Tuesday, June 26, 2018

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் -சாமி சிதம்பரனார்

http://santhipu.blogspot.com/2006/05/blog-post_19.html

ஆரியருக்கும் - தமிழருக்கும் ஒத்த நாகரிகம்


பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் - அவரது இயக்கத்தோடும் தொடர்ந்த செயல்பூர்வமான தொடர்பை வைத்திருந்தவர்.

இறுதியில் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் இவரது வரலாறும் - இவர் எழுதிய பல புத்தகங்களும் மறைக்கப்பட்டும் - மறக்கப்பட்டும் வருகிறது. இவரது எழுத்துக்கள் மிக எளிமையானது. இலக்கியம் அறியாதவர்கள் கூட, மிக எளிமையாக இவரது எழுத்தின்பால் கவர்வர். அந்த அளவிற்கு இவரது எழுத்திற்கு வலிமையுள்ளது.

அத்தகைய மூத்த ஆய்வாளரான சாமி சிதம்பரனார் அவர்கள் திராவிட கொள்கை குறித்து எழுதியவற்றை, அதாவது -தொல்காப்பிய தமிழன்- நூல் அறிமுகம் ஒன்றை விசுவாமித்திரர் எழுதி - திண்ணையில் வெளி வந்துள்ளது. திராவிடம் குறித்து சூடு பறக்கும் இணையதளத்தில் உலா வருவதால் இதனை மறு பதிப்பாக இங்கே வெளியிடுகிறேன். நன்றி திண்ணை, விசுவாமித்திரர்.
சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்
“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)
2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)
3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)
4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)
5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)
6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப் பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மை யையுமே வளர்த்து வருகின்றன.

இது தமிழ்வளர்ச்சியா ?
இலக்கிய வளர்ச்சியா ?

தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வழியா ?”

இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்.

  • நூல் வெளியீடு:

  • தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,
    நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
    41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
    அம்பத்தூர், சென்னை - 600 098.

Sunday, June 24, 2018

திருவள்ளுவர் காலம் - பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை காலம்






தொல்காப்பியர் காலம் -வையாபுரிபிள்ளை கட்டுரை






வைரமுத்துவின் பிதற்றல் உளறல்கள் எல்லையின்றி செல்கிறதே

சினிமாவில் ஓசைக்கு பாடல் எழுதுவதில் மிகவும் புலமை வாய்ந்தவராய் 7000 பாடல் எழுதியுள்ளார்.

அடுத்தவர் பாடல்களை சிறுதும் கூச்சம் இன்றி திருடி தன் பெயரில் வெளியிடும் கயவர் எனப் பல கவிஞர்கள் ஆதாரங்களோடு வைரமுத்து பற்றி தெளிவய் நிருபிக்கின்றனர்.
வைரமுத்து பாடல்கள் படுக்கையறை முக்கல் முனகல்களை சற்றும் நாகரீகமின்றி அருவருப்பாய் எழுதுவதில் திறமை சாலி.
"கண்டபடி கட்டிபிடிடா" எனவும், விடிய விடிய சொல்லித் தருவேன் என சிறுவர் முதல் அனைவரும் கேட்கும் பாடலில் அசிங்கமாய் தரமின்றி எழுதுபவர்.
இந்த முக்கல் முனகல் பாடலாசிரியர் பற்றி " வைரமுத்து + வாலி = ஆபாசம் = என நூல் வெளியீட்டில்- திராவிட மலக் குழு கன்னட மலம் நயினா ஈ.வெ.ராமசாமி பெயர் சொல்லி காசு பார்க்கும் அருள்மதி, கருணாநிதி காலில் விழுந்து கிடக்கும் சுப.விரபாண்டியன் "திருந்துங்கள், இல்லாவிடில் திருத்தப் படுவீர்கள்"  என  மிரட்டினர்.

வைரமுத்து தன் தமிழை கருணாநிதி காலின் மிதிபாவடையாய் தூக்கி மிதித்து கோடிஸ்வரர் ஆனார், பல விருதுகள் தொடர்பால் மேலும் பல அநாகரீக செயல்களால் வாங்கினார் என பல செய்திகள் உள்ளன.
வைரமுத்துவிற்கு தமிழ் இலக்கிய அறிவோ, வரலோறோ சற்றும் கிடையாது என்பது கூடப் பழகிய பலரும் எழுதி உள்ளனர். ஆழமான கருத்துகளை முன் வைப்பதைவிட வசீகரமான வாக்கியங்களுக்கு முக்கியத்துவம் தரும் அர்த்தமற்ற உளாறல் பேச்சுகள்.
ஆனால் திடீர் என்று தினமணி பத்திரிக்கை ஆசிரியர் பிடித்து தமிழிற்கு தொண்டு ஆற்றியவர்கள் பற்றி தமிழருக்கு அறிமுகம் செய்வதாய் பல பேச்சுக்கள், இவர் பேச வேண்டுமானல் இவர் புத்தகம் 500 வாங்க வேண்டும், சில பல லட்சங்கள், ஆனாலும் சினிமா கவர்ச்சியில் உளறித் திரிந்தாலும் ஒவ்வொரு கட்டுரையிலும் அசிங்கமான உளறல்கள்.
தமிழை காட்டுமிராண்டி பாஷை, தமிழை அழிக்கவே திராவிடம் என்ற திராவிட மலம் நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி சங்க தமிழ் இலக்கியங்களையும், திருக்குறளை பற்றி அநாகரிகமான பைத்தியகாரத்தனமாய் பேசியவர், அண்ணாதுரையும், கருணாநிதியும் அதே வழியி தமிழ் இலக்கியத்தைப் பழித்தவர்கள் தேர்தல் அரசியலால் மட்டுப் படுத்திக் கொண்டவர்கள்.

சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள், வள்ளலார், அப்பர், கம்பர், வள்ளுவர், திருமூலர், பாரதியார், உ.வே.சமிநாதய்யர் என பலரைப் பற்றியும் தன்னிச்சையாய் பொய்யும் மெய்யும் எனப் பிதற்றி சென்றவர் கட்டுரைகளை சிலர் தினமணி இணையத்திலேயே கண்டித்தும் உள்ளனர். வெற்று சினிமா கவர்ச்சி தவிர வைரமுத்து அறிவு சார் சபை கண்டு கொள்ளவில்லை.

ஆண்டாளைப் பற்றி பைத்தியக்காரத்தனமாய் முற்றிலும் மலம் போன்ற ஒரு கட்டுரை படிக்க சிக்கினார், அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழக ஆய்வைத் தான் சொன்னேன் என ஒரு அசிங்கமான வருத்தம்;  ஆனல் இண்டியானா பல்கலைக் கழகம் அப்படி ஒரு ஆய்வே செய்யவோ நூல் வெளியிடவோ வில்லை என்றவுடன், அது ஒரு தமிழ் அறியா மலையாள கம்யூனிஸ்டுகள் ஆய்வு என ஒரு அழுவாச்சி வீடியோவில் அசிங்கமாய் பிதற்றினார். ஒரு ஆய்விற்கு ஆதாரம் மூலமொழியின் சமகால தரவே அன்றி பைத்தியக்காரத்தனமாய் தனக்கு வேண்டியபடி எவனோ எழுதியதைச் சொல்லி தமிழர் மரபை இழுவு செய்வது இல்லை.
சமீபத்தில் தொல்காப்பியர் பற்றி பேசுகையில் 
“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் / தன்பெயர் தோற்றி” என்ற தொடரில் துலங்கும் ஐந்திரம் என்ற சொல், ஐந்திர வியாகரணமாகிய வடநூலைக் குறிக்கிறதென்றும் தொல்காப்பியம் அதனடியாய் வந்த வழிநூல் என்றும் சிலர் கருதுவர். ஐந்திரம் என்பதை ஐந்திர வியாகரணம் என்று எழுதிச்சென்ற அடியார்க்கு நல்லாரை அவர்கள் சான்று காட்டுவதுமுண்டு.
இங்கிருந்துதான் நம் பொறுப்புமிக்க மறுப்புவாதம் உயிர்ப்புறுகிறது. முதலில் ஐந்திரம் என்பது ஓர் இலக்கண நூல் அன்று. அது ஐந்திரம் - ஆக்கினேயம் - கணாதிபத்தியம் - சைவம் - வைணவம் - சாக்கியம் என்ற அறுவகைச் சமயங்களுள் ஒன்று. ஒரு சமய நூல் எப்படி இலக்கணத்திற்கு முதனூலாகும்?இன்னொன்று: தொல்காப்பியம் நிலவிய காலத்தில் ஐந்திரம் உலவியதாகச் சான்றொன்றும் கிட்டிலது.


மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.


சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.

தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம் -30
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 

இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
சிலப்பதிகாரம் பற்றி பேசுகையில் அது 8ம் நூற்றாண்டின் பிற்பகுதியா எனும் ஆய்வைப் போட்டவர், ஏனோ வள்ளுவம் பற்றி பேசுகையில் காலம் குறிக்கும் தரவு பேச மாட்டார்.
தொல்கப்பியம் சமஸ்கிருத இலக்கணா மரபை நேரடியாய் பேசுகிறது, அதில்  உள்ள எழுத்து இலக்கணம் 7ம் நூற்றாண்டினது என்பது உலக பல்கலைக் கழகம் அனைத்தும் ஏற்பது சொல்லவே இல்லை. 

வைரமுத்து ஆய்வு பேச்சுகளை  தமிழ் பகைவர்கள், திராவிடம் எனும் மலக்கூட்டம் தமிழை அழிக்க செய்யும் முயற்சியின் மேலும் ஒரு முட்டாள்தனமான அறிவிலி முயற்சியாய் தான் தமிழறிஞர்கள் காண்பர்.


அந்தணர்களும் வர்ணமும் மனு ஸ்மிருதியும்

மனு ஸ்ம்ருதியில் பிராமணனுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையும் விட உயர்ந்த இடம் க்ஷத்ரியனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது . ‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை ; ஆகையால் ராஜசூயம் நடக்கும் பொது, பிராமணன் க்ஷத்ரியனை விட , தாழ்வான இடத்திலேயே அமர்கின்றான்.’ என்று ஸத பத பிராமணம் கூறுகிறது. பிராமணனுக்கு சொல்லாத சிறப்பை மனு நீதி , அரசனுக்கு கூறுகிறது. ‘சந்திரன், அக்னி, வாயு, சூரியன், , இந்திரன், குபேரன் , வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அரசனுக்கு அசுத்தம் என்பது கிடையாது என்று மனு நீதி சொல்கிறது.
பிராமணனுக்குப் பல சலுகைகளைக் காட்டுகிற மனுநீதி, மேலே சொன்னவாறு அரசனுக்குத் தருகிற உயர்ந்த அந்தஸ்தை, பிராமணனுக்குத் தரவில்லை. பிராமணனைக் கொல்லக் கூடாது என்றும், மரண தண்டனையிலிருந்து அவனுக்கு விலக்கு உண்டு என்றும் மனுநீதி கூறுகிறது. ஆனால், தன்னைத்தாக்க வருகிற பிராமணனை, சிறிதும் தயக்கம் இன்றி கொன்றுவிட வேண்டும் என்றும் அதே மனு நீதி சொல்கிறது.
குரும் வா பாலவ்ருத்தெள வா
ப்ராம்மணம் வா பஹுச்ருதம். 
ஆததாயினமாயாந்தம் 
ஹன்யாதேவாவிசாரயந்
குருவோ, இளைஞனோ வயோதிகனோ பிராமணனோ மெத்த கற்றவனோ ஆயினும் சரிஒருவன் வன்முறை எண்ணத்துடன் வந்தால் அவனைத்தயக்கமின்றி கொன்று விடவேண்டும்என்பது இதன் அர்த்தம் இது மனு ஸ்ம்ருதியில் வருகிறது.
அதே போல சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு பிராமணன் கொல்லப்படலாம் என்றும் மனு தர்மம் கூறுகிறது.
ஒரே குற்றத்திற்கு மற்றவர்களை விட பிராமணனுக்கு அதிக தண்டனை வேண்டும் என்றும் மனுநீதி வற்புறுத்துகிறது.
அஷ்டாபாத்யம் து சூத்ரஸ்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம்.
ஷோடசைவ து வைச்யஸ்ய 
த்வாத்ரிம்சத் க்ஷத்ரியஸ்ய ச.
ப்ராம்மனஸ்ய சது: ஷஷ்டி:
பூர்ணம் வாபிசதம் பவேத்
த்விகுணாவா சது:
ஷஷ்டி தத் தோஷகுனா வித்தி: ஸ:
அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு ; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.
பிராமணனுக்குச் சலுகையை அளிக்கிற மனு நீதிதான், மேற்கண்ட விதிமுறையையும் வற்புறுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, மனு தர்மம், எல்லா பிராமணர்களையும் – அதாவது பிராமணனாகப் பிறந்தவர்கள் அனைவரையும் – சலுகைக்கு உரியவர்களாக எடுத்துக் கொள்ளவில்லை.
கற்றறிந்து வேதம் ஒதுகிற பிராமணனுக்கு வரி விதிக்கக் கூடாது என்று மட்டுமே மனு தர்மம் சொல்கிறது. அப்படி கற்றறிந்து வேதம் ஒதாத பிராமணனுக்கு வரி விலக்கு கிடை யாது. ஆனால் ஏழை மக்களிடமும், சிறு வியாபாரங் களைச் செய்பவர்களிடமும் பெயரளவுக்கே வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மனு தர்மம் சொல்கிறது. இது பிராமணனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகை அல்ல. எல்லா வர்ணங்களைச்சார்ந்தவர்களிடையிலும் உள்ள ஏழைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகை.
வேதம் ஓதி, சாஸ்திர விதிமுறைப்படி நடக்காத பிராமணனை மனு தர்மம் மிகவும் கடுமையாக அணுகுகிறது .
எப்படிப்பட்ட பிராமணர்களுக்கு தானங்களைச் செய்ய வேண்டும் என்று விவரிக்கிற மனு ஸ்ம்ருதி, இவ்வாறும் சொல்கிறது; ‘சாதுவைப் போல் வேஷம் அணிந்து கொண்டு, மற்றவர் பொருளின் மீது விருப்பம் வைத்து, பொய்யை பரப்பி, கர்வம் கொண்டு, மற்றவர்களைப் பற்றிய நல்ல வார்த்தைகளைப் பொறுக்க முடியாத பொறாமைக் காரனாகத் திகழ்பவன், பூனையின் தன்மையை உடையவன் எனப்படுகிறான். தான் தேடுகிற இரை வெளியே வருகிற வரையில், அடக்க குனம் உள்ளதுபோல் நடித்து, இரை வெளியே வந்தவுடன் பாய்ந்து பிடித்து, அதைக் கொன்று விடுகிற குணம் பூனையினுடைய குணம்…. இப்படிப்பட்ட குணமுடைய குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான்….’
மனு தர்மம் மேலும் சொல்கிறது : பூனை குணம் உடைய பிராமணனுக்கோ விரதமுடையவன் போல் வேஷம் போடுகிற பிராமணனுக்கோ, வேதங்களைக் கற்றறியாத பிராமணனுக்கோ, ஒரு சிறியதானத்தையும் கூட நன்னடத்தை உள்ள மனிதன் செய்து விடக் கூடாது. இப்படிப்பட்ட பிராமணர்களுக்கு தானம் செய்யப்பட்டால் , தானம் வாங்கியவனோடு சேர்ந்து, தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப் பிடிக்காத பிராமணனுக்கு சிராத்தத்தில் உணவளிக்கப் பட்டால், அந்த உணவு அரக்கர்களால் உட்கொள்ளப் பட்டதாகிறது.
இப்படி வேதம் ஒதாத பிராமணனையும், சாஸ்திர விதிமுறைப்படி நடக்காத பிராமணனையும், மனு தர்மம் பிராமணனாகவே கருதவில்லை. ஆகையால், பிராமணனுக்குப் பலவித சலுகைகளை மனுநீதி தந்து விடுகிறது என்று கூறுகிறபோது – பல சுமைகளைப் பிராமணன் மீது அதே நீதி நூல் ஏற்றுகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இன்றும் பல வகுப்பினருக்கு சலுகைகள் கோரப்படுகின்றன. சட்ட ரீதியாகச் சலுகைகள்  அளிக்கப்படுகின்றன. ஆனால் அச்சலுகைகளை பெறுபவர்கள் மீது, சட்டம் எந்தச் சுமையையும் ஏற்றவில்லை மனு தர்மமோ, சலுகைகள் உண்டு – இந்தச் சுமைகளைத் தாங்கினால் என்றுதான் கூறியிருக்கிறது.

அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே.
அனுவ்ரஜ்யா ச சுச்ரூஷா  யாவத் அத்யயனம் குரோ:
தவிர்க்க முடியாத நேரங்களில் பிராமண மாணவன்பிராமணன் அல்லாத குருவிடமிருந்து போதனை பெறலாம்; அப்படி போதனை பெறுகின்ற காலத்தில் அந்த குருவுக்கு அந்த மாணவன் பணிவிடை செய்யவேண்டும் – என்பது மேற்கண்ட மனுவாக்கியத்தின் அர்த்தம்.
அதாவது சூத்திரர்கள் வேதம் கற்கக்கூடாது என்று ஒருபுறம் கூறுகிற மனு தர்மம், பிராமணன் அல்லாதவர்களிடமிருந்து போதனை பெறும் அனுமதியையும் பிராமணனுக்கு அளிக்கிறது. பிராமணன் அல்லாதவன் எனும்போது, அதில் க்ஷத்ரிய வைச்ய, சூத்ர வர்ணத்தவர் அனைவருமே அடங்குகிறார்கள் அல்லவா ?
இந்த முரண்பாடு – அதாவது மேற்கண்ட விதிக்கும், சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்ற முரண்பாடு –  – மனு ஸ்ம்ருதியில் இருக்கத்தான் செய்கிறது. இதைத் தீர்ப்பதற்கு வேதங்களில்தான் ஆதாரம் தேட வேண்டும் ஏற்கெனவே நான் குறிப்பிட்ட மாதிரி, வேதங்கள் மாற்றப்பட முடியாதவை ; மனு ஸ்ம்ருதி போன்ற தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளோ காலத்துக்கேற்றபடி மாற்றியமைக்கப்படக் கூடியவை . உபநிஷத்துக்கள், வேதங்களின் ஓர் அங்கம் முதன்மையான உப நிஷத்துக்களில் சாந்தோக்ய உபநிஷத்தும் ஒன்று. அதில் ரைக்வர் என்கிற பிராமணர் ஜனச்ருதி என்கிற சூத்திரருக்கு வேதத்தைக் கற்பிக்கிற நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது.
ப்ருகு முனிவர், பரத்வாஜ முனிவரிடம் நான்கு வர்ணத்தவருக்குமே யாகங்களையும் மற்ற தெய்வ காரியங்களையும் செய்யும் உரிமை உண்டு என்று விளக்குகிறார்
இத்யேதி: கர்மபிர் வ்யஸ்தா
தீவிஜா வர்ணாந்தரம் கத :
தர்மோ யஞ்ய-க்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே.
இதன் அர்த்தம் : பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கை விட்டதால் வெவ்வேறு செயல் முறைகளை மேற்கொண்டுமற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்களானார்கள். ஆகையால்தர்ம காரியங்களைச் செய்வதிலும் யாகங்களை நடத்துவதிலும் யாருக்கும் தடை கிடையாது.
பிராமண ,க்ஷத்ரிய , வைச்ய வகுப்பினர் அனைவரும் வேதம் கற்கலாம் என்பது எல்லா நூல்களிலும் கூறப்படுகிறது; அது தவிர சூத்திர வர்ணத்தைச் சார்ந்தவர்களும் வேதம் கற்கலாம் என்பதற்கு மேற் கூறிய ஆதாரங்கள் இருக்கின்றன.
இவை ஒருபுறமிருக்க, மனு தர்மமே கூட யாரை பிராமணனாகக் கருதுகிறது? யாரை சூத்திரனாகக் கருதுகிறது?  ‘வேதத்தைக் கற்றறியாமல், மற்ற கல்விகளைக் கற்று, வாழ முயற்சிக்கிற பிராமணன், தன்னுடைய சந்ததியினருடன், தான் வாழும் காலத்திலேயே சூத்திரனாகிறான்’ என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது.
இது மட்டுமல்ல. சூத்திரன், பிராமணனாகி விடலாம் பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைச்ய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம் என்றும் மனு ஸ்ம்ருதி சொல்கிறது.
 சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து  வித்யாத்வைச்யாத்ததைவ ச
– என்பது மனுவின் வார்த்தை.
 சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று மனு சொல்லியிருப்பதை மட்டும் எடுத்துக் கொள்கிறவர்கள்  , மேலே குறிப்பிட்டவற்றையும் பார்க்க வேண்டும். இவற்றிற்கிடையே முரண்பாடுகள் உண்டு அதைத் தீர்க்க ஏற்கெனவே நாம் சொன்ன மாதிரி மற்ற ஆதாரங்களைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் பொழுது பிறப்பினால் மட்டும் எவனும் எந்த வர்ணத்தையும் சார்ந்தவனாகி விடுவ இல்லை என்பது புரியும் ஒருவன் ஒரு வர்ணத்திலிருந்து மற்றொரு வர்ணத்திற்கும் மாறவும் முடியும் என்பது தெளிவாகும்.
அது மட்டுமல்ல வேதம் பயிலக் கூடாது என்ற தடை சூத்திரர்களுக்கு மட்டுமல்ல பிராமணர்களுக்கும் உண்டு.  நியமம் தவறி, பெயரளவில் பிராமணனாக வாழ்கிறவன், பெண்கள், சூத்திரர்கள் ஆகியோர் வேதம் பயிலக் கூடாது என்கிற விதிமுறையை பாகவத புராணத்தில் வியாஸர் எடுத்துச் சொல்கிறார். இதில் ஒன்று கவனிக்கத்தக்கது. வேதம் பயிலக் கூடாது என்கிற தடை-நியமம் தவறிய பிராமணனுக்குத்தானே தவிர,அப்படிப்பட்ட தடை க்ஷத்ரியனுக்கோ, வைச்யனுக்கோ அல்ல !
சூத்திரர்கள் வேதம் கற்கக்கூடாது என்று கூறுகிற மனு ஸ்ம்ருதியே கூட அவர்களுக்கு வேறு எந்தக் கல்வியையும் தடைசெய்யவில்லை. வேறு தொழிலையும் தடுக்கவில்லை. பிராமணனுக்கு விதிக்கப்பட்ட மாதிரி வறுமையும் சூத்திரர்களுக்கு விதிக்கப்பட வில்லை. ‘ஒரு பிராமணன் வீட்டிற்கு வைச்யர்களும் சூத்திரர்களும் விருந்தாளிகளாக வந்தால், அமர்த்தி உணவளிக்க வேண்டும்’  என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது.
 வைச்ய சூத்ராவபி ப்ராப்தெள குடும்பேதிதிதர்மினெள
போஜயேத்ஸஹ   ப்ருத்யை : தாவான்ருசம்ஸ்யம்  ப்ரயோஜயன்
என்று இது மனு ஸ்ம்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது .
மேலே போவதற்கு முன்பாக, மனு ஸ்ம்ருதியைப் பற்றி ஒரு வார்த்தை அது வர்ணப் பிரிவுகளைப் பற்றி மட்டும் பேசுகிற நூல் அல்ல. கல்வி, திருமணம், குற்றங்கள், குற்ற விசாரணை, சாட்சியம் அளிப்பதற்கான வழிமுறைகள், சொத்துரிமை, அரசனின் கடமைகள், ஒற்றர்கள்…. என்று பல விஷயங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிற நூல் அது அதைப் படிக்கும் பொழுது, இத்தனை விஷயங்களை, இவ்வளவு நுணுக்கமாக, எவ்வளவு காலத்திற்கு முன்பாகவே சிந்தனை செய்திருக்கிறார்கள் என்ற வியப்பு மேலிடுகிறது.
இது புறமிருக்க, ஒரு வர்ணத்தவர் மற்றொரு வர்ணத்திற்கு மாறலாம் என்பதைப் பார்த்த நமது மனதில், ஏன் பலரும் பிராமணனாக மாறி விட வில்லை? என்ற கேள்வி எழலாம். எதற்காக மாற வேண்டும்? கடித்ரியனுக்கு அரசுப் பதவிகள் இருந்தன;
வைச்யனுக்கு வர்த்தகம் இருந்தது. சூத்திரனுக்கு ‘ பலவித தொழில்கள் இருந்தன. பிரமணனுக்கோ வேதம் ஓதுவது தான் முக்கிய கடமையாக இருந்தது. வறுமைதான் அவனுக்கு விதிக்கப்பட்டது. நியமம் தவறியவனாக இருந்தால், தானம் வாங்கக்கூட  அருகதையற்றவன் என்ற நிலை அவன் மீது  சுமத்தப்பட்டது.அப்படியிருக்க பிராமணனாக மாற ஒருவன் துடிக்க வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை என்பது கண்கூடு.
இன்று இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சில பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தரப் படுகிறது. ஆனால் அவர்களுக்கு எந்தக்கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அன்று வேதம் கற்பதில் க்ஷத்ரியர்களோடும், வைச்யர்களோடும் சம உரிமையும் – வேதம் கற்பிப்பதில் தனி உரிமையும் பெற்றிருந்த பிராமணனுக்கோ, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இன்றைய சமுதாயத்தில், இடஒதுக்கீடு பெறுகிற பிரிவுகளில் ஒருவன் விரும்பி சேர்ந்து விட முடியாது அப்பிரிவுகளில் பிறந்திருந்தால்தான் உண்டு. ஆனால் அன்றோ, ஒருவன் விரும்பினால் பிராமணனும் ஆகலாம் என்ற நிலை இருந்தது. இதை மனு ஸ்ம்ருதியில் பார்த்தோம் மற்ற ஆதாரங்களிலும் கண்டோம் .
சரி, வேதம் ஓதுவதும், கற்பிப்பதும் ஏன் முக்கியத்துவம் பெற்றன? வேதங்கள் அவ்வளவு புனிதமானதாகக் கருதப்பட்டன. ஆனால் அவையோ எழுத்துவடிவத்தில் கிடையாது.வாய் மூலம் சொல்லக் கேட்டுத்தான் ஒருவன் பயில வேண்டும். அதில் எழுத்துப்பிழை வந்தாலோ, ஸ்வரம் தவறிப் போனாலோ அர்த்தம் அனர்த்தமாகி விடும். அதனால் தான் அதைக் கற்பதற்கும், போதிப்பதற்கும் பல கடுமையான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
இப்படி இருந்தும் கூட, இந்த விதிமுறைகள் எல்லாம் மாறக் கூடியவையே என்றும் அப்போதே கூறப்பட்டிருக்கிறது. ‘காலத்திற்கும், இடத்திற்கும் தக்கவாறு தர்மம், அதர்மமாகிறது; அதர்மமோ தர்மமாகி விடுகிறது. காலம்,இடம் ஆகியவற்றின் வன்மை அத்தகையது’ என்று யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் செய்யும் உபதேசம் மஹாபாரதத்தில் வருகிறது.
ஒரு காலத்தில் தர்மமாக இருந்த வழிமுறை, பிற்காலத்தில் மக்களால் வெறுக்கப்படுகிற நிலையை அடைந்தால், அந்த தர்மத்தைக் கை விட வேண்டும் என்று யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி கூறுகிறது.
ப்ரஹஸ்பதி இயற்றிய தர்ம சாத்திர நூலோ மேலும் ஒரு படி போகிறது. ‘சாத்திரத்தின்படி மட்டுமே ஒரு விஷயத்தைப் பார்க்கும் போது தவறுகள் நேர்ந்துவிடலாம் நியாயமான காரணத்திற்கு உட்படாத அம்மாதிரி முடிவு தர்மத்திற்கு இழுக்கு.
ஆகையால், நியாய சபையில் எடுக்கப்படும் முடிவுகள் சாத்திரத்தையொட்டி மட்டுமல்லாமல், நடைமுறை காரண காரியங்களை ஒட்டியும் அமைய வேண்டும் என்று அவருடைய நூல் கூறுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது, அன்று இருந்த நியாய உணர்வுதானே பளிச்சென தெரிகிறது? இப்படிப்பட்ட அன்றைய சிந்தனைதான் பிராமணீயம் என்றால், அதை வெறுப்பானேன்?

வர்ண வேறுபாடு? - சாந்திபர்வம் 

 

The distinction between varnas! | Shanti-Parva-Section-187 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 15)

%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF
பிருகு {பரத்வாஜரிடம்}, "பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியைக் கொண்ட அவர்கள், முதலில் தோன்றியவனின் {பிரம்மனின்} சக்தியின் மூலம் உண்டாக்கப்பட்டார்கள்.(1) பிறகு அந்தப் பலமிக்கத் தலைவன் {பிரம்மன்}, உயிரினங்கள் சொர்க்கத்தை அடையும்பொருட்டு, வாய்மை, கடமை, தவம், அழிவில்லா வேதங்கள், அனைத்து வகைப் பக்திச் செயல்பாடுகள், தூய்மை, ஆகியவற்றை (உயிரினங்கள் பயில்வதற்காகப்) படைத்தான்.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, அதன் பிறகு, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள், அசுரர்கள், பெரும் நாகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், பிசாசங்கள், மனிதர்களில்(3) நான்கு பிரிவினரான பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும், படைப்பில் இருக்கும் பிற வகையைச் சார்ந்தவையும் படைக்கப்பட்டன.(4) பிராமணர்கள் வெண்ணிறத்தையும், க்ஷத்திரியர்கள் சிவப்பு நிறத்தையும் , வைசியர்கள் மஞ்சள் நிறத்தையும் அடைந்தனர், சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறம் கருப்பாகும்[1]"என்றார் {பிருகு}.(5)
 


[1] இங்கே சொல்லப்படும் வண்ணம் அல்லது நிறம் என்பது பண்புகளையே குறிக்கும் என உரையாசிரியர் விளக்குகிறார். இங்கே சொல்லப்படும் நோக்கம் என்னவென்றால், பிராமணர்கள் நற்பண்பை (சத்வ குணத்தைக்) கொண்டனர்; இரண்டாவது வகையின் ஆசை (ரஜோ குணத்தைக்) கொண்டனர்; மூன்றாவது வகையினர் முதலிரண்டின் கலவையான, அதாவது நற்குணம் மற்றும் ஆசை குணத்தின் (சத்வ மற்றும் ரஜோ குணத்தின்) கலவையான நிறத்தை அடைந்தனர்; அதே வேளையில் எஞ்சிய பண்பான இருள் (தமோ குணத்தை) கீழ்வகை அடைந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்தப் பகுதியின் ஏழாம் சுலோகம் இவ்விளக்கத்தை உறுதி செய்கிறது.
 
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "(மனிதர்களின்) நால்வகையினருக்கிடையிலான வேறுபாடு வண்ணங்களால் (பண்புகளால்) மட்டுமே உண்டானவை என்றால், நால் வகையும் ஒன்றுகலந்ததாகவே தெரிகிறது.(6) காமம், கோபம், அச்சம், பேராசை, துயரம், கவலை, பசி, களைப்பு, ஆகியன மனிதர்கள் அனைவரையும் வசப்படுத்தி அவர்களில் நீடித்திருக்கின்றன. பண்புகள் உடைமையால் எவ்வாறு மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்?(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்?" என்று கேட்டார் {பரத்வாஜர்}.(9)
 
பிருகு {பரத்வாஜரிடம்}, "வெவ்வேறு வகைகளுக்கிடையில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது. பிரம்மனால் (சமமாகப்) படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் செயல்பாடுகளின் விளைவால், பல்வேறு வகையினராகப் பிரிந்திருக்கிறார்கள்.(10)ஆசைகளிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடுடையவர்களும், கடுமை மற்றும் கோபம் என்ற பண்புகளைக் கொண்டவர்களும், துணிவுமிக்கவர்களும், பக்தி மற்றும் வழிபாட்டுக் கடமைகளில் கவனமில்லாதவர்களும், ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டவர்களுமான பிராமணர்களே க்ஷத்திரியர்களானார்கள்.(11) மேலும் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல், நற்பண்பு மற்றும் ஆசைப்பண்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் உழவு என்ற தொழில்களை ஏற்று வைசியர்களானார்கள்.(12) பொய்மையில் விருப்பமுள்ளவர்களும், பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களும், பேராசை கொண்டவர்களும், வாழ்வதற்காக அனைத்து வகைச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத் தூய்மை தவறியவர்களும், இருளின் பண்பைக் கொண்டவர்களுமான பிராமணர்களே சூத்திரர்களானார்கள்.(13) இத்தொழில்களால் பிரிக்கப்பட்டவர்களும், தங்கள் வகையில் இருந்து வீழ்ந்தவர்களுமான பிராமணர்களே, மூன்று பிற வகையினரானார்கள். எனவே, பக்தி தொடர்புடைய கடமைகள் அனைத்தையும், வேள்விகளையும் செய்ய நான்கு வகையைச் சார்ந்த அனைவருக்கும் எப்போதும் உரிமையிருக்கிறது.(14) முதலில் சமமாகவே பிரம்மனால் படைக்கப்பட்டவர்களான இந்த நால்வகையைச் சேர்ந்த அனைவருக்கும், (வேதங்களில் உள்ள) பிரம்ம வார்த்தைகள் {அவற்றை அவர்கள் அனைவரும் பின்பற்ற} விதிக்கப்பட்டன. பலர் பேராசையால் மட்டுமே வீழ்ந்து, அறியாமை கொண்டவர்களானார்கள்.(15)
 
பிரம்மம் குறித்த சாத்திரங்களில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எப்போதும் கவனம் கொண்டவர்களுமான பிராமணர்களே, பிரம்மம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வல்லர்களாக இருக்கிறார்கள்.(16) பிராமணர்களாக இல்லாதவர்கள், படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ந்த பிரம்மமே என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களான இவர்கள், பல்வேறு (தாழ்ந்த) வகைகளின் உறுப்பினர்களாகின்றனர்.(17) அறிவொளியை இழந்து, கட்டுப்பாடற்ற ஒழுக்க நடைக்குப் பழகும் இவர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், பிரேதங்கள் மற்றும் பல்வேறு மிலேச்ச இனங்களில் பிறப்பை அடைகின்றனர்.(18) தொடக்கத்தில் (பிரம்மனின் மனோ விருப்பத்தால்) உயிருடன் எழுந்த பெரும் முனிவர்கள், தங்கள் தவங்களின் மூலமாக, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், அழிவற்ற வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளில் பற்றுடையவர்களுமான மனிதர்களை அடுத்தடுத்து உண்டாக்கினர்.(19) யோகத்தைப் புகலிடமாகக் கொண்டவனும், மனமே ஆனவனுமான ஆதி தேவனிலிருந்து {பிரம்மனில் இருந்து} எழுந்து, பிரம்மத்தையே அடிப்படையாகக் கொண்டு, அழிவற்ற, சிதைவற்ற மற்றொரு படைப்பும் இருக்கிறது[2]" என்றார் {பிருகு}.(20)
 
[2] இங்கே விதிக்கப்படும் வேறுபாடு இவ்வாறே தெரிகிறது: அழிவில்லா படைப்பானது, யோகத்தின் காரணமாகவோ, ஆதி தேவனின் மனச் செயல்பாட்டாலோ விளைந்தது. நாம் காணும் படைப்பானது, முதலில் படைக்கப்பட்ட அந்தத் தவசிகளின் விளைவால் உண்டானது. ஒருவேளை, இங்கே சொல்லப்படுவது, உயிரில் இருந்து உண்டாகும் உயிர் மற்றும் அடிப்படை பொருளுடன் கூடிய வெளி ஆகியவற்றைக் கொண்ட உயிர் கொள்கையானது தேவனின் மனோவிருப்பத்தால் விளைந்தது; அந்தக் கொள்கைகளுடைய செயல்பாட்டாலும், அடிப்படை பொருள் மற்றும் வெளியாலும் விளைந்து, புலப்படக்கூடிய பொருட்களாகத் தெரியும் அனைத்தும் அந்தத் தவசிகள் சம்பந்தப்பட்டது என்றிருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தர்மானுஷ்டானத்தை முக்கியகாரணமாகக் கொண்டதும், மனத்தான் செய்யப்பட்டதுமான அந்த ஸ்ருஷ்டியானது ஆதி தேவரானப்ரம்மதேவரிடிருந்து உண்டானதும், பிரம்மத்தை மூலமாகக் கொண்டதும் அழிவில்லாததும், குறைவில்லாததுமாயிருக்கிறது" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 188ல் உள்ள சுலோகங்கள் : 20

Tuesday, June 19, 2018

திருவள்ளுவர் காலம் - தமிழக அரசு கருணநிதி ஆட்சி வெளியிட்ட நூல்

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல்  குறளமுதம்
திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார்

தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூலில்

//திருக்குறளும் பிறப்புகளும் ஆத்மாவும் என ஒரு 2000 ஆண்டுக்கு முன்பு; 3000 ஆண்டுக்கு முன்பு எனக் கூறுவது தான் வள்ளுவருக்கு பெருமை எனச் சிலர் எண்ணுகின்றனர்// 
அன்றைய நிலையில் புலவர் திருக்குறளை 600 வாக்கில் என்பதை ஏற்று எழுதியது, ஆனால் இன்று நடுநிலையாளர் ஏற்பது பொ.ஆ.800 வாக்கில் தான் திருக்குறள் இயற்றப் பட்ட காலம்.





 (சாமி சிதம்பரனார் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர் எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.)











தொல்காப்பியமும் தமிழ் எழுத்துக்களும் வடமொழியும்


தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியின்படி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்



தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர்  என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.
தமிழ் உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான ப்ராகிர்தத்தையே குறிக்கும்)


Permalink
 Reply Quote 
More https://www.sparklit.com/secure/image/forum/activebar/indicator.png


Here I Give the details on developments of Tamil Writings and how Brahmi was dechiphered,and
 all this are the views of Iravatham Mahadevan.

//* 1906
ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா
 என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில்
 எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

*
பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில்
 திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924
இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள்
பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் '', '', '', '' போன்ற எழுத்துக்கள்
 காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது
 '', '' க்கள் (, , , , , போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே
 நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

*
பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில்
 மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள்
 பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால்
அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G.
கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு
புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள்
 கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம்.
 இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

*
சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ்
 (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள்
வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

*
இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப்
 பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள்
விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத '', '', '', '' ஆகிய எழுத்துகளுக்கான புது
வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும்,
ஏற்கனவே இருக்கும் '', '', '' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது
போல் உள்ளது. //
//-
அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம்
 உருவாக்கப்பட்டுள்ளது.

-
இதனை சமண முனிவர்கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில்
 செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச்
 சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன.
 இந்தக் கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில்
 காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட
வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

-
அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது.

-
அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலிருந்து கன்னட, தெலுங்கு
 வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

-
தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம்
 அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு
 எழுதப்பட்டது.

-
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது,
 கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள்,
 பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த
வழித் தமிழெழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது.
அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி
வருகிறது.

-
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

-
கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

-
வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு
 உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால்
 புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25%
சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

-
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை
அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன்
 என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

-
குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள்,
ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.

-
ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில்
(அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும்
 அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள்
 தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

-
தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள்
 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று
அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று
 தான் கருதுவதாகச் சொன்னார்.

-
இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஆனால்
 தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை
 கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

-
அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை
என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை
 என்றும், அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில்
எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக
 இருந்திருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...), அழிந்துபோயிருக்கலாம்
 என்றும் சொன்னார்.

-
கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "
சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர், தகடூர் அரசர்,
நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில்
சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள்
 இருந்ததாகவும், அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் ->
 சத்திய மகன் -> அதிய மான்] என்றும் சொன்னார்.