Saturday, January 31, 2026
பட்டினப்பாலை இயற்றப்பட்ட மண்டபத்தைப் பாதுகாத்தான் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
Friday, January 30, 2026
அந்தணர் என்போர் அறவோர் குறளில் கூறுவதும் நவீன தமிழ் பண்பாட்டு விரோதிகள் நச்சுப் பொய்களும்
அந்தணர் என்போர் அறவோர் குறளும் நவீனர்களின் நச்சு உரைகளும்
செந்தண்மை பூண்டொழுக லான் ( குறள் :30 நீத்தார் பெருமை )
தமிழர் மெய்யியல் மரபுரை: துறவிகள் (நீத்தார்) என்போர் எல்லா உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழிந்து ஒழுகுவாராய் இருக்க வேண்டும்.
இந்தக் குறளில் துறவி என்பதை தான் கூற வேண்டிய செய்தியை சொல்ல வெண்பா வழக்கு சீர்- தளையில் அமைக்க அந்தணர் எனப் பயன் -படுத்தினாலும் குறித்தது முனிவர்களை தான்.
அந்தணர் தமிழரில் மூத்த தொல்குடியினர். தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணர் தான்.
கிறிஸ்துவ நச்சு மதம் பரப்ப செய்த பொய்யின் அடிமைகளாய் உள்ளவர்கள் செய்யும் கேடு அளவு தாண்டி செல்கிறது.
தமிழர் மரபின் அந்தணர் என்பது ஒரு தொழில் முறை பிரிவு (வர்ணம்), அந்தப் பொருளிலும், அந்தணர் என்பதற்கு சமமான பிற சொற்களாலும் வள்ளுவப் பெருந்தகை பயன் படுத்தி உள்ள குறட்பாக்கள்; இவை அனைத்திலும் வள்ளுவர் பிராமணர்களையும் வேதங்களையும் தான் போற்றுதலாய் குறிக்கிறார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
கல்வெட்டுகள், செப்பேடுகள் அரசர்கள் வள்ளுவர் காலம் முன்பே வடமொழி அற நூல்களை பின்பற்றினர் எனக் காட்டுகிறது. சிலப்பதிகாரமும் உறுதி செய்கிறது.
வடமொழி வாசகம் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)
நீத்தார் பெருமை என்பது முனிவர்கள் பெருமையைப் போற்றும் அதிகாரம், முனிவர்கள் இயற்கையின் ஓசைகளில் இருந்து பெற்று தந்தது தான் வேதங்கள் எனும் மறைகள், இவை இறைவனைப் புரிந்து துதிக்க உதவுவது. இதையே வள்ளுவரும்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். ( குறள் 28: நீத்தார் பெருமை)
தமிழர் மெய்யியல் மரபுரை: தவவலிமை உள்ள துறவிகள் பெருமையைக இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே மந்திரம் என்ப. தொல்காப்பியம்-செய்யுளியல்480
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமது தாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்-
- திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்
முற்றும் துறந்த முனிவர்கள் பெருமைகளை போற்றி கூறுவதே சிறந்த நூல்களின் துணிவாகும். (நற்பனுவல் நால்வேதத்து என்பது சங்க இலக்கியம்)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. ( குறள் 21: நீத்தார் பெருமை)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2:
தமிழர் மெய்யியல் மரபுரை: உலகைப் படைத்த நிறைந்த அறிவினுடையவர் திருவடிகளை தொழுது பணியவே கல்வி இல்லாவிடில் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. குறள் 4:
உலகைப் படைத்த இறைவன் என்பவர் விருப்பு வெறுப்பு அற்றவர், தேர்ந்தெடுக்கப் பட்டவர் எனும் கட்டுக் கதை, பெண்களுக்கு ஆத்மா கிடையாது எனும் மூட நம்பிக்கைகளை இங்கு உடைக்கிறார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. குறள் 7:
நவீனர் குறள்- 30 அந்தணர் என்போர் அறவோர் வைத்து தமிழ் இலக்கியத்தையும் வள்ளுவத்தையும் சிறுமை செய்து உரை - விளக்கம் கொடுப்பது- அவர்கள் தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத அன்னிய மதத்தினர்/ அவர் அடிமைகள் என்பது அறவழி சிந்தனையாளர் கருத்து ஆகும். அறிவுடையர் எவரும் ஏற்க மாட்டார்கள்.
பண்புடைய கண்ணகி வருத்தம் என்ன தெரியுமா? "என்னால் தர்மவான்களுக்கு உணவளிக்க முடியவில்லை. அந்தணரைப் பேண முடியவில்லை. துறவியரை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. நம்முடைய பழைய மரபுப் பெருமையான விருந்தினரை அழைத்துத் தக்கவற்றைச் செய்யமுடியவில்லை.
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு. -பரிபாடல்-திரட்டு 2:50-63
Monday, January 12, 2026
அகநானூறு 70ம் பாடலில் இராமர் சேதுக்கரையில் அரக்கன் ராவணனைப் படை எடுக்குமுன் நடத்திய ஆலோசனை
அகநானூறு 70ம் பாடலில் இராமர் சேதுக்கரையில் அரக்கன் ராவணனைப் படை எடுக்குமுன் நடத்திய ஆலோசனை பற்றி கூறிய சங்கப்பாடல்.
பேராசிரியர் Vaidehi Lambert ஆங்கில உரை
Friday, January 9, 2026
செம்பியன் மிலாடுடையான் பத்தாம் நூற்றாண்டு பேளூர் கல்வெட்டு
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து முறையில் செதுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டின் வரிவாரியான வாசகங்கள் மற்றும் அதற்கான விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Thursday, January 8, 2026
சுக்ர நீதி மற்றும் பிரகஸ்பதி சூத்திரம் -சங்க இலக்கியம் கூறும் தமிழர் அறநூல்கள்
சங்க இலக்கியம் கூறும் தமிழர் அறநூல்கள்
சுக்ர நீதி மற்றும் பிரகஸ்பதி சூத்திரம்: ஒரு விரிவான அறிமுகம்
இந்திய தொன்மையான நீதிசாஸ்திரங்களில் (நீதி நூல்களில்) சுக்ர நீதி (ஷுக்ரநீதி அல்லது ஷுக்ரநீதிசாரம்) மற்றும் பிரகஸ்பதி சூத்திரம் (பிருஹஸ்பதி நீதிசாரம் அல்லது பார்ஹஸ்பத்ய சூத்திரங்கள்) முக்கியமானவை. இவை இரண்டும் அரசியல், ஆட்சி, அறநெறி, பொருளாதாரம், சமூக ஒழுங்கு ஆகியவற்றைப் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கும் பழங்கால சமஸ்கிருத நூல்கள். இவை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையேயான போட்டியை அடிப்படையாகக் கொண்டு, தேவர்களின் குரு பிருஹஸ்பதி (பிரகஸ்பதி) மற்றும் அசுரர்களின் குரு சுக்ராசாரியார் (சுக்ரர்) ஆகியோருக்கு இணைக்கப்பட்டவை.
சுக்ர நீதி (Shukra Niti அல்லது Shukranitisara)
- ஆசிரியர்: சுக்ராசாரியார் (உஷனஸ் என்றும் அழைக்கப்படுபவர்), அசுரர்களின் குரு. புராணங்களின்படி, அவர் சிவனிடமிருந்து சஞ்சீவினி வித்தையைப் பெற்றவர்.
- காலம்: வேத காலம் அல்லது குப்த காலம் (கி.பி. 4ஆம் நூற்றாண்டு) என்று சிலர் கூறினாலும், நவீன அறிஞர்கள் இது இடைக்காலம் அல்லது பிற்கால இயற்றம் என்று கருதுகின்றனர் (துப்பாக்கி, பீரங்கி போன்ற குறிப்புகள் இருப்பதால்).
- உள்ளடக்கம்: இது அரசனின் கடமைகள், ஆட்சி முறை, பொருளாதாரம், இராணுவம், அறநெறி ஆகியவற்றை விவரிக்கும் நூல். ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (நான்காவது அத்தியாயம் ஏழு பிரிவுகளாக உள்ளது). மொத்தம் சுமார் 2,500 செய்யுள்கள்.
- மன்னனின் பொறுப்புகள்: மக்களைப் பாதுகாத்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல்.
- அறநெறி: சமூக நல்லிணக்கத்திற்கு அறம் அவசியம் என்று வலியுறுத்தல்.
- பொருளாதாரம்: வரி விதிப்பு, செல்வ மேலாண்மை.
- இராணுவம்: கோட்டைகள், படை அமைப்பு.
- பொதுவான நீதிகள்: நல்லவர்களுடன் நட்பு, தீயவர்களைத் தவிர்த்தல்; தானம் செய்தல் ஆனால் பெருமை பாராட்டாதிருத்தல்.
- முக்கியத்துவம்: அரசியல் அறிவியல், பொருளியல் ஆகியவற்றில் இந்தியாவின் பழங்கால அறிவை வெளிப்படுத்தும். கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்துடன் ஒப்பிடப்படும்.
பிரகஸ்பதி சூத்திரம் (Brihaspati Sutra அல்லது Barhaspatya Sutras)
- ஆசிரியர்: பிருஹஸ்பதி (பிரகஸ்பதி), தேவர்களின் குரு. வேதங்களில் அக்னியுடன் தொடர்புடையவர்.
- காலம்: மிகப் பழங்காலம் என்று கூறப்பட்டாலும், உள்ள சூத்திரங்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை. சில பகுதிகள் சார்வாக (பொருள்முதல்வாத) தத்துவத்துடன் தொடர்புடையவை.
- உள்ளடக்கம்: இது சூத்திர வடிவில் (குறுகிய வாக்கியங்கள்) உள்ள அரசியல் நீதி நூல். கருட புராணத்தில் "பிருஹஸ்பதி நீதிசாரம்" என்ற பகுதியாக வருகிறது.
- நல்ல நண்பர்கள் vs எதிரிகள் வேறுபாடு.
- அரசனின் குணங்கள், அமைச்சர்களின் பண்புகள்.
- பொருளாதாரம், ஆட்சி விதிகள்.
- சில பகுதிகள் சார்வாக தத்துவத்தை (வேதங்களை மறுத்தல், பொருள் இன்பம் மட்டுமே) பிரதிபலிக்கின்றன – இது சர்ச்சைக்குரியது.
- முக்கியத்துவம்: அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யர் பிருஹஸ்பதியை குறிப்பிடுகிறார். நீதி, அரசியல் ஆகியவற்றில் நடைமுறை அறிவுரைகள்.
இரண்டுக்கும் இடையேயான ஒப்பீடு
- பொதுவான அம்சங்கள்:
- இரண்டும் நீதிசாஸ்திரங்கள் (Dharmashastra பகுதி).
- அரசியல், ஆட்சி, அறநெறி ஆகியவற்றை மையப்படுத்தியவை.
- மன்னன் மக்களைப் பாதுகாக்க வேண்டும், நல்ல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துதல்.
- கௌடில்ய அர்த்தசாஸ்திரத்துடன் தொடர்புடையவை (பிருஹஸ்பதி அதிகம் குறிப்பிடப்படுகிறார்).
- வேறுபாடுகள்:
அம்சம் சுக்ர நீதி பிரகஸ்பதி சூத்திரம் இணைப்பு அசுரர்களின் குரு (சுக்ரர்) தேவர்களின் குரு (பிருஹஸ்பதி) வடிவம் செய்யுள்கள் (சுமார் 2500) சூத்திரங்கள் (குறுகிய வாக்கியங்கள்) கவனம் அறநெறி + நடைமுறை ஆட்சி (தர்மம் முக்கியம்) நடைமுறை அரசியல் + சில பகுதிகளில் பொருள்முதல்வாதம் உதாரணங்கள் வரி, இராணுவ அமைப்பு, சமூக நல்லிணக்கம் நண்பர்-எதிரி வேறுபாடு, அமைச்சர் குணங்கள் சர்ச்சை பீரங்கி குறிப்பு (பிற்காலம்?) சார்வாக தொடர்பு (வேத மறுப்பு?)
இவை இரண்டும் இந்திய அரசியல் சிந்தனையின் முக்கிய பகுதிகள். சுக்ர நீதி அறநெறியை அதிகம் வலியுறுத்துகிறது, பிரகஸ்பதி சூத்திரம் நடைமுறை ரீதியான அரசியலை. இவற்றைப் படிப்பது பழங்கால இந்தியாவின் ஆட்சி முறை, சமூக அமைப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும்.



