந்தால், வால்டேர், ஜோலா போன்ற அறிஞர்களின் நூல்களும் அடக்கம். (இவர்களில் பெரும் பாலோர் தத்துவ அறிஞர்கள், பலர் அரசியல் அறிஞர்கள், இலக்கியவாதிகள்).
arivai 3அமெரிக்காவில்கூட, அந்தந்த மாநிலங்கள் தங்கள் தங்கள் தடைக் கொள்கைகளைப் பின்பற்றித்தான் வந்திருக்கின்றன. பொதுவாக அமெரிக்க அரசியலமைப்பு மத அடிப்படையில் நூல்களைத் தடைசெய்வது கூடாது என்று சொல்கிறது. மிகவும் புகழ்பெற்ற ரௌலிங் எழுதிய ஹேரி பாட்டர் நூல்கள்கூட இன்றும் சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல ரோல்டு டால் எழுதிய தி விட்சஸ் போன்ற நூல்களும். இவற்றைத் தடைசெய்யக் காரணம், இவை மதத்திற்குப் புறம்பான சூனியக்காரர்கள், மந்திரவாதிகள், அவர்களின் செயல்முறைகள் பற்றிப் பேசுகின்றன.
வேடிக்கையானது. உதாரணமாக, கெப்லர் போன்றவர்களின் வானியல் நூல்கள் தடைக்குள்ளாயின. கியோர்தானோ புரூனோ என்ற வானியல் அறிஞர் உயிருடன் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார். கலீலியோ கலீலி (தொலைநோக்கியைக் கண்டுபிடித்த இத்தாலிய விஞ்ஞானி) உலகம் உருண்டை என்று கூறியதால் அவர் நூல்கள் தடைசெய்யப்பட்டன. அவர் போப்பாண்டவரிடம் தாம் எழுதியவை அனைத்தும் தவறு என்று மன்னிப்புக் கேட்குமாறு ஆணையிடப்பட்டது. (இத்தனைக்கும் போப்பாண்டவர், அவருடைய இளமை நண்பர். அதனால்தான் இவ்வளவு குறைந்த தண்டனை!) கலீலியோ தாம் எழுதிய அறிவியல் கருத்துகள் அத்தனையும் தவறானவை, மதத்திற்கு மாறானவை என்று மன்னிப்புக் கேட்டபிறகு, உடனே தமது கூண்டுக்கு அருகிலிருந்த நண்பரிடம் இரகசியமான குரலில், “ஆனால் அவைதான் உண்மை!” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே எல்லா மதங்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

No comments:

Post a Comment