Friday, November 27, 2020

இறைவன் சிவ பெருமான், - பார்வதி மடியில் குழந்தை முருகர். பல்லவர் காலம்

அம்மாவின் மடியில் அழகு முருகன்.

7 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.
காஞ்சி கைலாசநாதர் கோவில்.
பரமேச்வரனுக்கு குகன் ( முருகன்) பிறந்தது போல்...
பரமேச்வரனுக்கு இராசசிம்மன் பிறந்தான்.
( இராசசிம்மனின் தந்தை பெயர் பரமேஷ்வரன்)

 நன்றி தொல்லியல் அறிஞர் மாரிராஜன் https://www.facebook.com/induven.palus/posts/1622268427943927?comment_id=1622285737942196&reply_comment_id=1622296754607761&__cft__[0]=AZWKSzX9N5ecmOt1FenRSvNigbqcDxdnXgVfoQzUvl3o_O45TvCMhnvo6HBWtglvkKsu-Mo93mII9YsU0iURfGfMnNW5I-XoK5-4jUZBWOFDKR7sp__orZaZUyoX3VSP5BQdamXUp_i1ut9qSeinN3MJ6p5xs9tE1XzwSkee8l5VTdpawOiI42xtfWXmRSa5V8s&__tn__=R]-R

பரிபாடல் : "மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை! காஅய் கடவுட்_சேஎய்! செவ்வேள்! சால்வ! தலைவ!" இப்பாடலில் முருகனின் பிறப்பு பற்றி கூறும்போது ஆறு_தலைகளும் (ஆறுமுகன்) பன்னிரண்டு தோள்களும் கொண்டவன் என்றும், பகலவன் போல ஒளி மிக்கவன் என்றும் தாமரையில் பிறந்தவன் என்றும், அழிக்கும் கடவுள் சிவபெருமானின்_மகன் என்றும் கடுவன்_இளவெயினனார் முருகனின் தந்தை சிவபெருமான் தான் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார்...! அடுத்ததாக அதே பரிபாடலில் உமையுடன் சிவபெருமான் சேர்ந்தே முருகப்பெருமான் அவதரித்தார் என்பதையும் கடுவன் இளவெயினனார் எடுத்துரைக்கிறார்...! "உமையொடு புணர்ந்து, காம வதுவையுள், அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு" இப்படி பரிபாடலில் இரண்டு இடங்களில் முருகனின் பெற்றோர்கள் யார் என்பதை கூறிய நமது முன்னோர்கள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையிலும் அழகாக எடுத்தியம்புகின்றனர்....! "நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழாக் கால்கோள்' என்று ஊக்கி" அதாவது நீல மலர் மொட்டு வரிசையாகக் காற்றில் ஆடுவது போல சன்னல் வழியாகக் கண்ணை நுழைத்து இவனைப் பார்த்த மகளிர் சிவபெருமானின் மகன் முருகனுக்கு இன்று காப்புக்கட்டுத் திருவிழா என்று சொல்லிக்கொண்டு விரைந்தோடி வந்து இவனைப் பார்த்தனர் என்று மருதன்_இளநாகனார் முருகனின் தந்தையாக சிவனை குறிப்பிடுகிறார்....! சிவ_பார்வதியின் மைந்தன்தான் முருகன் என்பதை இந்த திடீர் தமிழர்கள் தூக்கி பிடிக்கும் திருமுருகாற்றுப்படையே அழகாக எடுத்துரைக்கிறது👇👇👇 "ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே" அதோடு திருமுருகாற்றுப்படைக்கு விளக்க உரைகள் அருளிய காலத்தில் எழுதப்பட்ட மூத்த உரைகளிலேயே முருகனை சிவ மைந்தனாகவே சுட்டி உள்ளனர்....! "முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்" சிவனை முழுமுதற் கடவுளாக பாவித்து திருமந்திரம் இயற்றிய திருமூலரோ முருகனே சிவன் என்று ஏந்திப்பாடுகிறார்...! "ஆறு முகத்தில் அதிபதி நானென்றும் கூறு சமயக் குருபரன் நான்னென்றும் தேறினர் தெற்குத் திருவம் பலத்துள்ளே வேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே" என்று ஆசான் திருமூலர் பாடுகிறார். அதாவது சிவனும், முருகனும் வேறுபாடின்றி விளங்கினர் எனத் தெளிவாக எடுத்துக் கூறினார்.....! அதோடு👇 "உந்திக் கமலத்து உதிக்தெழும் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர் அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின் தந்தைக்கு_முன்னே_மகன்_பிறந்தானே. என்றும்....! "எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால் மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்வீரே" என்றும் தந்தைக்கே முன்னவனாக பாவித்து கூடுகிறார் திருமூலர்....! இறுதியாக அருணகிரிநாதரின் இந்த திருப்புகழ் வரிகளின் பொருளையும் படித்த பின்னர் முருகனின் தாய் தந்தை யார்? என்ற கேள்விக்கு பதிலை முருக பக்தர்களிடமே எடுத்தியம்ப வேண்டுகிறேன்....! பழனி_திருப்புகழ்: (திருவாவினன்குடி) "நாத விந்துக லாதீ நமோநம வேத_மந்த்ரசொ_ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி" (அதாவது வேத மந்திரங்களின் சொரூபனாம் முருகன்) "நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர்" (பார்வதி மைந்தனே பாம்பை காலால் அடக்கி மைலை வாகனமாக கொண்டவன் முருகனாம்) "சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ" (அசுரர்களை வதம் செய்து திருவிளையாடல்கள் புரிந்தவனாம்) "தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்" (தெய்வானையை மணவாட்டியாக கொண்டவன் முருகனாம்) "ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத" ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா "ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி" "ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே" (திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமான் முருகனாம்) ஆக எந்த ஒரு ஆரிய புராணங்களுக்கும் செல்லாமல் வெறும் தமிழ் இலக்கியங்களை வைத்து அதுவும் சங்க இலக்கியங்களை முன்னிறுத்தி சிவ பார்வதி மைந்தன் தான் முருகன் என்பதை நிறுவியாச்சு....! -பா இந்துவன்.

No comments:

Post a Comment