Tuesday, September 24, 2019

பெண்களை திருமணம் என முஸ்லிமாக மதம் மாற்றி பயங்கரவாதிகளிடம் சேர்க்கப்படும் அவலம்

காணாமல் போய் தீவிரவாத இயக்கங்களில் சேரும் பெண்கள்

  
கேரளத்தில் இருந்து சென்று தீவிரவாத இயக்கங்களில் இணைந்த 21 கிறித்துவப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமை ஏற்று மதம் மாறாமலேயே இளம் பெண்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்ததாக தெரிவித்துள்ள அவர், 21 கிறித்துவப் பெண்களில் 5 பேர் மட்டுமே இஸ்லாமுக்கு மதம் மாறியதாக தெரிவித்துள்ளார்.


டெல்லி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் இருந்து இரண்டு இளம் பெண்கள் கடத்தப்பட்டதாக பெற்றோரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
 
அந்தப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று குரியன் தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த பெண் ஆசியாவின் மேற்குப் பகுதிக்கு போய் விட்டதாகவும், கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண்ணை யாரும் கடத்தவில்லை, அவராகவே சென்றது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெளிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்படி பெண்கள் காணாமல் போவதற்கும் பலாத்காரம் செய்யப்படுவதற்கும் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாகவும் குரியன் குற்றம் சாட்டினார்.




No comments:

Post a Comment