Wednesday, March 7, 2018

திருக்குறளில் பிறப்பு

எழுபிறப்பு: மனிதன் மீண்டும் பிறந்து எழுந்து வாழ்வதே மிகப்பெறும் துன்பமாகும்




உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.                                  குறள் 339:                                                     மரணம் எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.                                     குறள் 38:                                                            வீணாகும் நாளே இல்லை என எல்லா நாளும் ஒருவன் செய்வான் ஆயின், அது அவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் 
செம்பொருள் காண்பது அறிவு.                             குறள் 358:                                            பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.


கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி.                                                       குறள் 356:                                                                 கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர், திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.


அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.                                         குறள் 361:   
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற   மீண்டும்    மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து ஆசை.

                                                                                                                      வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது                                                         வேண்டாமை வேண்ட வரும்.                                                குறள் 362                    ஒருவன் ஒன்றை விரும்புவதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும்படி இல்லாது  பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது  ஆசை அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.                                                  குறள் 370:                                                                               ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு பிறவா நிலையில் வாழும் இயல்பைக் கொடுக்கும்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.                                     குறள் 357:                                       ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடு" என்பதைக் காணும் முயற்சி பழைய உரையாசிரியர்களிடம் தெரிகிறது. இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,
புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...
என்று மணக்குடவர் விளக்குகிறார்.
அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்:

உலகத்து மக்கட்கு உறுதி பயத்தல் காரணமாகப் பல வகைப்பட்ட சமய நூல்கள் எல்லாவற்றுள்ளும் துணிந்துரைத்த அறம் பொருள் இன்பம் வீடு நான்கினையும் அருங்கினமுகத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் வீடாவது அறஞ்செய்தாரது பயனாதலின் அவ்வீடு பேற்றை அறத்தினுள் அடக்கி அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றார்.


பிற (18)
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8
மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
  ஆகுல நீர பிற - குறள் 4:4
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
  மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
  அணி அல்ல மற்று பிற - குறள் 10:5
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
  செய்யாமை செய்யாமை நன்று - குறள் 30:7
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்
  இல் அதனின் தீய பிற - குறள் 31:2
நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
  பகையும் உளவோ பிற - குறள் 31:4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
  நீங்கின் அதனை பிற - குறள் 50:5
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
  மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
  கண் அல்லது இல்லை பிற - குறள் 71:10
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
  பேணி புணர்பவர் தோள் - குறள் 92:7
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
  எ நலத்து உள்ளதூஉம் அன்று - குறள் 99:2
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
  நல்லவர் நாணு பிற - குறள் 102:1
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
  பண்பு யார்க்கு உரைக்க பிற - குறள் 119:1

 பிற-மன் (1)
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
  தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2

 பிறக்கும் (1)
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
  சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
  
 பிறங்கா (1)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2

  பிறங்கிற்று (1)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3
  
 பிறத்தல் (3)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள் 31:3
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2

  பிறந்த (2)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6

 பிறந்தார் (4)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 பிறந்தார்-கண் (2)
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 பிறந்து (2)
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4

  பிறந்தும் (1)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
  
 பிறப்பில் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 பிறப்பு (11)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு - குறள் 34:9
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
  உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 35:5
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
  நிலையாமை காணப்படும் - குறள் 35:9
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 36:1
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
  பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 36:7
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம் பொருள் காண்பது அறிவு - குறள் 36:8
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
  தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 37:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
  மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 101:2

 பிறப்பும் (2)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7

 பிறர் (9)
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
  இன்னா சொல் நோற்பாரின் பின் - குறள் 16:10
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
  என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசு அற்றார் கோள் - குறள் 65:6
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
  சொல்லா நலத்தது சால்பு - குறள் 99:4
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
  ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
  உறை_பதி என்னும் வழக்கு - குறள் 102:5
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
  அறம் நாண தக்கது உடைத்து - குறள் 102:8
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
  வடு காண வற்று ஆகும் கீழ் - குறள் 108:9
  
 பிறர்-கண் (1)
தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6

 பிறர்க்கு (4)
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
  செய்யாமை மாசு அற்றார் கோள் - குறள் 32:1
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
  பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
  பேதையின் பேதையார் இல் - குறள் 84:4
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
  மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் - குறள் 108:6

  பிறர்க்கும் (1)
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
  இ நீரர் ஆகுதிர் என்று - குறள் 132:9

 பிறர்வாய் (1)
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4

  பிறவாமை (1)
வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது
  வேண்டாமை வேண்ட வரும் - குறள் 37:2

  பிறவி (1)
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடி சேராதார் - குறள் 1:10
  
 பிறவும் (1)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
  பிறவும் தம போல் செயின் - குறள் 12:10

 பிறவோ (1)
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
  கள்ளம் பிறவோ பசப்பு - குறள் 119:4

 பிறற்கு (2)
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
  என்பும் உரியர் பிறற்கு - குறள் 8:2
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
  பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் - குறள் 15:9
  
 பிறன் (13)
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
  பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று - குறள் 5:9
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2
எனை துணையர் ஆயினும் என்னாம் தினை துணையும்
  தேரான் பிறன் இல் புகல் - குறள் 15:4
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
  பெண்மை நயவாதவன் - குறள் 15:7
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
  அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு - குறள் 15:8
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
  பெண்மை நயவாமை நன்று - குறள் 15:10
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
  பேணாது அழுக்கறுப்பான் - குறள் 17:3
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள் 18:8
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
  திறன் தெரிந்து கூறப்படும் - குறள் 19:6
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
  அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு - குறள் 21:4
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
  கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள் 29:2
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
  பிறன் போல நோக்கப்படும் - குறள் 105:7
  
 பிறன்-கண் (1)
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6
    
 பிறனை (1)
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
  தீரா இடும்பை தரும் - குறள் 51:8
  
 பிறிதின் (1)
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
  தம் நோய் போல் போற்றா-கடை - குறள் 32:5
  
 பிறிது (6)
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
  புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
  இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை
  வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள் 65:5
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
  இன்மையா வையாது உலகு - குறள் 85:1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
  இல்லை பெறுவான் தவம் - குறள் 85:2
  
 பிறை (1)
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி

  பின் நீர பேதையார் நட்பு - குறள் 79:2

No comments:

Post a Comment