Thursday, July 19, 2018

தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டு இறுதி; திருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் சாட்சி

 தமிழ் இலக்கணங்கள் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியம் தான் மிகப் பழமையானது, காலம் 7ம் நூற்றாண்டு என்பதில் கருத்து ஒற்றுமை நடுநிலையாளரிடம் உண்டு. 
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.

 தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் " ள, ற & ன" உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்

கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் தன்னை ஒரு தமிழ் பற்றாளர் என வேடம் போட்டு ஏமாற்றி தமிழரை ஆரியர் - திராவிடர் என பிரிக்கும் கிறிஸ்த்வ நச்சுப் பொய்யை பராப்பும் ஏஜன்டாய் செயல்பட்டவர்.
தன் பொய்யான மதம் பரப்ப நச்சுக் கருத்தைப் பரப்புவோரை நம்பினால் வள்ளுவரும்  தெளிவாய் சொன்ன்னார்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.                   குறள் 508: 
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர்  தொல்காப்பியத்தில் உள்ள பல மொழியியலைவிட குறளின் உள்ள வளர்ச்சியை  காரணம்  காட்டி திருக்குறள் தொல்காப்பியத்திற்கு 500 ஆண்டு பிற்பட்டது  என்கிறார். 

பேராசிரியர் வையாபுரி பிள்ளை மற்றும் ஐராவதம் மஹாதேவன் போன்றோர் தவிர மற்ற முறையான ஆய்வின்றி தன்னிச்சையாய் காலம் குறிப்போரை பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்பது இல்லை.
 பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியம் மொழிநிலை சங்கத் தொகை நூல்களுக்கு பல நூற்றாண்டு பிற்பட்டது என்பதை திரு.வையாபுரி பிள்ளை காட்டி உள்ளார், இவற்றை  லண்டன் பல்கலை கழக பகுதி நேர ஆசிரியரான திரு.சுவாமிநாதன்  தன் வலையில் என ஐந்து  பாகங்களாய் எழுதியுள்ளார். விளக்கி உள்ளார்.

தொல்காப்பியர் காலம் தவறு  இரண்டு மூன்று நான்கு  ஐந்து


கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவணர் கூற்றுபடியே காப்பியத்திற்கும் - குறளிற்கும் இடையே மொழி நிலை மாற்றம் 5 நூற்றாண்டு என்பது தவறன ஆய்வு; 
சங்க இலக்கியத்திலேயே கலித்தொகை, பரிபாடல் நூல்களுள் தமிழின் நெகிழ்ச்சி காணப் படுகிறது, பெரும்பாலான சங்கத் தொகை நூல்கள் பொ.மு 200 - பொ.ஆ.500 இடையிலானது; கலித்தொகை & பரிபாடல் 5- 6m  நூற்றாண்டை ஒட்டியது, இவற்றில் தான் ஆசிரியப்பாவை விட்டு  நெகிழ்ந்து பரிபாடல், கலிப்பா, வெண்பாவில் பாடல் இயற்றப் படுகிறது. தொல்காப்பியம் இவற்றை கூறுகிறது. 
வட மொழியில் காயத்ரி மற்றும் உஷ்னிக் என்பவர் ஈரடி வெண்பா வகை, இவற்றை வைத்து காப்பியர்  (குறு வெண்பாட்டின் அளவு எழு சீரே - பொருள். செய்யு:158/2) குறு வெண்பா என ஒரு சிறு குறிப்பு மட்டும் தருகிறார். திருக்குறள் என்பது குறு வெண்பா மிகவும் நெகிழ்ச்சி பெற்றபின் உருவானது, 9ம் நூற்றாண்டின் முதற் பாதியைச் சேர்ந்தது.

No comments:

Post a Comment