Friday, October 18, 2024

சங்க நூல்களிற் கூறப்படும் வைதிக மார்க்கம்

சங்க நூல்களிற் கூறப்படும் வைதிகமார்க்கம்

(1) வேதங்களும் அங்கங்களும் நக்கீரனார்

இயற்றிய திருமுருகாற்றுப்படையில் , இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக்
கொண்ட வேதங்களை நாற்பத்கெட்டு ஆண்டுகளிற் கற்றனர் என்பதை

அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிப வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல . ( 179-182 )

என்ற அடிகளாற் குறிக்கின்றனர். ஒருவன் உபநயனம் செய்விக்கப்பட்ட பின்னரே வேதங்களைக் கற்க உரியன் ஆவான்; உபநயனமே அவனுக்கு இரண்டாம் பிறப்பு; அப்போது, காயத்ரீ தாய், ஆசிரியன் தந்தை; நான்கு வேதங்களைக் கற்றல் வேண்டும்; இல்லையேல் மூன்று, இரண்டு வேதங்களையேனும், இல்லையேல் ஒன்றையேனுங் கற்றல் வேண்டும் ; ஒவ்வொரு வேதத்தையுங் கற்கப் பன்னிரண்டு ஆண்டே காலம் ; எனத் தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன .

( Cf. கௌதமதர் மஸூத்திரம் 1 , 1 , 6 ; 1 , 1 , 9 ; 1,3,51 ; 1 , 3 , 52 )

மூலங்கிழார் புறநானூற்று 166 ஆவது செய்யுளில் வேதங்கள் நான்கு ,
அங்கங்கள் ஆறு , அவை சிவபிரானிடமிருந்து தோன்றின என்பதை ,
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்று புரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுது நூல் . (1-4 )
என்ற அடிகளிற் கூறுகின்றனர் . உலகில் உள்ளனவெல்லாம் கடவுளிடமிருந்தே தோன்றின என்பது ‘ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே என்ற உபநிஷத்து வாக்கியத்திலும் , வேதங்களும் அவரிடமிருந்தே தோன்றின என்பது சாஸ்த்ரயோ நித்வாத் என்ற வ்யாஸஸுத்திரத்திலும் கூறப்பட்டன .

கடுவனிளவெயினனார் பரிபாடல் மூன்றாம் பாடவின்கண் இருபத்தோரு லகமும் , ஆங்குள்ள உயிர்களும் திருமாவிடமிருந்தே தோன்றின என மாயாவாய்மொழியாகிய வேதங் கூறும் என்பதை,

மூவே ழுலகமு முலகினுண் மன்பது
மாயோய் நின்றவயிற் பரந்தவை யுரைத்தே
மாயா வாய்மொழி . ( 9-11 )

என்ற அடிகளிற் கூறினர் . மாயாவாய்மொழி என்றவிடத்து மாயா என்ற அடைமொழி வேதம் நித்தியம் என்பதை அறவித்தலுங் காண்க . அவரே அப்பாடலிற் கடவுளை வேதத்து மறை நீ ( 66 ) என்பதும் , பகவத்கீதையில் ப்ரணவ : ஸர்வ உேவேஷ எனக் கண்ணபிரான் ஏழாவது அத்தியாயத்திற் கூறுவதும் ஒத்திருக்கின்றன . மறை என்பதற்கு உரைகாரர் உபநிடதம் எனப் பொருள் கூறியிருப்பனும் , அதற்குப் பிரணவம் என்ற பொருளுங் கொள்ளலாம் என்பதைப் பகவத்கீதை அறிவிக்கின்றது .

வேதங்களாற் கடவுள் அறியப்படுகிறார் என்பதைக் கீரந்தையார் பரிபாடலில் , நாவ லந்தண ரருமறைப் பொருளே . ( 2 , 57 ) என்றவிடத்து அருமறைப்பொருள் என்பதால் அறிவிக்கின்றனர்

இதனை , பகவத்கீதையில்

வேசை : ச ஸர்வைரஹமேவ வே .: ( 15 , 15 ) என்றதனாற் கண்ணபிரானும் , சாஸ்த்ரயோநித்வாத் வேதாந்தஸுத்திரத்தான் வியாஸரும் கூறுகின்றனர் .

வேதங்கள் எழுதப்படாமல் குருமுகமாகவே கற்பிக்கப்பட்டு வந்தன என்பதைக் குறுந்தொகையில் பாண்டியன் எழுதி நெடுங்கண்ணனார் ,
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ . ( 156) என்றவிடத்து எழுதாக்கற்பு என்ற சொல்லாற் குறித்தனர் .

இக்கருத்தினையே பதிற்றுப்பத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் வழங்கப்படும் கேள்வி என்ற சொல்லும் அறிவிக்கும் :

உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தண ரருங்கல மேற்ப . ( பதிற் . 64 , 4-5 )
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( பதிற் . 70 ; 18-9 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப ( பதிற் . 74 , 1-2 )
கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு . ( புறநா . 361 , 3 - 4 )
அந்தணரே வேதங்களைச் சிறப்பாகக் கற்றுப் பாடினர் என
மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறினர் :
சிறந்த வேதம் விளங்கப் பாடி
அந்தணர் பள்ளியும் ( 468-476 )
அந்தணர் வேதம் பாட (656 ) அவற்றின் கருத்தை விரித்து விளக்கியோரை வாய்மொழிப் புலவர் எனக் குன்றம்பூதனார் பரிபாடல் ஒன்பதாம் பாட்டிற் கூறினர் :

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் ( 12-13 )

வேதங்கள் தர்மத்தைப்பற்றிக் கூறுகின்றன என ஓதலாந்தையார் ஐங்குறுநூற்றில் உணர்த்தினர் . அறம்புரியருமறை ( 387 )

அந்தணரே வேதத்தைக் கற்பித்த காரணம்பற்றி வேதத்தை அந்தணர் மறை ( தொல் . எழுத் 102 ) எனத் தொல்காப்பியனாரும் , அந்தணரருமறை ( பரிபா. 2 , 57 ; 3 , 14 ) எனக் கீரந்தையாரும்

கடுவனிளவெயினனாரும் , அந்தணர் முதுமொழி ( கலித் . 126 , 4) என நல்லந்துவனாரும் , அந்தணர் நூல் ( திருக் . 543 ) எனத் திருவள்ளுவனாரும் கூறினர் .

வேதங்களைக் காக்கும் பிராம்மணர் வசிக்கும் இடத்திற் கிளிகளும் வேதவாக்கியங்களைக் கூறின என உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையிற் கூறினர் : -

வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாள ருறைபதி (300-1)

வேதத்தில் உணர்த்தப்பட்ட வேள்விகளைப் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியும் சோழன் கரிகாற்பெருவளத்தானும் செய் ,ததாகப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறும் :

நற்பனுவ னால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிற்ப்பின் வேள்வி முற்றி ( 15 , 17-20 )

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் ( 224, 8-4 )

பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர்,
பா அல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ ( புறநா . 2 , 18-21 ) என்ற அடிகளிற் குறிப்பாய் உணர்த்துகின்றனர் .

பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார்

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின் ( 560 ) என்ற குறளிற் கூறினர் .

வேதத்தின் கரைகண்ட பார்ப்பனரைச் செல்வர் எனக் திரிகடுகம் 70 - ஆவது செய்யுளில் நல்லாதனாரும் , வேதங்களை அந்தணர் ஆராய்வார் என நான்மணிக்கடிகை 89 - ஆஞ் செய்யுளில் விளம்பிநாகனாரும் , அந்தணர் வேதத்தை அத்தியயனஞ் செய்தல் இன்பத்தைத் தரும் என இனியவை நாற்பது 8 - ஆஞ் செய்யுளில் பூதன் சேந்தனாரும் உரைத்தனர்

( 2 ) வர்ணங்களும் ஆச்ரமங்களும்
தமிழ்நாட்டு மக்கள் நால்வகைப்பட்டனர் எனவும் , அவர் பார்ப்பனர் , அரசர் , வணிகர் , வேளாளர் எனவும் , அவருள் பார்ப்பனர்க்கு அறுதொழில்களும் , அரசர்க்கு ஐந்து தொழில் களும் , ஏனையோர்க்கு அறுதொழில்களும் உள்ளன எனவுந் தொல்காப்பியனார் பொருளதிகாரத்திற் கூறினர் .

நூலே அந்தணர்க் குரிய ( மர . 71 )
படையும் அரசர்க் குரிய ( மர . 72 )
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை ( மர . 78 )
வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி ( மர . 81 )
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபி னரசர் பக்கமும்
இருமூன்று மரபி னேனோர் பக்கமும் ( புறத் . 16 )

ர்ப்பனர்க்குரிய அறுதொழில்கள் ஓதல் வேட்டல் அவற்றைப் பிறர்க்குச் செய்தல் ஈதல் ஏற்றல் என்பன எனப் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 24- ஆவது செய்யுள் 6-8 அடிகளில் உணர்த்தினர் . இவ்வர்ணப்பிரிவுகளையும் அவரவர்க்குரிய தொழில்களையும் கௌதமதர்மஸுத்திரம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன . ஆங்குப் பிராம்பணர்க்கு அறுதொழில்கள் கூறப்பட்டிருப்பினும், ஏற்றலைத் தவிர்த்து ஏனையவற்றை எல்லை கடந்து அவர் செய்யலாம் எனவும் , ஏற்றலை எவ்வளவு குறுக்கலாமோ அவ்வளவு குறுக்கவேண்டும் எனவும்

வால்மீகிராமாயணமும் வ்யாஸமஹாபாரதமுங் கூறும் :
ஸ்வகர்மநிரதா : ஸம்யதா : ச ப்ரதி ரஹே ( பா . 6,13 )
பர்திரஹே ஸங்குசிதா ஆரஹஸ்யா: ( அச்வ . 102 , 81 )
ஓதல் ஓதுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கிப் பிராம்மணரைக் கவிஞர் தத்தம் நூல்களிற் பல்வகைச் சொற்களாற் குறித்தனர் : - நான்மறைமுனிவர் (புறநா . 6 ) , நான்மறை முதல்வர் ( புறநா . 26 ; 93 ) , நான்மறையாளர் ( ஆசரரக் . 53 ) , கேள்வியுயர்ந்தோர் ( புறநா . 221 ) அருமறையந்தணர் ( சிறுபாண் . 204 ) , நான்மறையோர் ( பட்டினப் . 202) . அவற்றுடன் வேட்டல் வேட்டுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கி கேள்வி முற்றிய வேள்வியந்தணர் ( புறநா . 361 ) , வேள்வி முடித்த கேள்வியந்தணர் ( பதிற் 64 ) என்ற சொற்களாற் குறித்தனர் . உண்மையைக் கூறுக ( ஸத்யம் வடி ) என்ற மறைவிதி பிராம்மணர்க்கு நியமவிதியாதல்பற்றி மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் அவரைப் பொய்யறியா நன்மாந்தர் என்கின்றனர் . அவர் தர்மச்செயலிலே ஈடுபடுதல்பற்றி , பதிற்றுப்பத்தில் அறம்புரியந்தணர் ( 24 ) எனக் கூறப்படுகின்றார் . அவர்க்குள்ள அறுதொழில்களை நோக்கி அவரை அறுதொழிலோர் என்கின்றனர் திருவள்ளுவனார் . ஆசறுகாட்சியவர் எனக் குறிஞ்சிப்பாட்டில் 17 - ஆம் அடியில் அவர் கூறப்படுகின்றனர் . அந்தணராய்ப் பிறத்தலே சிறந்தது என நான்மணிக்கடிகை 33 - ஆம் செய்யுளில் விளம்பி நாகனார் கூறினர் .

தோல்வேலை செய்பவன் இழிபிறப்பாளன் இழிசினன் எனப் புறநானூற்றில் 170 , 82 , 287 செய்யுட்களிற் கூறப்பட்டான் . துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்தால் வரும் அந்நூலில் 335 - ஆம் செய்யுளிற் குறிக்கப்பட்டனர் .

ஒவ்வொரு வர்ணத்தாரும் தத்தமக்குரிய நிலையிலிருந்து தவறின் அவர் இழிந்தாராகக் கருதப்பட்டு அவரவர்க்குள்ள உரிமையைப் பெறவில்லை என்பதை
அன்னா ராயினு மிழிந்தோர்க் கில்லை ( மரபு . 85 )

என்ற சூத்திரத்தில் தொல்காப்பியனார் உணர்த்துகின்றார் .

ச்ரமங்கள் அல்லது நிலைகள் நான்கு வகைப்படும் ; அவை பிரும்மசாரிநிலை , ரூஹஸ்தநிலை , வானப்பிரஸ்தநிலை , ஸந்தியாஸிநிலை ஆகும் .

பிராம்பணப்பிரும்மசாரி குடுமி வைத்திருந்தான் எனக் கபிலர் ஐங்குறுநூற்றில்

நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய ( 202 )

என்றவிடத்துக் கூறியுள்ளார் . அவன் ஒன்பது நூலால் ஆக்கிய மூன்று வடங்கொண் - பூணூலை அணிந்து நாற்பத்தெட்டு ஆண்டு

வேதாத்தியயநஞ் செய்தான் என நக்கீரனார் திருமுருகாற்றுப்படையில்

அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ ( 179 & 184 ) என்றவிடத்து உணர்த்தினர் .

அவன் புரசதண்டத்தையும் தாழ்ந்த கமண்டலத்தையும் , விரதவுணவையுங் கொண்டனன் எனக் குறுந்தொகையுள் ஏனாதி நெடுங்கண்ணனார்

செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே ( 156 ) என்றவிடத்து விளம்பினர் .

பிரும்மசாரி வேதங் கற்றவுடன் கிருஹஸ்தாச்ரமத்தை அடைய விவாஹஞ் செய்துகொள்கிறான் . அவ்விவாஹம் எட்டு வகைப்படும் எனவும் , அவை பிராம்மம் , பிராஜாபத்யம் , ஆர்ஷம் , தைவம் , காந்தர்வம் , ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் எனவும் கௌதமதர்மஸூத்ரம் ( 1, 4 , 4-11 ) முதலிய நூல்கள் கூறும் அவற்றுள் முன்னர் நான்கும் பெருந்திணைப்பாற்பட்டன ; காந்தர்வம் களவினை ஒத்தது ; ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் இம்மூன்றுங் கைக்கிளைப்பாற்பட்டன ; எனத் தொல்காப்பியனார் களவியல் 15 , 1 , 14 சூத்திரங்களிற் கூறினர் . விவாஹத்தில் மனைவியுடன் கணவன் அக்னியை வலம் வருதலை கலித்தொகையுள் மருதனிளநாகனார் ,

காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய
மாதர்கொண் மானோக்கின் மடந்தைதன் றுணையாக
ஓதுடை யந்தண னெரிவலஞ் செய்வான்போல் . (69) என்றவிடத்துக் கூறினர் .

ஒருவரை ஒருவர் ஏழடி பின்சென்றால் அவர் அவர்க்கு நண்பர் ஆவர் என்பதைப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக் கண்ணியார் ,

காலி னேழடிப் பின் சென்று . ( 166 )

என்றவிடத்துக் குறித்தனர் . இதே கருத்தினை வேதவ்யாஸரும் மஹாபாரதம் வனபர்வத்தில் ,
ஸதாம் ஸாப்தப்பம் மித்ரம் ஆஹு ; ஸந்த : குலோசிதா: என்றனர் . ( 261 , 37 )

விவாஹத்தில் குழந்தைகளைப் பெற்ற சுமங்கலிகள் மண மகளை ஆசீர்வதித்தலை அகநானூற்றில் நல்லாவூர்கிழார்,

புதல்வர் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழா அ நற்பல வுதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகுக . ( 86 )
என்றவிடத்து உணர்த்தினர் . இக்கருத்தினையே ,

ஸுமங்கலீ : இயம் வய : இமாம் ஸமேத பச்யத
ஸௌஜாடியம் அஸ்யை உத்வா பாயாஸ்தம் விபரேதா ||
என்று வைதிகமந்திரங் கொண்டது .

பெண்ணைத் தானஞ்செய்ய ஒருவரும் இல்லையேல் அவள் தானே தன்னைக் கணவற்குத் தானஞ் செய்து கொள்ளலாம் என்பதைத் தொல்காப்பியனார் ,

கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே. (கற்பு . 2 ) என்ற சூத்திரத்திற் கூறினர் . அக்கருத்தையே மஹாபாரதம் ஆதிபர்வத்தில் வ்யாஸர் ,

ஆத்மனோ வந்யு : ஆத்மைவ உதிராத்மைவ சாத்மன : |
ஆத்மனைவாத்பனோ உாநம் கர்த்துமர்ஹஸி யர்மத : || ( 94,13 )
என்றவிடத்துக் கூறுகின்றனர் .

மூவர்க்குரிய அக்னிஸாக்ஷிகமான கன்யகாதானம் வேளாளராலும் பின்னர்க் கொள்ளப்பட்டதெனத் தொல்காப்பியனார்
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமு முண்டே ( கற்பு . 3 ) என்ற சூத்திரத்திற் குறித்தனர் .

ருது காலத்திற் கணவன் மனைவியிடமிருந்து பிரிதல் தகாது என்பதைத் தொல்காப்பியனார்

பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுரையா ரென்மனார் புலவர் ( கற்பு . 46 ) என்றவிடத்துக் கூறினர் . இவ்வாறே திரிகடுகம் 17 - ஆம் செய்யுளுங் கூறும் .

வேதங்களைக் காக்கும் பிராம்மணர் வசிக்கும் இடத்திற் கிளிகளும் வேத வாக்கியங்களைக் கூறின என உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையிற் கூறினர் : -
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாள ருறைபதி (300-1)

வேதத்தில் உணர்த்தப்பட்ட வேள்விகளைப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும் சோழன் கரிகாற்பெருவளத்தானும் செய் ,ததாகப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறும் :
நற்பனுவ னால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிற்ப்பின் வேள்வி முற்றி ( 15 , 17-20 )
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் ( 224, 8-4 )

பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் ,

பா அல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ ( புறநா . 2 , 18-21 ) என்ற அடிகளிற் குறிப்பாய் உணர்த்துகின்றனர் .

பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார்
ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின் ( 560 ) என்ற குறளிற் கூறினர் .

வேதத்தின் கரைகண்ட பார்ப்பனரைச் செல்வர் எனக் திரிகடுகம் 70 - ஆவது செய்யுளில் நல்லாதனாரும் , வேதங்களை அந்தணர் ஆராய்வார் என நான்மணிக்கடிகை 89 - ஆஞ் செய்யுளில் விளம்பிநாகனாரும் , அந்தணர் வேதத்தை அத்தியயனஞ்

செய்தல் இன்பத்தைத் தரும் என இனியவை நாற்பது 8 - ஆஞ்
செய்யுளில் பூதன் சேந்தனாரும் உரைத்தனர் .

( 2 ) வர்ணங்களும் ஆச்ரமங்களும்
தமிழ்நாட்டு மக்கள் நால்வகைப்பட்டனர் எனவும் , அவர் பார்ப்பனர் , அரசர் , வணிகர் , வேளாளர் எனவும் , அவருள் பார்ப்பனர்க்கு அறுதொழில்களும் ,
அரசர்க்கு ஐந்து தொழில்களும் , ஏனையோர்க்கு அறுதொழில்களும் உள்ளன எனவுந் தொல்காப்பியனார் பொருளதிகாரத்திற் கூறினர் .
...
நூலே அந்தணர்க் குரிய ( மர . 71 )
படையும் அரசர்க் குரிய ( மர . 72 )
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை ( மர . 78 )
வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி ( மர . 81 )
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபி னரசர் பக்கமும்
இருமூன்று மரபி னேனோர் பக்கமும் ( புறத் . 16 )

பார்ப்பனர்க்குரிய அறுதொழில்கள் ஓதல் வேட்டல் அவற்றைப் பிறர்க்குச் செய்தல் ஈதல் ஏற்றல் என்பன எனப் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 24- ஆவது செய்யுள் 6-8 அடிகளில் உணர்த்தினர் . இவ்வர்ணப்பிரிவுகளையும் அவரவர்க்குரிய தொழில்களையும் கௌதமதர்மஸுத்திரம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன . ஆங்குப் பிராம்பணர்க்கு அறுதொழில்கள் கூறப்பட்டிருப்பினும் , எற்றலைத் தவிர்த்து ஏனைய வற்றை எல்லை கடந்து அவர் செய்யலாம் எனவும் , ஏற்றலை எவ்வளவு குறுக்கலாமோ அவ்வளவு குறுக்கவேண்டும் எனவும் வால்மீகிராமாயணமும் வ்யாஸமஹாபாரதமுங் கூறும் :

ஸ்வகர்மநிரதா : ஸம்யதா : ச ப்ரதி ரஹே ( பா . 6,13 )
பர்திரஹே ஸங்குசிதா ஆரஹஸ்யா: ( அச்வ . 102 , 81 )

ஓதல் ஓதுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கிப் பிராம்மணரைக் கவிஞர் தத்தம் நூல்களிற் பல்வகைச் சொற்களாற் குறித்தனர் : - நான்மறைமுனிவர் (புறநா . 6 ) , நான்மறை முதல்வர் ( புறநா . 26 ; 93 ) , நான்மறையாளர் ( ஆசரரக் . 53 ) , கேள்வி யுயர்ந்தோர் ( புறநா . 221 ) அருமறையந்தணர் ( சிறுபாண் . 204 ) , நான்மறையோர் ( பட்டினப் . 202) . அவற்றுடன் வேட்டல் வேட்டுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கி கேள்வி முற்றிய வேள்வியந்தணர் ( புறநா . 361 ) , வேள்வி முடித்த கேள்வி யந்தணர் ( பதிற் 64 ) என்ற சொற்களாற் குறித்தனர் . உண்மை யைக் கூறுக ( ஸத்யம் வடி ) என்ற மறைவிதி பிராம்மணர்க்கு நியமவிதியாதல்பற்றி மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் அவரைப் பொய்யறியா நன்மாந்தர் என்கின்றனர் . அவர் தர்மச்செயலிலே ஈடுபடுதல்பற்றி , பதிற்றுப்பத்தில்

அறம்புரி யந்தணர் ( 24 ) எனக் கூறப்படுகின்றார் . அவர்க்குள்ள அறுதொழில்களை நோக்கி அவரை அறுதொழிலோர் என்கின்றனர்

திருவள்ளுவனார் . ஆசறுகாட்சியவர் எனக் குறிஞ்சிப்பாட்டில் 17 - ஆம் அடியில் அவர் கூறப்படுகின்றனர் . அந்தணராய்ப் பிறத்தலே சிறந்தது என நான்மணிக்கடிகை 33 - ஆம் செய்யுளில் விளம்பி நாகனார் கூறினர் .

தோல்வேலை செய்பவன் இழிபிறப்பாளன் இழிசினன் எனப் புறநானூற்றில் 170 , 82 , 287 செய்யுட்களிற் கூறப்

பட்டான் . துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்தால் வரும் அந்நூலில் 335 - ஆம் செய்யுளிற் குறிக்கப்பட்டனர் .

ஒவ்வொரு வர்ணத்தாரும் தத்தமக்குரிய நிலையிலிருந்து தவறின் அவர் இழிந்தாராகக் கருதப்பட்டு அவரவர்க்குள்ள உரிமையைப் பெறவில்லை என்பதை

அன்னா ராயினு மிழிந்தோர்க் கில்லை ( மரபு . 85 ) என்ற சூத்திரத்தில் தொல்காப்பியனார் உணர்த்துகின்றார் .

ச்ரமங்கள் அல்லது நிலைகள் நான்கு வகைப்படும் ; அவை பிரும்மசாரிநிலை , ரூஹஸ்தநிலை , வானப்பிரஸ்தநிலை , ஸந்தியாஸிநிலை ஆகும் .

பிராம்பணப்பிரும்மசாரி குடுமி வைத்திருந்தான் எனக் கபிலர் ஐங்குறுநூற்றில் நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய ( 202 ) என்றவிடத்துக் கூறியுள்ளார் . அவன் ஒன்பது நூலால் ஆக்கிய மூன்று வடங்கொண் - பூணூலை அணிந்து நாற்பத்தெட்டு ஆண்டு

வேதாத்தியயநஞ் செய்தான் என நக்கீரனார் திருமுருகாற்றுப்படையில்

அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ ( 179 & 184 ) என்றவிடத்து உணர்த்தினர் . அவன் புரசதண்டத்தையும் தாழ்ந்த கமண்டலத்தையும் , விரதவுணவையுங் கொண்டனன்எனக் குறுந்தொகையுள் ஏனாதி நெடுங்கண்ணனார்

செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே ( 156 ) என்றவிடத்து விளம்பினர் .

பிரும்மசாரி வேதங் கற்றவுடன் கிருஹஸ்தாச்ரமத்தை அடைய விவாஹஞ் செய்துகொள்கிறான் . அவ்விவாஹம் எட்டு வகைப்படும் எனவும் , அவை பிராம்மம் , பிராஜாபத்யம் , ஆர்ஷம், தைவம் , காந்தர்வம் , ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் எனவும் கௌதமதர்மஸூத்ரம் ( 1, 4 , 4-11 ) முதலிய நூல்கள் கூறும் அவற்றுள் முன்னர் நான்கும் பெருந்திணைப்பாற்பட்டன ; காந்தர்வம் களவினை ஒத்தது ; ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் இம்மூன்றுங் கைக்கிளைப்பாற்பட்டன ; எனத் தொல்காப்பியனார் களவியல் 15 , 1 , 14 சூத்திரங்களிற் கூறினர் . விவாஹத்தில் மனைவியுடன் கணவன் அக்னியை வலம் வருதலை கலித்தொகையுள் மருதனிளநாகனார் ,

காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய
மாதர்கொண் மானோக்கின் மடந்தைதன் றுணையாக
ஓதுடை யந்தண னெரிவலஞ் செய்வான்போல் . (69) என்றவிடத்துக் கூறினர் .

ஒருவரை ஒருவர் ஏழடி பின்சென்றால் அவர் அவர்க்கு நண்பர் ஆவர் என்பதைப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக் கண்ணியார் ,

காலி னேழடிப் பின் சென்று . ( 166 )
என்றவிடத்துக் குறித்தனர் . இதே கருத்தினை வேதவ்யாஸரும்
மஹாபாரதம் வனபர்வத்தில் ,
ஸதாம் ஸாப்தப்பம் மித்ரம் ஆஹு ; ஸந்த : குலோசிதா: என்றனர்
( 261 , 37 )

விவாஹத்தில் குழந்தைகளைப் பெற்ற சுமங்கலிகள் மணமகளை ஆசீர்வதித்தலை அகநானூற்றில் நல்லாவூர்கிழார் ,
புதல்வர் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழா அ நற்பல வுதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகுக . ( 86 ) என்றவிடத்து உணர்த்தினர் . இக்கருத்தினையே ,

ஸுமங்கலீ : இயம் வய : இமாம் ஸமேத பச்யத
ஸௌஜாடியம் அஸ்யை உத்வா பாயாஸ்தம் விபரேதா || என்று வைதிகமந்திரங் கொண்டது .

பெண்ணைத் தானஞ்செய்ய ஒருவரும் இல்லையேல் அவள் தானே தன்னைக் கணவற்குத் தானஞ் செய்து கொள்ளலாம் என்பதைத் தொல்காப்பியனார் ,

கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே. (கற்பு . 2 ) என்ற சூத்திரத்திற் கூறினர் . அக்கருத்தையே மஹாபாரதம் ஆதிபர்வத்தில் வ்யாஸர் ,

ஆத்மனோ வந்யு : ஆத்மைவ உதிராத்மைவ சாத்மன : |
ஆத்மனைவாத்பனோ உாநம் கர்த்துமர்ஹஸி யர்மத : || ( 94,13 ) என்றவிடத்துக் கூறுகின்றனர் .

மூவர்க்குரிய அக்னிஸாக்ஷிகமான கன்யகாதானம் வேளாளராலும் பின்னர்க் கொள்ளப்பட்டதெனத் தொல்காப்பியனார்

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமு முண்டே ( கற்பு . 3 ) என்ற சூத்திரத்திற் குறித்தனர் .

ருது காலத்திற் கணவன் மனைவியிடமிருந்து பிரிதல் தகாது என்பதைத் தொல்காப்பியனார்

பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுரையா ரென்மனார் புலவர் ( கற்பு . 46 )
என்றவிடத்துக் கூறினர் . இவ்வாறே திரிகடுகம் 17 - ஆம் செய்யுளுங் கூறும் .

8 தௌ

இக்கருத்தினையே கௌதமர் தனது தர்மஸுத்ரத்தில்

உபேயாத் ( 1-5-1 ) என்ற சூத்திரத்திற் கூறினர் .

அதனையே மனுதர்மசாஸ்திரமும்
இது : ஸ்வாவாவிக : ஸ்த்ரீணாம் ராத்ரய :
ஷோஃச ஸ்ம்ருதா :
சதுர்விரிதரை : ஸார்யம் அஹோஜி :
ஸவிமர்ஹிதை : || ( 113 , 46 ) என்றவிடத்துக் கூறும் .

கல்வியைக் குறித்து கணவன் மனைவியை விட்டுப் பிரிய நேரிடின் , அப்பிரிவு மூன்று ஆண்டுகட்கு மேற்படக்கூடாது எனத் தொல்காப்பியனார் கற்பியல் 47 - ஆம் சூத்திரத்தில் உணர்த்தியுள்ளார் . தேவதைகள் குறித்தும் , போர் குறித்தும், கணவன் பிரிதலும் உண்டு என்பதை அகத்திணையியலிற் கூறினர் .

கிருஹஸ்தர்க்கு மூன்று கடன்கள் உள என்பதை நல்லாத னார் திரிகடுகம் 34 - ஆஞ் செய்யுளிற் குறித்தனர் . அவை ருஷி கடனும் , தேவகடனும் , பிதிர் கடனும் ஆகும். ருஷிகடன் வேதாத்தியயநத்தாலும் , தேவகடன் தேவர்களைக் குறித்து

ஹோமஞ்செய்தலாலும் , பிதிர்கடன் ஆண்மகவைப் பெறுதலாலும் நீங்கும் என யஜுர்வேதத்துள்ள தைத்திரீயஸம்ஹிதை

ஜாயாநோ வை ப்ராம்ஹணோ த்ரிஷி : கணவா
ஜாயதே , ப்ரம்ஹசர்யேண ஷிய ) . , யஜ்ஞேரு
தேவேல .) : , ப்ரஜயா பி.துவ ) : ( 6 , 3 , 10 ) என்ற தொடர்கள் கூறுகின்றன .

தேவகடன் புறநானூற்று இரண்டாஞ் செய்யுளில்
அந்தி யந்தண ர்ருங்கட னிறுக்கும் என்றவிடத்தும் , நெய்தற்கலியில்

அந்தி யந்தண ரெதிர்கொள வயர்ந்து
செந்தீச் செவ்வழ றொடங்க ( 2 ) என்றவிடத்தும் , பெரும்பாணாற்றுப்படையில்

கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசைஇ ( 315-6 ) என்றவிடத்துங் குறிக்கப்பட்டது .

பிதிர்கடன் புறநானூற்று ஒன்பதாஞ் செய்யுளில்

தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
என்றவிடத்துக் குறிக்கப்பட்டது . பிதிரர் தென்புறத்தில் வாழ்
கின்றனர் என்பதைத் தைத்திரீயஸம்ஹிதை

உ V ணா பிதர : ( 4 , 1 , 1 ) என்றவிடத்துக் கூறுகின்றது .
உ V ணஸ்யாம் சி சுவே ஸர்வே பித்ருமணா: ஸ்யிதா : ( அது. 238 , 44 ) என மஹாபாரதமுங் கூறும் .

வானப்பிரஸ்தர் நீண்ட சடையோடு உடலசையாது குன்றுகளில் தவஞ் செய்தனர் என நற்றிணையிற் சல்லியங்குமரனார்

நீடிய சடையோ டாடா மேனிக்
குன்றுறை தவசியர் ( 141 ) என்ற அடிகளிற் கூறினர் .

அவர் சடைவளர்த்தனர் என்பதை 280 - ஆம் குறளில் நீட்டலும் என்ற சொல்லாற் குறித்து , அருளுடைமை புலான் மறுத்தல் முதலிய குணங்களோடு வாய்ந்திருந்தனர் என்பதைக் கூறினர் திருவள்ளுவனார் .

ஸந்நியாஸத்தைத் தொல்காப்பியனார்

அருளொடு புணர்ந்த வகற்சி யானும் ( புறத். 17 ) என்றவிடத்துக் குறிக்கின்றனர் . ஸந்நியாஸிகள் காஷாயவஸ்தி ரத்தையும் முக்கோலையுங் கொண்டனர் என முல்லைப்பாட்டில் நப்பூதனார்

கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப ( 37-8) என்றவிடத்துக் கூறினர் .

ஸந்நியாஸிகளை இல்வாழ்வான் போற்றவேண்டும் எனத் திருக்குறள்
இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை ( திருக் . 41 ) என்றவிடத்தும் , மஹாபாரதம்

ஏவம் மார்ஹஸ்யம் ஆச்ரித்ய வர்த்தந்தே
இதராச்ரமா : ( சாந் . 269 , 6 ) என்றவிடத்துங் கூறும் .

எந்நிலையிலிருப்பவனும் ஜீவன்முக்தியை அடையலாம். அதனைத் தொல்காப்பியனர் ,

காம நீத்த பாலி னானும் ( புறத் . 17 ) என்ற அடியிலும் , திருவள்ளுவனார் ,

ஆரா வியற்கை பவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும் ( 370) என்ற குறளிலும் , முடத்தாமக்கண்ணியார் ,
தவஞ்செய் மாக்க டம்முடம் பிடா அது
அதன்பய மெய்திய வளவை ( 91 , 2)

என்ற பொருநராற்றுப்படையடிகளிலும் , மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் ,

சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச் சீரெய்திய வொழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி
உயர் நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா வன்புடை நெஞ்சின்
பெரியோர் மேள யினிதி னுறையும்
குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும் ( 463-474 ) என்றவிடத்தும் கூறியுள்ளனர் .

அக்கருத்தினையே கடோபநிஷத் ,
யா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய
ஹர ச்ரிதா : |
அய மர்த்யோ அம்ருதோ வைத்யத்ர ப்ரஹ் ஸமச்நுதே || ( 6 , 14 )
என்றவிடத்தும் ,

ப்ருஹதாரண்ய கோபநிஷத்
யோ அகாம் : ப்ரஹ்மைவ ஸந் ப்ரஹ்மாப் நோதி ( 4 , 46 )
என்றவிடத்தும் , மஹாபாரதம்

யோ ந காமயதே கிஞ்சிந்த கிஞ்சி உவமயதே !
இஹ லோகஸ்ய ஏவைஷ ப்ரஹ்மஸூயாய கல்பதே ||( அச்வமே . 47 ; 8 )
என்றவிடத்துங் கூறும் .

( 3 ) அக்னிஹோத்ரமும் யாகங்களும்

அந்தணர் காலை மாலை ஆகிய ஸந்திகளில் கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்னி என்ற முத்தீக்களில் தேவர் கடனைத் தீர்க்க அக்னிஹோத்ரஞ் செய்தனர் என்பது புறநானூறு , பட்டினப்பாலை , கலித்தொகை , குறிஞ்சிப்பாட்டு முதலிய நூல்களிற் கூறப்பட்டது .

அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே . ( புறநா . 2 )

நின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே . ( புறநா . 122 , 3 )

அமரர்ப் பேணிய மாவுதி யருத்தியும் .( புறநா . 99 ; பட்டினப் . 200 )

அந்தி யந்தண ரெதிர்கொள வயர்ந்து
செந்தீச் செவ்வழ றொடங்க . ( கலித் . 119 )
அந்தி யந்தண ரயர . ( குறிஞ்சிப் . 225 )

வேள்விகளால் தேவர்களும் கடவுள் முதலியோரும் இன்புறுத்தப்பட்டனர் எனப் பல்லிடங்களிற் பதிற்றுப்பத்து கூறும் :

வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( 70 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப . ( 74 )
உருகெழு மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி . ( 21 )

அந்தணர் மந்திரவிதிப்படி அவற்றைச் செய்தனர் எனத் திருமுருகாற்றுப்படை , கலித்தொகை , சிறுபஞ்சமூலம் இவை கூறும் :

ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே . ( திருமு . 94-6)
கேள்வி யந்தணர் கடவும்
வேள்வி யாவியின் . (கலித் . 36 )
வேட்பவன் பார்ப்பான் . (சிறுபஞ்.)
வேள்விகளில் தூணங்கள் இருந்தன என்பதும் , அவை முற்றிலும் கயிறுபோல் திரித்த துணிகளால் மூடப்பட்டன என்பதும் பெரும்பாணாற்றுப்படை , அகநானூறு இவை கூறும் :

கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வித் தூணத் தசை இ . (பெரும் . 315-6)

வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல . ( அகநா . 220 )

வேள்வித்தூணில் துணி கயிறுபோல் திரிக்கப்பட்டு முழுதும் கட்டப் பட்டிருப்பினும் , உத்காதாவின் இடுப்பு அத்தூணைத் தொடுவதற்காக ஆங்குச் சிறிது அது நீக்கப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது .. தூணைத் தொட்டுக்கொண்டு உத்காதா ஸாம

கானம் செய்ய வேண்டும் என்பது சுருதிவாக்யமாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் என்பது ஸ்மிருதிவாக்கிய மாகையாலும் , முற்றிலும் துணி சுற்றப்படவேண்டும் நியதி இல்லை என்பது பிற்காலத்தாரது கொள்கை . பூர்வமீமாம்ஸையில் ஸ்மிருத்ய திகரணத்திற் காணலாம் . ஆமை வேள்விக் குண்டத்தின் கீழே குழியில் வைக்கப்படுகின்றதை அகநானூற்று 361 - ஆம் செய்யுளிற் கூறினர் எயினந்தை மகனார் இளங்கீரனார் :

பெரியோ ரார
அழலெழு தித்திய மடுத்த யாமை .
(தித்தியம் = வேள்விக்குண்டம் )
சயனத்தில் ஆமையை வேள்விக்குண்டத்தின்கீழ் வைத்தலை

யஜ்ஜீவந்தங் கூர்மம் உபடியாதி ( 5 , 2 , 45 ) என்னுமிடத்து தைத்திரீயஸம்ஹிதை கூறும் .

வேள்வித்தீயை மின்னலிற்கு உவமானமாகக் கார்நாற் பதிற் கூறினர் மதுரைக்கண்ணங்கூத்தனார் .
என
இதனைப்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீபோல
எச்சாரு மின்னு மழை . ( 7 )

சோழநாட்டிற் பூஞ்சாற்றூரில் இருந்த பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயனைப்பற்றி ஆவூர் மூலங்கிழாரும் , பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியைப்பற்றி நெட்டிமையாரும் , சோழவரசர்களுள் கரிகாற்பெருவளத்தானைப் பற்றிக் கருங்குழலாதனாரும் , இராஜசூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப்பற்றி ஒளவையாரும் , நலங்கிள்ளியைப்பற்றிக் கோவூர் கிழாரும் , சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிக் கபிலரும் , அவரவர் இயற்றிய வேள்விகளைப்பற்றிச் சிறப்பித்துக் கூறியிருத்தல் கவனித்தற்கு உரியது.

கௌணியன் : சிவபிரானிடம் தோன்றித் தருமத்தை அறிவித்ததும் நான்கு பகுதியையும் ஆறு அங்கங்களையும் உடையதும் ஆன வேதத்தைக் கற்று , அவைதிகசமயங்களைக் கண்டித்து , ஏழு பாகயஞ்ஞங்களையும் ஏழு ஹவிர்யஞ்ஞங்களையும்

ஸோ மஸம்ஸ்தையையும் குறைவின்றிச் செய்து விளங்கிய குலத்திற் கௌணியன் பிறந்தனன் . தானும் மனமொத்த மனைவி யுடன் வேள்விகளில் நீர் நாணுமாறு நெய்யை வழங்கி , எண்ணிக்கையற்ற வேள்விகளைச் செய்து விருந்தினரை உபசரித்தான் . ச்செய்தி புறநானூற்றில் 166 - ஆவது செய்யுளில் உள்ளது .

பாகயஞ்ஞங்கள் , ஹவிர்யஞ்ஞங்கள் , ஸோமஸம்ஸ்தைகள் இவற்றைப்பற்றி விரிவாய் , கௌதமதர் மஸூத்ரம் முதலிய நூல்கள் கூறும் .

முதுகுடுமிப்பெருவழுதி : நாலு வேதங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் கூறியவாறுச் சிறப்பாக அவிப்பொருள்களைச் சேகரித்து , அவற்றை மிகுந்த நெய்யுடன் கலந்து தேவதைகட்கு அளிக்குமாறு பல வேள்விகளை முதுகுடுமிப்பெருவழுதி இயற்றினன் . தனது புகழைப் பரப்பிப் பல்லிடங்களில் வெற்றித் தூண்களை நாட்டினன் . இச்செய்தி புறநானூற்றில் 15 - ஆம் செய்யுளிற் கூறப்பட்டது. ஆங்கு வேள்விகளை முடித்தபின்னர் யூபம் நட்டான் எனக் கூறப்பட்டிருத்தலான் , யூபம் என்பது வெற்றித் தூணைக் குறிக்குமே அன்றி வேள்வித்தூணைக் குறிக்காது .

அச்சொல்லை அப்பொருளில் காளிதாஸன் ரகுவம்சத்தில் ஆறாம் ஸர்க்கத்தில் கார்த்தவீரியார்ஜுனனைப்பற்றி வர்ணிக்குமிடத்து , அஷ்டாதசத்வீபநிவாதயூப்: என்ற தொடரில் வழங்கியுள்ளார் .

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறும்பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் ( 759-863 )
என்ற அடிகளை நோக்கின் பெருவழுதி வேள்வியனைத்தையும் நிஷ்காமமாகச் செய்து ஆத்மோபதேசம் பெறுவதற்கு இன்றி யமையாததான சித்தசுத்தியைப் பெற்றான் எனக் கூறின் மிகையாகாது . அவர் இறுதியிற் பிறப்பிறப்பின்றி சேவடியை அடைகின்றனர் என்பதைப் பகவத்கீதை ,

கர்மஜம் புத்தியுக்தா ஹி வலம் த்யக்த்வா மநீஷிண :
ஜந்மவந்யவிநிர்முக்தா: படிம் மச் மந்த்யநாமயம் | ( 2,51 ) என்றவிடத்துக் கூறும்
கரிகாற்பெருவளத்தான் : தர்மத்தை ஐயமற உணர்ந்த அந்தணரைக்கொண்ட ஸபையில் வேள்விமுறைகளை நன்கு அறிந்த ருத்விக்குக்கள் செய்ய வேண்டியவற்றை நன்கு செய்து காட்ட , கற்புடை மனைவியருடன் வேள்விச்சாலையில் இருந்து கருடசயனம் செய்து புகழைப் பெற்றான் பெருவளத்தான் . இச்செய்தி புறநானூற்றில் 224 ஆம் செய்யுளில் உள்ளது .

பெருநற்கிள்ளி இராஜஸுயயாகம் செய்தான் என்பதும் , நலங்கிள்ளி பல வேள்விகளைச் செய்தான் என்பதும் புறநானூற்றில் 363 , 400 - ஆம் செய்யுட்களிலிருந்து அறியப்படுகின்றன .

செல்வக்கடுங்கோவாழியாதன் : வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களைக் கொண்டு வேள்வியில் கடவுளையும் தேவர்களையும் இன்புறச்செய்து , அந்தணர்கட்கு ஏராளமாய் அருங்கலங்களை இவ்வரசன் வழங்கினன் எனப் பதிற்றுப்பத்து 64 , 70 செய்யுட்கள் கூறும் .

பாண்டியர்கள் பாண்டவவமிசத்தினர் எனக் கருதப்பட்ட னர் . ஆகலினன்றே அவர் கவுரியர் , பஞ்சவர் என்ற சொற்களால் அகநானூறு புறநானூறு முதலிய நூல்களிற் குறிக்கப் படுகின்றனர் .
தவிரா வீகைக் கவுரியர் மருக ( புறநா . 3 )
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி ( அகநா . 70)
தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை ( அகநா. 342)
செருமாண் பஞ்சவ ரேறே ( புறநா . 58 )
கவுரியர் என்பது கௌரவ்ய : என்பதன் தற்பவம் சொற்குக் குருவமிசத்திற் பிறந்தவர் என்பது பொருள் . அக்காரணம்பற்றி அச்சொல் துரியோதனன் முதலியோரைக்குறிக்க வழங்கப்பட்ட துபோல் தர்மபுத்திரர் முதலியோரையுங் குறிக்க வழங்கப்பட்டது . மஹாபாரதம் சல்யபர்வத்தில் தர்மபுத்திரன்
குருபுங்கவன் எனவும் குரூணாம் வ்ருஷ : எனவுங் குறிக்கப் படுகின்றனன் .

தஸ்மிந் மஹேஷ்வாஸயரே விசஸ்தே
ஸங்க்ராமமயயெ குருபுங்மவேந | ( 16 , 85 )
ஜவாத மத்ராபதிம் மஹாத்மா
முகம் ச லேலே வ்ருஷ: குரூணாம் | ( 16 , 11 )

பஞ்சவர் என்பது பஞ்ச என்ற தற்சமத்திற்கு அர் விகுதி கூட்டி வந்தது . அப்பாண்டவர் ஐவர் எனவும் புறநானூற்று இரண்டாஞ் செய்யுளிற் கூறப்படுகின்றனர் .

சோழர் சிபியின் வமிசத்தினர் எனப் புறநானூற்று 39 ,43 - ஆம் செய்யுட்கள் கூறும் .
புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக . ( 39 )

கொடுஞ் சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக . ( 43 )

இந்திரன் பருந்துவடிவமாகவும் அக்னி புறாவடிவமாகவும் சிபியைக் சோதிக்க வந்தனர் எனவும் , அவன் துலாக் கோலில் ஏறினன் எனவும் மகாபாரதம் வனபர்வம் 132 , 133 அத்யாயங்கள் கூறும். இதனாற் பாண்டியரும் , சோழரும் க்ஷத்திரியர்கள் அறியக்கிடக்கின்றது . அதனாலேயே அவர் வேள்விகளில் ஈடுபட்டனர் எனக் கூறல் தகும் . என

( 4 ) இம்மையும் மறுமையும்

இவ்வுலகிலுள்ள பிராணிகள் எல்லாம் உயிரையும் உடலை

யுங் கொண்டன . உடலைச் சரீரம் என்பர் .




சரீரம் ஸ்தூல

சரீரம் ஸூக்ஷ்மசரீரம் என இருவகைப்படும் . உயிர் முக்தியை

அடையும் வரை , அதற்கு ஒரே ஸுக்ஷ்மசரீரமே உண்டு . ஸ்தூல

சரீரமோ, உயிர் இருக்கும் உலகத்திற்குத் தக்கவாறு மாறுபடும் .
ஆகலின் இவ்வுலகில் இருக்கும் எல்லாப்பிராணிகளின் உயிரும் ஒரு காலத்தில் ஸ்தூலசரீரத்தை விட்டு நீங்க நேரிடும் . ஆகலின்அவ்விரண்டற்கும் உள்ள ஸம்பந்தம் நிலைத்திராது . இக்கருத்தினை ,
வீயாது
உடம்பொடு நின்ற வுயரு மில்லை . ( புறநா . 363 , 8 )
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி ( பொருநர் . 176 ; பெரும்பாண். 466 ) முதலிய அடிகள் கூறும் .
ஒருகாலத்தில் உயிர் உடலைவிட்டு நீங்கும் என்பதை ,
யாக்கை
இன்னுயிர் கழிவ தாயினும் . ( அகநா . 52 , 13) என்ற அடிகள் உணர்த்தும் .

உயிரை உடலைவிட்டு நீங்குமாறு செய்பவனைக் கூற்றம், கூற்று என்ற சொற்களாற் குறித்தனர் :

உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன . ( மலைபடு . 209 )
உயிருண்ணுங் கூற்றுப் போன்றன . ( புறநா . 4 )
அவன் கடுஞ்சினத்தன் என்றும் , பக்ஷபாதமில்லாதவன் என்றும் ,
கால னனைய கடுஞ்சின முன்ப . ( பதிற் . 39 , 8)
திருந்துகோன் ஞமன் . ( பரிபா . 5 , 61 ) என்ற அடிகள் அறிவிக்கும் .

தீயாரைப் பாசத்தாற் கட்டி அவன் கொண்டுபோவான்எனவும் , அவனுடைய ஆயுதம் கணிச்சி எனவும்

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் . ( புறநா . 195) என்ற அடிகள் விளக்குகின்றன .

உடலை விட்டு நீங்கிய உயிர் மறுமைக்குச் செல்ல ஆண்மகன் ஈமச்சடங்கில் பிண்டம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும் . ஆண்மகன் இல்லையேல் மனைவியே பிண்டம் அளிப்பாள் :

நின் வெய்யோன் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென . ( புறநா . 222)

பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் . ( புறநா . 234 )

நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழ் பிண்டம் . ( புறநா . 246 )

இக்கருத்தையே ,
இச்அந்தி பிதர : புத்ராந் ஸ்வார்த்தறேதோர்வடோத்கச |
இஹ லோகாத் பரே லோகே தாரயிஷ்யந்தி யே ஹிதா : ||    (த்ரோண , 174 , 54 )
என்றவிடத்து மஹாபாரதம் கூறும் .

ஒருவர் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அனுபவிப்பர் என்பதை ,

இம்மைச் செய்தது மறுமைக் காம் . ( புறநா . 134 )
நல்லத னலனுந் தீயதன் றீமையும்
இல்லை யென்போர்க் கினனா கிலியர் . (புறநா . 29 )
தன்னொடு செல்வது வேண்டி னறஞ்செய்க . ( நான்மணி . 15 )  என்ற அடிகள் கூறுகின்றன .

நல்வினைப்பயனை ஸ்வர்க்கத்தில் அவர் அனுபவிப்பர் என்பதை ,

ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீ இயர்
உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தனன் . ( புறநா . 174 )

அறம்பெரி தாற்றி யதன் பயன் கொண்மார்
சிறந்தோ ருலகம் படருநர் போல . ( பரிபா . 19 )

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு . ( திருக் . 86 )  என்ற அடிகள் உணர்த்தும் .

தீவினைப்பயனை நரகத்தில் அனுபவிப்பர் என்பது ,

அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது . ( புறநா . 5 )
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிறையத்துச் செலீ இயரோ . ( குறுந் . 292 ) என்றவிடத்து உணர்த்தப் பட்டது .

இந்திரியங்களை அடக்காமை நரகத்திற் செலுத்திவிடும் என ,  அடங்காமை ஆரிரு ளுய்த்து விடும் . ( திருக் . 130 )   என்னுமிடத்து திருவள்ளுவர் கூறினர் .

பயனைக் கருதாது ஒருவன் நல்வினைகளைச் செய்தல் சிறந்தது என்பதை

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் .
அறவிலை வணிக னாயலன் . ( புறநா . 134 )

தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே . ( புறநா . 182 )
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாள . ( அகநா . 54 )
பிறர்க்கென வாழ்திநீ . ( பதிற் . 38)
என்ற அடிகள் குறிக்கின்றன . இக்கருத்தினையே

தேந் க்யக்தேந் கஞ்ஜீயா :  என ஈசாவாஸ்யோபநிஷத்தும் ,
கர்மண்யே வாயிகாரஸ்தே மா மலேஷ கடிாசந என பகவத்கீதையுங் கூறும்  (2, 47)
கணவன் இறப்பின் , மனைவி உடன்கட்டையேறுதலும் உண்டு என்பது ,
பெண்டிரும்
பாச - கு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே . ( புறநா . 62 )

எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே . ( புறநா . 246 )என்ற அடிகளாற் குறிக்கப்பட்டது .

அவள் கைம்மைவிரதம் பூணுதலும் உண்டு என்பது ,
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் .(புறநா . 234 )  என்ற விடத்து உணர்த்தப்பட்டது .

போரில் இறந்த வீரர் ஸ்வர்க்கம் எய்தினர் என்பது

நீள்கழன் மறவர் செல்வழிச் செல்க . ( புறநா . 93 )  என்றவிடத்து குறிக்கப்பட்டது . இக்கருத்தினை ,

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்மம் . ( 2 , 37 )  என்ற பகவத்கீதையடி கூறும் .


ஸ்வர்க்கம் என்ற பொருளிற் பல சொற்கள் வழங்கப்பட்டுள்ளன : - தேவருலகம் ( புறநா . 228) , உயர்நிலையுலகம் ( புறநா . 287 ; பதிற் . 52, 54 ; மதுரைக் . 197 ) , மேலோருலகம் (புறநா . 229 ) , நாகம் ( புறநா . 367 ) , வச்சிரத்தடக்கை  நெடியோன் கோயில் ( புறநா . 241 ), பெரும்பெயருலகம் (( குறுந் . 83 ), புத்தேணாடு ( குறுந் . 101 ; முதுமொழி . 71 ) ,துறக்கம் ( அகநா . 143 , 233 ) , சிறந்தோருலகம் ( பரிபா . 19 ) ,

இமையோர்தேம் ( தொல் . பொருளியல் 52). இமையார் என்பது செய்யுளில் இமையோர் என மாற்றப்பட்டது எனக் கொள்ளல் தகும் . ஸ்வர்க்கத்திற்குத் தலைவன் இந்திரன் . அவன் புரந்தரன் ( பரிபா . 5 , 56) , வேள்விமுதல்வன் ( பரிபா . 5 , 31 ) , ஐயிறு நூற்றுமெய்ந்நயனத்தவன் ( பரிபா . 9 , 8 ; திருமுருகு . 155 ) முதலிய சொற்களாற் குறிக்கப்படுகின்றான் . அவன் நூறு வேள்விகளைச் செய்தனன் என நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து என்ற திருமுருகாற்றுப்படையடிகள் கூறும் .

இவனது குற்றத்தால் அகலிகை கவுதமரது சாபத்தால் கல்லுரு ஆனாள் என்பதை ,

இந்திரன் பூசை யிவளக லிகையிவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
வொன்றிய படியிது ( பரிபா . 19 , 50-52 )
என்ற அடிகள் உணர்த்துகின்றன . அகலிகை கல்லுருவானாள்

வால்மீகிராமாயணத்திற் கூறாவிடினும் , காளிதாஸன்  ரகுவம்சத்தில்

மளதமவய : சிலாமயீ ( 11 , 34 )  என்றவிடத்துக் கூறியுள்ளார் .

என அவன் தபஸ்விகளை அவமதித்தலாற் றுன்பம் எய்தினன் என்பது

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி ( திருக் . 25 )

என்ற குறளால் அறிவிக்கப்படுகின்றது . ஈண்டுக் குறிக்கப்பட்ட தபஸ்விகள் கௌதமர் , அகஸ்தியர் , ச்யவனர் , ஸம்வர்த்தர் ஆவர் என்பது வால்மீகிராமாயணம் வ்யாஸமஹாபாரதம் இவ்விரு நூல்களிலிருந்து அறியக்கிடக்கின்றது .


ஸ்வர்க்கத்திலுள்ளோர் தேவர் எனப்படுவர் . அவர்க்கு அமிழ்தமும் , பூமியில் மக்கள் இடும் அவியும் உணவு ஆகும் என்பதை ,

இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் ( புறநா . 182 )
அவியுணவினோர் புறங்காப்ப ( புறநா . 377 )
செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து (திருக் . 413 )   முதலிய அடிகளால் அறியப்படுகின்றது . 
அவர் அமரர்  ( பட்டினப் . 184 ; கலித் . 2 , 2 ) , புத்தேளிர் ( கலித் . 82 , 4) , 
உயர்ந்தோர் ( பதிஷ் . 74, 89 ), இமையார் ( அகநா . 136 ) முதலிய சொற்களாற் குறிக்கப்படுகின்றனர் .

முப்பத்து மூன்று தேவர்கள் எனப்பட்டவர் பன்னிரண்டு ஆதித்தியர்களும் , இரண்டு அச்வினர்களும் , எட்டு வஸுக்களும் பதினொன்று ருத்திரர்களும் ஆவர் என்பதை ஆசிரியனல்லந்துவனார் பரிபாடல் எட்டாம் பாடலிற் குறிக்கின்றனர் . இவரெல்லாம் மும்மூர்த்திகளுடனும் முருகனைக் காண வந்தனர் என்பதை ஆங்கே கூறுகின்றனர் .

தேவர்கட்குப் பகைவர் அவுணர் . அவருள் முப்புரத்தோனும் சூரபன்மாவுஞ் சிறந்தவர் ஆவர் . முப்புரத்தோனைச் சிவபிரான் அழித்ததாக , 

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல ( புறநா . 59 )

ஆதி யந்தண னறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை ஆரெயி லோரழ லம்பின் முளிய ( பரிபா . 5 ) -

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினை இ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கான் முகம்போல ( கலித் . பாலை . 1 )  என்ற அடிகளில் நன்கு வர்ணிக்கப்பட்டுளது .

சிவபிரான் ஒரே அம்பினால் மூவெயிலையும் அழித்தனர் என்பதை ,
ஏகவாணேந த தேவஸ் த்ரிபுரம் பரமேச்வர : |
நிஜவ்நே ஸாஸுரமணம் தேவதேவோ மஹேச்வர : || ( ம . பா . கர்ண . 27 , )
என்ற செய்யுள் கூறுகின்றது .

அப்போது பூமி தேராகவும் , வேதங்கள் குதிரையாகவும் ,  பிரும்மா தேர்ப்பாகனாகவும் இருந்தனர் என்பதை 
ஏவம் ருரஸ்ய க்தேவாந் ஸாரயம் து பிதாமஹ :  ( ம.பா. கர்ண . 27 , 42 )

தயைவ வேகாஸ் ஹயா ரயா யரா ஸசைலா
சாயோ மஹாத்மந: ( ம . பா . கர்ண . 27 , 8 )
என்ற அடிகள் கூறுகின்றன .

தேவர்கள் பிரும்மாவை முன்னிட்டுச் சிவபிரானிடஞ் சென்று முப்புரத்தை அழிக்கவேண்டினர் என்பதை,

44 சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்
தே சேவாஸ்தேக வாக்யேக சோதா:
ப்ரணத : ஸ்யிதா : |
ஷஹ்மாணம் அக்ரத : க்ருத்வா சரண்யம் சரணாமதா : ( ம.பா. கர்ண . 24 )

ஸத்கிருத்ய சங்கரம் ப்ராஹ ஸரஹ்மா
லோகபிதாமஹ: |
இமாந்யஸுர சர்மாணி லோகாம்ஸ்த்ரீந்
ஆக்ரமந்தி ஹி ( ம . பா . கர்ண . 25 )
என்ற அடிகள் அறிவிக்கின்றன .

சூரபன்மாவை முருகக்கடவுள் அழித்ததாக

அணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ்
சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு ( பதிற் . 11 )
சூர் நவை முருகன் ( புறநா . 23 )
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல் ( திருமுருகு . 46 )
சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற்
சினமிகு முருகன் ( அகநா . 59 )
சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே ( பரிபா . 14 )  முதலிய அடிகள் கூறும் .

அவுணரது கூட்டம் சூரியனைக் கவர்ந்து சென்ற காரணத்தால் உலகெல்லாம் இருள , அவனை அவரிடமிருந்து திருமால் திரும்பிக்கொண்டுவந்ததாக ,

அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவர நீரக் கடுந்திறல்
அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்கு ( புறநா . 174 )  என்ற அடிகளிற் கூறப்பட்டது .

அவுணரையும் கடவுளே படைத்தனர் என
அவுணர்க்கு முதல்வனீ ( பரிபா . 3)  என்ற அடி கூறும் .

தேவர்களுள் பித்ருதேவர்கள் என்பவர் ஒரு வகையினர் . அவர் தெற்கு திசையில் உள்ளனர் . அவர்க்கு மக்கள் செய்ய வேண்டிய கடன் ஆண்மகவைப் பிறப்பித்தல் ஆகும் .

கருத்துக்கள்

தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் ( புறநா . 9 )   என்றவிடத்து அமைந்து கிடக்கின்றன .

தென்புலத்தாரைப் போற்றுதல் தேவர்களைப் போற்றுதலைக் காட்டிலும் சிறந்தது என்பதை அறிவிக்கவே தென்புலத்தார் தெய்வம் .... என்ற குறளில் ஆசிரியர் திருவள்ளுவனர் தென்புலத்தாரை முன்னர்ப் படித்தனர் . அவர் கோபமற்றவர் என்றும் , பரமசுத்தர் என்றும் , எப்போதும் பிரும்மசாரிகள் என்றும் 
அக்ரோயநா : சௌசபரா ; ஸததம் ப்ரம்ஹசாரிண : |
என்ற மநுஸ்மிருதியடி கூறும் .

வருணன் நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் எனத் தொல்காப்பியங் கூறும் : --
வருணன் மேய பெருமண லுலகம் ( தொல் . அகத் . 5 )
 
தேவர்களுள் மன்மதன் ஒருவன் என்றும் அவனுடைய மனைவி இரதி என்பதும் ,
இரதி காம னிவளிவ னெனாஅ ( பரிபா . 19 , 48 ) என்ற அடியாற் குறிக்கப்பட்டன .
மஹாப்பிரளயத்தில் ஜீவர்களனைவரும் கடவுளிடத்தில் லயிக்கின்றனர் என்பது
தொல்லூழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்
பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்
போல் ( கலித். 129 )

என்றவி .-- த்துக் கூறப்பட்டது . இக்கருத்தினை மஹாபாரதம்
நாராயணாஜ் ஜமத் ஸர்வம் ஸர் மகாலே ப்ரஜாயதே
தஸ்மிந்நேவ புநஸ்தச்ச ப்ரளயே ஸம்ப்ரலீயதே ||
ம.பா. அநுசா . 86 , 8 )       என்ற செய்யுளிற் கூறும் .

(5 ) தெய்வங்கள்
பிரும்மா , திருமால் , சிவபிரான் , முருகன் இவர்களைப்பற்றி மிகுதியாகவும் , பலராமன் , கொற்றவை இவர்களைப்பற்றி ஆங்காங்கும் நூல்கள் வர்ணிக்கின்றன .

பிரும்மா
உலகம் தோன்றத் தொடங்கும்போது பிரும்மா முதலில் தோன்றினர் என்பதும் , அவர் தோன்றிய இடம் திருமாலின் கொப்பூழிற் றோன்றிய தாமரைப் பொகுட்டு என்பதும் ,அவர்க்கு முகம் நான்கு என்பதும் , அவரது வாஹனம் அன்னம் என்பதும் பின்னருள்ள அடிகள் கூறுகின்றன :

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் ( கலித். 2 )
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டின் (பெரும்பாண் . 402-4)
தாமரை பயந்த தாவி லூழி
நான்முக வொருவன் (திருமுருகு . 164-5 )
மலர்மிசை முதல்வன் (பரிபா . 8 , 3)
முகநான்குடையானை ( இனியவை , 1 )
அன வூர்தியை ( இன்னா. 1 )

திருமால் உலகத்தைப் படைக்கவேண்டும் என நினைத்த போதே அவர் கொப்பூழிலிருந்து தாமரை தோன்ற , அதனில் நான் முகத்தைக் கொண்ட பிரும்மா தோன்றினர் என மஹாபாரதம் ,

ப்ரயாந ஸமகாலந்து ப்ரஜாஹேதோ : ஸநாதந : |
யாதமாத்ரே து உறவாந் நாஷ்டாம் படிம : ஸமுத்யித : 1
தத : சதுர்முவோ ஸ்ரஹ்மா நாவிபடிமா ;
விநிஸ்ஸ்ருத : || ( ம . பா . வந . 273 )  என்ற அடிகளிற் கூறுகின்றது .

திருமால்

திருமால் முல்லைநிலக்கடவுள் : -
மாயோன் மேய காடுறை யுலகமும் ( தொல் . அகத் . 5 ).

அவர் கைகளிற் சங்கையுஞ் சக்கரத்தையுங்கொண்டு மார்பில் இலக்குமியைத் தாங்கினர் :

நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் (முல்லைப் . 1-3 )

திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் ( பெரும்பாண் . 29-30 )
புகழ்நேமித் திருமறு மார்பன் ( கலித் . 104 )

வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல ( கலித். 105 )
மாயவன் மார்பிற் றிருப்போல் ( கலித் . 145 )
சக்கரத்தனை ( இனனா . 1 )

அவர் நீலநிறத்தவர் : --
அஞ்சன வுருவன் ( புறநா . 174 )
முந்நீர் வண்ணன் ( பெரும்பாண் . 30 )
பொருகடல் வண்ணன் ( கார் . 1 )
இருள் பரந் தாழியான் றன்னிறம் போல்  ( திணைமாலை . 150 , 96 )

தாமரைக்கண்ணர் :
தாமரை புரையுங் கண்ணன் ( பரிபா , 15 , 49 )

பீதாம்பரத்தைத் தரித்தவர் :
மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற்று
அணிவனப் பமைந்த பூந்துகில் (பரிபா . 13 , 1-2 )

மார்பில் மாலையையும் திருத்துழாயினையும் அணிந்தவர் -
மண்மிசை யவிழ்த்துழாய் மலர்தரு செல்வத்து( பரிபா . 8 )
துழாய் மாலை யானை ( இனியவை . 1 )

கருடக்கொடியோன் :
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் ( புறநா . 56 , 6 )
புள்ளுப்பொறி புனைகொடி ( பரிபா . 13 , 4 )
புண்மிசைக் கொடியோனும் ( பரிபா . 82 )
செவ்வா யுவணத் துயர்கொடி யோயே ( பரிபா . 2,60 )

அவரது ஜன்மநட்சத்திரம் திருவோணம் :
மாயோன் மேய வோண நன்னாள் (மதுரைக் . 591 )

அவரே மூன்று ரூபங்களைக் கொண்ட பரம்பொருள் :
மூவுரு வாகிய தலைபிரி யொருவனை ( பரிபா . 13 , 37 )
பலிசக்கரவர்த்தியின் வலியைக் குறைக்க மூவுலகினையுங் காலால் அளந்தவர் :

ஞாலமூன் றடித்தாய் முதல்வர்க்கு ( கலித் . 124 , 1 )
பிரஹ்லாதனுக்காக அவனுடைய தந்தையைக் கொன்றனர் :

பிருங்க லாதன் பலபல பிணிபட
வலந்துழி , மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்
தவர்ந்த புகழோன் முதை யாகலி
னிகழ்வோன் , இகழா நெஞ்சின னாகநீ யிகழா
நன்றா நட்டவவ னன்மார்பு முயங்கி
வெடிபடா வொடிதூட் டடியொடு
தடிதடி பலபட வகிர்வாய்த்த வுகிரினை( பரிபா . 4 , 12-21 )

கேசி என்ற அஸுரனைக் கொன்றனர் :
வாய்பகுத் திட்டுப் புடைத்தஞான் றீனன்கொல்
மாயோன் ( கலித் . 103 , 53-55 )

அவுணர் சூர்யனைக் கொண்டு ஒளிக்கத் திருமால் அதனை மீட்டனர் .
அணங்குடை யவுணர் சணங்கொண் டொளித்தென( புறநா . 174 , 1-5 )

இச்செய்தி மஹாபாரதத்திற் சிறிது வேறுபட்டிருக்கின் றது . பாற்கடலிலிருந்து வந்த அமிழ்தத்தைத் திருமால் தேவர் களுக்கு அளிக்கும்போது அக்கூட்டத்தில் ராகு இருந்ததாகச் சூரியன் அவர்க்கு அறிவித்தான் . அதற்கு வெகுண்டு ராகு சூரியனை வருத்த , அதனை ஏனைய தேவர்கள் கவனிக்கவில்லை . அவர்பால் சூரியன் வெகுண்டு அஸ்தகிரியில் மறைய , தேவர்கள் இருளால் துன்புற்று , பிரும்மாவிடம் அறிவித்தனர் . அவர் சூரியனுக்குத் தீங்கு வாராதபடி தேவர்களை விட்டு அருணனைப் படைக்கச்செய்து சூரியனுக்கு அவனைத் தேரோட்டி ஆக்கினர் .அப்போது சூரியனது கோபம் தணிந்தது .

சந்தார்க்காவாம் யா ராஹுர் ஆவாதோ
ஹ்யம்ருதம் பிளந் |
வைராநுவந்யம் க்ருதவாந் சந்ராஜித்யௌ
தகாநவ |
வாய மாநம் ரஹேணாய ஹ்யாத்யம்
மந்யுராவிசத் |
தத : பிதாமஹாஜாத ஸர்வம் சக்ரே தசாருண : |
உ உதய்பசைவ ஸவிதா ஹ்யருணேந ஸமாவ்ருத : ||( ம.பா. ஆதி . 24, 6-19 )

திருமாலைப்பற்றி முன்னர்க் கூறப்பட்ட செய்திகள்

சங்வசக்ர மகாபாணி : பீதவாஸா ஜகத்பதி :( ராமா . 1 , 15 , 16 )
சங்வ சக்ர மகாபாணே வாரகாநிலயாச்யுத
மோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாமதாம் !!
( ம . பா . ஸபா . )
முதலிய செய்யுட்களில் இராமாயணம் , மஹாபாரதம் இவற்றுள் நன்கு உணர்த்தப்பட்டன .

மூன்று உலகங்களையும் மூன்று அடிகளால் அவர் அளந்தார்  என்பதை மாத்திரம் ருக்வேதமே கூறும் .

யஸ்யோருக்ஷ த்ரிஷு விக்ரமணேஷு அயக்ஷியந்தி
ஓவநாநி விச்வா ( 1 , 155 , 2 )

சிவபிரான்
சிவபிரானும் திருமாலும் இருபெருந்தெய்வம் என அகநானூறு
வெருவரு கடுந்திற லிருபெருந் தெய்வத்து ( 360 , 6 )  என்றவிடத்துக் கூறுகின்றது .
சிவபிரான் சடையிற் கங்கையைத் தரிக்கின்றனர் .
ஈர்ஞ்சடை யந்தணன் ( கலித் . 38 , 1 )
பிறங்குநீர் சடைக்கரந்தான் ( கலித் . 150 , 9 )
 
நெற்றியிற் பிறைச்சந்திரனைக் கொண்டார் .
பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி ( புறநா . 91 , 5 )
கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல் ( கலித் . 103 , 15 )

மூன்று கண்களை உடையவர் :
முக்கட் செல்வர் ( புறநா . 6 , 18 )
முக்கண்ணான் ( கலித் . 2 , 4 )
கண்மூன்றுடையான் ( இனியவை . 1 )
முக்கட்பகவன் ( இன்னா . 1 )

கையில் மழுவை ஏந்தியுள்ளார்.
மழுவாணெடியோன் ( அகநா . 220 , 5 )
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் ( புறநா . 56 , 2 )

விருஷபத்தை வாகனமாகக் கொண்டார் :
புங்கவமூர்வோன் ( பரிபா . 8 , 2 )

நஞ்சினை உண்டு நீலகண்டர் ஆனார் :
காரி யுண்டிக் கடவுள் ( மலைமடு . 83 )
நீல மணிமிடற் றொருவன் ( புறநா . 91 , 6 )
மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன்( கலித் . 142 )
மறுமிடற் றண்ணற்கு ( பரிபா . 8 , 127 ; 9 , 7 )

இக்கருத்துக்களெல்லாம் 
திரோவாவயிதும் ஸுலிம் சக்ரே த்ரிநயனஸ் தயா |
( ராமா . 1 , 43 , 7 )
தோஷயஸ்வ மஹாதேவம் நீலகண்ம் உமாபதிம் |
( உத்தரரா. 16 , 32 )
நமோ தேவாதி உேவாய நம : சசிகலாயர |
நமோ ஹூதபதே சம்லோ ஜஹ் நுகந்யாம்ஸ் - சேவா
ஒறவந் ஸர்வஸுதேச சூலபாணே வ்ருஷபய்வஜ |
ஒமவந் உேவஉேவேச த்ரிநேத்ர வ்ருஷபயவஜ ||( ம . பா . அநுசா . 207 )

யஸ்மாத்து நீலதா கண் ேநீலகண்ஸ் தத : ஸ் 2 J த : |  ( ம . பா . ஆதி . 18 , 26 )
முதலிய ராமாயணமஹா பாரதவாக்கியங்களிற் காணப்படுகின்றன .

அவர் திருவாதிரையிற் பிறந்தவர் என் பதை 
அரும்பெற லா திரை யான் . ( 150 , 20 )    என்ற கலித்தொகையடி கூறும் .

அவர் ஆலமரத்தடியில் வீற்றிருப்பார் :
நான்மறை முது நூல் முக்கட் செல்வன்
ஆல முற்றங் கவின்பெறத் தைஇ . ( அகநா . 181 )
ஆல்கெழு கடவுட் புதல்வ . ( திருமுருகு . 256 ) *
 
உமையை மனைவியாகக் கொண்டனர் :

வெள்ளேறு
வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும் .( திருமுருகு . 151-4 )

பைங்கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்த காம வதுவையுள் ( பரிபா . 5 , 27-8 )

ஒட்டிய காத லுமையா ளொருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானுங்
கொண்டானே . ( பழமொழி , 124 )

அவர் ஐம்பெரும்பூதத்தைப் படைத்தனர் :
நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் . ( மதுரைக் . 453-5 )

உரிய காலத்தில் உலகத்தை அழிப்பார் :




காய்கடவுள் ( பரிபா . 5 , 13 )

கொலைவன் ( கலித் . 103 , 15 )

அவர் கைலாயத்தில் உமாதேவியோடு உல்லாஸமாக இருக்கும்போது , அவரைத் துன்புறுத்த எண்ணி , இராவணன் அம்மலையைத் தூக்க, அப்போது அவர் கால்விரலால் அதனை அழுத்த , அவன் துன்புற்றுக் கதறினன் என்பதை ,

இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தணன்
உமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக
ஐயிரு தலையி னரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லா துழப்பவன் போல . ( 38 )             என்ற கலித்தொகையடிகள் கூறுகின்றன .

இக்கருத்தினையே உத்தரராமாயணத்திலுள்ள பின்வருஞ் செய்யுட்கள் கூறும் :

தத : பார்ச்வம் உபாமம்ய வைஸ்யா நுசரோஸ்ரவீத்
நிவர்த்தஸ்வ உசரீவ சைலே க்ரீமதி சங்கர : ||
தமிமம் சைலம் உந்மூலங் கரோமி தவ மோபதே |
....
இத்யுக்த்வா ததோ ராம ஹுஜாந்நிக்ஷிப்ய பர்வதே ||
தோலயாமாஸ தம் சீவ்ரம் ஸ சைலஸ் ஸமகம்பத |
சசால பார்வதீ சாபி தகாச்லிஷ்டா மஹேச்வரம் |
ததோ ராம மஹாதேவோ தேவாநாம் ப்ரவரோ ஹர : |
பா உங்க ஷ்நே தம் சைலம் பீலயாமாஸ லீலயா
பிதாஸ்து ததஸ்தஸ்ய சைலஸ்யாயோமதா ஜுஜா : !
ரக்ஷஸா தேந ரோஷாச்ச ஜூஜாநாம் பீலநாத் தகா |
முக்தோ விராவ : ஸஹஸா த்ரைலோக்யம் யோ  கம்பிதம் ( 16 , 9-29 )

மூன்று கோட்டைகளை உடைய அவுணன் தேவர்களைத் துன்புறுத்தினன் . அவர்கள் பிரும்மாவை முன்னிட்டுச் சிவபிரானிடம் தமது துன்பத்தை அறிவித்தனர் . அவர் அவனைக் கொல்வதாக ஒத்துக்கொண்டனர் . அப்போது பூமி ரதமாக வும் , வேதங்கள் குதிரைகளாகவும் , பிரும்மா தேரோட்டியாக வும் , விஷ்ணு அம்பாகவும் , மேருமலை வில்லாகவும் , வாஸுகி நாண் ஆகவும் ஆய் அவர்க்கு உதவி புரிந்தனர் . சிவபிரான் ஒரே அம்பால் அம்மூன்று கோட்டைகளையும் அழித்து , அவுணனைத் தோல்வியுறச் செய்து தேவர்களை வெற்றிபெறச் செய்தனர் . இச்செய்தி பரிபாடல் , புறநானூறு , கலித்தொகை இவற்றிற் காணப்படுகின்றது : ---

ஆதி யந்தண னறிந்து பரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை
ஆரெயி லோரழ லம்பின் முளிய
மாதிர மழலவெய் தமரர் வேள்வி ( பரிபா . 5 , 22-6 )

ஓங்குமலைப் பெருவிற் பாம்பு ஞாண்கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் . (புறநா . 55 )

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினை இ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கான் முகம்போல . ( கலித் . 2 )

இக்கருத்து மாஹபாரதம் கர்ணபர்வத்தில் பல்லிடங்களில் உணர்த்தப் பட்டுள்ளது .
ஏவம் ருஸ்ய க்ருதவாங் ஸாரய்யந் து பிதாமஹ:( 27 , 42 )
தயைவ வேகா : ச ஹயா ரயா மர்ய
யரா ஸசைனா சரயோ மஹாத்மந : | ( 27 , 8 )
தே உேவாஸ் தேந வாக்யோ சோதா : ப்ரணத :
ஸ்யிதா : |
வரஹ்மாணம் அமரத : க்ருத்வா சரண்யம் சரணாமதா : ||
தேவதேவம் பரம் ஸ்யாணும் வரஉம் த்ர்யம்பகம் சிவம்  ( 24 , 50-2 )

ஸத்க்ருத்ய சங்கரம் ப்ராஹ ஸ்ரஹ்மா லோகபிதாமஹ : 1
இமாந்யஸுரர்மாணி லோகாம்ஸ்த்ரீந் ஆக்ரமந்தி    ஹி || ( 25 , 1-2 )

ஏகவாணேந தம் உேவாஸ் த்ரிபுரம் பரமேச்வர : |
நிஜவ்நே ஸாஸுர மணம் உேவதேவோ மஹேச்வர : ||  ( 27 , 35)

சிந்தயித்வா ஹரிம் விஷ்ணும் அவ்யயம் யஜ்ஞவாஹநம் |
சரம் ஸங்கல்பயாஞ்சக்ரே விச்வகர்மா மஹாமநா : || ( 30 , 31 )

கி . மு . இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே சிவபிரானுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன என்பதும் , அவற்றை  மக்கள் வலம் வந்தனர் என்பதும் ,

பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே . (6 , 16-7 )

என்ற புறநானூற்றடிகளால் அறியக்கிடக்கின்றது . பாண்டி இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரைகணக்காரனார் மகனார் நக்கீரனார் , சிவபிரான் பலராமன் திருமால் முருகன் இந்நால்வருக்கும் புறநானூறு 56 ஆம் செய்யுளில் ஒப்பிடுகின்றனர் .

முருகன்
குறிஞ்சிநிலக்கடவுள் எனத் தொல்காப்பியம் கூறும் .
சேயோன் மேய மைவரை யுலகமும்        ( தொல் . அகத் . 5 ) .

மேலான கதியாகிய மோக்ஷம் வேண்டுமாயின் , முருகனை ஆறுபடை வீடுகளிலுஞ் சென்று தொழுதல் வேண்டும் எனனார் திருமுருகாற்றுப்படையிற் கூறினர் . பகவத்கீதையிற்கண்ணபிரான் ஆத்மவிபூதியைக் கூறுமிடத்து

ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த : ( 10 , 24 )  எனக் கூறுவதை நோக்கின் , முருகனைப் போர்வீரனாக உபாஸித்

தலே சிறந்ததோ எனத் தோன்றுகின்றது . இக்காரணம்பற்றியே திருவையாற்றில் ஐயாறப்பன் கோயிலில் முருகன் வில்லோடு இருத்தலைக் காண்க .

பின்வருமாறு
அவரது பிறப்பைப்பற்றிப் பரிபாடல் கூறும் : - ஒருபோது சிவபிரானும் உமாதேவியும் உல்லாஸமாய் இருந்தனர் . அப்போது அவர்க்கு ஆண்மகன் பிறப்பின், அவன் உலகிற் சிறந்தானாக விளங்குவான் என்றும் அதனாற் றனக்குத் தீங்கு நேரிடும் என இந்திரன் நினைத்தான் . உடனே தேவர்களுடன் சிவபிரானிடஞ் சென்று தனது விருப்பத்தை அறிவித்தனன் . அவர் அதற்கு உடன்பட்டனர் . ஆயினும் அவரது ரேதஸ் சிறிது கீழே விழ , அப்போது அங்கே வந்த அக்னி அதனைக் கொண்டனன் . அதனை ஹவிஸ்ஸாகக் கொண்டு ஏழு ருஷிகளும் யாகம் செய்தனர் . எஞ்சிய ஹவிஸ்ஸை அருந் ததியைத் தவிர்த்து ஆறு ருஷிபத்னிகளும் உண்டனர் . ஒவ்வொருவர்க்கும் ஒரு குழந்தை பிறந்தது . அவற்றைக் கங்கைக் கரையில் சரவணத்தில் விட்டனர் . பின்னர் ஆகாயமார்க்கமாய்ச் சிவபிரானும் உமாதேவியும் போகும்போது , தேவி அக்


குழந்தைகளைப் பார்த்து அவை யாருடையவை எனக் கேட்க ,
அவளுடையனவே என அவர் விடையளித்தனர் . உடனே அவ்விருவரும் அங்கே செல்ல , அவள் குழந்தைகளை மடியில் வைக்க ,அவை ஆறுமுகங்களை உடைய ஒரே குழந்தை ஆயிற்று . அக்குழ்ந்தையே முருகன் :
அமரர் வேள்விப்
பாக முண்ட பைங்கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி யமைய நெற்றி
இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
விரிகதிர் மணிப்பூணவற்குத்தா னீத்த
தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
எரிகனன் மானாக் குடாரிகொண் டவனுருவு
திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசே யாக்கை
நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
வசித்ததைக் கண்ட மாக மாதவர்
மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பின்
சாலார் தானே தரிக்கென வவரவி
உடன்பெய் தோரே யழல்வேட் டவ்வவித்
தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவு ளொருமீன் சாலினி யொழிய
அறுவர் மற்றையோரு மந்நிலை பயின்றனர்
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழா அது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயற்
பெரும்பெயர் முருக ( பரிபா . 5 , 26-50 )

இம்முருகன் பிறப்பினையே மஹாபாரதம் அநுசாஸநபர்வம் வம்பர்வம் முதலியவற்றில் சிற்சில மாறுபாட்டுடன் கூறும் . அநுசா ஸபேர்வத்தில் 130 , 133 அத்தியாயங்களும் வயர்வத்தில் 227 அத்தியாயமும் நோக்கத்தக்கன . வால்மீகிராமாயணத்திலும் பாலகாண்டம் 36,37 ஸர்க்கங்களில் இக்கருத்தே சுருக்கமாய் வர்ணிக்கப்பட்டது .

பிறந்த குழந்தையைப் பார்க்க மும்மூர்த்தியும் இந்திரனும் தேவர் முப்பத்து மூவரும் வந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப்படையும் பரிபாடலுங் கூறும் :

புள்ளணி நீள்கொடிச் செல்வனும்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து
எருத்த மேறித் திருக்கிளர் செல்வனும்
நான்முக வொருவற் சுட்டிக் காண்வர
...
நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு ( திருமுருகு . 151-173 )
மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும்
மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி
உலகிருளகற்றிய பதின்மரு மிருவரும்
மருந்துரை யிருவருந் திருந்து நூ லெண்மரும்
மா திரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரும் ( பரிபா . 8 )

இக்கருத்தினையே மஹாபாரதம்
ததோ உேவாஸ் த்ரயஸ்த்ரிம்ச அம்ச ஸு
நீச்வரா : 1
ருரோ யாதா ச விஷ்ணு : ச யம : பூஷார்யமா ஊற : |
ப்ருயஹூதாநி சாந்யாதி யாநி உேவ மணாநி ச |
ஆஜம்முஸ் தேத்தா பஷ்டும் குமாரஞ்
ஜ்வலநாத்மஜம் || ( ம . பா . அநு . 133 , 15-17 ) என்றவிடத்து உணர்த்தும் .

வந்த தேவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விளையாட்டுக்கருவியைக் கந்தனுக்கு அளித்தனர் என்பதைப் பரிபாடல் கூறுகின்றது .

அனலன் றன்மெய்யிற் பிரித்துச்
செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து
வழங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத்
திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன்
திருந்துகோன் ஞமன் றன் மெய்யிற் பிரிவித்து
இருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன்
ஆஅங்கு
அவரும் பிறரு மமர்ந்துபடை யளித்த
மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறிவரிச் சாபமு மானும் வாளும்
செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியும்
தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும்      ( பரிபா . 5 , 57-70)

இதனையே மஹாபாரதம் அநுசாஸனபர்வம் கூறும் .ஆனாற் றிது மாறுபாடு உளது .

ததோ தேவா : ப்ரியாண்யஸ்ய ஸர்வ ஏவ ஸமாஹரந்
ஸுபர்ணோஸ்ய உஉ புத்ரம் மயூரம்
சித்ரவர்ஹிணம் |
....
குக்குடஞ் சா நிஸங்காசம் ப்ரகௌ அருண :
ஸ்வயம் | ( 133 , 20-25 )

பின்னர் இந்திரனுடைய தானைக்குத் தலைவனாகித் தாரகாஸுரனைக்
கொன்றனன் என்பது
வானோர் வணங்குவிற் றானைத் தலைவ .(திருமுருகு . 260 )
சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து . ( அகநா . 59 )
சூர்நவை முருகன் சுற்றத் தன்ன ( புறநா . 23 )
சூர்கொன்ற செவ்வேலால் ( கலித். 93 , 26 )
சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே . ( பரிபா . 14 , 18 )
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
கழறொடிச் சேஎய் குன்றம் ( குறுந்தொகை . 1 )     என்ற விடங்களிற் கூறப்பட்டது.

இதனையே மஹாபாரதம் அநுசாஸநபர்வம்
ஸைகாபத்யேந தம் தேவா : பூஜயித்வா ஹாலயம் |
ஸ விவ்ருலோ மஹாவீர்யோ உேவஸேநாபதி :
ப்ரஹு : |
ஜவாநாமோவயாய சக்த்யா நாநவம் தாரகம்   மஹ: || ( 133 , 28-9 )
என்றவிடத்துக் கூறும் .
அவர் ஆயுதம் சக்தி எவ்வாறு என்பது எவ்வாறு மஹாபாரதத்திற் கூறப்பட்டதோ , அவ்வாறே இன்னா நாற்பது முதற்பாட்டிற் கூறப்பட்டது .

அவருடைய கொடியிற் கோழி பொறிக்கப்பட்டது என்பதை

மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி
பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ .   ( பரிபா . 17 , 48-9 )   என்ற அடிகள் கூறுகின்றன .

போரில் வெற்றிபெற்ற பின்னர் அவர் தேவஸேனையையும் வள்ளியையும் மணந்தனர் என்பது

டை
மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோண்
மணந்த ஞான்று
ஐயிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகண் மலருண்கண்
மணிமழை தலை இயென ( பரிபா . 9 , 8-10 )

என்றவிடத்து உணர்த்தப்பட்டது . அவன் வள்ளியை மணந்ததை மஹாபாரதம் கூறியதாகத் தெரியவில்லை .

பலராமன்
பலராமன் வெண்ணிறமுடையோன் , நீலவாடை அணிந்தவன் , கிருஷ்ணனுக்கு மூத்தோன் , பனைக்கொடியோன் , கலப்பையை ஆயுதமாக உடையோன் என்பதை
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் ( புறநா . 58 , 14 )
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் ( புறநா . 56 , 3-4)
பனைக்கொடிப் பானிற வண்ணன் போல் ( கலித் . 104 , 7-8 )
வளையொடு புரையும் வாலி யோற்கவன்
இளைய னென் போர்க் கிளையை யாதலும்
புதையிரு ளுடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு
முதியையென் போர்க்கு முதுமை தோன்றலும்  ( பரிபா . 2 , 20-3 )
நாஞ்சில் வலவனிறம்போல் ( கார் . 19 )
பால்மேனியான் ( பழமொழி 37 , திணை 150 , 96 )    என்ற அடிகள் கூறும் .

கொற்றவை
போர் முதலியவற்றில் வெற்றி பெறுதற்கும் , நினைத்த காரியம் நிறைவேறுதற்கும் மக்கள் கொற்றவையைப் போற்றுதல் வழக்கம் என்பதை 

வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ( திருமுருகு . 258)

புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்கு
இன்னா வரும்படர் தீர விறைந்து
இன்னே முடிகதில் லம்ம ( நெடுநல் . 166-8 )

என்ற அடிகள் கூறுகின்றன . கொற்றவை என்பதும் துர்க்கை என்பதும் ஒருபொருட்கிளவி . மஹாபாரதத்தில் விராடபர்வம்தொடங்குதற்கு முன்னர்த் தர்மபுத்திரனும் , போர் தொடங்குதற்கு முன்னர் அர்ஜுனனும் துர்க்கையைத் துதிக்கின்றனர் :

நமோஸ்து வரமே க்ருஷ்ணே குமாரி ப்ரஹ்மசாரிணி
சரணம் ஒவ மே ுர்தே சரண்யே உக்தவத்ஸலே ( ம . பா . விரா . 8 )

நமஸ்தே ஸிஸேநாநி ஆர்யே மந்உரவாஸிநி
யுதிர்ஹூதிமதாம் ஸங்வே ) வீக்ஷயஸே
ஸிசாரணை : ( ம.பா. பீஷ்ம . 23 )

( 6 ) ஊழ்

முற்பிறப்புக்களிற் செய்யப்பட்ட வினைகளின் பயனைப் பின்னர் ஒவ்வொருவரும் அனுபவிப்பர் . அதனை ஊழ் , தெய்வம் , வினை , பால் என்ற சொற்களாற் பெரியோர் குறிப்பர் :

வினையே பூதம் ( தொல் . கிளவி , 57 )
உடனுறை வாக்குக வுயர்ந்த பாலே ( புறநா . 236,12 )
பால்வரைந் தமைத்த லல்லது ( குறுந் . 366 )
யாஞ்செய் தொல்வினைக் கெவன்பே துற்றனை (நற்றிணை . 88 )
தொல்வினைப் பயன் றுய்ப்ப ( கலித் . 118 , 3 )

மக்கட்பிறப்பிற் பொருள் இன்பம் இவற்றை அனுபவிக்கப்   பெரும்பாலும் உழே காரணமாயினும் , தர்மத்தைச் செய்தற்குத் தன் முயற்சியே சிறந்த காரணம் ஆகும் என்பதை விளக்கவேஆசிரியர் திருவள்ளுவனார் ஊழி என்ற அதிகாரத்தை அறத்துப் பாலின் பின்னரும் பொருட்பாலின் முன்னருங் கூறினர் . ஆயினும் ஒருவர் இன்ப துன்பங்களை நுகர ஊழ் , தன் முயற்சி இரண்டுங் காரணம் ஆகும் என்பதைக் குறிக்க இரண்டையுங் கூறுகின்றனர் :

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் (திருக். 380 )

தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (திருக் . 619 )
இக்கருத்தினையே மஹாபாரதம் பல்லிடங்களிற் கூறுகின்றது .
வியிஸ்து ஸ்வாந் ஸ்ரம் ஹந் உஸ்தரம் ஹி
புரா க்ருதம் | ( வன . 212 , 2 )

ஆவா மா நுஷா: ஸர்வே நிவா :
கர்மணோர் அயோ :
கைவே புருஷகாரே ச பரம் தாவாம் ந விஉ ) தே |
ந ஹி சைவேந ஸிய எந்தி கர்மாண்யேகேந ஸத்தம்
ந சாபி கர்மணைகோ அரவாம் ஸிஸ்து யோ மத ( ஸௌப்தி . 2 , 2-3 )
கைவே புருஷகாரே ச லோகோயம் ஸம்ப்ரதிஷ்த: | ( ஆதி . 132 , 2 )
சைவாயத்தமஹம் மந்யே ஜநம் ஸுவலிநாம்பி ( த்ரோண . 159 , 63 )
க்ஷேத்ரம் புருஷகாரஸ்து சைவம் ஸீஜம்
உஷாஹ்ருதம் ( அநுசா . 9 , 10 )

சில வினைகளின் பயனை எழு பிறப்புக்களிலும் அனுபவிப்பர்
ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையு மேமாப் புடைத்து ( திருக் . 125 )

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிவிளங்காப்
பண்புடை மக்கட் பெறின் ( திருக் . 62 )

ஒருமைச் செயலாற்றுப் பேதை யெழுமையும்
தான்புக் கழுந்து மளறு ( திருக் . 835 )

ஒருமைக்கட் பின்கற்ற கல்வி யொருவற்கு
எழுமையு மேமாப் புடைத்து (திருக். 396 )

சில வினைகளின் பயனை இம்மையிலேயே அனுபவிப்பதும்  உண்டு :
இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும்   திணைமாலை 150 , 123 )

இக்கருத்தினையே ஒரு வடமொழிச் செய்யுளடி கூறும் : --
அத்யுத்கடை : புண்யபாபைர் இஹைவ வலம்
அச் நுதே |

( 7 ) ஏனைய செய்திகள்

வால்மீகிராமாயணத்திற் கூறப்பட்ட செய்திகளுள் சில சங்க நூல்களுட் காணப்படுகின்றன :-( 1 ) இராவணன் ஸீதை யைத் தூக்கிப்போம்போது , அவள் கீழே எறிந்த அணிகளைக் குரங்குக்கூட்டம் கண்டது : --

கடுந்தெற லிராம னுடன் புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாங்கு(புறநா . 378 , 18-21 )

கடற்கரையில் இராமன் மந்திராலோசனை செய்தான் :

முழங்கிரும் பௌவ மிரங்கு முன்னுறை
வெல்போ ரிராம னருமறைக் கவிந்த
பல்வீழாலம் போல ( அகநா . 70 , 14-16 )

இராமனைத் துணையாகக்கொண்டு விபீஷணன் இலங்கைக்கு அரசன் ஆயினன் :
பொலந்தா ரிராமன் றுணையாகத் தான் போந்து
இலங்கைக் கிழவற் கிளையான் - இலங்கைக்கே
போந் திறை யாய தூஉம் பெற்றான் ( பழமொழி 257 )

வ்யாஸமஹாபாரதத்திற் கூறப்பட்ட சில செய்திகளுங் காணப்படுகின்றன :
பாண்டவரும் கௌரவரும் செய்த போரில் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் உணவு அளித்தனன் ; அப்போரிற் கவுரவர் மாண்டனர் :

அலங்குளைப் புரவி யைவரொடு சினை இ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்(புறநா . 2 , 13-16 )

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவி னைவர் போல (பெரும்பாண் , 415-7 )

நூற்றுவர் மடங்க
வரிபுனை வல்வி லைவ ரட்ட
பொருகளம் போலுந் தொழூஉ ( கலித் . 104, 57-9)

குருடனான திருதராஷ்டிரனின் மூத்த குமாரனின் சூழ்ச்சியால் பாண்டவர் ஐவரும் இருந்த அரக்குமாளிகை தீக்கு இரையாயிற்று : --

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுண் முதியவன் புணர்ப்பினால்
ஐவரென் றுலகேத்து மரசர்க ளகத்தராகக்
கைபுனை யரக்கில்லைக் கதழெரி சூழ்ந்தாங்கு  ( கலித் . 25 , 104 )

பாண்டவர் குற்றமற்றவர் :
தீதுசீர் சிறப்பி னைவர்க ணிலைபோல ( கலித் . 26 , 6 )
துரியோதனன் தொடையிற் கொல்லப்பட்டான் : --
மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கறுத் திடுவான்போல் ( கலித் . 52 , 2-3 )

துரியோதனன் முதலியோர் பாண்டவரோடு சூதாடிப் பின்னர் அழிந்தனர் :

பாரதத் துள்ளும் பணையந்தந் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரொடு
ஏதில ராகி யிடைவிண்டா ராதலால்
காதலோ டாடா கவறு ( பழமொழி . 356 )

காண்டவவனத்தை அழித்த அருச்சுனற்குத் தமையனாகிய பீமஸேனன் அடிசிற்றொழிலிற் கைதேர்ந்தவன் :

காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழா அப் பல்வே றடிசில் (சிறுபாண் . 238-41 )

பலராமன் துரியோதனற்கு நண்பராயினும் போரில்  அவற்கு உதவி புரியவில்லை .

பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி யமருள் தலைப்பெய்யா - போக்கி
வழியராய் நட்டார்க்கு ( பழமொழி . 137 )

தெற்கில் பாணாசுரன் பெரிய நிதியை வைத்திருந்தான் :
தென்றல் மருங்கின விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும் (மதுரைக் . 202 , 3 )

பதிவ்ரதையிற் சிறந்தவள் அருந்ததி :

வடமீன் புரையுங் கற்பின் மடமொழி ( புறநா . 122 , 8 )
விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த
செம்மீ னனை ( பதிற் . 31 , 27-8)
வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்கலித் . 2 , 21 )
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவு ளொருமீன் சாலினி யொழிய  ( பரிபா . 5 , 43-4 )
சிறுமீன் புரையுங் கற்பி னறு நுதல்  ( பெரும்பாண் , 303 )
கணவனிடத்து ஒத்த அன்பு கொண்டவருள் ரோகிணி

சிறந்தவள் :
உரோகிணி நினைவன நோக்கி ( நெடுநெல் . 163)
இராமாயணத்திலும்
ரோஹிணீ சசிநம் பயா    என ஸுந்தர காண்டத்திற் கூறப்பட்டுளது .

ஒவ்வொருவரும் பிறர்க்காகவே வாழ்தல் சிறந்ததெனக் கருதப்பட்டது :

தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுக ருண்டையானே ( புறநா . 183 , 8-10 )
பிறர்க்கென வாழ் திநீ ( பதிற் . 38 , 16 )

பிறப்பிற்குக் காரணம் ஸ்தூலசரீரமாகையாலும் , கல்வி ஸூக்ஷ்ம சரீரத்தைப் பற்றியதாகையாலும் , பிறப்பினுங் கல்வி சிறந்தது எனக் கருதப் பட்டது. அக்காரணம்பற்றியே மேற்பிறப்பிற் பிறந்தவனுங் கீழ்ப்பிறப்பிற் பிறந்தவனிடங் கல்வி கற்கலாம் எனக் கூறப்பட்டது :

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே ( புறநா . 183 )
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு ( திருக் . 409 )

இக்கருத்தினையே ஒருவாறு கௌதமதர்மஸுத்ரம்
ஆபத்கல்போ ஸ்ராம்ஹணஸ்ய அவ்ராம்ஹணாடி
விதோபயோக : ( 1,7,1 )
எனக் கூறும் .
அஷ்டமி , சதுர்த்தசி , பர்வாக்கள் முதலிய தினங்களில்  வேதாத்தியயனம் செய்தல் தகாது .

அட்டமியு மேனை யுவாவும் பதினான்கும்
பார்ப்பார்
இலங்குநூ லோதா தநாள் ( ஆசார . 39 )

பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கியும்
மலங்கழித்தல் தகாது : --

பகற்றெற்கு நோக்கா ரிரா வடக்கு நோக்கார்( ஆசார . 29 )

இக்கருத்தினையே கௌதமதர்மஸூத்ரம்
உலே மூத்ரபுரீஷே து உவா குர்யாஉங்முவ :
ராத்ரௌ --V ணாமுவ : ( 1 , 9 , 41 & 43 )  என்றவிடத்துக் கூறும் .

விருந்தினர் , மூத்தோர் , இளையர் முதலியோர்க்கு உணவு அளித்தபின்னரே இல்லறத்தான் தான் உணவைக் கொள்ள வேண்டும் :


விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல் லா லூ னுண்ணா ரேயென்றும்
ஒழுக்கம் பிழையா தவர் ( ஆசார . 17 )

இதனையே கௌதமதர்மஸூத்ரம்
ஷோஜயேத் பூர்வம் அதியி - குமார வ்யாயித - மர்ஹிணீ - ஸ்வவா ஸிநீ ஸ்ய விராந் ஜவந்யாந் ச ( 1 , 5 , 13 )

என்றவிடத்துக் கூறும் .

சூரியனை உதிக்கும்போதும் அஸ்தமிக்கும் போதும் பார்த்தல் உரித்தன்று : --

நோக்கார்பகற் கிழவோன்
முன்னொளியும் பின்னொளியு மற்று ( ஆசார . 43 )

இதனையே மஹாபாரதம்
நேக்ஷேத உந்தம் ஆதித்யம் நாஸ்தம் யந்தம் காசந ( அநுசா . 161 , 17 )
என்றவிடத்துக் கூறும் .

வீட்டிற்கு வந்த ஸாதாரணமக்கட்கு உணவு, நீர், இடம், பாய், இன்சொல் இவற்றை வழங்கவேண்டும் :
முறுவ லினிதுரை கானீர் மணைபாய்
கிடைக்கை யோடிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யுஞ் சிறப்பு . ( ஆசார . 46 )

க்கருத்தினையே கௌதமதர்மஸூத்ரம்
விபரீதேஷு த்ருண - உஉக
ஹூமி - ஸ்வாமதம்
அந்தத : பூஜா அநத்யாபக்ச ( 1 , 5 , 33 )  என்ற ஸுத்ரத்திற் கூறும் .

இரு கையால் தண்ணீரைப் பருக லாகாது . --
இரு கையாற் றண்ணீர் பருகார் ( ஆசார . 24 )
நாஞ்ஜலிநா பிவேத் ( 1 , 9 , 10)
என்ற - கௌதமதர்மஸூத்ரத்து ஸுத்ரத்திற் கூறப்பட்டது .

காலைக் கழுவும்போது ஒரு காலால் மற்றொன்றைத் தேய்த்தல் தகாது :
காலொடு காறேயார் ( ஆசார . 35 )
........ பாடிபாடியாவா ........ வர்ஜயேத் ( 1 , 9 , 32 )  ன்றவிடத்துக் கூறும். 

பெரியோர்க்கு எதிரில் ஆடையைப் போர்த்திக்கொள்ளுதலும் , காலை நீட்டல் அசைத்தல் முதலியனவும் தகா : --
மோட்டுடைப் போர்வையோ ளேக்கழுத்தந் தானசைப்பு
காட்டுளே யானும் பழித்தார் ( ஆசார . 83 )
இதனையே கௌதமதர்மஸுத்ரம்

முருர்நே கண்ப்ராவ்ருத - அவஸக்யிக -அபாச்
ரயண - பாப்ரஸாரணாநி ( 1 , 2 , 20 )
என்ற ஸுத்ரத்திற் கூறுகின்றது .

சில பாவச்செயல்களின் பயனைப் போக்கப் பிராயச்சித்தம் உண்டு என்றும் , சிலவற்றிற்கு இல்லை என்றுங் கருதப்பட்டது .

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென ( புறநா . 34 )

மஹாபாதகங்களுக்குப் பிராயச்சித்தம் இல்லை என்றும் ஏனையவற்றிற்கு உண்டு என்றும் மஹாபாரதம்
மஹாபாதகவர்ஜம் து ப்ராயச்சித்தம் வியீயதே ( சாந்தி . 34 , 43 ) என்ற அடியிற் கூறும் .

போரிற் பெருஞ்சேரலாதன் புறப்புண்பட்டு ப்ராயோப வேசஞ் செய்தனன் :
தன்போல் வேந்தன் முன்பு குறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன் ( புறநா . 65 , 9-11 )

கரிகால் வளவெனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண் ணாணிய சேர லாதன்

அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்து ( அகநா . 55 , 10-12 )
முன்னோர் செய்த நல்வினைப்பயன் பின்னோரைக் காக்கும்

கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
சைவிளங்கு கவிகை நெடியோய் ( புறநா . 102 , 5--6 )

சனி புகையினும் , சுக்கிரன் தெற்கே போயினும் , உலகிற்குக் கேடு வரும் .
மைம்மீன் புகையினுந் தாமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் ( புறநா . 117 )
செவ்வாய் , புதன் முதலிய க்ரஹங்கள் கூறப்பட்டன : --

உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
அங்கி யுயர்நிற்ப வந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப்பா லெய்த விறையமன்
வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை
மதிய மறைய வருநாளில் ( பரிபா . 11 , 4-10 )
( வெள்ளி = சுக்கிரன் ; படிமகன் பூமிஸுதன் செவ்வாய் : புந்தி புதன் ; அந்தணன் = குரு ; பங்கு=சநி; இறையமன் = சனி : பாம்பு = இராகு .)
திருவாதிரையன்று விழா கொண்டாடப்பட்டது :

ஆதிரை
விரிநூ லந்தணர் விழவு தொடங்கப்
புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப ( பரிபா . 11 , 77-9 )

யாகஞ்செய்யாத பிராம்மணன் சங்கு அறுத்து ஜீவனஞ் செய்தனன் :
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன ( அகநா . 24 )
பிராம்மணன் அடிக்கடி தூதாக அனுப்பப்பட்டான் : --
தூதொய் பார்ப்பான் மடிவெண் சோலை ( அகநா . 337 , 7 )

( 8 ) முக்தி

முக்தி , விதேகமுக்தி ஜீவன் முக்தி என இருவகைப்படும். இவ்வுடலைவிட்டு ஜீவன் பிரும்மலோகத்திற்குச் சென்று பின்னர் அடையும் முக்தி விதேகமுக்தி ஆகும் . பிரும்மலோகத்திலிருப்பதை அபராமுக்தி என்றும் , பிரும்மத்தோடு ஒன்றுபட்ட நிலையைப் பராமுக்தி என்றுங் கூறுவர் . பராமுக்தியும் பிரும்மமும் ஒன்றே ஆகும் .

அபராமுக்தியை ஆசிரியர் திருவள்ளுவனார்

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (திருக் . 3 )   என்றவிடத்து நிலம் என்ற சொல்லாற் குறித்தனர் .

பராமுக்தியை ,
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு ( திருக் . 358 )
என்றவிடத்து சிறப்பென்னுஞ் செம்பொருள் என்ற தொடராற் குறித்தனர் .

இதனை ஒட்டியே சங்கராசாரியர் பிருஹதாரண்ய கோபநிஷத்தில் ஸ்ரஹ்மலோக : ( 4 , 4 , 23 ) என்ற தொகைச்சொல்லை ஸ்ரஹ்மணோ லோக : என்றும் , ஸ்ரஹ்மைவ லோக : என்றும் இருவகையாகப் பிரித்தனர் . முன்னருள்ளது அபராமுக்திக்கும் பின்னருள்ளது பராமுக்திக்கும் பொருந்தும் . சிறப்பு என்ற சொல்லைத் திருக்குறளாசிரியர் முக்தியைக் குறிக்க

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்கு
ஆக்க மெவனோ வுயிர்க்கு  என்னுமிடத்துக் கூறினர் .

சிறப்பு , செல்வம் இவற்றிற்குப் பொருந்திய ச்ரேய :,
ப்ரேய : என்ற சொற்கள்
ச்ரேயர்ச ப்ரேயாச மநுஷ்யமேத :
தௌ ஸம்பரீத்ய விவிநக்தி யீர : |
ச்ரோயோ ஹி யீரோ ஹி ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயோ மந்தோ யோ மக்ஷேமாத் வ்ருணீதே || (2,2)
என்ற காேபநிஷத்துச்செய்யுளில் வழங்கப்பட்டது காண்க .

அம்முக்தியைப் பெற கடவுளின் ஒழுக்கநெறியில் நிற்க வேண்டும் . அப்போது அஞ்ஞானம் நீங்க மாசற்ற ஞானம் தோன்றும். இவற்றை
பொறிவா யிலைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் ( திருக் . 6)
இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு ( திருக் . 352 )
என்றவிடத்து ஆசிரியர் திருவள்ளுவனார் கூறினர் . இக்கருத்துக்களையே பகவத்கீதையில்

யகா ஸம்ஹரதே சாயம் கூர்மோங்மாநி ஸர்வச : |
இந்திரியாணீந்திரியார்மேலு ) : தஸ்ய ப்ரஜ்ஞா
ப்ரதிஷ்தா || ( 2 , 58 )

விஹாய காமாந்ய : ஸர்வாந் புமான் சரதி நிஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார : ஸ பலாந்திம் அயிறச்அதி !! ( 2,71 ) என்ற செய்யுட்களிற் கண்ணபிரான் கூறினர் .

பிராணிகளிடத்தில் அருளோடு கூடிய மனம் வீட்டினை அடையச்செய்யும் என நான்மணிக்கடிகையின் இறுதிச்செய்யுளிற் கூறினர் விளம்பிநாகனார் .

முக்தியைக் குறிக்கச் செலவு என்ற சொல்லை நக்கீரனார் திருமுருகாற்றுப்படைறில்
சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ்
செலவுநீ நயந்தனை யாயின் (62- 4 ) என்றவிடத்து வழங்கினர் .

அச்சொல்லும் கடோபநிஷத்தில்
ஸா காஷ்ா ஸா பராபதி : ( 3 , 11 )  என்றவிடத்துள்ள மதி : என்ற சொல்லும் ஒருபொருட்கிளவி ஆகும் .

அம்முக்தியைக் குறிக்கவே அந்நிலை என்ற சொல்லைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில்

நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை யணுக வேண்டி ( 466-7 )

என்றவிடத்து வழங்கினர் . ( அச்சொற்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள் நில்லா வுலகத்து என்ற அடியோடு பொருந்தாமை காண்க . )


அச்சொல்லும் கடோபநிஷத்தில்
தத்பகம் ஆப்நோதி யஸ்மாத் யோ ந ஜாயதே ( 3 , 8 )
என்றவிடத்துள்ள தத்பகம் என்பதும் ஒருபொருட்கிளவி .

இப்பிறப்பிலே ஆசை தன்னைவிட்டு ஒழியின், அக்காலத்திலேயே முக்தி வரும் என ஆசிரியர் திருவள்ளுவனார்
ஆரா வியற்கை ( திருக் . 370 )

என்னுமிடத்தும் , மாங்குடி மருதனார்
சிறந்த வேதம் விளங்கப் பாடி ( மதுரைக் , 468-471 )
என்னுமிடத்தும் , கடோபநிஷத்

யதா ஸர்வே ப்ரமுச்யந்தே ( 6 , 14)

என்னுமிடத்தும் , ப்ருஹதாரண்யகோபநிஷத்
யோ அ காம : ( 4 , 46 ) என்னுமிடத்தும் , மஹாபாரதம்
யோ ந காமயதே ( அச்வமே . 47 , 8 )
என் னுமிடத்துங் கூறும் முன்னரே காட்டப்பட்டது .

முக்தி ஞானத்தால் வரும் என
ஞானத்தால் வீடாக நாட்டு (சிறுபஞ்ச. 36 )  என்னுமிடத்துக் காரியாசான் கூறினர் .
...
என இவற்றால் , தற்போதுள்ள சங்க நூல்கள் பலவற்றுள் வைதிகமார்க்கமே உணர்த்தப்பட்டது என்பது அறியப்படும் .

No comments:

Post a Comment