ஆசீவகமும்-அரசியலும்
22.04.2021 "இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள பல வெளிநாட்டுப் பயணிகளுள் அல்பெரூணி என்ற பாரசீகப் பயணி, \"இந்தியர்கள், தத்துவம், கணிதம், வானியல் இவற்றில் சிறந்தவர்கள், சாதாரணமாகத் தெருக்களில் கூடும்","articleBody":" இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள பல வெளிநாட்டுப் பயணிகளுள் அல்பெரூணி என்ற பாரசீகப் பயணி, \"இந்தியர்கள், தத்துவம், கணிதம், வானியல் இவற்றில் சிறந்தவர்கள், சாதாரணமாகத் தெருக்களில் கூடும் மக்கள் கூட தத்துவ விவாதங்களைச் செய்கின்றனர்' என்று பதிவு செய்திருக்கிறார். அந்த அளவுக்கு இந்த தேசம் தத்துவ மரபில் திளைத்தது. இந்திய தத்துவ மரபு அறிவார்த்தமானது என்பதோடு இரு விதமான ஆராய்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டது.

இந்த உலகில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி சுகமாக வாழ்வது எனக் கண்டறிவது ஒருவித அறிவியல் ஆய்வு. மற்றொன்று, இந்த உலகிற்கு நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதனை அறிவதற்கான ஆய்வு. இரண்டிலும் பாரத தேச அறிஞர்கள் வெற்றி கொண்டவர்களாக இருந்தனர். "மதம் என்றால் "கருத்து; என்று பொருள். தத்துவங்களின் அடிப்படையிலேயே சமயங்கள் இந்தியாவில் துளிர்த்தன.
ஆதிசங்கரர் எழுபத்துரண்டு மதங்களை தர்க்கத்தில் வென்று அத்வைதத்தை நிலைநாட்டினார் என்று சொல்கிறார்கள். எனில், எழுபத்துரெண்டு விதமான சித்தாந்தங்கள் இங்கே இருந்திருக்கின்றன. சமணமும் பெளத்தமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின என்றால் இன்னும் சில சமயங்களும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அவற்றுள் ஒன்று "ஆசீவகம்; இதனை "அஜீவகம்' என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு.
ஆசீவகம் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆனால், முற்றிலும் அழிந்து போன சமயங்களில் ஒன்று ஆசீவகம். அது பற்றிய நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சமண, பெளத்த நூல்களில் அந்த சமயம் பற்றியக் குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானது \"மணிமேகலை'. பெளத்தக் காப்பியமாக அறியப்படும் மணிமேகலையில், \"சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை'யில் மணிமேகலை பத்து சமயங்களைச் சேர்ந்தவர்களோடு விவாதம் செய்வதாக வருகிறது. அதிலே ஆசீவக சமயமும் ஒன்று. ஆசீவகத்தைச் சேர்ந்த அறிஞரிடம் ஊழ் பற்றிய வினாக்களை மணிமேகலை எழுப்புகிறாள். அதனால் ஆசீவகம் ஊழ் (விதி) பற்றிய நம்பிக்கையுடைய சமயம்.
ஊழ் கோட்பாட்டை முழுமையாக நம்பியது என்பதோடு இறை மறுப்புக் கொள்கையையும் ஆசீவகம் கொண்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன. இறை நம்பிக்கையை மறுப்பது, ஊழ் கோட்பாட்டை வலியுறுத்துவது இரண்டும் வெவ்வேறு தளங்களில் அமைந்தவை.
வைதிக சமயத்திற்கு எதிரானது ஆசீவகம் என்றும் கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தக் கருத்துகளில் உடன்படுவதும் மாறுபடுவதும் அவரவர் விருப்பம். ஆசீவகம் பற்றிப் பேசுவோர் அது தமிழர் மதம் என்றும் தமிழர்கள் இந்துக்கள் அல்ல ஆசீவகர்கள் என்றும் ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். தமிழகம் முழுவதும் தமிழர்கள் அனைவரும் பின்பற்றிய சமயம் ஆசீவகம் என்பதான பிம்பத்தை கட்டமைப்பதற்கான அவசியம் என்ன? ஆன்மிக உலகம் பேசாத இந்த சமயம் பற்றி அரசியல் உலகம் பேசுவதற்கான காரணம் என்ன? தமிழன் ஹிந்து அல்ல என்று அவனை ஒரு பெரும் குழுவிலிருந்து பிரித்து நிறுத்துவதற்கான காரணம் என்ன?
ஆசீவகம் வைதிக சமயம் என்றழைக்கப்படும் ஹிந்து தத்துவங்களுக்கு எதிரானது என்ற கருத்து ஏற்புடையதல்ல. விதிப்படி வாழ்க்கை என்பதும் மறுபிறவிக் கோட்பாடும் வைதிக சமயம் என்று சொல்லப்படும் சனாதனத்தின் கோட்பாடுகள். சனாதனம் உருவ வழிபாட்டை ஏற்கிறது. நல்வினை, தீவினை என்னும் நம்பிக்கையும் சனாதனத்தின் பாற்பட்டதே. இதில் ஆசீவகத்தின் தனித்துவம் என்று ஒன்றும் இல்லை.
ஆசீவகம் தெய்வம் இல்லை என்ற கொள்கை கொண்டது. தமிழர்கள் தங்கள் வாழ்வியலில் முதற்பொருளாக தெய்வத்தைக் கருதியவர்கள். சிவன், முருகன், கொற்றவை, வருணன், இந்திரன் என்று பல தெய்வங்களை வணங்கி வழிபட்டவர்கள். உண்மை இப்படி இருக்க எப்படி ஆசீவகம் தமிழர் மதம் ஆகும்?

இந்த உலகில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி சுகமாக வாழ்வது எனக் கண்டறிவது ஒருவித அறிவியல் ஆய்வு. மற்றொன்று, இந்த உலகிற்கு நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதனை அறிவதற்கான ஆய்வு. இரண்டிலும் பாரத தேச அறிஞர்கள் வெற்றி கொண்டவர்களாக இருந்தனர். "மதம் என்றால் "கருத்து; என்று பொருள். தத்துவங்களின் அடிப்படையிலேயே சமயங்கள் இந்தியாவில் துளிர்த்தன.



கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
ஆயிரக்கணக்கான ஆசீவகர்களை பேரரசர் அசோகர் படுகொலை செய்தாரா? ஆதாரம் என்ன?
-----------------------
டெல்லி மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தாரால் 1982ல் பதிக்கப்பட்ட , ஜான் எஸ் ஸ்ட்ரோங் எழுதிய “அசோகா த லெஜெண்ட் “ என்ற நூலில் ஒரு பகுதியாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “அசோகவதனா” என்றொரு சம்ஸ்கிருத நூலின் மொழிபெயர்ப்பு உள்ளது . இது அலேக்ஸ் வேமன் என்பவர் தலைமையில் அறுவர் உறுப்பினராக இருந்த ஆசிரியர் குழுவால் நூலாக்கம் செய்யப்பட்டது. கூடுதல் தகவல் ஆசீவக ஆய்வர் பாஷம் இதனை சரிபார்த்துள்ளார்.. இந்நூலின் தகவல்கள் திபெத்திய, சீன, ஜப்பானிய, இலங்கை மற்றும் மியான்மார் நாடுகளின் பழைய நூல்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட்டுள்ளன.
அதில் உள்ள தகவல்களை மத வெறிக் கொலைகளுக்கு ஆதாரம் எனலாம்.
-----------------------------------------------------------------------------
பந்தவர்தனா என்ற ஊரில் நிர்கிரந்த ஞானாதிபுத்ர எனப்பட்ட மகாவீரரின் அடியவர் ஒருவர் புத்தரின் படத்தை அவமதித்தார் என்ற குற்றத்துக்காக மாமன்னர் அசோகர் ஒரே நாளில் புத்தர் படத்தை இழிவு படுத்திய துறவியையும் அவ்வூரில் இருந்த அனைத்து ஆசீவகர்களையும் கொல்லுமாறு ஆணையிட்டார்.
அப்போது18000 ஆசீவகர்கள் கொல்லப்பட்டனர்.
பாடலிபுத்திரத்தில் இதே காரணத்துக்காக அசோகர் அரச ஆணைப்படி ஒருவரின் குடும்பமே அவர் வீட்டில் வைத்து கொளுத்தி எரிக்கப்பட்டது.
பின்னர் ஒரு நிர்கிரந்தத் துறவி யாராயினும் அவர்தலையைக் கொண்டு வருபவருக்கு ஒரு தினார் பரிசு அளிக்கப்படும் என்று பேரரசர் அசோகர் அரச ஆணை பிறப்பித்தார்
அசோகரின் படுகொலைகள் அவர் புத்த மதத்தைத் தழுவியபின் செய்யப்பட்டவையே. ஏன் அறவழி அசோகர் கொலை வெறி அசோகராகவும் இருந்தார் என்பதற்கான காரணங்களும் ஜான் எஸ் ஸ்ட்ரோங் எழுதிய நூலில் அலசப்பட்டுள்ளன.
அதில் முக்கிய காரணம் அசோகர் அரசியலுக்கு சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை பயன்படுத்தினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
அசோகர் காலத்தில் அதாவது புத்தர், மற்கலி கோசலர் மற்றும் மகாவீரர் மறைந்த இரண்டு மூன்று நூற்றாணடுகளுக்குப் பின்னும், ஐந்து நூற்றாணடுகளுக்குப் பின் நூல் எழுதப்பட்ட காலத்திலும் ஆசீவக மதத்தாராகத்தான் மகாவீரரின் அடியார்கள் கருதப்பட்டனர் என்பதையும் இத்தகவல் உணர்த்துகிறது. இதுவே ஆசீவகத்திலிருந்துதான் மகாவீரரின் சமயம் கிளைத்தது என்பதையும் உணர்த்தும்
No comments:
Post a Comment