Friday, August 18, 2023

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் -எதிர்ப்பவர்கள் பரப்பும் பொய்களும் - உண்மையும்



 காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் (Tamilnadu Maritime  Board)   https://tnmaritime.tn.gov.in/ta/ports/captive-port/kattupalli-port/details/
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் வந்தால் பரப்பபடும் பொய்கள்
1. சென்னையே வெள்ளத்தில் மூழுகும் அபாயம்
2. பழவேற்காடு ஏரி பாதிக்கும்
3. மீனவர் வாழ்வாதாரம் மீன் குறையும்
4. அமெரிக்க ராணுவக் கப்பல் வந்தது.
தமிழக அரசு கடல்வளத் துறையின் இணையதளள காட்டுப்பள்ளி துறைமுகம் 
1.கடற்கரை ஓரம் துறைமுகம் கட்டுவதற்கும் வெள்ளத்திற்கும் தொடர்பே இல்லை. மழை நீர் வரும் பாதை மறித்தோ, அடைத்தோ இத்துறைமுகம் இல்லை
2.பழவேற்காடு ஏரி  என்பது 400 சதுர கீமி பரப்பளவு, அது இத்துறைமுக விரிவாக்கத்தின் எல்லையில் இருந்து வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, எவ்விததிலும் இத் துறைமுகத்திற்கும் பழவேற்காடு ஏரியின் ஓட்டத்திற்கோ, நீர் பாதைக்கோ தொடர்பு இல்லை. 
காட்டுப்பள்ளி துறைம்கம்- 6051 ஏக்கர் என்றால் மொத்தமே 24.6 சதுர கீலோமீட்டர் மட்டுமே.
3. மீன் வளர்ச்சி, வாழ்வாதரத்திற்கும் இந்தத் துறைமுகத்திற்கும் தொடர்ப்பே இல்லை. துறைமுகம் என்பது முகப்பில் இருந்து 2.5 கீமி நீளம் மட்டுமே, சற்று தள்ளீ ப்ரேக் வாட்டர் வால் எழுப்புவார்கள். இவை மீன் வளர்ச்சியை பாதிக்காது.
4. அமெரிக்க ராணுவக் கப்பல் வருகை என்பது ஏன்? எதற்கு? என்பது அரசு அறிந்தால் போதும். அவை சிறு ரிப்பேர், டீசல், உணவு எடுக்கவும் வரலாம்.
இந்திய அமெரிக்காவுடன் கூட்டு ராணுவ பயிற்சி ஒத்திகை - 140 கோடி இந்திய மக்கள் பாதுகாப்பிற்கு பெரிதும் நல்லதே
கடல் அரிப்பு, என சென்னை காசிமேடு பகுதியில் உள்ளே வந்துள்ளதையும் இதையும் தொடர்பு படுத்த இயலுமா? 
ஆர்டிக் பகுதி ஐஸ் பாறை உருகுவதால் கடல் மட்டும் ஆண்டிற்கு சில மில்லிமீட்டர் என உயர்ந்து வருகிறது, இதனால் இந்தியாவின் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களே மூழ்கலாம் என்கிறாது செய்தி, கடல் மட்டம் உயர, அரிப்பிற்கு ஒரு துறைமுகம் காரணம் ஆக முடியாது.
https://www.livemint.com/news/india/these-2-indian-cities-are-at-risk-due-to-sea-level-rise-11677996856707.html#:~:text=According%20to%20the%20analysis%20by,the%20rise%20in%20sea%20level.  






தமிழகத்தை மாபெரும் தொழில் வளர்ச்சி தந்து 2030ல் 1ட்ரில்லியன்$ ஜீடிபி பொருளாதார சந்தை கொண்டதாக மாற்றும் ஒரு லட்சியக் கனவை 2021ல் ஆட்சியைப் பிடித்த தமிழக முதல்வர் அறிவித்தார். அதற்கு காட்டுப்பள்ளி துறைமுகம் ஒரு மாபெரும் காரணியாக அமையும்