Monday, June 5, 2023

வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன?



வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50: இல்வாழ்க்கை.
நீதிநூல்கள் காட்டும் வழியில் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் அதில் வழிகாட்டி பூமியில் நெறியோடு வாழ்பவன் - அவனோடு வாழும் மக்களால் வானுலகில் வாழும் தேவர்களுக்கு சமமாக போற்றப்படுவான்.

"வைக்கப்படும்" என்ற இதே வழியில் மேலும் மூன்று குறட்பாக்கள் உள்ளது

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல்.
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்;  உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை  மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர்

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை.
இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்பவர்களால் இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

நம் மேலே பார்த்த நான்கு குறட்பாக்களிலும் உடன் வாழும் மக்கள் அவரை செத்தாருள், ஈறை, பேய் எனக் கருதுவர், என்பது போலே வாழ்வாங்கு வாழ்பவர் நிலையும், அவர் தெய்வம் ஆகிவிட்டாதாக் வள்ளுவர் கூறினார் என்பது திருவள்ளுவர் உள்ளத்தின் வழி அல்ல, தவறான (உங்கள்) கருத்து வள்ளுவம் மீது திணிக்கப் படுகிறது.

தமிழ் இலக்கிய மபில் - கடவுள், இறைவன் & தெய்வம் 

மூன்று சொற்களையும் பயன் படுத்துவது உள்ளது. 3 சொற்களுமே  முழு முதற் கடவுளை, தேவர்களே,ஊழ் மற்றும் அரசனைக் குறிக்கவும் வரும். 

ஊழ்வினைக்கு ஏற்றபடி பயனை ஊட்டும் ஒரு பொருள் இருக்க வேண்டும். அப்பொருளே பரம் பொருளாகிய கடவுள். ஊழின்படியே நுகர்ச்சியை வரையறை செய்வதால்தல கடவுளையே  பால் வரை தெய்வம் என்று குறிப்பதுண்டு.
'பால்வரை தெய்வம் வினேயே பூதம்
ஞாயிறு திங்கள்’ (கிளவியாக்கம், 57) தொல்காப்பியச் சூத்திரம் வினையைத் தனியாகவும், பாலாகிய அதனே வரையறை செய்யும் தெய்வத்தை வேறாகவும் கூறுகிறது.

திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் உரை இதை உறுதி செய்யும்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.  குறள் 377: ஊழ்.
மணக்குடவர் உரை: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் ஆறு முறை உள்ளதில் - ஊழ் எனும் பொருளில் 2 முறை 
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்த கூலி தரும் - குறள் 62:9
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் தேவர் எனும் பொருளில் 2 முறை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குறள் 702 
திருக்குறளில் தெய்வம் என்ற சொல் முழு முதற் கடவுள் எனும் பொருளில் 2 முறை
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்                                                                                        என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் மழை - குறள் 6:5
வள்ளுவர் தென்புலத்தார் என முன்னோரையும் தெய்வம் என வேறாக் கூறி உள்ளதே பெரும் ஆதாரம் ஆகும்
திராவிடியார் வழி நாத்தீகரும் தன்னை பயித்தறிவுவாதி எனக் கூறு மோகனராசுவின் கட்டூரைகள்/ நூல்கள்தேவநேயர்-அருளப்பா- தெய்வ நாயகம் மோசடி கிறிஸ்துவ உரையோடு திருக்குறள் ஓலைச் சுவடி தயாரிப்பின் அடிப்படை என்றால்  கிறிஸ்துவ மதவெறி என்றால் மோகனராசு கட்டுரைகள் திராவிடியார் மதவெறி எனலாம்
நவீன திராவிடியார் புலவர்களும் அன்னிய கிறிஸ்துவ மதவெறியர்களும் தமிழர் மெய்யியல் சிதைக்க வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்பதை முனோர் வழிபாடு எனவும்; வள்ளுவம் மனிதன் தெய்வம் ஆக்குகிறது என்போர் வள்ளுவத்தை சிறுமை செய்யும் கயமை செய்பவரே







No comments:

Post a Comment