Tuesday, June 2, 2020

திருக்குறளை கீழமை செய்யும் மோசடி முனைவர் மு.தெய்வநாயமும், முனைவர் மோகனராசுவும்

ஆதிபகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதே வள்ளுவம், ஒரு முழுமையான ஆஸ்திக நூல், குறளிற்கு வள்ளுவர் உள்ளம் கொண்டு உரை-ஆய்வு செய்வோர் இந்த உண்மையை மீறி செயல்படுவது வள்ளுவத்தை கீழமை செய்வதே ஆகும்.
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை
1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.
2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.
3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.
4.வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை அடையும் வழியை முழுமையாய் மனதார ஏற்று பொருள் காண வேண்டும்
5.கல்வி கற்பதே இறைவனின் திருவடி பற்றவே, அறிவு என்பதே மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையை விலக்கிட இறை எனும் செம்பொருளும், உலகின் உச்சமான பிறப்பற்ற வீட்டையும் அடைய முயல்வதே, கசடு இன்றி கற்று மெய்யறிவு- மீண்டும் பிறவாதிருக்கும் நெறியை அடையவே
6.திருக்குறள் சங்க இலக்கியங்கள்- பத்துப்பாட்டு &எட்டுத் தொகை நூல்கள், அதன் பின்பு எழுந்த தொல்காப்பியம் அடுத்து இயற்றப்பட்டது, இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறளிற்கு பின்பானது. வள்ளுவர் காலத்திற்கு முந்தைய நூல்களில் உள்ள சொல்லை அதே பொருளில் மட்டுமே வள்ளுவர் கையாண்டு இருப்பார், வேறு மாற்று பொருளில் எழுதுவது இலக்கிய- இலக்கண மரபு அன்று.
7.வள்ளுவரின் நடை அமைவு -மரபு இவற்றை மேல் சொன்னவையோடு ஒத்து அமைக்க வேண்டும்.
8.மேற்கத்திய சுய-நல நுகர்ச்சி தன்மை நம்பிக்கைகளையோ, நீங்கள் முற்போக்கு என நம்புவபை மற்றும் 20ம் நூற்றாண்டின் அறிவியல் அடிப்படை வள்ளுவரின் மீது திணிக்கக் கூடாது



வள்ளுவத்தின் அடிப்ப்டை வேரான் கொள்கைகள் என்ன
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.          குறள் 2:கடவுள் வாழ்த்து

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.        குறள் 10: கடவுள் வாழ்த்து

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.    குறள் 358:மெய்யுணர்தல்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.      குறள் 38:அறன்வலியுறுத்தல்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் 36:அறன்வலியுறுத்தல் 

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   குறள் 31: அறன்வலியுறுத்தல் 
மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று




கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.           குறள் 356: மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   குறள் 351: மெய்யுணர்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.  குறள் 361:  அவாவறுத்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.  குறள் 362: அவாவறுத்தல்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.          குறள் 370:அவாவறுத்தல்

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.     குறள் 331:நிலையாமை

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.       குறள் 338:நிலையாமை

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.      குறள் 339:நிலையாமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.      குறள் 140:  ஒழுக்கமுடைமை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.     குறள் 850:     புல்லறிவாண்மை

தமிழகத்தில்  ஆங்கிலேய கிறிஸ்துவ மிஷநரிகளால் வளர்க்கப்பட்ட தமிழர் அல்லாதோர் எனும் திராவிடர் கழகம், தமிழர் பண்பாட்டின் விரோதிகளாய் குறளிற்கு மாற்று உரை கணடது அவர்களுடை தமிழர் விரோத அடிமைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும், இன்று மிகப்பெரும் தமிழறிஞர்கள் எழுதிய திராவிஷ உரைகள் மக்கள் மனதில் நிற்காது மறைய வெளிப்படையான பொய்களே காரணம். (பாரதிதாசன், குழந்தை, இலக்குவனார், கருணாநிதி, பெருஞ்சித்திரனார், பொற்கோ, கா.அப்பாத்துரை, சுந்தரசண்முகனார், கு.ச.ஆனந்தன், இரா.இளங்குமரன், வ.சுப.மாணிக்கம், இரா.நெடுஞ்செழியன் மேலும் பல)










  
 

 














No comments:

Post a Comment