Friday, September 4, 2015

பட்டணம் அகழாய்வுகள் ஒரு பெரும் மோசடியா?

கேரள வரலாற்றாய்வுக் கழகம், இயக்குனர் பி.ஜெ.செரியன் என்ற தன்னாட்சி அமைப்பு எர்ணாகுளத்திலிருந்து 26 கீமீ தூரத்தில் உள்ள பட்டணம் எனும் இடத்தில் நடத்தி பல பொருட்கள் கிடைத்தாம்.   சங்க கால முசுறி தான் பெரியாறு ஓரமுள்ள பட்டணம் எனும் இடத்தில் கிடைத்துள்ள சில பொருட்கள் கொண்டு கேரள வரலாற்று நிறுவனம் கதை பரப்பி வருகிறது. இதை பல வரலாறு, தொல்பொருள் அகழ்வாய்வு அறிஞர்கள் ஆதாரமின்றி கூறுவது எனக் கண்டித்து வருகின்றனர்.  

கேரளா வரலாற்று ஆசிரியர்கள் பேராசிரியர் M.G.S.நாராயணன், இந்திய வரலாற்று குழுமத்தின் முந்நாள் தலைவர், இந்தியத் தொல்பொருள் துறை முந்நாள் இயக்குனர் திரு. நாகசாமி, போன்றோர் பட்டண அகழ்வாய்வு இடம் சென்று காண, அங்கு ஒரு பெரும் ஊர் போன்றவை ஏதும் கிடைக்கவில்லை, ஆறு குழிகள் மட்டுமே காட்டுகின்றனர், அதில் கிடைத்ததாக  பானை ஓடு, முற்காலச்சேர அரசர் செப்பு நாணயம், மணிகள் Beads)   இரும்புப்பொருள்கள் (Iron objects) தங்கத்தினால் ஆன அணிகலன்கள், கார்னேலியன், படிகம் மற்றும் பெரைல் (பச்சைநிறக்கல்), ஆம்போரா என்பது மதுவைச் சேமித்து வைக்க சாடி, எடுத்துச் செல்லவும் பயன்படும் ஒரு சுடுமண் சாடி, ரோமானியப் பானை - டெர்ரா சிகிலாட்டா, ரோமானியர்களின் கண்ணாடி வகைக் கிண்ணங்களின் துண்டுகள் எனக் காட்டிட, இதே பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளதே - எப்படி இவ்வுரை முசிறி என்பீர் என்பதற்கு முறையான பதில் இல்லை.

இந்தியத் தொல்பொருள் துறை கொடுங்கல்லூர் நீண்ட ஆய்வுகள்
  11ம் நூற்றாண்டின் ஒரு கேரள செப்பேட்டில் கொடுங்கல்லூர்- முயுரிக்கொடு என குறிப்பிட்டுள்ளதானதால் சங்ககாலத் துறைமுகம் முசிறியாக இருக்க வேண்டும் என ஒரு கதை பரவல் இருக்க நீண்ட முழுமையான ஆய்வு தேவை என மீண்டும், பின்பு 1969ல் திரு.கே.வி..ராமன், N.G.உன்னிதன் மற்றும் திரு. சௌந்தரராஜன் தலைமையில்   கொடுங்கல்லூர், சேரமான் பறம்பு, திருவஞ்சிக்களம் , கருப்பதனா, மதிலகம், கீழட்டலி & திருக்குலசேகரபுரம் என கொடுங்கல்லூர் மற்றும் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தியத் தொல்பொருள் துறை சார்பாக நீண்ட ஆய்வுகள் நடந்தன. அதன் முடிவுகள்.



  தொல்லியல் ஆய்வுகள் 
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. 

கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..   
திருவஞ்சிக்களம் இங்கே நடந்த அகழ்வாய்வு கலவையான(Mixed) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை 10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.  
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.  

ழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் 

வரலாற்று ஆதாரமில்லா மத நம்பிக்கை இயேசு என்பவர் வாழ்ந்தார், அவர் சீடர் தோமஸ் என ஒருவர் வாழ்ந்தார் என்பதெல்லம், அவர் கொடுங்கல்லூர் வந்து சுற்றி உள்ள பகுதிகளில் 7.5 சர்ச் கட்டியதாக ஒரு 19ம் நூற்றாண்டு மலையாள ரம்பன் பாட்டு சொல்வதை சிதிகமாக்க இந்த பட்டணம் ஆய்வுகள் என- மிகத் தெளிவாய்  தொல்லியல் அகழ்வாய்வு அறிஞர் ஹரிசங்கர் கட்டுரை இணைப்பு
Pattanam excavations prove the myth of St. Thomas


No comments:

Post a Comment