Monday, August 26, 2019

பாஸ்டர் அகத்தியன் -ஏசு மரணம் உயிர்த்தல் உண்மையில்லை என முஸ்லிமாக மாறினபின்

ஏசு மரணம் - உயிர்த்தல் உண்மையில்லை என முஸ்லிமாக மாறிய முன்னாள் பாஸ்டர் அகத்தியன்
 மக்கள்  பாவத்துக்காக மரித்தார் என  விசுவாசித்து  தானெ கிறிஸ்துவராய் இருந்தீர்

பாஸ்டர் அகத்தியன் : ஏசுநாதர் ஒன்னும் நேர்ல வந்து எங்கிட்ட பேசலை




பாஸ்டர் அகத்தியன் மாமா மாமி  ஜெபம்  என பைபிள்  கதை வணங்கியாய் உளறலை தட்டிக்கேட்ட  தமிழச்சி



குரான் கதைகளை -  பைபிளை தழுவி புனைந்த  குரானால் என்ன பயன்

பைபிள் கதைகள் முழுவதுமே கட்டுக் கதை, எவ்வித இறை வெளிப்பாடும் இல்லை எனவும், எந்த ஒரு நபி மூலமும் இறைவன் பேசவில்லை என்கிறது இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல்.



முன்னாள் பிராமணன் இந்நாள் போதகரின் அலறல்..
*இந்திய திருச்சபைக்குள் அகத்தியன் என்ற வைரஸ்.*
*இந்தியாவில் வரப்போகும் எழுப்புதலுக்காய் கிறிஸ்தவ உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் எழுப்புதல் அதன் தென் கோடியில் இருந்தே புறப்படும் என்று பல தீர்க்கர்கள் தேவ ஆவியினால் உணர்ந்த உள்ளுணர்வை வெளிபடுத்தியுள்ளனர். தேவனது இத்திட்டம் அவரது ஆதீனத்தில் முன் குறிக்கப்பட்டதாகும். ஆகவேதான் விசுவாசத்தில் பலகீனமான தோமாவின் விசுவாசத்தை பலப்படுத்தி இந்தியாவிற்குள் முதல் மிஷனரியாக ஆண்டவர் அனுப்பினார். அவரோ கொடியவர்களால் கொலை செய்யப்பட்டார்.*
*தமிழகத்தை நோக்கிய பார்வை!*
*இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் மிஷனரிகளை அனுப்பி இறைத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழகத்திற்கு நிகர் ஏதும் இல்லை. இதனால் இந்திய அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் பல வேளையிலும் சல சலப்புகளை ஏற்படுத்துவதை நாம் அறிவோம். அரசியல் கட்சிகளுக்கு தமிழகம் சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. இந்தியாவில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தீவிரப்பார்வை தற்போது தமிழகத்தை நோக்கியே உள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.*
*அமித்ஷாவின் பார்வையில் அகத்தியன்.*
*நடந்து முடிந்த தேர்தலில் மண்ணை கவ்விய BJP தமிழகத்தில் கால் ஊன்ற தீவிரமாய் சிந்தித்த போது அவர்களின் கழுகு பார்வையில் சிக்கினான் சிங்கார வேலன் அகத்தியன். தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அரசின் கணக்கின்படி 8% என்றிருந்தாலும் உண்மையில் 24% கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என்ற தகவல் கிறிஸ்தவ தலைவர்களுக்கு தெரிந்ததோ என்னவோ அமித்ஷாவுக்கு தெரியும். இந்த 24% கிறிஸ்தவர்களின் ஓட்டு எந்த கட்சிக்கு விழுகிறதோ அவர்கள்தான் ஆட்சியமைக்க முடியும். அமித்ஷாவுக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டு ஒருபோதும் நமக்கு கிடைப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். இந்த 24% கிறிஸ்தவர்களும் வாக்களிக்காமல் இருந்தால் மதத்தை முன்னிறுத்தி தமிழகத்தில் கால் ஊன்றிவிடலாம்.*
*நடந்து முடிந்த தேர்தலில் ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்க இயலா நிலை உருவாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதனால் தமிழகம் கொந்தளித்தது. அதுபோல் 24% கிறிஸ்தவர்கள் வாக்குகளையும் தடுத்து நிறுத்த இயலாது. ஆனால் பிரயோஜனமற்ற வாக்குகளாய் மாற்ற இயலும். இந்த யோசனையை நடைமுறைபடுத்த BJP யினர் தேடிய போதுதான் சிக்கினான் பண ஆசை பிடித்த மிமிக்கிரி புகழ் “அகத்தியன்”.*
*அகத்தியன் BJP யின் பணீயாளனா?*
*24% கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் ஜாதி ரீதியாக பிளவுபட வைத்துவிட்டால் மத ரீதியாக களம் இறங்கப்போகும் BJP சாதித்துவிடலாம். எனவே சபைகளுக்குள் ஜாதி பிரிவினையை ஏற்படுத்த விசுவாசிகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்க BJP யினாலும் சாத்தானாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதமே அகத்தியன் என்ற அயோக்கியன். சபைகளுக்குள் ஜாதி வெறியை ஏற்படுத்திவிட்டால் தேர்தல் நேரத்தில் பத்து ஜாதியை சார்ந்த கிறிஸ்தவர்கள் களம் இறங்குவார்கள். அவரவர் ஜாதியினருக்கு வாக்குகள் பிரியும், அமித்ஷாவின் திட்டம் நிறைவேறும்.*
*அமித்ஷா அகத்தியனை சந்தித்தாரா? அமெரிக்க தேர்தலில் ரஷ்யா களம் இறங்கியது என குற்றச்சாட்டு உண்டே! ரஷ்யா நேரடியாக களம் இறங்கியதா? ஜாதி ஒழிப்பு கோஷத்தை பலமாய் முழங்க பெரும் தொகை கை மாறியாச்சு! இனி தமிழக திருச்சபையில் பிளவுகள் சர்வ சாதாரணமாய் நடக்கும். ஏனெனில் பன்னிருவரில் ஒருவனுக்குள் சாத்தான் புகுந்தது போல் அகத்தியன் என்ற அயோக்கியன் மூலம் சாத்தான் புகுந்துள்ளான்.*
*அகத்தியனைக் கண்டு அஞ்சலாமா?*
*திருச்சபைக்கு எதிராக எழும்பினவன் இதுவரை சித்தி பெற்றதில்லை என்பதே சரித்திரம். முழங்காலும் கண்ணீரும் உலகுக்கு கற்றுக்கொடுத்த பாடம் வரலாற்று ஏடுகளில் இருக்கத்தான் செய்கிறது. இந்த அகத்தியன் வைரஸ் போன்றவன். எல்லா மாவட்டங்களிலும் வேதாகம சத்தியத்தை அறியாத இளைஞர்களை மூளை சலவை செய்து ஏற்கனவே வைத்துள்ளான். சபைத்தலைவர்கள் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும். செத்த ஈ தைலக்காரனின் தைலத்தை கெட்டு நாறிப் போக பண்ணும் என்று வேதம் எச்சரிப்பதை மறக்கவோ அலட்சியம் காட்டவோ கூடாது. மறந்தாலோ அலட்சியம் காட்டினாலோ பெரிய விலைகிரயம் செலுத்த வேண்டி வரும். ஒரே ஒரு ஆகானால் இஸ்ரேல் மக்கள் வாழ்வின் துயரத்தை வேதம் பட்டியலிட்டதை திருச்சபை மறக்க இயலுமா?*
*அகத்தியனின் கூற்று நியாயமானதுதானா?*
*பட்டிமன்றம், பிக்பாஸ், நீயா? நானா? போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு அகத்தியனின் வரவு வரப்பிரசாதம் போன்றே அமைந்தது. சிரிப்போம் சிந்திப்போம் என்றான். சிரித்தார்கள் எங்கே சிந்தித்தார்கள்? மூளையை மழுங்க செய்துவிட்டார். சரி விஷயத்திற்கு வருகிறேன். ஜாதி தீண்டாமை அகற்றப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதில் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்கிறது.*
*பவுலின் காலத்தில் கொரிந்து சபையில் விபச்சார பாவம் செய்கிறவர்கள் (1கொரி 5:1) சபையில் இருக்கத்தான் செய்தார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டும்தானே சபையில் இருக்க வேண்டும்? ஆதி சபையில் கிரேக்க கிறிஸ்தவர்களை யூத கிறிஸ்தவர்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே நடத்தினார்கள் (அப் 6:1-7) ஆனால் இவை எல்லாம் தவறு என்றே வேதாகம் போதித்து சீர் செய்ய ஆலோசனையும் வழங்குகிறது. மீண்டும் கூறுகிறேன் ஜாதீ தீண்டாமை அகற்றப்பட வேண்டிய ஆபத்தான ஒன்றூதான்.*
*சரி நண்பரே! எந்த சபையில் தீண்டாமை இருக்கிறது? தீண்டாமையின் பொருள் தெரியுமா? எந்த சபைக்கு வருவோரை….*
*1. பொதுப்பதையில் நடக்க கூடாது என்றும்*
*2. ஒரே இருக்கையில் உட்காரக் கூடாது என்றும்*
*3. திருவிருந்தில் எங்களோடு கலந்துக் கொள்ளக் கூடாது என்றும்*
*4. ஆலய பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும்*
*5. ஆலய விழாக்களில் எல்லோரும் சாப்பிட்ட இலையை இவர்கள்தான் எடுக்க வேண்டும் என்றும்*
*6. மற்ற பிள்ளைகளோடு உங்கள் பிள்ளைகள் ஞாயிறு பள்ளியில் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும்*
- *தீண்டாமை இருக்கிறதா? மிஸ்டர் அகத்தியன் அல்லது அகத்தியனின் அடிவருடிகளாவது சொல்லுங்கள். உங்களால் சொல்ல இயலாது. ஏனென்றால் அகத்தியனுக்குள் சபையை குழப்புகிற ஒருமனதை கெடுக்கின்ற, எழுப்புதலை தடுக்கின்ற பொல்லாத ஆவி பலமாய் இறங்கியிருக்கிறது. பண ஆசை பிடித்தவனாய் தெய்வத் துரோகிகளுக்கு விலைக்கு போய்விட்டான் அந்த காமெடியன். நான் இஸ்லாத்துக்கு போகிறேன் என்றான். அப்படியா? என்று கேட்டதும் நான் விளையாட்டுக்கு அல்லோ சொன்னேன் என மூடனைப் போல் (நீதி 10:23) உளறுகிறான் இந்த யூதாஸ்.*
*தமிழகத்தில் ஜாதிக்கு ஒரு சபை உண்மையா?*
*கிறிஸ்தவமோ, கிறிஸ்தவ போதகர்களோ ஜாதிக்கு ஒரு ஆலயம் என கட்டுவதில்லை. தமிழகத்தில் சில இடங்களில் உண்டு என்பதை மறுப்பதற்க்கு இல்லை. ஏன் இவ்விதம் வந்தது? நய்யாண்டி மன்னன் அகத்தியன் போன்ற தாழ்வு மனப்பான்மைக் கொண்ட மனநோயாளிளாலும் நான் பெரிய ஆளாக அறியப்பட வேண்டும் என்ற பெருமைக் கொண்டவர்களும் தாங்களாக பிரிந்து போய் உருவானதுதான் ஜாதிக்கு ஒரு ஆலயம். (பிரிந்துப் போகிறவன் தன் இச்சையின்படி செய்ய பார்க்கிறான். நீதி 18:1) மற்றபடி இந்தியாவில் பிறந்த நாம் ஏதோ ஜாதியில் பிறந்தோம். கல்வி, வேலை வாய்ப்பு இவைகளுக்கு அதை எழுதுகிறோம். இதுவெல்லாம் பாவமல்ல. ஜாதியின் அடிப்படையில் அலட்சியம் காட்டினால், ஒதுக்கி வைத்தால் வேதாகமப்படி பாவம்தான்.*
*சபை மீது அகத்தியன் கூறும் குற்றச்சாட்டு என்ன?*
*“ஜாதி மாறி திருமணம் செய்ய வேண்டுமாம்” சபைக்குள் அப்போதுதான் தீண்டாமை ஒழியுமாம் ஏன் இந்த எண்ணம் அவருக்குள் வேர் கொண்டது? அதுவும் வாய் கூசாமல் குறிப்பிட்ட ஜாதி ஒன்றின் பெயரை மட்டுமே அடிக்கடி கூறி மிமிக்கிரி காட்டுவார். ஏன் அப்படி?*
*அவர் அடிக்கடி கிண்டல் செய்யும் ஜாதியை சார்ந்த பெண்ணை காதலித்தார். அப்பெண் வீட்டார் கொடுத்த நெருக்கடியால் மனநோய் ஏற்பட்டது. அதன் விளைவால் அவ்விதம் செயல்படுகிறார். ஒரே ஜாதியில் உள்ள ஏழை ஒருவனுக்கே உனது மகளை திருமணம் செய்து கொடுக்க மனமற்ற ஜாதி ஒழிப்பாளர்களே! ஜாதி ஒழிப்பை குறித்து பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? ஆமாம், வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்தேன் என தம்பட்டம் அடிக்கும் நீ செல்வந்தரின் மகளை தட்டிச் சென்றதன் மர்மம் என்ன? ஓ… இதுதான் ஜாதி ஒழிப்பா? அம்மா அப்பாவுக்கு கீழ்படியாமல் தெருவில் நின்றும் ரோமியோக்களாகவும் வலம் வந்து மிஸ்டு கால் கொடுத்தும், கண்ணை சிமிட்டியும் சின்னஞ்சிறுசுகளை ஏமாற்றி வீட்டிற்கு தெரியாமல் ஊரை சுத்தி கொண்டு விட்ட பின்பு வேறு வழி இல்லாமல் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்து திருமணம் செய்த தீண்டாமை ஒழிப்பு காவலர்களே! அடே! நீங்க ரொம்ப பரிசுத்தமுங்க… அப்பப்பா… என்னா போராட்டம்….. என்னா ஆர்ப்பாட்டம்… போங்கடா உங்க தீண்டாமை… அமித்ஷாவின் மடியில் நல்லா படுத்து உறங்கு….*
*இதுவரை நடந்தது என்ன? இனி நடப்பது என்ன?*
*“ஆமை நுழைகிற வீடு உருப்படாது” என புற மார்க்கத்தார் கூறுவர். நாம் அதை எற்றுக்கொள்வதில்லை, ஆனால் இவர் சென்ற சபைகளில் எல்லாம் இதுவரை இல்லாத பிரச்சனைகள் எழும்பி பலர் சபையை விட்டு வெளீயேறியுள்ளனர். அகத்தியன் என்ற மனநோயாளிக்கு சபையில் இடம் கொடுடுத்தால் சபை ஜாதியின் அடிப்படையி உடையும் அல்லது ஒருமனம் சீர் குலையும். போதகர்களே! குரங்கின் கையில் பூ மாலை கொடுப்பார்களா? சபையை சின்னா பின்னமாக்க சாத்தானால் அபிஷேகிக்கப்பட்ட இவரை சபையில் எற்றி சபையை களங்கப்படுத்தாதீர்கள்.*
*இவண்*
*கிறிஸ்துவின் பணியில்*
*சுவி. R. ஜெயகுமார்*
*(09443384653)*


No comments:

Post a Comment