Sunday, December 7, 2025

இராஜாதித்தன் வீரமரணம்- ஆதகூர்க் ( Atkur ) கல்வெட்டு & சோழர் செப்பேடு தரும் இரு வேறு செய்திகள்

 வீரமரணம் ஒன்று – அது தரும் இரு வேறு வரலாற்றுச் செய்திகள் !

இராஷ்டிரகூட ( Rashtrakuta ) வேந்தன் கன்னரத்தேவன் என்ற மூன்றாம் கிருஷ்ணனுக்கு ( Kannara ( a ) Krishna III 939 – 967 C.E. ) உடன் பிறந்த தமக்கை ஒருத்தி இருந்தாள் . அவள் பெயர் ரேவகனிமதி ( Revakanimmadi ) . இவள் மேலைக் கங்க நாட்டின்(Western Ganga Dynasty ) அரசன் இரண்டாம் பூதுகனுக்கு (Butuga II 938–961 CE) மணம் முடிக்கப்பட்டு இருந்தாள் .
கிருஷ்ணன் தன்னுடைய பெரும் படையுடன் சோழர்களை இன்றைய வேலூர் மாவட்டம் , அரக்கோணம் வட்டத்தில் உள்ள தக்கோலம் என்ற இடத்தில் பொது யுகம் 949 ஆண்டு எதிர்கொண்டு தாக்கினான் . சோழர்களின் படைகளுக்கு தலைமை தாங்கிய பராந்தக சோழரின் ( Parantaka Chola I (c. 907–955) ) மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான இராஜதித்தன் ( Rajadityan ) அந்தப் போரில் யானை மீதே இருந்து எதிரியின் அம்பால் மரணம் அடைந்தான் .
முதலாம் இராஜராஜ சோழரின் ( Raja Raja Chola I ) இருபத்தியொன்றாம் ஆட்சியாண்டின் ஆனைமங்கல செப்பேடு ( பொது யுகம் 1005 ) என்ற பெரிய லெய்டன் ( Leiden ) செப்பேட்டின் சம்ஸ்க்ருத ச்லோகத்தின் இருபதாவது செய்யுள் இராஜாதித்தன் மரணத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது :
“ சூரியகுலத்திற்கே திலகம் போன்றவனும் வீரனுமான இராசாதித்தன் எல்லாப் புறங்களிலிருந்தும் பாயும் கூரான அம்புகளால் குலைக்க முடியாத கிருட்டிணராசனைப் படையோடு சேர்த்துக் கலங்கடித்தான் . அதன் பிறகு அவனுடைய கூரான அம்புகளால் யானைகளில் இந்திரன் போன்ற யானையின் மீது வீற்றிருந்த படியே நெஞ்சுப் பிளக்கப் பட்டவனாய் மூவுலகிலும் புகழடைந்தவனாய் விமானத்தில் ஏறி வீரலோகங்களை அடைந்தான் “
பெங்களூரு ( Bengalooru ) அருங்காட்சியகத்தில் உள்ள ஆதகூர்க் ( Atkur ) கல்வெட்டு வேறு சில செய்திகளைத் தருகிறது . இராஜாதித்தனைக் கொன்றது மூன்றாம் கிருஷ்ணனின் அம்புகள் என்ற சோழர்களின் ஆனைமங்கலச் செப்பேடு கூறும்பொழுது , இந்தக் கல்வெட்டு வேறு செய்தியைக் கூறுகிறது என்கிறார் A S அல்டேகர் ( A S Alteker ).
1 . முதலில் இந்தக் கல்வெட்டை மொழி பெயர்த்தவர் இராஜாதித்தனைக் கொன்றது மூன்றாம் கிருஷ்ணன் அல்ல என்றும் அவனுடைய மைத்துனர் இரண்டாம் பூதுகன் எனவும் , அதுவும் சோழனை வஞ்சகமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்து கொன்றான் என்று தவறாக மொழிபெயர்ப்பு செய்யபட்டு புரிந்து கொள்ளபட்டது . இந்த தவறுக்கு காரணம் ப்ளீட் (John Faithfull Fleet (1847 – 21 February 1917) ) என்றும் பின்னர் அவரே இந்த தவறை திருத்தினார் என்றும் அல்டேகர் தன்னுடைய நூலின் அடிக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .
2 . அல்டேகர் கூறுவது என்னவென்றால் , பூதுகன் வீரமாக இராஜாதித்தன் அமர்ந்து இருந்த யானையின் மீது தாவி ஏறி , அந்த யானையைக் கொன்று விட்டு அந்த அம்பாரியில் இருந்த சோழ இளவரசனைக் குத்திக் கொன்றான் என்பதே .
3 . இறுதியாக சோழரின் செப்பேடு தரும் செய்தியும் , இராஷ்டிரகூடர் கல்வெட்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றியே இந்தப் பதிவு .
முடிவுரை :
சோழ பட்டத்து இளவரசன் இராஜாதித்தன் “ யானை மேல் துஞ்சிய தேவர் ” எனப் பெயர் பெற்றான்.
மூன்றாம் கிருஷ்ணன் தன்னுடைய மைத்துனன் இரண்டாம் பூதுகனின் வீரச் செயலைப் பாராட்டி பனவாசி ( Banavasi ) 12000 , பெல்வோல ( Belvola ) 300 , புரிகேரே ( Purigere ) 300 , பாகேநாடு ( Bagenad ) 70 கின்சுகாத் ( Kinsukad ) 70 ஆகிய பகுதிகளை வழங்கினான் .
ஓர் இளவரசனின் வீர மரணம் – இரு செய்திகளை இரு விதமாக தருகிறது !
References :
1. Rashtrakutas And Their Times- A S Alteker
2. சோழர் செப்பேடுகள் – முனைவர் G சங்கரநாராயணன்
From Surya Sarathi Roy post :-
The 21 copper plates are held together by a bronze ring bearing the seal of Rajendra Chola. A royal charter, or sasana, of the Chola kings, which was lost 300 years ago from Tamil Nadu, is now preserved at Leiden University in the Netherlands. This charter, issued by the Chola kings to a Buddhist vihara, has significant historical importance.
With the Netherlands reconsidering its colonial collections and planning to return over 10,000 artifacts to their source nations or former colonies, art enthusiasts believe it is time for India to make efforts to reclaim this important piece of its heritage.
The charter consists of two sections — one in Sanskrit and the other in Tamil. The 21 copper plates are bound together by a large bronze ring that bears the royal seal of Rajendra Chola. These plates document the genealogy of the Chola dynasty and detail the reign of King Rajaraja I (985-1012 AD), the father of Rajendra Chola (1012-1042 AD).

No comments:

Post a Comment