Friday, April 3, 2026

முருகனின் தொன்மையான உருவங்கள்

 

By Sanjeevkumar Shivlee Kumargupta 
A masterpiece from 4th-5th Century AD, when the Gupta Dynasty Art was at its height. 
Kārttikeya. Standing. Bhopal State Museum. Photographed in 2023.
Kushana King Huvishka, son of Kanishka, provided grants to build a temple at Mathura. The inscription says that the kingdom was conferred to him by Sarva (Siva) and Scandavira. That he was a devotee of Skanda is also evidenced by him minting coins with the images of Skanda with the word Masseno (Mahasena) written in the coins. He had also issued coins with the images of Skanda-Kumara & also Skanda with his attendees. 
It is said that the founder of Kushana empire, Kujula Kadphises embraced Shaivism and calls himself as ‘Satyadharmasthistasya’. Quite interesting to note that Kushans, who migrated to India from western China through Central Asia, followed Shaivism predominantly and minted coins with the images of Indian deities.

குஷான மன்னன் ஹுவிஷ்கன் வெளியிட்ட பொற்காசுகளில் முருகனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதோடு 'மகாசேனோ (மகாசேனன்)' என்றும், 'ஸ்கந்த கொமாரோ (ஸ்கந்த குமாரன்)' என்றும் மிகத் தெளிவாக பாக்திரிய மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாவது பொற்காசின் முன்புறத்தில் 'மன்னருக்கெல்லாம் மன்னன் ஹுவிஷ்கன்' என்றும், பின்புறத்தில் 'மாசேனோ' என்றும் குறிப்பிட்டு சேவலுடனான முருகனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பொற்காசின் முன்புறத்தில் மன்னனின் உருவமும் பெயரும், பின்புறத்தில் ஸ்கந்த குமாரன் மற்றும் அவரில் இருந்து உருவான விஷாகனின் (பிசாகோ) உருவங்களும் எதிர்எதிராக நின்ற கோலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த விஷாகன் என்பவர் சிவனின் கணங்களுள் ஒருவராகவும் குறிப்பிடப்படுகிறார். இந்த இரு பொற்காசுகளும் ஆயிரத்து எண்ணூறு வருடங்கள் பழமையானவை. பொயு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
Coin Photos: British Museum
Bactrian Script Credit: John C. Huntington
Avg Krishnan, [4/14/2025 6:36 AM]
குப்தர் கால சிற்பம் -கார்த்திகை பெண்களுடன் முருகப் பெருமான
நன்றி : T.S.கிருஷ்ணன்
பரிபாடல்-8 இமயமலையில் சிவபெருமான் குமாரனை கார்த்திகை பெண்கள் 6 பேர் வளர்த்தனர் என்கிறது.
பரிபாடல்-9, வள்ளி திருமணம் திருப்பரங்குன்றத்தில் கண்டு இந்திரன் மகள் தேவானை ஆறாக கண்ணீர் விட்டதும் உள்ளது
Image : Mathura museum / Coronation of Mahasena / circa 4th century CE / Wikimedia Commons

மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள இந்தச் சிற்பத் தொகுதி சிறப்பு வாய்ந்தது. இருபுறமும் நான்முகனும் சிவனும் குமரக்கடவுளுக்கு தேவர் படைத்தலைவராக நீராட்டும் காட்சி. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிற்பத் தொகுதி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
திருச்சி மாநகரத்தில்.  காந்தி மார்க்கெட் To பால் பண்ணை ரோட்டின் நடுவே North direction  https://www.google.com/maps/place//@12.9817179,80.2627823,15z/data=!3m1!4b1?entry=ttu&g_ep=EgoyMDI1MDIwOS4wIKXMDSoASAFQAw%3D%3D

11ஆம் நூற்றாண்டு முருகன் ஹரியானா.
தமிழகத்தின் நாமக்கல் பேளுக்குறிச்சி கூவை மலை முருகன். காலம் தெரியவில்லை.




Avg Krishnan, [2/12/2025 7:46 PM]
Image : Mathura museum / Coronation of Mahasena / circa 4th century CE / Wikimedia Commons

மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள இந்தச் சிற்பத் தொகுதி சிறப்பு வாய்ந்தது. இருபுறமும் நான்முகனும் சிவனும் குமரக்கடவுளுக்கு தேவர் படைத்தலைவராக நீராட்டும் காட்சி. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிற்பத் தொகுதி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

Avg Krishnan, [4/14/2025 6:38 AM]
https://tamilhindu.com/2013/11/murugan/


Image : Mathura museum / Coronation of Mahasena / circa 4th century CE / Wikimedia Commons

மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள இந்தச் சிற்பத் தொகுதி சிறப்பு வாய்ந்தது. இருபுறமும் நான்முகனும் சிவனும் குமரக்கடவுளுக்கு தேவர் படைத்தலைவராக நீராட்டும் காட்சி. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிற்பத் தொகுதி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

Avg Krishnan, [4/14/2025 6:38 AM]
https://tamilhindu.com/2013/11/murugan/

Avg Krishnan, [2/12/2025 7:20 AM]
கார்த்திகேயனுக்குச் சேவல் குடுத்தது யாரு

மஹாபாரதத்தில் குமரக்கடவுளுக்கும் இந்த்ரனுக்கும் இடையேயான போருக்குப் பின்னர் அக்னியே சேவலைக் கொடியாக்கித் தந்தமை வர்ணிக்கப்பெற்றுள்ளது.

குக்குடஶ்சாக்னினா தத்தஸ்தஸ்ய கேதுரலங்க்ருத​:

என்று சேவற்கொடி அக்னியால் கொடுக்கப்பெற்றதை மஹாபாரதம் விளக்குகிறது

கி.பி.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காந்தார பாணி முருகன், ஆப்கானிஸ்தானில் கிடைத்த உருவம்.




மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள இந்தச் சிற்பத் தொகுதி சிறப்பு வாய்ந்தது. இருபுறமும் நான்முகனும் சிவனும் குமரக்கடவுளுக்கு தேவர் படைத்தலைவராக நீராட்டும் காட்சி. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிற்பத் தொகுதி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.




https://en.wikipedia.org/wiki/Naneghat
ுருகனைப் பற்றிக் குறிப்பிடும் மிகப் பழைய கல்வெட்டு பொ.யு.மு (கி.மு) முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த நானேகாட் (மஹாராஷ்டிரா) கல்வெட்டாகும்! சமஸ்கிருத மொழியில் சாதவாகன அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கல்வெட்டு குமரா என்று முருகனைக் குறிப்பிடுகின்றது!

nscription-

sidhaṃ ... no dhaṃmasa namo īdasa namo saṃkaṃsana-vāsudevānaṃ caṃda-sūtānaṃ mahimāvatānaṃ catuṃnaṃ caṃ lokapālānaṃ yama-varuna-kubera-vāsavānaṃ namo kumāravarasa vedisirisa raño

......vīrasa sūrasa apratihatacakasa dakhināpaṭhapatino raño simukasātavāhanasa sunhāya ......

mā ..... bālāya mahāraṭhino aṃgiya-kulavadhanasa sagaragirivaravalayāya pathaviya pathamavīrasa vasa ... ya va alaha ......salasu ..ya mahato maha ...

.... sātakaṇi sirisa bhāriyā devasa putadasa varadasa kāmadasa dhanadasa vedisiri-mātu satino sirimatasa ca mātuya sīma .... pathamaya .....

variya ....... ānāgavaradayiniya māsopavāsiniya gahaṭāpasāya caritabrahmacariyāya dikhavratayaṃñasuṃḍāya yañāhutādhūpanasugaṃdhāya niya .......

rāyasa ........ yañehi yiṭhaṃ vano | agādheya-yaṃño dakhinā dinā gāvo bārasa 12 aso ca 1 anārabhaniyo yaṃño dakhinā dhenu .........

...... dakhināya dinā gāvo 1700 hathī 10 .....

......... as ..... sasataraya vāsalaṭhi 289 kubhiyo rupāmayiyo 17 bhi ......

.......... riko yaṃño dakhināyo dinā gāvo 11,000 asā 1,000 pasapako ..............

............. 12 gamavaro 1 dakhinā kāhāpanā 24,400 pasapako kāhāpanā 6,000 | rājasūya-yaṃño ..... sakaṭaṃ[1]

translation-

Sidham to Dharma, adoration to Indra, adoration to Samkarshana and Vāsudeva, the descendants of the Moon ("Chandra") endowed with majesty, and to the four guardians of the world ("Lokapalas"), Yama, Varuna, Kubera and Vāsava; praise to Vedisri, the best of royal princes (kumara)![note 3] Of the king.

.... of the brave hero, whose rule is unopposed, the Dekhan......

By ..... the daughter of the Maharathi, the increaser of the Amgiya race, the first hero of the earth that is girdled by the ocean and the best of mountains....

wife of . . . Sri, the lord who gives sons, boons, desires and wealth, mother of Yedisri and the mother of the illustrious Sakti.....

Who gave a . . . most excellent nagavaradayiniya,[note 4] who fasted during a whole month, who in her house an ascetic, who remained chaste, who is well acquainted with initiatory ceremonies, vows and offerings, sacrifices, odoriferous with incense, were offered......

O the king ........ sacrifices were offered. Description - An Agnyadheya sacrifice, a dakshina[note 5] was offered twelve, 12, cows and 1 horse; - an Anvarambhaniya sacrifice, the dakshina, milch-cows.....

...... dakshina were given consisting of 1700 cows, 10 elephants,

.... 289.....17 silver waterpots.....

..... a rika-sacrifice, dakshina were given 11,000 cows, 1000 horses

......12 . . 1 excellent village, a dakshina 24,400 Karshapanas, the spectators and menials 6,001 Karshapanas; a Raja ........ the cart.

The mention of Samkarsana and Vasudeva indicate the prevalence of Bhagavata form of Vaishnavism in the Satavahana dynasty.










ஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்

morning_hindutvaஹரப்பா பண்பாட்டு இலச்சினை அது. எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே ஒரு  மரம்  நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு. எதை அல்லது யாரை குறிக்கிறது இந்த இலச்சினை?  ஹரப்பா பண்பாட்டு இலச்சினைகளை ஆராய்ந்தவர்களில் முக்கியமாக அஸ்கா பர்போலாவையும் ஐராவதம் மகாதேவனையும் கூற வேண்டும். (இருவருமே ஆரிய-திராவிட இரட்டையை ஒத்துக் கொண்டவர்கள். ஆனால் ஹரப்பா இலச்சினைகளை அறிந்திட வேத இலக்கியங்களில் உள்ள தொன்மங்களையே அடிப்படையாக கொண்டு இவற்றினை அணுகியுள்ளனர். இதை குறித்து இறுதியில் பார்க்கலாம்.) இது குறிப்பது முருகனாக இருக்கலாமா எனும் சாத்தியத்தை இங்கு முன்வைத்து இதனை அணுகலாம். முதலில் இந்த இலச்சினையில் உள்ள மரம் எது? இங்கிருந்து நம் தேடலை தொடங்கலாம்.

அந்த மரம் அரச மரம் என்றே முதல் கணிப்பில் தோன்றுகிறது. ஆனால் ஹரப்பா சித்திர எழுத்துகளில் கிளை பிரிந்த இலைகளுடன் காணப்படுவதை ’வட’ எனும் ஆலுடனேயே இணைக்கிறார் பர்போலா. உதாரணமாக:

fishfig– வட + மீன் = வடமீன் (அருந்ததி)

 

இதை ஆலமரம் என்றே கருதலாம். ஆலமரத்தின் சித்திர எழுத்துரு போலவே இந்த இலச்சினையில் காணப்படும் ‘மரமும்’ எழுவதை காணக. முருகனின் வசிப்பிடங்களில் ஆலும் ஒன்று.seal1 ’ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்’ என பரிபாடல் அவன் வசிக்கும் இடங்களை கூறும். ‘துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்’  என்று சொல்லும் கலித்தொகை.   ஆல மரத்துக்கு மற்றொரு குறியீட்டுத் தன்மையும் உண்டு. அதற்கு பிறகு வருவோம்.  இனி இந்த ஏழு மகளிர் யார் அவர்களுக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம். ஏழு மகளிரின் மிக பழமையான தொன்மம் அவர்களை சப்த ரிஷிகள் எனும் ஏழு விண்மீன்களுடன் இணைப்பதாகும். பாரத தொன்மங்களில் சப்தரிஷிகளுடன் தொடர்புடைய ஏழு பெண்கள் கார்த்திகை மாதர் அறுவரும் அருந்ததியும் ஆவர். சதபத பிராமணத்தில் (2,1,2,4) சப்த ரிஷிகளின் மனைவியரான கார்த்திகை மாதர்  எழுவரென்றும் அதில் அருந்ததி தவிர பிறர் கற்பொழுக்கம் தவறியதால்  தம் கணவரிடமிருந்து பிரிந்தனர் என்றும் அவரே கார்த்திகை மாதர் அறுவராகினர் என்றும் கூறப்படுகிறது.  இவர்களை ஸ்கந்தனுடன் இணைக்கும் மிகப் பழமையான முழுமையான தொன்மம் மகாபாரதத்தில் (3.213.1-3.219.11) கூறப்பட்டுள்ளது.  இங்கு அக்னியின் மகனான ஸ்கந்தனுக்கு கார்த்திகை மாதர் வளர்ப்பு அன்னையராக இருந்தனர் என்றும் எனவே அவர்கள் விண்மீன்களாக வானில் என்றென்றுமாக இருந்தனர் என்பதும் கூறப்படுகிறது.

கிருத்திகை எனும் வடமொழி பெயருக்கான் வேர் சொல் ‘அறுபடுதல்’. ’அறுமீன்’ என கார்த்திகை கூறப்படுவதில் ’அறு’ என்பது இதே murugan_babyபொருளை சிலேடையாக அளிப்பதையும் அஸ்கோ பர்போலா சுட்டுகிறார். அக்னி மூலமாக கார்த்திகை விண்மீன்கள் வானுலகில் இடம் பெற்றன என  தைத்ரீய சம்ஹிதை (5.3.9) கூறுகிறது. ஆனால் கார்த்திகை மாதராகவே அருந்ததியையும் குறிக்கும் வழக்கம் இருந்துள்ளது என்பதை நம்மால் காண முடிகிறது. ’அறுபட்டு’ அறுவரானோரில்  அருந்ததி இல்லாத போதிலும் அவள் கார்த்திகை மாதரில் முதன்மையானவள் அன அழைக்கப்பட்டுள்ளாள்.  அக்னியுடன் சப்த மாதரை இணைக்கும் கருத்தொன்றை முண்டக உபநிடதம் (1.2.4) கூறுகிறது. சுவாரசியமாக பின்னர் அக்னியின் ஏழு பண்புகளை குறித்து பேசும் போது அதே உபநிடதம் குகையின் வாழும் பிராணன் குறித்து கூறுகிறது. (குகன் அவனது மற்றொர் பெயர். குகையில் வளரும் கனலே என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் பாரதி பாடுவார்.) இந்த தொன்மத்துடன் இணைந்த நடன உரு ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அது சங்க இலக்கியங்களில் நாம் காணும் குரவை கூத்து ஆகும். ’குரவை என்பது எழுவர்  மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கை கோத்து அந்நிலைக் கொப்ப நின்றாடலாகும்’ என்பது வரையறை. இதில் குன்றக்குரவை முருகனை புகழ்ந்து செயப்படும்  வழிபாட்டு செயலாகும். சப்த அன்னையராக இருந்து அறுவரான கார்த்திகை பெண்டிர், எழு மகளிர் ஆடும் குரவை கூத்து ஆகிய இரண்டுமே தொடர்புடையதாக இருக்கலாம். இரண்டுக்கும் தொடர்புடைய ஒரு இணைப்பாக முருக பெருமான் இருக்கிறார்.

இனி அந்த ஆடு. ஆட்டை பலி கொடுத்து முருகனுக்கு பூசை செய்யப்படுதல் சங்க  இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது ‘சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து’ அவன் வணங்கப்படுதலை திருமுருகாற்றுப்படை கூறுகிறது. (மறி-ஆடு).

goat1ஆலயத் தேர்களில் காட்டப்படும் திருமுருகனின் வடிவங்களை விளக்கும் முனைவர் ராஜு காளிதான் பின்வரும் வடிவத்தை சுட்டுகிறார்:

ஆலயத் தேர்களில் காணப்படும் முருகனின் இன்னொரு வடிவம் அருணதமூர்த்தி என்பது.

இந்த வடிவத்தில் காணப்படும் முருகன் ஒரு மூர்க்கமான வெள்ளாட்டை வீரபாகுவின் உதவியுடன் அடக்கி, அதை தன்னுடைய வாகனமாக்கிக் கொண்டார் என்பதைப் போல உள்ளது.

ஜடாமுடியுடனும், தாடியுடனும் காணப்படும் பிரும்மா ஒரு பலிதானம் கொடுக்கும் காட்சி உள்ளது.

அதில் வளைந்தக் கொம்புகளைக் கொண்ட ஒரு ஆடு யோம குண்டத்தில் விழுவது போலவும், தான் அடக்கிய ஆட்டின் மீது அமர்ந்தபடி முருகன் செல்லும் காட்சியும் காணப்படுகிறது.

இப்போது ஹரப்பா இலச்சினையை திரும்ப ஒரு முறை பாருங்கள்.

இந்த இலச்சினையில் மரம் பிளந்து நடு நிற்கும் தெய்வம் கந்த வழிபாட்டுடன் மற்றொரு வடிவத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம்.ramachandran1 பழந்தமிழர் இலக்கியத்தில் முருக வழிபாட்டின் ஒரு முதன்மை வடிவமும் மிகவும் பரவியதுமான வழிபாடு கந்து வழிபாடு ஆகும்.  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகிறார்:

சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த “கந்துடைப் பொதியில்” குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை கியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.

ராமச்சந்திரன் குறிப்பிடும்  கந்து வழிபாட்டுக்கும் லிங்க வழிபாட்டுக்குமான தொடர்பை ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் ஸ்தாணு என்பதுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறார்.  பிரபஞ்சத்தின் அச்சாக தூணாக ருத்ரன் நிற்பதையும் யோக நிலையில் விந்துவினை மேல் நோக்கி செலுத்தும் கோட்பாட்டின் தொன்மமாகவும் இதனை அவர் காட்டுகிறார். ( The Presence of Siva,1981, பக்.119)  இதை ஹரப்பா யோகி இலச்சினையுடனும் தொடர்பு படுத்த முடியும்.  கிரேக்க புராணங்களிலும் பிரபஞ்சங்களின் ஊடாக நிற்கும் ஒளிமயமான  நெருப்பு ஜுவாலைகளாலான கம்பத்தினைக் குறித்து கூறப்படுகிறது. எர் எனும் புராணவீரன் அவனது சிதை எரியூட்டப்படுதற்கு சற்று முன்னர் உயிரளிக்கப்பட்டு வேறு சிலருடன் பிற உலகங்களுக்கு செல்கிறான். அப்பாதையில் அவனும் அவன் கூட்டத்தாரும் “ஒரு செங்குத்தான ஒளிமயமான கம்பம் போன்ற ஒன்று விண் உலகங்களையும் மண்ணுலகையும் இணைத்து சுழலவைப்பதாக” கண்டனர். (Book of the Republic, 10 ஆம் பாடல்) ஆனால் இந்த உருவாக்கங்கள், ரிப்பளிக்கில் ஏறுவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னதான பழமையான பழங்குடி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர்.  பின்லாந்து தேசத்தில் கிறிஸ்தவம் வருவதற்கு முந்தைய நம்பிக்கைகளில் உலக சிருஷ்டி குறித்த தொன்மப்பாடலில் (kaleval) இந்த பிரபஞ்ச அச்சு வருகிறது. இப்பாடலில் அது ஸம்போ (Sampo) என அழைக்கப்படுகிறது. ஸம்போ என்பது முவ்வேர்களை பூமியிலும், ஆகாயத்திலும், சமுத்திரத்திலும் கொண்ட பிரபஞ்ச மரம். இது அதர்வண வேதத்தில் கூறப்படும் பிரபஞ்ச அச்சுக்கம்பமான ஸ்கம்பத்துடன் தொடர்புடையதாகும். (Giorgio De Santillana, ‎Hertha von Dechend, Hamlet’s Mill: An Essay on Myth and the Frame of Time , பக்.140)  அதர்வண வேதம்  (10,7) இந்த ஸ்கம்பத்தைனை இருப்பையும் இருப்பின்மையையும் தனது கிளைகளாக கொண்ட மரமாக பேசுகிறது. ஒரு தொன்மம் ஒரு ஆழ்ந்த தத்துவ குறியீடாக பரிணமிக்கும் தருணம். ஆக, இலச்சினையில் மரத்தின் நடுவில் காணப்படும் இந்த தெய்வம் கந்த கடவுளின் கந்து-ஸ்கம்ப வழிபாட்டின் ஆதி வடிவமாக இருக்க வாய்ப்புள்ளது.

murugan_mahishavadam ஹரப்பா இலச்சினைகளில் மற்றொன்றிலும் முருகன் காட்டப்பட்டிருக்கலாம். மகாபாரதம் ( 3.22) மகிஷாசுரனையும் பத்மர்களையும் தாரகனையும் ஸ்கந்தன் வேலெறிந்து வதம் செய்ததை சொல்கிறது.  பின்னர் மகிடனை வதம் செய்தவள் கொற்றவை என்றான போதிலும் பத்மாசுரனையும் தாரகனையும் முருகன் வதைத்தான் என்பது மாறவில்லை.  ஹரப்பா இலச்சினைகளின் தொன்மங்களை ஆராய்ந்த சோவியத் இந்தியவியலாளர்கள் மகாபாரதம் கூறும் மகிஷ வதத்தை இந்த இலச்சினை காட்டுவதாக  கருதுகின்றனர். (The Soviet Decipherment of the Indus Valley Script: Translation and Critique, Ed. Arlene R. Zide, Kamil V. Zvelebil, Walter de Gruyter,1977, பக்.114-5) எனில்  நாம் முதலில் கண்ட இலச்சினை  முருக வழிபாட்டின் முதன்மை அம்சங்கள் பலவற்றை (குரவை, கந்து வழிபாடு, குறமகள் வெறியாட்டு, மறி பலியிடுதல்) இணைத்து காட்டும் ஒரு இலச்சினை என்றே நாம் கண்டடையலாம்.

முருகன் குறிப்பிட்ட இந்த தொன்மங்கள் அனைத்துமே இன்றைய பாரத பண்பாட்டிலும் சரி, தமிழர் வழிபாட்டிலும் சரி நன்றாக பேணி வளர்ந்து பரிணமித்திருப்பதை நாம் காணலாம். உண்மையில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆச்சரியமாகவும் மர்மமாகவும் இருக்கும் இலச்சினைகள், பாரத பண்பாட்டு சூழலில் பொருத்தப்படும் போது அழகிய முறையில் முடிச்சவிழ்ந்து நம் பண்பாட்டின் நம் ஆன்மிக மரபின் தொடர்ச்சியையும் செழுமையையும் நமக்கு காட்டுகின்றன.

இவை அனைத்துமே ஆரியர் படையெடுப்பு கோட்பாடு ஆரிய-திராவிட இரட்டை ஆகியவற்றை அறிவியல் ஆதாரமோ பண்பாட்டு அடிப்படையோ இல்லாததாகுகின்றன என்பது தெளிவு. ஒரு வேளை ஹரப்பா பண்பாட்டில் ஆரியர் வருவதற்கு முன்னால் இருந்து அவற்றை ஆரியர் உள்வாங்கினர் என கருதலாமா எனில் அது வரலாற்று ரீதியாக இயலாத ஒன்றாகும்.  ஏனென்றால் கார்த்திகை ஏழு சகோதரிகளாக இருந்து அறுவராகினர் என்பது பல மேற்கத்திய பாகன் தொன்மங்களில் உள்ளதாகும். ’வட’ எனும் சொல் ஆலமரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. வாடை காற்று என்பது அதிலிருந்தே வருகிறது.  vata‘வாடை’ எனும் சொல் காற்றுடன் தொடர்புடையதாக பிற ‘இந்தோ ஐரோப்பிய’ மொழிகளிலும் உள்ளன. ஆனால் தமிழிலேயே இது முழுமையான பொருளுடையதாக உள்ளது. மேலும் முருகவேள் வழிபாட்டின் மிக பழமையான மிகவும் பரவியிருந்த வழிபாட்டு முறையான கந்து வழிபாட்டின் வேர்களும் தொன்மங்களும் கூட மேற்கத்திய ‘இந்தோ-ஐரோப்பிய’ மொழிக்குழும தொன்மங்களில் வியாபித்துள்ளன. இவை அனைத்தையும் கணக்கிலெடுக்கும் போது  வடமொழி தமிழ் மொழி ஆகியவற்றின் ஆதி வடிவங்கள் ஹரப்பா பண்பாட்டிலேயே இருந்திருந்தன. பின்னர் அவை அங்கிருந்து  மேற்கு நோக்கி நகர்ந்து பரவி பல புதிய வடிவங்களை அடைந்திருக்கலாம் என கருதவே இந்த தொன்மங்களும்,  மொழியாடல்களும் இடம் தருகின்றன.

ஆனால் இந்த இருமை பிளவு பார்வை பல நேரங்களில் முழுமை நோக்கையும் முக்கிய கண்டறிதல்களையும் தடுத்து விடுகின்றன. உதாரணமாக மேற்கண்ட ஹரப்பா இலச்சினையில் எழுமாதரையும் கார்த்திகையையும் தொடர்புபடுத்திய அஸ்கோ பர்போலா அல்லது ஹரப்பா ஆராய்ச்சியாளர் அடுத்த இயல்பான நிலைபாடாக இந்த இலச்சினை காட்டும் தெய்வத்தை ஏன் கந்தனுடன் தொடர்புபடுத்தவில்லை எனும் கேள்வி எழுகிறது.

எதுவாயினும்,  பலவாறாக வெளிப்படும் பன்மையை ஏற்பவனாகவும்  அனைத்து பன்மைகளும் ஒருங்கிணையும் ஒருமையாகவும் ஆறுமுகன் உள்ளான். பாரத பண்பாட்டின் சமன்வய இயக்கத்தின் முதன்மை வெளிப்பாடுகளில் முக்கியமானவர் முருகக் கடவுள்.

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டாண்டு உரைதலும் அறிந்தவாறே

என்பது நக்கீரர் வாக்கு.

அந்த ‘அறுவர் பயந்த ஆறமர் செல்வனை’  இந்த திருக் கார்த்திகை திருநாளில் வணங்குவோம். அதே நேரத்தில் இத்திருநாளின் பழமை வேர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை உணர்வோம். இத்தகைய பழமையும் புத்தாக்கமும் தொடர்ச்சியும் கொண்ட பண்பாடுகள் உலகெங்கும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஹிந்து பண்பாடு -குறிப்பாக தமிழ் நாட்டில்-இவற்றை தன்னுள் கொண்டு இன்றும் வாழ்கிறது. எனவே இதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், பரப்ப வேண்டியதன் அவசியம், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு கட்டாயமாகிறது.  பாரதத்தை இணைக்கும் மற்றொரு முக்கிய அம்சம் சப்த அன்னையர்/சப்த கன்னியர் வழிபாடு. அதனை நாம் பிறிதொருநாள் காணலாம்.

காலைத் தேநீருடன் மீண்டும் நாளை சந்திப்போம்.

இதில் மேலும் அறிய இணையத்தில்:








[ Album ]


மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள இந்தச் சிற்பத் தொகுதி சிறப்பு வாய்ந்தது. இருபுறமும் நான்முகனும் சிவனும் குமரக்கடவுளுக்கு தேவர் படைத்தலைவராக நீராட்டும் காட்சி. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிற்பத் தொகுதி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.


Avg Krishnan, [4/14/2025 6:38 AM]

https://tamilhindu.com/2013/11/murugan/

Sunday, March 22, 2026

ஜ்யேஷ்டா, அலக்ஷ்மி, மூத்த தேவி - டாக்டர் கே.பி. ரவிச்சந்திரன்

ஜ்யேஷ்டா, அலக்ஷ்மி, மூத்த தேவி - டாக்டர் கே.பி. ரவிச்சந்திரன்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது, ​​மகாலட்சுமி தோன்றுவதற்கு முன்னரே பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவளாகப் புராணங்களில் ஜ்யேஷ்டா குறிப்பிடப்படுகிறாள். அவள் தோன்றியபோது கொண்டிருந்த ஒவ்வாத மற்றும் அழகற்ற தோற்றத்தின் காரணமாக, யாரும் அவளை மணக்க முன்வரவில்லை; இறுதியில் கபில மகரிஷி அவளை மணக்க முன்வந்தார், அதன் மூலம் அவள் 'கபில பத்னி' (கபிலரின் மனைவி) ஆனாள். போர்க்களங்களில் இரத்தம் சிந்தும்போது மகிழ்ச்சியுடன் நடனமாடுபவளாகவும், காகக் கொடியை ஏந்தியவளாகவும், கழுதையைத் தன் வாகனமாகக் கொண்டவளாகவும் அவள் விவரிக்கப்படுகிறாள். இவள் பெரும்பாலும் சீதளா தேவியுடனும் (வைசூரி நோய் தீர்க்கும் தேவி) தசமகாவித்யா தேவியரில் ஒருவரான தூமாவதியுடனும் ஒருவராகவே கருதப்படுகிறாள். ஜூலியா லெஸ்லி எழுதிய "Roles and Rituals for Hindu women" (1992) என்ற நூலின் 5-வது அத்தியாயத்தில், 'ஸ்ரீ மற்றும் ஜ்யேஷ்டா' குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது; இது, 'அழகற்ற தேவி'யான ஜ்யேஷ்டா குறித்த பல்வேறு முரண்பட்ட கருத்துக்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.

மத்ஸ்ய புராணத்தின்படி (179.35), ஜ்யேஷ்டா என்பவள் சிவபெருமான் அந்தகாசுரனை அழிப்பதற்காக நடத்திய போரின்போது, ​​அந்தகாசுரனின் இரத்தத்தைக் குடிப்பதற்காகவே சிவபெருமானின் மனதிலிருந்து தோன்றிய ஒரு 'மாத்ருகை' (தெய்வத் தாய்) ஆவாள். சிவபெருமானின் கட்டளைப்படி அந்தகாசுரனின் இரத்தத்தைக் குடித்துத் தங்கள் பசியைத் தணித்துக்கொண்ட சப்த மாத்ருகைகளுடன் (ஏழு தெய்வத் தாய்மார்களுடன்) இவளும் படைக்கப்பட்டாள்.

ஸ்ரீ அல்லது லட்சுமி தேவிக்கு முன்னரே பிறந்தவள் என்பதால், ஜ்யேஷ்டா பெரும்பாலும் 'மூத்தவள்', 'மூத்தோள்' அல்லது 'மூத்த தேவி' (இச்சொல்லே பிற்காலத்தில் 'மூதேவி' என மருவியது) என்றே தமிழில் குறிப்பிடப்படுகிறாள். கம்பர் இயற்றிய தமிழ் இராமாயணத்தில், ஜ்யேஷ்டா பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தில் இவள் குறித்த கூடுதல் விவரங்கள் காணப்படுகின்றன; பாற்கடலிலிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டு, அதனைச் சிவபெருமான் அருந்திய பிறகு ஜ்யேஷ்டா தோன்றினாள் என்றும், அவள் தோன்றியதும் தேவர்கள் அவளை மங்கலமற்ற இடங்களிலேயே தங்கியிருக்குமாறு பணித்தனர் என்றும் அந்நூல் கூறுகிறது. இவ்வாறு அவள் துக்கம் மற்றும் வறுமை, சண்டைகள் நிறைந்த வீடுகள், பொய்யர்களால் பேசப்படும் கடுமையான வார்த்தைகள், தீய மற்றும் பாவிகள் வாழும் வீடுகள், மேலும் நீண்ட முடி, மண்டை ஓடுகள், எலும்புகள் அல்லது கரி மற்றும் மரபுக்கு மாறான பிச்சை எடுப்பதற்கான பிற அறிகுறிகள் காணப்படும் இடங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டாள்.

லிங்க புராணம் (2.6) ஜ்யேஷ்டையின் இருப்பு மற்றும் அவளது பங்கின் தாக்கங்களைப் பட்டியலிடுகிறது. விஷ்ணு மனிதகுலத்தை மயக்குவதற்காக முழு பிரபஞ்சத்தையும் இரண்டாகப் படைத்தார். ஒன்றில் வேதங்கள் மற்றும் அவற்றைப் பின்பற்றுபவர்கள் போன்ற அனைத்து நல்ல மற்றும் மங்களகரமான விஷயங்களும், ஸ்ரீ அல்லது லட்சுமி அதில் வசிப்பதும் இருந்தன; மற்றொன்றில் இழிவான அதர்ம அல்லது அவைதிக மனிதர்கள் போன்ற அனைத்து அமங்கலமான விஷயங்களும், வேத தர்மத்திற்கு முரணான அனைத்தும் கடைப்பிடிக்கப்படுவதும் இருந்தன. இந்த இரண்டாவது பிரபஞ்சத்தில்தான் அலட்சுமி அல்லது ஜ்யேஷ்டை வசிக்க விரும்பினாள். வேதங்கள், அது போதித்த தர்மம் மற்றும் அது பின்பற்றப்பட்ட இடங்கள் மீதான அவளது வெறுப்பாலும் சகிப்பின்மையாலும் அவள் தன் கணவனைத் திகைக்க வைத்தாள். வேத தர்மத்தின் கீழ் நீதி நடைமுறையில் இருந்த இடங்களுக்குச் செல்ல நேர்ந்தாலும், அவள் வெறுப்புடன் தன் கைகளால் காதுகளை அடைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறுவாள். அவமானம், அமங்கலம் அல்லது பெரும் துரதிர்ஷ்டம் காணப்படும் இடங்களில் தங்குவதையே அவள் விரும்பினாள். மக்கள் அனுஷ்டானங்களைப் பயிற்சி செய்யும் இடங்களிலும், அத்தகைய வேத கிரியைகள் கற்பிக்கப்படும் அல்லது சம்பந்தப்பட்ட இடங்களிலும் வசிப்பதை அவள் வெறுத்தாள். போலித் துறவிகள், க்ஷபானகர்கள் மற்றும் பௌத்தர்கள் (நிர்வாண ஜைனத் துறவிகள் மற்றும் பௌத்தர்கள்) மத்தியில் வசிப்பதை அவள் வசதியாக உணர்ந்தாள். இதன் பொருள், அவள் மதத்திற்கு எதிரான வழிபாட்டுடனும் (அதில் அவைதிக உள்ளூர் தெய்வங்களும் அடங்கும்) மற்றும் நடைமுறைகளுடனும் வலுவாகத் தொடர்புடையவள் என்பதாகும்.

பத்ம புராணம் (6.26) கூறுகிறது, அவளை மணந்த துச்சஹ முனிவரால், அவளுடைய மத நம்பிக்கையற்ற மற்றும் சமூக விரோத எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் கொண்ட பகுத்தறிவற்ற நடத்தையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அதனால் அவளைக் கைவிட்டார். அவள் அலட்சுமி என்ற பட்டத்தைப் பெற்றாள், இறுதியில் விஷ்ணுவிடம் நிவாரணம் வேண்டிச் சென்றாள். பெண்கள் வழங்கும் காணிக்கைகளால் அவள் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்று விஷ்ணு அவளை ஆசீர்வதித்தார்.

சாரத திலக தந்திரத்தின்படி, நண்பர்களிடையே பகைமையை உண்டாக்கும் வித்வேஷம் என்பது தாந்திரிகர்களின் பிரயோகங்களில் ஒன்றாகும். மேலும், இந்தச் சடங்குகளுக்கு அதிதேவதையாக இருக்கும் ஜ்யேஷ்டா, பிரயோகத்தைத் தொடங்குவதற்கு முன்பு வழிபடப்படுகிறாள்.

தசமகாவித்யாக்களில் ஒருவரான தூமாவதி, உயரமானவள், கருமையானவள், கரடுமுரடான மற்றும் நோயுற்ற நிறமுடையவள், மேலும் மெலிந்து பின்னிப் பிணைந்த கூந்தலைக் கொண்டவள்; அவள் அமைதியற்றவளாகவும், முரட்டுத்தனம் கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்; அழுக்கு படிந்த ஆடைகளை அணிந்திருக்கும் அவள், 'காகத்வஜம்' (காகக் கொடி) பொறித்த ஒரு தேரில் பவனி வருகிறாள். பெண்களிடத்தில் காணப்படும் இழிவான, சமூகத்திற்கு ஒவ்வாத மற்றும் அமங்கலமான அனைத்து அம்சங்களின் உருவமாகத் திகழ்வதால், அவள் லட்சுமி தேவிக்கு முற்றிலும் எதிரான சக்தியாகவும் கருதப்படுகிறாள். தட்ச யாக அழிவின்போதும், சதி தேவி தீக்குளித்தபோதும் எழுந்த புகையிலிருந்து அவள் தோன்றினாள்; அவள் தன் கையில் ஒரு முறத்தைக் (தானியங்களைப் புடைக்கும் கூடை) தாங்கியிருக்கிறாள். பசியின் வெறியில் தன் கணவனான சிவபெருமானையே விழுங்கிவிட்ட ஒரு விதவையாக அவள் சித்திரிக்கப்படுகிறாள். 'சாரதா திலக தந்திரம்' எனும் நூலுக்கு லட்சுமண தேசிகர் எழுதிய விளக்கவுரையானது, ஜ்யேஷ்டா தேவியும் தூமாவதி தேவியும் ஒருவரே என்று குறிப்பிடுகிறது.

(பொ.மு. காலத்தில் இயற்றப்பட்ட) போதாயன கிருஹ்ய சூத்திரங்கள், அவளை வழிபடும் முறையை விவரிக்கின்றன. 'சதுர்வர்க்க சிந்தாமணி' (2.2) நூலின்படி, ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் செழிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றைப் பெறவும், துரதிர்ஷ்டங்களை நீக்கவும் ஜ்யேஷ்டா தேவியை வழிபடுகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது, ​​'ஜ்யேஷ்டா கௌரி விரதம்' எனப்படும் சடங்கின் ஒரு பகுதியாக, குப்பை மற்றும் கழிவுப் பொருட்கள் குவிந்துள்ள மேட்டின் மீது வைத்து இவள் வழிபடப்படுகிறாள்; இதைத் தொடர்ந்து, செழிப்பைப் பிரார்த்தித்து லட்சுமி தேவிக்குச் செய்யப்படும் சிறப்புப் பூஜையும் நடைபெறுகிறது. வறுமையும் பூசலும் நிலவும் அசுத்தமான, துர்நாற்றம் வீசும் இடங்களில் இவள் வாசம் செய்வதாலும், இவளின் பிரசன்னம் செல்வ இழப்பை ஏற்படுத்தும் என்பதாலும், இவளைச் சாந்தப்படுத்தி, அத்தகைய இடங்களிலிருந்து இவளை விலக்கி வைப்பதே இவ்வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும் (இச்செய்தி 'சப்தகல்பத்ருமம்' 1.1-இல் குறிப்பிடப்பட்டுள்ளது). 18-ஆம் நூற்றாண்டில் தஞ்சை மராட்டிய அவையில் த்ர்யம்பக யஜ்வன் என்பவரால் இயற்றப்பட்ட 'ஸ்த்ரீ தர்ம பத்ததி' எனும் நூலில், ஒரு மனைவி தான் உணவருந்தத் தொடங்கும் முன் ஜ்யேஷ்டா தேவிக்கு உணவைப் படைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது; இவ்விதியை மீறுபவள், தான் இறந்த பிறகு நரகத்தை அடைவாள் என்றும் அந்நூல் கூறுகிறது — "svabhojanasamaye strībhir jyeṣṭhādevyai balidānaṃ kartavyam" (18r.9). இந்நூல், பல்வேறு சுருதி, ஸ்மிருதி மற்றும் புராண நூல்களை அடிப்படையாகக் கொண்டு, மரபுசார்ந்த இந்து சமயக் கண்ணோட்டத்தில் பெண்களுக்கான கடமைகளை, ஆணாதிக்கச் சார்புடைய சமஸ்கிருத மொழியில் விரிவாக எடுத்துரைக்கிறது; இது பெண்களுக்கு ஒரு கீழ்ப்படிதல் மிக்க துணைப் பாத்திரத்தையே வழங்குகிறது என்பதோடு, கணவன்மார்களிடம் முழுமையான பக்தி செலுத்துவதன் மூலமே அவர்கள் முக்தியை அடைய முடியும் என்றும் பரிந்துரைக்கிறது. இத்தகைய 'பலிதானம்' (உணவுப் படையல்) செய்யும் பெண்களுக்குச் சந்தான பாக்கியமும், செல்வச் செழிப்பும் அருளப்படும் என்று கூறப்படுகிறது. 'யக்ஷதிலகம்' (III) எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜ்யேஷ்டா தேவிக்குச் செய்யப்படும் பிரார்த்தனைகளின்போது வெள்ளைத் தாமரை மலர்களைப் படைப்பது அவளைச் சாந்தப்படுத்தும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது — இதுகுறித்து விபூதி பூஷன் மிஸ்ரா எழுதிய "Religious beliefs and practices of North India during the early Mediaeval period" (1973) எனும் நூலைப் பார்க்கவும். உக்கிரமான அல்லது பயங்கரமான தெய்வங்களின் தீய மற்றும் கேடு விளைவிக்கும் சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்காகவே அத்தெய்வங்கள் வழிபடப்படுவது போல, ஜ்யேஷ்டா தேவியின் வழிபாடும், மங்களகரமான இடங்களிலிருந்து அவளை விலக்கி வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

சிவாலயங்களில் 'பரிவார தேவதை'யாக (துணைத் தெய்வமாக) இடம்பெறும் ஜ்யேஷ்டா தேவிக்கு, அக்கோயிலின் இரண்டாவது அல்லது மூன்றாவது பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் தனக்கென ஒரு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். லட்சுமிக்கும் செழிப்புக்கும் எதிரானவளாக நம்பப்பட்டதால், அவளது சடங்கு வழிபாடு 10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு முற்றிலுமாக மறைந்துவிட்டது. முந்தைய காலங்களில் அவள் கருவுறுதல் தெய்வமாகவும் வணங்கப்பட்டாள், இருப்பினும் பொதுவான நம்பிக்கையில் அவள் சோம்பல், வறுமை, துக்கம், அசிங்கம் போன்றவற்றுடன் தொடர்புடையவளாகக் கருதப்படுகிறாள். கர்ப்பிணிப் பெண்கள் அவளை வழிபடுவது, அவளைத் தள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்திருக்கலாம்; இது, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நோய்களுடன் தொடர்புடைய சப்தமாத்ருகா வழிபாட்டைப் போன்றது. அவளை வழிபடும் பெண்கள் அவளைத் தங்கள் வீடுகளிலிருந்து விலக்கி வைக்க முடியும் என்றும் லிங்க புராணத்தில் கூறப்படுகிறது. சக்தி வழிபாடு மற்றும் தந்திரத்தில் (சாரதா தில்கா தந்திரம்) அவளது வழிபாடு முற்றிலும் வேறுபட்டது. மேலும் அவள், காகத்தை வாகனமாகவும் துவசமாகவும் கொண்ட தச மகாவித்யாக்களில் ஒருவரான தூமாவதியுடன் ஓரளவு தொடர்புடையவள். வைணவத்தின் எழுச்சி மற்றும் லட்சுமியின் புகழ்ச்சியால், ஜ்யேஷ்டாவின் வழிபாடு மறைந்து போனது. பல்லவ காலத்தில், அவளது வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும், இதனால்தான் அவர்களின் பிரதேசத்தில் ஜ்யேஷ்டாவின் பல கல்வெட்டுச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

காஷ்யப சிற்ப சாஸ்திரம், பாதாளம் 48-ல் விளக்கப்பட்டுள்ள அவளது உருவவியல், அவள் நெருப்புத் தணல் போன்ற நிறமுடையவள் என்றும், இரு கைகள், தொய்ந்த மார்பகங்கள், குழிந்த வயிறு, பெரிய உதடுகள், உயர்ந்த மூக்கு மற்றும் நெற்றியில் திலகம் போன்றவற்றைக் கொண்டவள் என்றும் விவரிக்கிறது. அவள் சிவப்பு நிற ஆடை அணிந்து, வலது கையில் நீலோத்பலாவையும் இடது கையில் பாணபாத்திரத்தையும் ஏந்தியிருக்கிறாள். அவளது சடை கலைந்து, விரிந்த கூந்தல் கற்றைகள் வசிகபந்தமாக ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. அவள் பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, சுகாசனத்தில் இருப்பது போல் பத்ராபீடத்தின் மீது இரு கால்களையும் தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கிறாள். காகம் அவளது துவசமாகும், அவளது வலப்புறத்தில் ரிஷபவனனின் மீது ஒரு ரிஷபம் அமர்ந்திருக்கிறது. மற்றொரு தியான சுலோகத்தில், அவள் தனது வலது கையில் ஆயுதமாக ஒரு தண்டத்தையும் (கதை), இடது கையில் சுச்சி முத்திரையையும் ஏந்தியிருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. அவளது வலது கால் தொங்கிய நிலையிலும், இடது கால் உத்குடிகாசனத்திலும் காட்டப்பட்டுள்ளது. அவள் பருத்த மார்பகங்களையும், இளமையான தோற்றத்தையும், பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நெடுந்தூரத்தையும், கருமையான நிறத்தையும், சிவப்பு நிற ஆடையையும் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வலப்புறத்தில், ஏராளமான ஆபரணங்களையும் வெண் பட்டு ஆடையையும் அணிந்த, வெளுத்த நிறமுடைய, பருத்த உருவம் ஒன்று நிற்கிறது. கம்பீரமான தோற்றத்துடன் கரண்ட மகுடம் ஏந்தியிருக்கும் ரிஷபதேவன் அவரே. அவளுக்கு இடப்புறத்தில், அதே போன்ற அம்சங்களுடன் அக்னிதேவன் காணப்படுகிறார். ஜ்யேஷ்டரின் சிற்பங்கள் பல்லவ காலத்தில் பிரதானமாகக் காணப்படுகின்றன, மேலும் அவை இந்த வடிவத்தில் காணப்படவில்லை.

செங்கல்பேட்டைக்கு அருகிலுள்ள வல்லம் குகைக் கோயிலில், மகேந்திர பல்லவனின் காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஒரு சிதைந்த புடைப்புச் சிற்பத்தில், ஜ்யேஷ்டா துணையின்றித் தனித்த உருவமாகக் காணப்படுகிறார்; அவரது காலத்தைச் சான்றளிக்கும் கல்வெட்டுகளுடன் காணப்படும் இதுவே அவரது ஆரம்பகால சிற்பமாக இருக்கலாம். பிரதான குகைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. குகைகளுக்கு வெளியே உள்ள வடக்கு மற்றும் தெற்கு முகப்புகளில் ஜ்யேஷ்டா மற்றும் கணபதி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன, இவற்றில் கணபதி பிற்காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் (கி.பி. 600-630) கீழ் இருந்த ஒரு சிற்றரசரின் மகனான ஸ்கந்தசேனனால் இக்கோயில் கட்டப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் கல்வெட்டில், இந்தக் குகைக் கோயில் தேவகுலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; பிற்கால கல்வெட்டு ஒன்றில், ஸ்கந்தசேனனின் தந்தையின் பெயரிலிருந்து இக்கோயில் திருவாயந்தீஸ்வரமுடிய நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இது வேதாந்தீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.


காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் மூன்று புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மூலபிரசாதத்தின் தெற்குச் சுவரில் கோஷ்ட மூர்த்தியாக மிகவும் பிரதானமாக அமைந்துள்ளது. இங்கு அவள், இரு கால்களும் தொங்க, பருத்த உடலுடன், புடைத்த மார்பகங்களுடனும், பானை வயிறுடனும், கரண்ட மகுடம் அணிந்து சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அவள் இரு கைகளிலும் உத்பலாவை ஏந்தியிருக்கிறாள், மேலும் அவளது பிள்ளைகளான மந்தன் மற்றும் மந்தி அவளுக்கு இருபுறமும் உள்ளனர். காஷ்யப சிற்ப சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரிஷப தேவனான மந்தன், எப்போதும் ரிஷபனின் தலையுடனும், தண்டம் ஏந்தியபடியும் சித்தரிக்கப்படுகிறார். அவர்களின் அனைத்து புடைப்புச் சிற்பங்களிலும், இருவரும் தவறாமல் தங்கள் தாயுடன் ஒரு பொதுவான பத்ராபீடத்தில் அமர்ந்திருக்கின்றனர். மேலும் சில புடைப்புச் சிற்பங்களில் பின்னணியில் காகத்தின் கொடியும் காட்டப்பட்டுள்ளது.


மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் உள்ள குடைக்குகைக் கோயிலில் உள்ள ஒரு தூணில் காணப்படும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டில், ஜ்யேஷ்டருக்காக ஒரு சன்னதி தோண்டப்பட்டதாகக் காணப்படுகிறது. இந்த சுப்பிரமணியர் கோவிலில் உள்ள சிவாலயத்திற்கு இது ஒரு உபசன்னதியாகத் தெரிகிறது. மேலும், அவரது கோவில்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது என்பதைப் பல சோழர் சாசனங்கள் வெளிப்படுத்துகின்றன.


மற்ற இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள அவரது வழக்கமான அலங்கோலமான மற்றும் பண்பற்ற சிற்பக்கலைக்கு மாறாக, மூனூர் அடவல்லீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டை மெலிதாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவள் இடதுபுறத்தில் தன் மகள் மந்தி அல்லது அக்னிமாதாவாலும், வலதுபுறத்தில் தன் மகன் மந்தன் அல்லது ரிஷபவக்த்ரனாலும் சூழப்பட்டிருக்கிறாள். இவ்விரு தெய்வங்களும் ஒரு நீண்ட பத்ராபீடத்தில் அமர்ந்திருக்கின்றனர், மேலும் இரு கைகளை மட்டுமே கொண்டுள்ளனர். ஜ்யேஷ்டை, மற்றவர்களுக்குத் தன் மூத்த தன்மையை உணர்த்தும் வகையில், மற்றவர்களை விட எப்போதும் பெரியவளாகக் காட்டப்படுகிறாள். அவள் தன் வலது கையில் ஒரு அல்லி அல்லது தாமரையை ஏந்தியிருக்கிறாள், அவளது இடது கை பத்ராபீடத்தின் மீது உள்ளது. அவள் புன்னகைக்கும் முகத்தையும், நன்கு விகிதாசாரமான உடலமைப்பையும், அகன்ற இடுப்பையும் கொண்டிருக்கிறாள். அவளது மகள் அக்னிமாதா, அதே போன்ற அம்சங்களுடன் காட்டப்படும் ஒரு இளமையான அழகான கன்னி ஆவாள். ஜ்யேஷ்டையின் மகன் ரிஷபதேவன் அல்லது ரிஷபவக்த்ரன், காளை போன்ற முகத்தையும் ஆண்மைக்குரிய அம்சங்களையும் கொண்டிருக்கிறான், இதுவும் அவனது இளமையை வெளிப்படுத்துகிறது. அவன் தன் இடது கையில் ஒரு தண்டம் அல்லது கதாயுதத்தை ஏந்தியிருக்கிறான், மேலும் தன் வலது கையை பீடத்தின் மீது வைத்திருக்கிறான் அல்லது ஒரு பாசத்தை ஏந்தியிருக்கிறான். இவ்விரு தெய்வங்களும் கரண்ட மகுடம், குறைவான ஆனால் கனமான ஆபரணங்கள் போன்றவற்றைக் காட்டுகின்றன. இந்தச் சிற்பம் முற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.


கழுதை பெரும்பாலும் அவளுடைய வாகனமாகக் கருதப்படுகிறது, மேலும் சில புடைப்புச் சிற்பங்களில் காகத்துடன் கூடிய கொடியான காகத்வஜத்துடன் சேர்த்தும் அது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தப் புராணங்களிலும் இதற்கான துணை விவரங்கள் காணப்படவில்லை. மேலும், சோம்பலுடன் தொடர்புடைய அத்தகைய வாகனம், சக்தி தந்திரங்களின் செல்வாக்கின் கீழ் அவளுடன் விவரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இதேபோல், சோழர் காலத்தில் சிவாலயத்தின் பரிவார தேவதைகளின் கீழ் சேர்க்கப்பட்டதால், ஜ்யேஷ்டை தனது கவர்ச்சியற்ற மற்றும் நாகரிகமற்ற உடலமைப்பையும் தோற்றத்தையும் இழந்து, ரிஷபதேவன் (மந்தன்) மற்றும் அக்னிமாதை (மந்தி) ஆகியோருடன் அமர்ந்திருக்கும் மிகவும் நேர்த்தியான மற்றும் அழகான இளம் பெண் தெய்வமாக மாறியதாகத் தெரிகிறது. பலர் அவளை சனைச்சரருடன் தொடர்புபடுத்துகின்றனர், இதுவும் எந்தப் புராணக் கதைகளிலும் அடிப்படையற்றதாகத் தெரிகிறது. பிற்கால சோழர் கால புடைப்புச் சிற்பங்களில், மூவரும் சமமான அளவுடனும் இளமையான தோற்றத்துடனும் இருப்பதைக் காணலாம்.


திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சிபுரம் அருகே உள்ள பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரரின் பழமையான சிவன் கோவிலில், ஒரு அசாதாரணமான முறையில், ஜ்யேஷ்டர் இன்றும் வழிபடப்படுகிறார். ஸ்தல புராணத்தின்படி, பிரம்மா இந்த இடத்தில் சிவனை வழிபட்டார். 'பெருநகர்' என்னும் பெயர், சோழர் காலக் கல்வெட்டுகளில் 'பெருநகர்' அல்லது 'நித்யவினோதநல்லூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து அறியப்படுகிறது. 'நித்யவினோதன்' என்பது முதலாம் இராஜராஜ சோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும்; இங்குள்ள சிவலிங்கம், முற்காலத்தில் 'பிரம்மீஸ்வரம் உடையார்', 'பிரம்மபுரீஸ்வர மகா தேவர்' மற்றும் 'பிரம்மீஸ்வரம்' ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டது.

இக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில், தீமைகளை அகற்றும் பொருட்டு, பழங்காலம் தொட்டே ஜேஷ்டா தேவியின் திருவுருவம் பக்தியுடன் வழிபடப்பட்டு வருகிறது. இங்குள்ள முக்கியமான கல்வெட்டுகளில் மிகப் பழமையானவை, கி.பி. 1170-ஆம் ஆண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டவையாகும்; இவை உக்கல் மற்றும் மகரல் போன்ற அருகிலுள்ள கிராமங்களின் பெயர்களைப் பதிவு செய்துள்ளன. அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த 'கண்டகோபாலன் புதுமடை' என்னும் நாணயத்தைப் பற்றிய குறிப்பும் இக்கல்வெட்டில் காணப்படுகிறது. இதே மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த வேறு பல கல்வெட்டுகள், பெருநகர் கிராமமானது — அருகிலுள்ள பிற கிராமங்களைப் போலவே — 'ஜெயங்கொண்ட சோழமண்டலம்' என்னும் பெரும் பிரிவின் கீழ் அமைந்திருந்த 'எயிற்கோட்டம்' என்னும் உட்பிரிவில் உள்ள, 'மகரல் நாடு' என்னும் பண்டைய நிலப்பரப்பில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடுகின்றன.


சைவ சமயம் – ஸ்ரீ ஜேஷ்டா / மூத்த தேவி / மூதேவி / தவ்வை / அலக்ஷ்மி -- ( தேவி ) .
1. முன்னுரை : அன்பர்கள் பலர் , பல பதிவுகளில் இத் தேவி குறித்து பல செய்திகளை எழுதி வரும் வேளையில் , சுத்தாத்வைத சித்தாந்த சைவம் ( சைவம் ) இத்தேவி குறித்து எவ்வாறு அணுகுகிறது எனக் காணலாம் . இணையத்திலிருந்து பல செய்திகள் தொகுக்கப்பெற்று இப்பதிவில் நன்றியுடன் எடுக்கப்பெற்று எழுதப்பட்டு உள்ளன . மிக முக்கியமாக ‘ பேராசிரியர் ’ ‘ முனைவர் ’ ‘குருஜி ’ G சங்கர நாராயணன் அவர்களுடைய பதிவிலிருந்து நிறைய செய்திகள் எடுத்தாளப்பட்டு உள்ளன , அவருக்கு நமது நன்றிகள் .
2. பெயர்கள் : இத்தேவி சுமார் 14 பெயர்களில் ( தமிழ் & வடமொழி ) அழைக்கப்படுகின்றாள்
3. புராணச் செய்திகள் : அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்த வேளையில் இத்தேவி வெளிபட்டாள் எனப் புராண செய்திகள் குறிக்கின்றன . ஸ்ரீமத் ஸுப்ரபேத ஆகமம் , தேவி ஆதிசக்தியிடமிருந்து தோன்றி பிறகு பாற்கடலிலும் உதித்த செய்தியைத் தருகிறது.
4. இலக்கிய செய்திகள் : சங்க இலக்கியத்திலும் , பக்தி இலக்கியத்திலும் இத்தேவி குறிப்பிடப் பெறுகிறார் .,
ஔவையார் பாடல் :
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
திருக்குறள் :
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள். கெருட வாகனனும் நிற்கச்
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே.
5. மெய்யியல் : சைவ மெய்யியலில் ஸ்ரீ சிவபெருமானின் 8 சக்திகளில் -- காளி ரௌத்ரி பலவிகரணி என்று மனோன்மணி என்ற வரிசையில் முதலாவது சக்தியாக இத் தேவி குறிப்பிடப் பெறுகிறாள் .
6. ஆகமங்கள் : சிவாகமங்களில் , வைகானஸ ஆகமத்தில் மற்றும் சாக்த ஆகமங்களில் இத் தேவி குறிப்பிடப் பெறுகிறாள் .
சிவாகமங்களில் இத் தேவி ஸுகத்துக்குண்டான தேவியாக உறக்கத்தை வழங்கும் தேவியாக அவளுக்கு ப்ரதிஷ்டை முதலியவற்றைக் கூறுகிறது . மனிதனுக்கு நல்ல உறக்கம் இல்லையென்றால் , அவனுடைய ஆரோகியமே பாழாகி விடுமே , எனவே நல்ல உறக்கத்தின் தேவதை இத் தேவியே . ஸ்ரீமத் தீப்த ஆகமம் இத் தேவியை கலிபுருஷனின் மனைவி என்று கூறுகிறது .
7. சிவாகம முறையில் வழிபாடு :
ஸ்ரீமத் காமிகாமத்தில் இத்தேவியை கிராமங்களில் மற்றும் நகரங்களில் குளக்கரையில் தனியே அமைக்க விதிகளை கூறுகிறது . பல இடங்களில் இத் தேவியின் திருமேனிகள் பல வயல் வெளிகள் , குளக்கரைகள் , கிராம சிவாலயங்களில் ஒதுக்குப் புறமாக தனியே கிடப்பதைப் பார்த்தால் ‘ வழிபாடுகள் கைவிடப் பெற்று ஒதுக்கபட்ட தேவியோ ‘ என நாம் எண்ணியுள்ளோம் . அவ்வாறு கிடக்கும் இத்தேவியின் திருமேனிகள் தனியாக அமைக்கப்பெற்றவையே உதிரிச் சிற்பங்களாக இன்றும் நமக்கு கிடைக்கின்றன போலும்.
ஸ்ரீமத் அஜிதாகமத்தில் - பரிவாரலாய விதியில் இத் தேவியை சிவாலயப் பரிவார தெய்வமாகக் கொள்கிறது . அதன் பிரதிஷ்டை பற்றிக் கூறும்பொழுது :
“ वारुण्यां स्कन्दधाम स्याज्ज्येष्ठाया वायुगोचरे ।
வாருண்யாம்ʼ ஸ்கந்த³தா⁴ம ஸ்யாஜ்ஜ்யேஷ்டா²யா வாயுகோ³சரே
மேற்கில் ஸ்கந்தனின் சன்னதி இருக்க வேண்டும். வடமேற்கில் ஜ்யேஸ்டாவின் சன்னதி இருக்கவேண்டும் “
எனக் கூறுகிறது . எனவே இத் தேவி சிவாலய பரிவார தேவதைகளில் ஒருவர் என்பது தெளிவு . இத் தேவி சிவாகமங்களின் படியும் , தனித்தும் & பரிவார தேவதையாகவும் வழிபாட்டில் இருந்தார் எனத் தெரிகிறது .
8. கல்வெட்டு : SII III No 169 இல் காலியூர் கூற்றது , உத்திரமேரூர் சதுர்வேதி மங்கல ஊரின் குமண்பாடி கிராம சேஷ்டையாருக்கு அர்ச்சனா போகமாக ( வழிபாட்டு செலவுக்காக விடப்பட்ட நில நிவந்தம் ) ‘ வீரபாண்டியன் தலை கொண்ட பார்த்திவேந்திரவர்மன் ‘ கால மூன்றாம் ஆட்சியாண்டில் உத்திரமேரூர் சபையாரால் நிலங்கள் வழங்கப்பட்டன . இத் தேவிக்கு வழிபாட்டில் நிவந்தங்கள் விடப்பெற்று அதனை ஆவணமாக கல்வெட்டிலும் முன்னோர் பொறித்துள்ளனர் .
9. திருமேனிகள் : பொது யுகம் 6 முதல் பொது யுகம் 13 ஆம் நூற்றாண்டு வரை இத் தேவியின் திருமேனிகள் வழிபாட்டில் இருந்துள்ளன . தமிழகத்தின் சிலத் திருக்கோயில்களும் இத்தேவியின் திருமேனிகள் வழிபாட்டில் உள்ளன .
முடிவுரை : ஸ்ரீ ஜேஷ்டா என்ற தெய்வம் சைவர்கள் பரிவார தேவதையாக கொண்டாடத் தடை இல்லை , ஆயினும் இன்று பலர் கூறி வருவது போல “ தவ்வை தாயே போற்றி ! தமிழரின் தனிப் பெருந்தேவியே போற்றி “ என்றெல்லாம் தலையில் கரகம் எடுத்து ‘ ஹரோகரா ‘ போட வேண்டியத் தேவை இல்லை !