Friday, August 12, 2022

பரிபாடல் காலம் பொஆ. 634 பஞ்சாங்க வானியல் ஜோதிடக் குறிப்பு

சாமிக்கண்ணு பிள்ளை தன் Panchang And Horoscope நூலில் பரிபாடல் -11ம் பாடலில் உள்ள வானியல் தோற்றக் குறிப்புகள் பொஆ.634ம் ஆண்டு ஜுன்-17 நாளினைக் குறிக்கிறது என விளக்கம் கீழே.

அகநானூறு & புறநானூறு இவை 3/4ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த அரசர் கால நிகழ்வு வரை கூறுகின்றன‌. 
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து  - இவற்றின் மொழி நிலை அடுத்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் தமிழின் செழுமை, நெகிழ்வு காட்டுகின்றன. பத்து 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை   ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து (நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன)

சங்கவிலக்கியங்கள் என்பவை எட்டுத்தொகை, பத்துப் பாட்டு;  இவற்றில் முழுவதும் ஆசிரியப்பா என்ற நிலை மாறி வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா என தமிழ் யாப்பு வளர்ச்சிக்கு பின்பு தோன்றியவை   கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அவை காலத்தால் பிந்தியவை என்பது அறிஞர்கள் கருத்து.

தமிழகத்தின் பஞ்சாங்க வானியல் ஆய்வில் புகழ்பெற்ற பேரறிஞர். எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை (1865 -1925) ஒரு  நீதிக்கட்சி அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர். கோள்நிலை கொண்டு நாளைக் கணக்கிடுவதில் வல்லுநர். 

சாமிக்கண்ணு பிள்ளை தன் Panchang And Horoscope நூலில் பரிபாடல் -11ம் பாடலில் உள்ள வானியல் தோற்றக் குறிப்புகள் பொஆ.634ம் ஆண்டு ஜுன்-17 நாளினைக் குறிக்கிறது என விளக்கம் கீழே.


இவருடைய பஞ்சாங்க வானியல் ஆராய்ச்சி நூல்கள் இன்றும் இந்தியத் தொல்லியல் துறையினரால் கல்வெட்டு காலம் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. 

  

நவீன விஞ்ஞான அல்மனாக் கூறுவதும் பஞ்சாங்கக் கணக்கோடு பொருந்துகிறது

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ.  வாராந்தர நிகழ்சில்;  இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO)விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார். இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.

பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். .

தொல்காப்பியம் கலிப்பா, பரிபாடல் இலக்கணம் மற்றும் 30 எழுத்துக்களும் வடிவு பெற்ற பின்னர் 8ம் நூற்றாண்டு இறுதியில் இயற்றப்பட்டு இருக்க வேண்டும்.
திருக்குறள் 9ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இயற்றப்பட்ட நூலாகும்
https://ta.wikipedia.org/s/5da         As seen on 24.08.2022


No comments:

Post a Comment